Jump to content

பேசிப்பார் மனம் மகிழும்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.0-02-05-86873e96b16ab462163ec13d12b7242abb1e78643560134b3e8feb1f4d7d0f30_1c6da51b8ab58c.jpg.82f1fd38741e5055050ec0a026401daf.jpg

பேசிப்பார் மனம் மகிழும்..!

*********************

இரத்தமும் தசையும் மரணமும்

பார்த்துப் பார்த்து 

களைத்துப்போன கண்களும்

நல்லது மறைந்து கெட்ட 

செய்திகளே..

கேட்டுக் கேட்டு

கெட்டுப்போன காதுகளும்

நல்ல  வாசனைகளை

நுகரமுடியாமல் நாற்றத்தால்

மயங்கிக் கிடக்கும் 

மூக்குத் துவாரங்களும்

அழகிய மொழிகள் மறந்து

அருவருப்பு சொற்களால்

நிரம்பி வழியும் வாய்களும்

அவரவர் உணவை மறந்து

யார்யாரோ உணவை உண்டு

மரத்துப்போன நாவும் பற்களும்

நல்ல பாதைகள் விடுத்து

குறுக்குப்பாதைகள் தேடும் 

நம் கால்களும்

கொடுத்து வாழும் தன்மை மறந்து

குறுகிப்போன கைகளுமாய்

 மனம் இறுகி மகிழ்விழந்து

மனிதனை மனிதன் வெறுக்கின்ற

ஏன் இந்த இளிநிலை.....?

 

எம்மை சுற்றியே 

எமக்காகவாழும்

இவர்களைக் கண்டு

பேசுவோம்.

 

கடலோடு பேசுவோம் 

கரைவந்து முட்டும்

 அலையோடு பேசுவோம்

அதுதொட்டு நிற்க்கும்

வானோடு பேசுவோம்

உலா வலம் வரும் -அந்த

நிலவோடு பேசுவோம்

உனைப்பார்த்து கண்சிமிட்டும் 

விண் மீனோடு பேசுவோம்

 

வெண்திரளாய் கூடி நிற்கும்

முகிலோடு பேசுவோம்-பின்

நனைக்கின்ற அந்த 

மழையோடு பேசுவோம்

மழை கொட்டி மலை முகட்டின் 

நெளிந்தாடி விழுந்தோடும்-அந்த 

 நதியோடு பேசுவோம்

அதனோரம் வளர்ந்து நிற்க்கும் 

காட்டோடு பேசுவோம்

ஆடுகின்ற மரத்தோடு பேசுவோம்

வயலோடு பேசுவோம்-ஓடுகின்ற

வாய்கால் நீரோடு பேசுவோம்

 

வானவில்லின் 

வண்னத்தோடு பேசுவோம்

தோட்டத்து..

மலரோடு பேசுவோம்

மாலை நேர அந்தி

வானோடு பேசுவோம்

அதில் மறையும்

ஆதவனோடு பேசுவோம்.

 

இவைகளோடு பேசுவதற்கு

எவனிடமும் 

பணியத்தேவையில்லை

பணமும் தேவையில்லை

மொழியும் தேவையில்லை.

மதமும் தேவையில்லை

மெளனமொழியொன்றே

அனைத்துடனும் பேசும்.

 

அவர்களின் பேச்சில்

ஆதி இருக்கும் அனைத்துயிர்

அந்தமிருக்கும்-வந்து

போனதின் வாழ்வு இருக்கும்

வரப்போகின்ற காலமிருக்கும்

ஐம்பூதத்தின் பண்பு இருக்கும்

 

அப்போது தெரியும்

ஆயிரம் கோடிகள் 

வாழும் உலகை

அவர் அவர் பிரித்து

எம்நிலம் என்னும்

அறியாமை புரியும்

ஆணவம்,கன்மம்,மாயை

ஆட்கொண்ட நிலையும்

 புரியும்..

மனித இனத்தின் பிளவுகள்பி̀

புரியும்

மனிதநேயத்தின் அவசியம்

புரியும் 

அன்பின் மகத்துவம்

அப்போது புரியும்

 

இப்படி,இப்படி

இயற்கையின் பேச்சில்.

இதயம் இளகி..

எல்லோரும் சேர்ந்து

இன்பமாய் வாழுவோம்.

அன்புடன் -பசுவூர்க்கோபி

06.06.2021

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பசுவூர்க்கோபி said:

large.0-02-05-86873e96b16ab462163ec13d12b7242abb1e78643560134b3e8feb1f4d7d0f30_1c6da51b8ab58c.jpg.82f1fd38741e5055050ec0a026401daf.jpg

பேசிப்பார் மனம் மகிழும்..!

*********************

இரத்தமும் தசையும் மரணமும்

பார்த்துப் பார்த்து 

களைத்துப்போன கண்களும்

நல்லது மறைந்து கெட்ட 

செய்திகளே..

கேட்டுக் கேட்டு

கெட்டுப்போன காதுகளும்

நல்ல  வாசனைகளை

நுகரமுடியாமல் நாற்றத்தால்

மயங்கிக் கிடக்கும் 

மூக்குத் துவாரங்களும்

அழகிய மொழிகள் மறந்து

அருவருப்பு சொற்களால்

நிரம்பி வழியும் வாய்களும்

அவரவர் உணவை மறந்து

யார்யாரோ உணவை உண்டு

மரத்துப்போன நாவும் பற்களும்

நல்ல பாதைகள் விடுத்து

குறுக்குப்பாதைகள் தேடும் 

நம் கால்களும்

கொடுத்து வாழும் தன்மை மறந்து

குறுகிப்போன கைகளுமாய்

 மனம் இறுகி மகிழ்விழந்து

மனிதனை மனிதன் வெறுக்கின்ற

இந்த இளிநிலை வந்தது ஏனோ.

 

எம்மை சுற்றியே 

எமக்காகவாழும்

இவர்களைக் கண்டு

பேசுவோம்.

 

கடலோடு பேசுவோம் 

கரைவந்து முட்டும்

 அலையோடு பேசுவோம்

அதுதொட்டு நிற்க்கும்

வானோடு பேசுவோம்

உலா வலம் வரும் -அந்த

நிலவோடு பேசுவோம்

உனைப்பார்த்து கண்சிமிட்டும் 

விண் மீனோடு பேசுவோம்

 

வெண்திரளாய் கூடி நிற்கும்

முகிலோடு பேசுவோம்-பின்

நனைக்கின்ற அந்த 

மழையோடு பேசுவோம்

மழை கொட்டி மலை முகட்டின் 

நெளிந்தாடி விழுந்தோடும்-அந்த 

 நதியோடு பேசுவோம்

அதனோரம் வளர்ந்து நிற்க்கும் 

காட்டோடு பேசுவோம்

ஆடுகின்ற மரத்தோடு பேசுவோம்

வயலோடு பேசுவோம்-ஓடுகின்ற

வாய்கால் நீரோடு பேசுவோம்

 

வானவில்லின் 

கலரோடு பேசுவோம்

தோட்டத்து..

மலரோடு பேசுவோம்

மாலை நேர அந்தி

வானோடு பேசுவோம்

அதில் மறையும்

ஆதவனோடு பேசுவோம்.

 

இவைகளோடு பேசுவதற்கு

எவனிடமும் 

பணியத்தேவையில்லை

பணமும் தேவையில்லை

மொழியும் தேவையில்லை.

மதமும் தேவையில்லை

மெளனமொழியொன்றே

அனைத்துடனும் பேசும்.

 

அவர்களின் பேச்சில்

ஆதி இருக்கும் அனைத்துயிர்

அந்தமிருக்கும்-வந்து

போனதின் வாழ்வு இருக்கும்

வரப்போகின்ற காலமிருக்கும்

ஐம்பூதத்தின் பண்பு இருக்கும்

 

அப்போது தெரியும்

ஆயிரம் கோடிகள் 

வாழும் உலகை

அவர் அவர் பிரித்து

எம்நிலம் என்னும்

அறியாமை புரியும்

ஆணவம்,கன்மம்,மாயை

ஆட்கொண்ட நிலையும்

 புரியும்..

மனித இனத்தின் பிளவுகள்பி̀

புரியும்

மனிதநேயத்தின் அவசியம்

புரியும் 

அன்பின் மகத்துவம்

அப்போது புரியும்

 

இப்படி,இப்படி

இயற்கையின் பேச்சில்.

இதயம் இளகி..

எல்லோரும் சேர்ந்து

இன்பமாய் வாழுவோம்.

அன்புடன் -பசுவூர்க்கோபி

06.06.2021

அழகிய கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வான வில்லின்  வண்ணத்தோடு  பேசுவோம் ...

என் இந்த இழி நிலை ...?

அழகான கற்பனை நிறைந்த  கவி வரிகள் .பாராட்டுக்கள் கோபி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அழகிய கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👌

பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழர்

29 minutes ago, நிலாமதி said:

வான வில்லின்  வண்ணத்தோடு  பேசுவோம் ...

என் இந்த இழி நிலை ...?

அழகான கற்பனை நிறைந்த  கவி வரிகள் .பாராட்டுக்கள் கோபி 

அன்பான தமிழ் ரீச்சருக்கு வணக்கம் (மாற்றியுள்ளேன்)

பாராட்டுக்கும் ஊக்கம் தருவதற்கும் உளமார்ந்த நன்றிகள் அக்கா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.