Jump to content

`நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வேண்டும்!' - விண்ணப்பித்த டாடா; என்ன செய்வார் ஸ்டாலின்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வேண்டும்!' - விண்ணப்பித்த டாடா; என்ன செய்வார் ஸ்டாலின்?

நியூட்ரினோ

கடந்த மே 20-ம் தேதியன்று நியூட்ரினோ திட்டத்துக்கு காட்டுயிர் வாரிய அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு வனத்துறையிடம் டாடா ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் கொண்டு வந்தே தீருவோம் என்று இந்திய ஒன்றிய அரசு முயன்றுகொண்டிருக்கும் ஒரு திட்டம்தான் நியூட்ரினோ. 2013-ம் ஆண்டுக்குப் பின்னர், எழுந்த சர்ச்சைகள் மற்றும் சூழலியல் சிக்கல்கள் காரணமாக உயர் நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது. அப்போதிலிருந்தே இந்தத் திட்டம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம், வழக்கு நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும்போதெல்லாம், இந்தத் திட்டம் தொடர்பான சர்ச்சைகளும் எழுந்தவண்ணம் இருக்கின்றன.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில், பல்லுயிரிய வளம் மிகுந்த மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ துகள்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில் 2010-ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தத் திட்டத்தை உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
பொட்டிபுரம் அம்பரப்பர் மலை

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்தத் திட்டத்துக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் சார்பாகத் தொடரப்பட்ட வழக்கில் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், இந்திய ஒன்றிய அரசு, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்காக வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி செல்லும் என்று கூறப்பட்டது. ஆனாலும் அதேநேரம், தேசிய காட்டுயிர் அனுமதி வாங்காமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்றும் அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி செல்லும் என்கிற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த மே 20-ம் தேதியன்று நியூட்ரினோ திட்டத்துக்கு காட்டுயிர் வாரிய அனுமதி கேட்டு தமிழக வனத்துறையிடம் டாடா ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of Fundamental Research) விண்ணப்பித்துள்ளது.

 

இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அணைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். இந்தத் திட்டத்தை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்படி, Category A என்ற வகைப்பாட்டின் கீழ்தான் வகைப்படுத்தி பரிசீலிக்க முடியும் என்று அப்போதைய மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் கூறியிருந்தது. ஆனாலும், இதை வெறும் கட்டுமானம் கட்டும் பிரிவில், அதாவது Category B வகைப்பாட்டுக்கு மாற்றி, தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று அறிவித்து நேரடியாக ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது.

 
நியூட்ரினோ ஆய்வுத் திட்ட மாதிரி

தமிழ்நாடு, கேரள எல்லையில் உள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் தமிழ்நாடு பகுதியிலுள்ள காட்டுப் பகுதியை மட்டும் தவிர்த்துவிட்டுப் பிற பகுதிகள் அனைத்தையும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஒன்றிய அரசு அறிவித்தது. இப்படி தமிழ்நாடு அரசின் முடிவையும் மக்களின் எதிர்ப்பையும் மீறி இதைச் செயல்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது.

2018-ம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு எதிராக மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரை, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டார். இந்த நடைப்பயணத்தை அப்போது தி.மு.க செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், 2019-ம் ஆண்டு ஜூலை மாதம், நியூட்ரினோ திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று அறிக்கை வாயிலாக வலியுறுத்தியிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

 

மாநில அரசாங்கத்திடம் காட்டுயிர் வாரிய அனுமதி கோரியுள்ள இந்த விண்ணப்பத்தை, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும். அதோடு, ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வனத்துறை அனுமதியையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்யவேண்டும். மேலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்து, சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்படும் வகையில் தீர்ப்பைப் பெறவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்த அறிக்கை வாயிலாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

 
அம்பரப்பர் மலை

தமிழ்நாடு அரசின் உரிமைகளையும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல் ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இதற்கென தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிலத்தையும் திரும்பப்பெற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இந்த உலகில் பழம் பெருமை வாய்ந்த இடங்களுள் ஒன்றாக, ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ள, மேற்குத்தொடர்ச்சி மலை, தமிழ்நாட்டின் நீர் ஆதாரமாகத் திகழ்கிறது. ஆனால், கடந்த ஒரு நூற்றாண்டாக அங்கே கடுமையான ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன. யானைகளின் காட்டு வழித்தடத்தை மறித்துக் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான சுற்றுலா விடுதிகளை, முழுமையாக இடித்துத் தகர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

இந்த நிலையில், தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், லட்சக்கணக்கான டன் கருங்கற் பாறையை வெட்டி எடுத்து, குகை குடைந்து, நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆராய்ச்சி மையம் அமைக்கு முயற்சியில், 2010-ம் ஆண்டிலிருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு, இடுக்கி ஆகிய அணைகளில் விரிசல் ஏற்படும்.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை, உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 2018-ம் ஆண்டு, மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரை, என் தலைமையில் 13 நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டோம். இந்த நடைப்பயணத்தை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 
நியூட்ரினோ

காட்டுயிர்களுக்குக் கேடு இல்லை என மாநில அரசிடம் சான்று கோரி வந்துள்ள விண்ணப்பத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது. ஏற்கெனவே வழங்கப்பட்ட வனத்துறை சான்றையும் திரும்பப் பெற வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்து சுற்றுச்சூழல் சான்றுக்கு தடை விதிக்கும் தீர்ப்பைப் பெறவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று வலியுறுத்தியுள்ளார்.

நியூட்ரினோ திட்டத்தைக் கடந்த பத்தாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து வருகின்றனர். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதன் மூலம் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் என்று கூறி அதை அமல்படுத்த இந்திய அரசு பல வழிகளில் முயற்சி செய்துகொண்டிருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அந்தத் திட்டத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

https://www.vikatan.com/government-and-politics/environment/tata-institute-asked-tn-govt-permission-for-neutrino-project-activists-oppose-it

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்காமல்… கையெழுத்து வைச்சுப் போடுவாரோ, என்று பயமாய் கிடக்கு. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினால் மறுப்பு சொல்ல முடியாது திட்டத்துக்கு அனுமதி கொடுப்பார் அதன் பின் டங்குவார்  அறுவது லைவா பார்ப்பம் .🤣

1 minute ago, தமிழ் சிறி said:

வாசிக்காமல்… கையெழுத்து போடுவாரோ, என்று பயமாய் கிடக்கு.

அண்ணெய்  கையெழுத்து போடத்தான் வேணும் வேறு வழியில்லை  இல்லையென்றால் 2g  பழைய ஊழல்கள் தூசி தட்டி திமுகவுக்கு லாடம் கட்டும்  பிஜேபி இல்லையென்றால் பதவி பறிப்பு நடக்கும் ஏதாவது காரணத்தை காட்டி .கையெழுத்து போட்ட மறுகணமே இணைய தளம் எங்கும் திமுகா எதிர்ப்பு நெருப்பை விட மோசமாக பரவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஸ்டாலினால் மறுப்பு சொல்ல முடியாது திட்டத்துக்கு அனுமதி கொடுப்பார் அதன் பின் டங்குவார்  அறுவது லைவா பார்ப்பம் .🤣

அண்ணெய்  கையெழுத்து போடத்தான் வேணும் வேறு வழியில்லை  இல்லையென்றால் 2g  பழைய ஊழல்கள் தூசி தட்டி திமுகவுக்கு லாடம் கட்டும்  பிஜேபி இல்லையென்றால் பதவி பறிப்பு நடக்கும் ஏதாவது காரணத்தை காட்டி .கையெழுத்து போட்ட மறுகணமே இணைய தளம் எங்கும் திமுகா எதிர்ப்பு நெருப்பை விட மோசமாக பரவும் .

தமிழக  முதல்வர், இதை எப்படி கையாளப்  போகிறார் என்று பார்க்க, ஆவலாக  இருக்கின்றது.
கையெழுத்து வைத்தால்... முதலில், வைகோவின் எதிர்வினை எப்படி இருக்கும்? 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

191142815_3003467356554073_4926844686012 ஒரு கையெழுத்து தெரியாமல் போட்டுவிட்டன் .. அதற்க்கு இவ்வளவு பெரிய அக்க போரா.? ☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

ஸ்டாலினால் மறுப்பு சொல்ல முடியாது திட்டத்துக்கு அனுமதி கொடுப்பார் அதன் பின் டங்குவார்  அறுவது லைவா பார்ப்பம் .🤣

அண்ணெய்  கையெழுத்து போடத்தான் வேணும் வேறு வழியில்லை  இல்லையென்றால் 2g  பழைய ஊழல்கள் தூசி தட்டி திமுகவுக்கு லாடம் கட்டும்  பிஜேபி இல்லையென்றால் பதவி பறிப்பு நடக்கும் ஏதாவது காரணத்தை காட்டி .கையெழுத்து போட்ட மறுகணமே இணைய தளம் எங்கும் திமுகா எதிர்ப்பு நெருப்பை விட மோசமாக பரவும் .

அப்படி என்றால் “ Belongs  to the Dravidian stock “.. “ ஒன்றிய அரசு” என்ற புதுபதம் எல்லாமே காணாமல் போய்விடும் என்கிறீர்களா? 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படி என்றால் “ Belongs  to the Dravidian stock “.. “ ஒன்றிய அரசு” என்ற புதுபதம் எல்லாமே காணாமல் போய்விடும் என்கிறீர்களா? 

நீங்களா ? அரசியல் பற்றி ?🤣 யாழில் தேவையற்று அரசியல் கதைப்பதில்லை ஒரு கையை கட்டி போட்டு சண்டைக்கு வா என்பது போல் நிலைமை இங்கு  ஆரோக்கியமான அரசியல் கலந்துரையாடல் பொழுதுகள் கண்ட மேனிக்கு   திரிகளை இழுத்து மூடியதில் இருந்து காணாமல் போயிட்டுது அப்படி மூடப்பட்டதுக்கு காரணம் இருபகுதியும் என்கிறார்கள் .

உங்களின் “ Belongs  to the Dravidian stock “ இந்த பதம் மாறியும் பார்க்கலாம் பார்வையின் கோனம்கள்  மாறுபடும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நம்புகிறேன்  தமிழகமுதல்வர் கையெழுத்து  வைக்கமாட்டாரென்று...

Link to comment
Share on other sites

25 minutes ago, Kandiah57 said:

நான் நம்புகிறேன்  தமிழகமுதல்வர் கையெழுத்து  வைக்கமாட்டாரென்று...

ஒரு மானில அரசுக்கு இதை தடுக்கும் அதிகாரம் இல்லை என நினைக்கின்றேன். 

மாநில அரசின் சம்மதம் மற்றும் விருப்புகளை அறிந்தே மத்திய அரசு தன் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வழக்கம் முன்னைய ஒன்றிய அரசுகளுக்கு  இருந்தது. ஆனால் வலது சாரிகளான பா,ஜ.க மாநில அரசுகளின் அதிகாரங்களையும் விருப்புகளையும் புறம்தள்ளி ஒன்றிய அரசின் திட்டங்களை திணிக்கும் வழக்கத்தையே கொண்டிருப்பதால் தமிழ்நாட்டு அரசுக்கு   நீதிமன்றங்களில் வழக்குகளை போட்டு தடுக்க முயல்வதை தவிர வேறு வழிகள் இல்லை என எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஒரு மானில அரசுக்கு இதை தடுக்கும் அதிகாரம் இல்லை என நினைக்கின்றேன். 

மாநில அரசின் சம்மதம் மற்றும் விருப்புகளை அறிந்தே மத்திய அரசு தன் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வழக்கம் முன்னைய ஒன்றிய அரசுகளுக்கு  இருந்தது. ஆனால் வலது சாரிகளான பா,ஜ.க மாநில அரசுகளின் அதிகாரங்களையும் விருப்புகளையும் புறம்தள்ளி ஒன்றிய அரசின் திட்டங்களை திணிக்கும் வழக்கத்தையே கொண்டிருப்பதால் தமிழ்நாட்டு அரசுக்கு   நீதிமன்றங்களில் வழக்குகளை போட்டு தடுக்க முயல்வதை தவிர வேறு வழிகள் இல்லை என எண்ணுகின்றேன்.

நிழலி,  ஜெயலலிதா... உயிருடன் இருக்கும் போது,
"நீட்" தேர்வு போன்ற... தமிழகம் விரும்பாத திட்டங்களை, 
மத்திய அரசு செயல்படுத்த, அனுமதிக்கவில்லை.

காத்திரமான முதல்வராக இருந்தால்... இதனை, தடுக்கலாம் என நினைக்கின்றேன்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.