Jump to content

வணக்கம் சேர் ..... 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சேர் ..... 

இந்த வருட இறுதி பரீடசை  நல்ல படியாக பாஸ் செய்யவேண்டுமென குல தெய்வம் கருப்புசாமியிடம்  வேண்டுதல் செய்துள்ளேன். எனது அடுத்த கல்லூரி நுழைவுக்கு ஆங்கிலம்  கடடாய பாடம் . தயவு செய்து 40 புள்ளியாவது போட்டு  பாஸ்  பண்ணி விடவும்.  எப்படியும் மற்ற பாடங்களில்  தேறி விடுவேன்.  ஆங்கிலம் மட்டும் ஏறவே ஏறாது பக்கத்துவீட்டு ராமு டுஷன் வகுப்புக்கு போகிறவன் பாஸ் செய்து விடுவான். நான்  பெயிலானால்  அவன் அம்மா , என் அம்மவை ஏளனமாக கதைப்பார் . நாங்க வறுமை படட  குடும்பம் அம்மா களை  எடுக்க போய்  தான் எங்களுக்கு சாப்பாடு தந்து வளர்கிறா. 

அப்பா கோவித்துப்போய் மூணுவருஷங்களாகிறது . எனக்கு  கீழே  இரண்டு தங்கைமார். நான் படிச்சு  வேலைக்கு போய் அம்மா வுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.  தயவு செய்து என்னை தலைமை ஆசிரியையிடம்  போட்டு கொடுக்க வேண்டாம். மன்றாட் டமாக   கேட்க்கிறேன்.ஒரு நாற்பது புள்ளிகள் மட்டும் போதும் நான் பாஸாகி விடுவேன்.  

இத்துடன் நான்  களைபிடுங்க போன காசு  பத்து ரூபாய் இணைத்துள்ளேன்.  நான் யாருக்கும் சொல்ல மாடடேன். சார் ...தயவு பண்ணி ....என்னை ஆங்கிலத்தில்  பாஸ் செய்து விடணும். 

கோவாலு எனும் கோபால கிருஷ்ணன். 

 

ஆசிரியர் என்ன செய்வார்  ? 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் அந்தப் பத்து ரூபாயை உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும்!

பெடி எல்லா வாத்தி மாருக்கும் அவரவர் பாடங்களைப் போட்டுக் கடிதம் எழுதியிருக்கும்!

பார பட்சம் காட்டக் கூடாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியராக உள்ள ஒருவருக்கு குறைந்தபட்சம் தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்களின் குடும்பநிலை,  பொருளாதார மற்றும் பழக்கவழக்கங்களை பற்றிய அடிப்படை அறிவாவது தெரிந்திருக்கும்.. தெரிந்திருக்கவேண்டும்.. 

ஆகையால் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு, இந்த மாதிரி செய்யவதால் ஏற்படும் பிரச்சனைகளின் பாதிப்பை கூறவேண்டும்.

அதுமட்டுமல்ல கட்டாயம் இன்னொரு வாய்ப்பு வழங்கவேண்டும்.. ஏனெனில் அந்த மாணவனை இப்படி செய்ய தூண்டியது அந்த மாணவனது குடும்ப நிலையே காரணம்.. 

இவ்வளவும் அந்த மாணவன் உண்மையிலேயே வசதி குறைந்தவனாக இருந்தால் மட்டுமே செய்யவேண்டும்

Link to comment
Share on other sites

ஆசிரியர் அந்த மாணவனுக்கு, அவன் ஆங்கிலம் கற்றுத் தேறுவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும். வறுமை அவர்களுக்குப் புதிதல்ல, அதனைத் தாங்கிக்கொள்ளும் மன உரத்தைப் பெற்றுக்கொண்டதாகவே அந்தக் குடும்பநிலை தெரிவிக்கிறது. ஆகவே இந்தத்தடவை அந்த மாணவன் பெயிலானாலும் அடுத்ததடவை கல்லூரி நுழைவுக்கான தகுதிக்கு அவனை உருவாக்கிவிட வேண்டும். அதனை அந்த ஆசிரியராலேயே மேற்கொள்ள முடியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.