Jump to content

மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

துபாய் நகரின் புறநகர் பகுதியான 'துபாய் மெரீனா' என்பது பெரும்பாலும் கோடிகளில் புரளும் ஐரோப்பிய செல்வந்தர்கள் வாழும் பகுதியாகும். மற்றொருபுறம் அலுவலகங்கள் நிறைந்த ஜெ.எல்.டி(Jumeirah lake towers) எனப்படும் உயரடுக்கு மாடிகள் கொண்ட பகுதிகள். இந்த பகுதிகளுக்குள் சென்றால் நமக்கு கழுத்தில் சுளுக்கு வந்துவிடும், ஏனெனில் பெரும்பாலும் அனைத்து கட்டிடங்களும் குறைந்தது 25 மாடிகளுக்கு மேல்..சில கட்டிடங்கள் 60, 80 எனவும் உண்டு.

இப்பகுதிகளைக் கடந்தால் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், துறைமுகங்கள் நிறைந்த 'ஜெபல் அலி' பகுதிகள் வரும். எனக்கு பெரும்பாலும் இப்பகுதிகளுக்குள் அலுவலக வேலை சம்பந்தமாக அடிக்கடி சென்று வரக்கூடிய வாய்ப்புக்கள் வரும்.. முதலில் மிக பிரமிப்பாக இருந்தது.. இப்பொழுது ரொம்ப பழகிப்போச்சுது..:)

ஆடம்பரமான வாழ்க்கை கொண்ட இப்பகுதியை பார்த்து நாம் பெருமூச்சுதான் விடமுடியும்..!

அப்படி ரசித்தவைகளில் ஒன்று, இந்த புதிய "பென்ட் ஹவுஸ்.."

56 வது தளத்தில், சுமார் 6400 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட இந்த அடுக்குமாடி வீட்டில், அனைத்து அடிப்படை(?) வசதிகளும் உண்டு..

விலை ரொம்ப கம்மிதான்.. 15 மில்லியன் திர்ஹாம்கள்..

உங்கள் பார்வைக்கு..!

 

 

டிஸ்கி:

அதுசரி, திரியின் தலைப்பிற்கும், உள்ளேயுள்ள விசயங்களுக்கும் என்ன சம்மந்தம் என முழிக்கிறீங்களா..?

மாடி... அதிலிருக்கும் பொண்ணு..! சரியா இருக்கா..? ஹி..ஹி..😜

 

Edited by ராசவன்னியன்
  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 மில்லியன் பவுண்ஸா. மாடியோடு மீனாவையும் சேர்த்து விலை சொல்கிறார்கள் போல் உள்ளதே 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

3 மில்லியன் பவுண்ஸா. மாடியோடு மீனாவையும் சேர்த்து விலை சொல்கிறார்கள் போல் உள்ளதே 🤣

தெரியாமல் ஒரு 'ஃப்லோ'வில் 'பொண்ணு' என சொல்லிவிட்டேன்.

அது அம்மா எனும் அம்மணி..🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வன்னியர். 

நான் ஒரு முறை நான்கு நாட்கள் தங்கி இருக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அசந்து போயிருந்தேன் இங்கே இருந்த வசதிகளைப் பார்த்து.

வேலை செய்த நிறுவனம் ஒன்றில் ஒரு புதுமையாக பரிசு ஒன்றினை அளித்தார்கள். பொதுவாக பரிசு வழங்குவது, வரி விதிப்புக்கு உள்ளாவது. அதனை தவிர்க்க ஒரே வழி, அதனை லாட்டரி மூலம் வழங்குவது.

அதிட்டம் இருந்தால், பரிசு கிடைக்கும்.

நிறுவனத்தின் முந்தைய வருடம் கிடைத்த லாபத்தினை அறிவிக்க, முக்கிய ஊழியர்களை அழைத்து கூட்டம் போட்டு அறிவித்தார்கள். பரிசாக, துபாயில் தங்க ஒரு வார விடுமுறை. 

அந்த வகையில் கிடைத்தது இந்த சந்தர்ப்பம். சரி எப்படி லாட்டரி விழுந்தது.

நாம் இருந்த சீட்டின் கீழ் பகுதியில் ஒட்டி வைத்து இருந்தார்கள், ஒரு சீட்டினை. யார் இருந்த சீட்டில் அது இருந்ததோ, அவர்களுக்கு அதிஷ்டம். 

விசயம் தெரியாமல், எனக்காக, அந்த சீட்டினை தந்து விட்டு, தள்ளிப் போயிருந்த நபரின் முகத்தினை நான் பார்க்கவில்லை. பேயறைந்தது போல இருந்தார் என்று எனது பக்கத்து, மேசை நண்பர் பின்னர் சொன்னார்.

நம்ம லுங்கியை கட்டிக்கொண்டு, அரச மரத்தடியில் படுக்கும் சுகமே சுகம். இது எல்லாம் ஒரு போலி என்று உணர்வு வந்தது. 

***

விடியோவை பார்க்கும் போது, அம்மணி சொல்லுவதை வைத்தும், வரும் உணர்வு.... (குளித்துக்கொண்டு வெளியே பார்த்து ரசிக்கலாமாம்) யாராவது பைனாகுலர் வைத்துக்கொண்டு, இங்கே நடப்பதை பார்க்கலாமே.

***

மகிந்த ராஜபக்சே மச்சான் மனைவியின் சகோதரர், விக்ரமசிங்க குறித்து ஒரு கட்டுரை போட்டிருந்தேன். இவரை சிறிலங்கன் விமான நிறுவன தலைவராக மகிந்த போட்டிருந்தார்.

அதிலே, சிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு இந்த வகையில் ஒரு வீடு இருந்தது. அதிலே, நிர்வாக பயிச்சிக்கு அலுவகர்களை துபாய்க்கு அனுப்பும் போது தங்க வைப்பார்கள்.

அந்த வீட்டில், ஏர் ஹோஸ்டர்ஸ் ஆக வேலை செய்த ஒரு பெண்ணை, மடக்கி, அங்கே தங்க வைத்திருந்தார், ஒரு வருடமாக. தனது செகிரேட்டரி என்று சொல்லி, சம்பளம் வேறு கொடுக்க உத்தரவு போட்டிருந்தார்.  

கொழும்பில் இயங்கிய நிறுவன தலைவரின், செயலாளருக்கு துபாயில் என்ன வேலை என்று கேட்க கூடாது.

Edited by Nathamuni
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

தெரியாமல் ஒரு 'ஃப்லோ'வில் 'பொண்ணு' என சொல்லிவிட்டேன்.

அது அம்மா எனும் அம்மணி..🤣

மாடி வீட்டு  மைனா பைங்கிளி  இன்னும் நன்றாக பொருந்தும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

3 மில்லியன் பவுண்ஸா. மாடியோடு மீனாவையும் சேர்த்து விலை சொல்கிறார்கள் போல் உள்ளதே 🤣

Cobham பக்கம் நாம்மாட்கள் தான் விலை அதிகமில்லை ஆரம்பமே ஐந்து மில்லியனில்தான் தொடங்கும் வீடுகளில் இருக்கினம் தலை அந்த பக்கம் கேள்விப்படவில்லையாக்கும் .1000பவுன்ஸ் கட்டி கப்பலில் வந்த கூட்டம் 1958 முதல் அடிக்கு வெளிக்கிட்டவை அவர்களிடம் சிலோன் போகவில்லையா வந்ததுக்கு  என்றால் யோசித்துவிட்டு இருக்கிற சொத்துக்களை  விற்பதுக்கு ஓரிரு முறை போனோம் என்கினம் அவ்வளவுதான் அவர்களின் பிறந்த பூமியுடன் ஆன  பந்தம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

3 மில்லியன் பவுண்ஸா. மாடியோடு மீனாவையும் சேர்த்து விலை சொல்கிறார்கள் போல் உள்ளதே 🤣

உந்த மீனாவுக்கு நான் மூண்டு ரூபாயும் குடுக்கன்..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Nathamuni said:

யாராவது பைனாகுலர் வைத்துக்கொண்டு, இங்கே நடப்பதை பார்க்கலாமே.

நாங்கள் கீழ் வீட்டிலை இருந்து கொண்டே பக்கத்து வீட்டு புதினம் பாக்கிற ஆக்கள். அதுவும் 80 மாடி வீடுகளிலை எண்டால்  பைனாகுலரோடை சுழல் கதிரையிலை இருந்து சுழண்டு அடிக்க வேண்டியது தான்.😁

Edited by குமாரசாமி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நாங்கள் கீழ் வீட்டிலை இருந்து கொண்டே பக்கத்து வீட்டு புதினம் பாக்கிற ஆக்கள். அதுவும் 80 மாடி வீடுகளிலை எண்டால்  பைனாகுலரோடை சிழல் கதிரையிலை இருந்து சுழண்டு அடிக்க வேண்டியது தான்.😁

உந்த வீட்டை வாங்கிப்போட்டு, மறைப்புக்கு, கிடுகு வேலி உள்ளுக்கு கட்டதான் வேணும். ஒரு மறைப்பு கிடையாது. மூலையில, ஒரு மெல்லிய திரைசீலை தொங்குது...

அம்மணி வேறை புளுகித் தள்ளுது.... படுக்கை அறையில் இருந்து 180 பாகையில சுத்திப் பார்க்கலாம். வேற வீட்டிலை இருந்து பைனாகுலர் வைத்துக்கொண்டு வடிவா பார்க்கலாமே. 😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

Picture1.png

 

வணக்கம் வன்னியர்! துபாயில்  இந்தியாவில் இல்லாதது, அமெரிக்காவில் இல்லாதது, ஐரோப்பாவில் இல்லாதது என அப்படி என்னதான் இருக்கின்றது?

துபாயின் இயற்கை என எதை சொல்லலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் வன்னியர்! துபாயில்  இந்தியாவில் இல்லாதது, அமெரிக்காவில் இல்லாதது, ஐரோப்பாவில் இல்லாதது என அப்படி என்னதான் இருக்கின்றது?

துபாயின் இயற்கை என எதை சொல்லலாம்?

இயற்கை வளம் என்பது பாலைவனம் தான்.

கச்சா எண்ணெய் இந்தப்பகுதியில் இல்லை, அல்லது தோண்டியெடுக்க முயற்சிக்கவில்லை.

கச்சா எண்ணை வளம் துபாய்க்கு தெற்கே 140 கி.மீ தூரத்திலிருக்கும் அபுதாபி மாநிலத்தில் தான் மிக அதிகம்.

துபாயின் வருமானம், சுற்றுலா மற்றும் வியாபாரம் சார்ந்த பொருளாதாரம் மட்டுமே.

தன்னிடம் இருக்கும் வளங்களைக் கொண்டு எப்படி புது புது விடயங்களை செய்யலாம் என சிந்திப்பது. அவற்றை மிக கவர்ச்சியாக, பிரமிப்புடன் உலகிற்கு அறிமுகம் செய்வதில் வல்லவர்கள். இதற்கென உலகத்தின் திறன் வாய்ந்த ஆலோசனை சொல்லும் நிறுவனங்களை (Consultants) அமர்த்தியுள்ளார்கள். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த தொலைநோக்கு பார்வை, எந்த வேலையிலும் நேர்த்தி, எதை தொட்டால் நாட்டுக்கு செல்வம் பெருகும் என்ற திட்டமிடல்..

தாரக மந்திரம்,உங்கள் பணத்தை கொண்டு வாருங்கள், வசதிகளை ஒழுக்கமுடன் அனுபவியுங்கள்..

இந்தியாவில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், லஞ்சம் இங்கே இல்லை. குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகள்..

இங்கே மண்ணின் மைந்தர்கள்(Natives) மக்கள் தொகை மிகக்குறைவு..பெரும்பாலும் வெளிநாட்டவரே.. 150க்கும் மேற்பட்ட வகை வகையான வெளிநாட்டவர்கள் வாழும் நாடு.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் வன்னியர்! துபாயில்  இந்தியாவில் இல்லாதது, அமெரிக்காவில் இல்லாதது, ஐரோப்பாவில் இல்லாதது என அப்படி என்னதான் இருக்கின்றது?

துபாயின் இயற்கை என எதை சொல்லலாம்?

உண்மைதான், இந்தியாவில் மிகத் தரமான ஆடம்பர வாழ்வு வாழமுடியும் என்கிறார்கள்.

இந்த 3 மில்லியன் பவுனுக்கு இங்கே ஐரோப்பாவில் மிகத்தரமான வீடு வாங்கிப் போடமுடியும். குடியுரிமையும் தந்து விடுவார்கள்.

பிஜேபி சார்பில் குமரகுரு என்னும் ஒருவர் தமிழக டிவி களில் தோன்றி வாதம் செய்வார்.

முன்னாள் திமுக சபாநாயர் ஒருவர் மகன். சென்னையில் பாடசாலைகள் நடாத்தும் குடும்பம். 

இப்போது பிரிட்டனுக்கு குடி பெயர்த்துள்ளார். £2 மில்லியனுக்கு வீடு வாங்கி போட்டு உள்ளார்.

துபாய், குடியுரிமை ஒருபோதுமே கிடைக்காது. இங்கே வாழ்வது பெருமையானது என்கிறார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

...துபாய், குடியுரிமை ஒருபோதுமே கிடைக்காது.

நாதமுனி சொலவது உண்மைதான், என்ன குட்டிக்கரணம் போட்டாலும் இங்கே குடியுரிமை கிடைக்காது..

வந்தமா, பணத்தை சம்பாதித்தோமா அல்லது செலவழித்து அனுபவித்தோமா.. என எதிலும் மூக்கை நுழைக்காமல், சொந்த நாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கோணும்..!

அதுவே நிம்மதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ராசவன்னியன் said:

நாதமுனி சொலவது உண்மைதான், என்ன குட்டிக்கரணம் போட்டாலும் இங்கே குடியுரிமை கிடைக்காது..

14 minutes ago, Nathamuni said:

துபாய், குடியுரிமை ஒருபோதுமே கிடைக்காது. இங்கே வாழ்வது பெருமையானது என்கிறார். 

என்ன காரணம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

என்ன காரணம்?

ஒரு வெள்ளையர் YT ல் துபாய் குறித்து சொன்னார்.

உலகின் மிக மோசமான இனவெறி பிடித்தவர்கள், சவூதி, துபாய் அரபு சேக்குகள் என்று.

உண்மையில் அற்பனுக்கு பவுசு வந்த கதைதான். எண்ணை கண்டுபிடிக்க முன்னம், பர தேசி பிடித்த நாடுகள் தான் இவை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

என்ன காரணம்?

இங்கே மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகள் எங்குமே குடியுரிமை கிடைக்காது. இதற்கு அவர்களின் பூமி நலன் சார்ந்த அரசியல் காரணங்கள் உண்டு. அவை வெளியில் தெரிவதில்லை.

 

1 hour ago, குமாரசாமி said:

உந்த மீனாவுக்கு நான் மூண்டு ரூபாயும் குடுக்கன்..:cool:

ஏன், அதற்கு மேலும் கொடுக்க மயக்கமா? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

ஏன், அதற்கு மேலும் கொடுக்க மயக்கமா? 😜

நேற்று , முந்தநாள் எல்லாம் இஞ்சை பயங்கர வெய்யில் வெக்கை...... உந்த மீனா எல்லாம் இஞ்சத்தையான் வெள்ளை ஒல்டன் கோல்டன் வுமனிட்டை பிச்சை வாங்கோணும் கண்டியளோ...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

Cobham பக்கம் நாம்மாட்கள் தான் விலை அதிகமில்லை ஆரம்பமே ஐந்து மில்லியனில்தான் தொடங்கும் வீடுகளில் இருக்கினம் தலை அந்த பக்கம் கேள்விப்படவில்லையாக்கும் .1000பவுன்ஸ் கட்டி கப்பலில் வந்த கூட்டம் 1958 முதல் அடிக்கு வெளிக்கிட்டவை அவர்களிடம் சிலோன் போகவில்லையா வந்ததுக்கு  என்றால் யோசித்துவிட்டு இருக்கிற சொத்துக்களை  விற்பதுக்கு ஓரிரு முறை போனோம் என்கினம் அவ்வளவுதான் அவர்களின் பிறந்த பூமியுடன் ஆன  பந்தம் .

துபாயின் வீட்டு விலையை லண்டன் வீட்டு விலையோடு ஒப்பிட முடியாது பெருமாள். இஞ்ச மேற்கு லண்டனில் semi detached 3 அறை வீடுகளே 600, 650K எண்டு போகுது. இன்னும் பத்து வருடத்துல எல்லாரும் மில்லியனர்🤣.  

அதே 600K காசுக்கு அங்க நல்ல லக்சறி பிளட் வாங்கலாம். அதான் அங்கே 3 மில்லியன் என்றால் அதன் தரம் இன்னும் எகிறும் என்ற கருத்தில் சொன்னேன். இது லக்சறி penthouse அதனால் இந்த விலை போலும்.

@குமாரசாமி அண்ணை,

டுபாயில் எனக்கு பிடித்த விசயம் பாலைவன 4x4 சவாரியும், இரவு நேர பாலைவன பார்பிகியூ மற்றும் அரேபிய பெண்களின் பெல்லி டான்ஸ் 😎.

ஒரு அனுபவத்திற்கு Burj Khalifa ஹோட்டல் போன்றவற்றில் ஒரு நேரச்சாப்பாடும், உலகில் உயரமான கட்டிடத்தில் ஏறுதல் போன்றவற்றை செய்யலாம்.

சிறுவர்களுக்கு அபுதாபியில் நிறைய விசயங்கள் இருக்கு. Ferrari World, Warner Bros World, Water World இப்படியாக. 

யாழ்கள ஒன்றுகூடல் ஒன்றை டுபாயில் செய்வதாக முன்னர் ஒருதரம் பேசிகொண்டோம். வருவியள்தானே😎.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

யாழ்கள ஒன்றுகூடல் ஒன்றை டுபாயில் செய்வதாக முன்னர் ஒருதரம் பேசிகொண்டோம். வருவியள்தானே😎.

ஒன்றரை வருசமா ஏழரை பிடித்து போய்  அடங்கி கிடக்கிறம் நிச்சயம் வருவம் 2022 தாண்டியும் கொரனோ படம் காட்டும் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

ஒன்றரை வருசமா ஏழரை பிடித்து போய்  அடங்கி கிடக்கிறம் நிச்சயம் வருவம் 2022 தாண்டியும் கொரனோ படம் காட்டும் போல் உள்ளது .

எல்லாம் சரிவரும். இஞ்ச 3ம் அலை தொடங்கீட்டு எண்டுறாங்கள்.

2 hours ago, குமாரசாமி said:

உந்த மீனாவுக்கு நான் மூண்டு ரூபாயும் குடுக்கன்..:cool:

🤣🤣🤣 இலங்கை காசிலயுமோ🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இதனைப் பார்த்தவுடன் Colombo Port City தான் நினைவுக்கு வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

3 மில்லியன் பவுண்ஸா. மாடியோடு மீனாவையும் சேர்த்து விலை சொல்கிறார்கள் போல் உள்ளதே 🤣

மீனா இல்லாமலே கொழும்பில் மாடி வீடுமட்டும் இந்த விலைக்கு வர நாட்கள் அதிகம் இல்லை 
நாம் அருமையான ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விட்டுக்கொண்டு இருக்கிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

Cobham பக்கம் நாம்மாட்கள் தான் விலை அதிகமில்லை ஆரம்பமே ஐந்து மில்லியனில்தான் தொடங்கும் வீடுகளில் இருக்கினம் தலை அந்த பக்கம் கேள்விப்படவில்லையாக்கும் .1000பவுன்ஸ் கட்டி கப்பலில் வந்த கூட்டம் 1958 முதல் அடிக்கு வெளிக்கிட்டவை அவர்களிடம் சிலோன் போகவில்லையா வந்ததுக்கு  என்றால் யோசித்துவிட்டு இருக்கிற சொத்துக்களை  விற்பதுக்கு ஓரிரு முறை போனோம் என்கினம் அவ்வளவுதான் அவர்களின் பிறந்த பூமியுடன் ஆன  பந்தம் .

ஆம் இப்பகுதிக்கு நான் வந்துள்ளேன். இது கில்ஃபொர்ட், சரே என்ன்னும் ஏரியாவில் உள்ளது என நினக்கின்றேன். அழகிய பெரிய வீடுகள். 

7 hours ago, ராசவன்னியன் said:

இங்கே மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகள் எங்குமே குடியுரிமை கிடைக்காது. இதற்கு அவர்களின் பூமி நலன் சார்ந்த அரசியல் காரணங்கள் உண்டு. அவை வெளியில் தெரிவதில்லை.

 

ஏன், அதற்கு மேலும் கொடுக்க மயக்கமா? 😜

விதி விலக்கு உண்டு. உதரணமாக யூசுப் அலி‍ ‍மலயாளி ‍ லூலூ குழும அதிபர்

7 hours ago, Nathamuni said:

ஒரு வெள்ளையர் YT ல் துபாய் குறித்து சொன்னார்.

உலகின் மிக மோசமான இனவெறி பிடித்தவர்கள், சவூதி, துபாய் அரபு சேக்குகள் என்று.

உண்மையில் அற்பனுக்கு பவுசு வந்த கதைதான். எண்ணை கண்டுபிடிக்க முன்னம், பர தேசி பிடித்த நாடுகள் தான் இவை. 


மிகவும் மத வெறியும்/ இனவெறியும் உடைய மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் நாடுகள் இவை. 

7 hours ago, Nathamuni said:

உண்மைதான், இந்தியாவில் மிகத் தரமான ஆடம்பர வாழ்வு வாழமுடியும் என்கிறார்கள்.

இந்த 3 மில்லியன் பவுனுக்கு இங்கே ஐரோப்பாவில் மிகத்தரமான வீடு வாங்கிப் போடமுடியும். குடியுரிமையும் தந்து விடுவார்கள்.

பிஜேபி சார்பில் குமரகுரு என்னும் ஒருவர் தமிழக டிவி களில் தோன்றி வாதம் செய்வார்.

முன்னாள் திமுக சபாநாயர் ஒருவர் மகன். சென்னையில் பாடசாலைகள் நடாத்தும் குடும்பம். 

இப்போது பிரிட்டனுக்கு குடி பெயர்த்துள்ளார். £2 மில்லியனுக்கு வீடு வாங்கி போட்டு உள்ளார்.

துபாய், குடியுரிமை ஒருபோதுமே கிடைக்காது. இங்கே வாழ்வது பெருமையானது என்கிறார். 

 

ஏன் இரண்டு மில்லியன்? இதிவிட குறைவாக பல்வேறு நாடுகளில் குடியுரிமமை இலகுவாக வங்கலாம். உதாரணம் போர்த்துகல், பனாமா  அல்லது தென்னம‌ரிக்க நாடுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

 

யாழ்கள ஒன்றுகூடல் ஒன்றை டுபாயில் செய்வதாக முன்னர் ஒருதரம் பேசிகொண்டோம். வருவியள்தானே😎.

இங்கிருந்தால் கட்டாயமாக நானும் வருவேன். (அடுத்த வருடம் சிலகாலம் நண்பனுடன் டோக்கியோ, ஜப்பானில் வேலை செய்ய நினத்துள்ளேன். செலவுகள் / வாழ்க்கைதரம் எப்படியோ தெரியாது)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

மீனா இல்லாமலே கொழும்பில் மாடி வீடுமட்டும் இந்த விலைக்கு வர நாட்கள் அதிகம் இல்லை 
நாம் அருமையான ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விட்டுக்கொண்டு இருக்கிறோம் 

வெளியார் வீடு வாங்கும் இலகு டுபாய் போல் இருக்கும் என்றால் கொழும்பு port city யில் பல மாடிகள் புலம்பெயர் தமிழர்களுடையதாய் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இப்போ கொழும்பில் இருக்கும் top end flats இன் விலையை இது பாதிக்குமோ என்றும் சிலர் பயப்படுகிறார்கள்.

2 hours ago, colomban said:

விதி விலக்கு உண்டு. உதரணமாக யூசுப் அலி‍ ‍மலயாளி ‍ லூலூ குழும அதிபர்

யு ஏ இ ஐ பிரதிதிதிதுவம் செய்யும் தடகள வீரருக்கும் உண்டு என நினைக்கிறேன். 

6 hours ago, Kapithan said:

இதனைப் பார்த்தவுடன் Colombo Port City தான் நினைவுக்கு வருகின்றது.

அவர்களின் அனிமேட்டட் வீடியோவை முதல் முறை பார்த்ததும் எனக்கும் இப்படி தோன்றியது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.