Jump to content

உண்மையான அன்பு எது?


Recommended Posts

நான் படித்ததில் எனக்கு பிடித்ததை தந்துள்ளோன் உங்களுக்கும் பிடிக்கும்

என நினைக்கின்றேன் பிடித்தால் நன்றிகள்

சுவாரசியமான துணுக்கு ஒன்று கையில் கிடைத்தது. அதை அப்படியே தருகின்றேன்.

சுவாமி விவோகனந்தரும் அவருடைய தோழியும் ஒரு நீச்சல்குளத்தின் படிக்கட்டில்

அமர்ந்திருந்தனர்.அந்தபெண்மன

Link to comment
Share on other sites

நன்றி கஜந்தி. நீங்கள் படித்த அன்புக்கான நல்லதொரு சிறிய உதாரணத்தை இங்கு பதித்தமைக்கு. :P

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது போல்தான் புலத்தில் தாய்தந்தையர் பிள்ளைகளை சுதந்திரமாக விட்டார்கள் என்னாச்சு..எப்படி போகிறதென நான் சொல்லத்தேவையில்லை..

சுதந்திரம்;

உள்ளங்கை குழியில் தண்ணீரை சிந்தாமல் வைத்திருப்பது..

இறுக்கிப்பிடித்தால் வெளியேறும் ஏனோதானோன்னு பிடித்தாலும் வெளியேறும்..

கவனமாக பிடிக்கவேலண்டும்..அல்லும் பகலும் அவதானமாக இருக்கவேண்டும்.

அங்கேதான் பெற்றோரின் சாமர்த்தியமும் சாதனையும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்வது போல்தான் புலத்தில் தாய்தந்தையர் பிள்ளைகளை சுதந்திரமாக விட்டார்கள் என்னாச்சு..எப்படி போகிறதென நான் சொல்லத்தேவையில்லை..

ஒரு சில பிள்ளைகள் அப்படி செய்யினம் என்றதுக்காக எல்லோரையும் குறை சொல்வது சரி இல்லையே... :unsure:

சுதந்திரம் என்பது எல்லோருக்கும் தேவை. கணவன் மனைவிக்குள்ளையும் கூட தனிப்பட்ட சுதந்திரம் தேவையே.

நன்றி கஜந்தி இணைப்பிற்க்கு.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் ஜனனி லண்டன் என்று குறிப்பிட்டிருக்கவேண்டும்..

இங்கே.. 10 வீதம் பிள்ளைகளை தவிர..

மற்ற யாவரும் எப்படி என சொல்லவேண்டியதில்லை..

நாங்கள் சிறந்தவர்கள் என சினைப்பவர்களே சில காலஙகளில் விஸ்வருபத்தைக் காட்டுகிறார்கள்..

Link to comment
Share on other sites

உண்மையான அன்பு எது என்ற கேள்விக்கு விடை காண முன், உங்களில் யாருக்காவது உண்மை என்றால் என்ன என்று தெரியுமா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது போல்தான் புலத்தில் தாய்தந்தையர் பிள்ளைகளை சுதந்திரமாக விட்டார்கள் என்னாச்சு..எப்படி போகிறதென நான் சொல்லத்தேவையில்லை..

சுதந்திரம்;

உள்ளங்கை குழியில் தண்ணீரை சிந்தாமல் வைத்திருப்பது..

இறுக்கிப்பிடித்தால் வெளியேறும் ஏனோதானோன்னு பிடித்தாலும் வெளியேறும்..

கவனமாக பிடிக்கவேலண்டும்..அல்லும் பகலும் அவதானமாக இருக்கவேண்டும்.

அங்கேதான் பெற்றோரின் சாமர்த்தியமும் சாதனையும் இருக்கும்.

உண்மை

பெற்றோர்கள் கட்டுப்பாட்டாளர்களாக இருக்கின்றார்கள் என்றல்ல. வழிகாட்டியாக இருக்கின்றார்கள். புலத்தில் சுதந்திரமாக பிள்ளைகளை விட்டபோது, பிள்ளைக்கு வழிகாட்டியாக, அவரது நண்பரோ, அல்லது பிறிதொரு மூன்றாம் மனிதன் தாம் அமையப்போகின்றான். அவனுக்கும் உலகத்தைப் பற்றிப் புரிந்து கொள்கின்ற வயதில்லாவிடின், அது காட்டுகின்ற பிழையான வழியினுள் அடித்துச் செல்லப்படவும் கூடும்.

குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டி பெற்றோர் மட்டுமே. அதை கட்டுப்படுத்துதல் என்று யாரும் சொல்லலாம். ஆனால் பிறவழியில் ஏமாற்றுப்படுவதை விட, பெற்றோரின் கட்டளைக்குள் பணிய வைப்பதே நல்லது.

Link to comment
Share on other sites

உங்களில் யாருக்காவது உண்மை என்றால் என்ன என்று தெரியுமா? :unsure:

திருவள்ளுவர் இப்படிக் கூறுகிறார் :

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

Link to comment
Share on other sites

நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்தினால் அவரை சுகந்திரமாக இருக்க

அனுமதியுங்கள் உண்மையான அன்பு என்பது எதையும் கொடுக்கும்

எதையும் திரும்ப எதிர்பார்க்காது அறிவுரை சொல்லும் கட்டளையிடாது

பிடிவாதம் செய்யாது இது தான் உண்மையான அன்பின் ரகசியம் என்றார்

அன்பை பற்றி அழகா சொல்லி இருக்கிறீங்க...............இப்படி ஒரு அன்பை எங்கே அக்கா பெறலாம் என்று சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...............இவ்வள விடயத்தையும் வாழ்கையில் கண்டது என் அம்மாவிடம் மட்டுமே தான் வேறொருவரும் அப்படி நான் இதுவரை சந்திக்கவில்லை என்றே சொல்லாம்...............

Link to comment
Share on other sites

உண்மையான அன்பு அருகினில் இருக்க உண்மையான அனபை தேடி அலைபவர்களை எப்படி சொல்வது?

திருவள்ளுவர் இப்படிக் கூறுகிறார் :

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

வள்ளுவர் கூற்றுபடி யாவும் உண்மையே. ஒருவருக்கு தீயதாக இருப்பது என்னுமொருவருக்கு நன்மையாக இருக்கும் ஆகவே. இவ்வுலகத்தில் யாவும் உண்மையே.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது போல்தான் புலத்தில் தாய்தந்தையர் பிள்ளைகளை சுதந்திரமாக விட்டார்கள் என்னாச்சு..எப்படி போகிறதென நான் சொல்லத்தேவையில்லை..

சுதந்திரம்;

உள்ளங்கை குழியில் தண்ணீரை சிந்தாமல் வைத்திருப்பது..

இறுக்கிப்பிடித்தால் வெளியேறும் ஏனோதானோன்னு பிடித்தாலும் வெளியேறும்..

கவனமாக பிடிக்கவேலண்டும்..அல்லும் பகலும் அவதானமாக இருக்கவேண்டும்.

அங்கேதான் பெற்றோரின் சாமர்த்தியமும் சாதனையும் இருக்கும்.

விகடகவி மாமா சுகந்திரத்துடன் பெற்றோரும் அவர்களின் நண்பராக பாருங்கோ அதற்கு பின் பிள்ளைகள் பிழை செய்வார்கள் என்றா அதற்கு பிறகு உங்கள் கருத்தை வைத்து பாருங்கோ.............சுகந்திரம் என்று கதவை திறந்து விடுவது மாத்திரமல்ல..............பயணத்திலும் எங்களுடன் கை கோர்த்து வருவதே ஆகும்...............

என்னவொ சொல்லுவீனம்.............

மண்ணில் பிறக்கையில் எந்த பிள்ளையும்...............பிலா பிலா.......என்று

ஆகவே சுகந்திரமும் நல்ல நண்பனாகவும் இந்து பாருங்கோ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈன்ற குட்டியை நாய் தன் வாயால் சுத்தம் செய்ட்கிறதே... அதில்தான் உண்மையான அன்பு இருக்கின்றது..

Link to comment
Share on other sites

ஓ அப்ப மனுசப் பிறப்ப விட நாய்ப்பிறப்பு மேலானது என்று சொல்லுறீங்கள் சோக்கிரட்டீஸ்!

ஓ எங்கட கருநாய் கொடுத்து வைத்தவனப்பா! :)

Link to comment
Share on other sites

அன்பு என்பது நாங்கள் மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றேம்

அதை நாம் கொடுக்க நினைக்கின்றேமா? நாங்கள் காட்டும்

அன்பு எதிர்பாப்பில் வருவது. பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான

அன்பை பாதுமாக்கலாம் கையில் உள்ள நீரைப்போல் அதை அழுத்தி

மூட நினைக்க கூடாது. இதனால் தான் பிள்ளைகளுக்கம் எங்களுக்கும்

இடையில் வேறுபாடு வருகின்றது என நினைக்கின்றேன். இங்கே

பிள்ளைகள் இரண்டு கலாச்சாரத்திற்குள் வாழ்கின்றனர் நாம் கொடுக்கும்

அழுத்தம் கூட தவறான பாதைக்கு வழிவகுக்கும் தானே அதே சுகந்திரமான

அன்பை கொடுத்து பாதுகாக்கலாம் தானே

அன்பை பூட்டி வைத்துக்கொண்டு மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

என சினைப்பதும் தப்பு அன்பு பறிமாறப்பட வேண்டியது

அன்னையிடம் இருக்கும் அன்பை நாமும் மற்றவர்களுக்கு கொடுக்க

வேண்டும் அப்போது தான் அது எமக்கும் கிடைக்கும்

நான் படித்த விடையம் இங்கே முரண்பாட்டுக்குள் நிக்கின்றது

விடகவி கூறிய கருத்தை மறுக்கவில்லை ஆனால் நான் எழுதிய விடையம்

அன்பை பற்றியது

Link to comment
Share on other sites

நீங்க அன்பு சுதந்திரம் இரண்டையும் போட்டுக் குழப்புவது மாதிரியுள்ளது.

சுதந்திரம் என்றால் என்ன? அதற்கு முதலில் ஒரு விளக்கம் சொல்லுங்கோ...அதேபோல் உங்க மன்னிக்கவும் எங்க பிள்ளைகள் எதிர்பார்க்கும் சுதந்திரம் தான் என்னவோ?அதைகொடுக்கும் அளவுக்கு எங்களுக்கு மனப்பக்குவம் தான் இருக்கோ?எதற்கும் ஒரு எல்லையும் இருக்குத்தானே?குழம்பாதீர்கள், எங்களையும் குழப்பாதீர்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்ப மனுசப் பிறப்ப விட நாய்ப்பிறப்பு மேலானது என்று சொல்லுறீங்கள் சோக்கிரட்டீஸ்!

ஓ எங்கட கருநாய் கொடுத்து வைத்தவனப்பா! :)

அதிலென்ன சந்தேகம். :lol: B)

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு டவுட் அதாவது அன்பு என்றா என்ன...............இதை அன்புள்ளம் கொண்ட ஆட்கள் விளங்கபடுத்துங்கோ...........

அப்ப வரட்டா............... :P

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் என் கருந்து சுகந்திரத்தை பற்றியது இல்லை உண்மையான

அன்பு பற்றியது

சுகந்திரத்தை பற்றி எழுதியதால் ஒரு கருத்து தருகின்றேன் எத்தனை

பெற்றோர்கள் நாம் பிள்ளைகளுக்கு பிடித்த விடையத்தை ஏற்றுக்கொள்கின்றேம்

படிப்பு முதல் நிறைய விடையங்கள் பெற்றோர்களாகிய எங்களின் விருப்பத்தை

தானே செய்ய சொல்லுகின்றோம் அது அவர்களை பாதிக்கின்றது என்பது

தெரிந்தாலும் எங்கள் பிடிவாதம் மறுக்கின்றது தானே எனக்கு பிடித்ததை

என் மகனே மகளே செய்ய வேண்டு எனத்தானே நினைக்கின்றோம்.

இது உண்மையில்லையா?

இங்கே இரண்டு கலாச்சார பின்னனிக்குள் அவர்கள்வளர்கின்றனர் இதனால்

மனதில் ஒரு தடுமாற்றம் வருகின்றது இதுகும் உண்மை. என்பதால் த

கையில் உள்ள நீரைப்போன்று சுகந்திரமான அன்பை கொடுத்து வளர்க்க வேண்டும் என

என்றேன்

என் பேபிக்கு அன்பு எல்லோரிடமும் உண்டு அது எவ்வளவு உண்மையானது

எனத்தான் யாருக்கும் புரியவில்லை இன்று அப்படியான அன்பை கொடுக்க

முடிகின்றதா அப்படிமுடித்து இருந்தால் எமக்குள் ஏன் இவ்வளவு முரண்பாடுகள்

போலியான ஒரு அன்பு தானே இன்று நிறைய பிரச்சனைக்கு அந்திவாரம்

அன்பை பற்றிய விளக்கம் என்னையும் சிந்திக்க வைத்த தால் தான்

அதை உங்களுக்கும் தந்தேன் இதில் அக்கா விதிவிலக்கு அல்ல அப்படி

என் பதிவுகளில் நான் கூறவுமில்லை அக்காவையும் சேர்தேதான் யேசிக்கின்றேன்

Link to comment
Share on other sites

அப்ப அக்கா எல்லாரும் போலியா தான் அன்பை காட்டீனம் என்று சொல்லுறீங்களா.............இதை ஓரளவு உண்மை தான் ஆனால் எல்லாரும் அப்படி இல்லை என்று நினைக்கிறேன்..........

:D:lol:

Link to comment
Share on other sites

அன்பை பற்றி அழகா சொல்லி இருக்கிறீங்க...............இப்படி ஒரு அன்பை எங்கே அக்கா பெறலாம் என்று சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...............இவ்வள விடயத்தையும் வாழ்கையில் கண்டது என் அம்மாவிடம் மட்டுமே தான் வேறொருவரும் அப்படி நான் இதுவரை சந்திக்கவில்லை என்றே சொல்லாம்...............

இதைத்தான் நானும் யோசிந்தேன் இன்று பலர் எதிர்பார்க்கின்றோம் அதை

எங்களிடம் இருந்து கொடுக்க வேண்டும் என நினைக்கின்றோமா?

எல்லா விடையங்களையும் எங்களை வைத்து உண்மையாக யோசிப்பதில்லை

அந்த உண்மை எமக்கள் வந்தால் தான் எல்லாமே அழகாய் இருருக்கும்

என் பேபி உண்மையாக யோசிந்து பார்க்கவும்...............................அக்கா சொல்வது

சரியாக தோன்றும்

Link to comment
Share on other sites

:lol::lol: இந்த அன்புப் பகுதிக்குள் எங்கேயோ ஒரு மூலையில் மர்மம் இருக்குது. மென்மையாக கசியுது. ஜம்மு நான் எஸ்கேப். பாய் பாய்
Link to comment
Share on other sites

:lol::lol: இந்த அன்புப் பகுதிக்குள் எங்கேயோ ஒரு மூலையில் மர்மம் இருக்குது. மென்மையாக கசியுது. ஜம்மு நான் எஸ்கேப். பாய் பாய்

நீங்களே எஸ்கேப் என்றா பேபிக்கு என்ன வேலை...........நானும் வாரேன் உங்களோட.......... :P

Link to comment
Share on other sites

நீங்களே எஸ்கேப் என்றா பேபிக்கு என்ன வேலை...........நானும் வாரேன் உங்களோட.......... :P

வாங்கோ. ஆனால் சும்மா என்னோடை கேள்வி எல்லாம் கேட்டு தொல்லை பண்ணிட்டு வரக்கூடாது. அன்பு என்றால் என்ன நிலாக்கா னு கேட்க கூடாது எனக்கு தெரியாது ஆமா. :lol:

Link to comment
Share on other sites

வாங்கோ. ஆனால் சும்மா என்னோடை கேள்வி எல்லாம் கேட்டு தொல்லை பண்ணிட்டு வரக்கூடாது. அன்பு என்றால் என்ன நிலாக்கா னு கேட்க கூடாது எனக்கு தெரியாது ஆமா. :D

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தேன் என்று படித்து கொண்டு வருவோ................சா அன்பை பற்றி எல்லாம் கேட்க மாட்டேன்............கொஞ்சம் வித்தியாசமாக.........நட்பு என்றா என்ன காதல் என்றா என்ன என்று கேட்பேன்........... :P

அப்ப வரட்டா................ :P

Link to comment
Share on other sites

இதைத்தான் நானும் யோசிந்தேன் இன்று பலர் எதிர்பார்க்கின்றோம் அதை

எங்களிடம் இருந்து கொடுக்க வேண்டும் என நினைக்கின்றோமா?

எல்லா விடையங்களையும் எங்களை வைத்து உண்மையாக யோசிப்பதில்லை

அந்த உண்மை எமக்கள் வந்தால் தான் எல்லாமே அழகாய் இருருக்கும்

என் பேபி உண்மையாக யோசிந்து பார்க்கவும்...............................அக்கா சொல்வது

சரியாக தோன்றும்

ஆமாம் அக்கா நீங்க சொன்னதில் அர்த்தம் இருக்கு.................. B)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.