Jump to content

கப்பல் விபத்து: இந்து சமுத்திரம் ஆபத்தில் – தாக்கம் பல தசாப்தங்களுக்கு தொடரும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் விபத்து; இந்து சமுத்திரம் ஆபத்தில் – தாக்கம் பல தசாப்தங்களுக்கு தொடரும்

 
11-2.jpg
 10 Views

‘எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பலில் இருந்து கடலுக்குள் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் நுண்துண்டுகள் காரணமாக இந்து சமுத்திரம் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல தசாப்த காலத்திற்கு தொடரும் என்று மேற்கு அவுஸ்திரேலிய கடல்சார் கற்கைகள் தொடர்பான பேராசிரியர் சரித பட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை கடல் பரப்பு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை கூறினார்.

மேலும், கொழும்பு கடல் எல்லைக்குள் தீப்பிடித்து விபத்துக்குள்ளான எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட கடல் பாதிப்பு காரணமாக மிகப்பெரிய ஆபத்து இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. கப்பலில் இரசாயன திரவங்கள், எண்ணெய் உள்ளிட்ட கடலுக்கு ஏற்பில்லாத பொருட்கள் கடலுக்குள் கலந்துள்ளன. இது கடல்வாழ் உயிரினங்களை மோசமாக பாதிக்கப் போகின்றது. மீன்பிடிதுறைக்கும் இது பெரும் பாதிப்பை, தாக்கத்தை ஏற்படுத்தும்.

கொரோனா தாக்கம் காரணமாக மக்களின் வழமையான செயல்பாடுகள் இடம்பெறவில்லை. இதனால், உண்மையான தாக்கம் என்னவென்பது பெரும்பாலான நபர்களுக்கு தெரியவில்லை. அதுமட்டுமல்லாது, கப்பலில் இருந்து கடலுக்குள் பரவியுள்ள பிளாஸ்ரிக் நுண்துண்டுகள் இந்து சமுத்திரம் முழுவதும் பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கூறுவதாயின் சோமாலியா தொடக்கம் இந்தோனேசியா வரையிலும், இதே போன்று இந்தியா தொடக்கம் மாலைதீவு வரையிலும் இந்து சமுத்திரம் முழுவதும் இந்த பிளாஸ்ரிக் துண்டுகள் பரவியுள்ளன.

இதன் பாதிப்பை சாதாரணமாகக் கணக்கிட முடியாது. அடுத்த பல தசாப்தங்களுக்கு இதன் பாதிப்பு வெளிப்படும். இந்தத் தாக்கத்தில் இருந்து மீள வேண்டுமாயின் இருக்கும் ஒரே வழிமுறை என்னவெனில், கடலில் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் துண்டுகளை முடிந்தளவு கடலில் இருந்து அகற்றியாக வேண்டும். அதனை அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் இலங்கை கடற்படை இணைந்து வேறு எவரையேனும் இணைத்துக்கொள்ள முடியுமென்றால் அவர்களையும் இணைத்துக் கொண்டு உடனடியாக இந்த செயலில் இறங்க வேண்டும்.

வியாபார நோக்கமாக மாத்திரம் இந்த செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாது எமது கடல் வளத்தை பாதுகாக்க, கடல் உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்பட வேண்டும் – என்றார்.

 

https://www.ilakku.org/?p=51808

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

கப்பல் விபத்து; இந்து சமுத்திரம் ஆபத்தில் – தாக்கம் பல தசாப்தங்களுக்கு தொடரும்

 
11-2.jpg
 10 Views

‘எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பலில் இருந்து கடலுக்குள் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் நுண்துண்டுகள் காரணமாக இந்து சமுத்திரம் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல தசாப்த காலத்திற்கு தொடரும் என்று மேற்கு அவுஸ்திரேலிய கடல்சார் கற்கைகள் தொடர்பான பேராசிரியர் சரித பட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் பாதிப்பை சாதாரணமாகக் கணக்கிட முடியாது. அடுத்த பல தசாப்தங்களுக்கு இதன் பாதிப்பு வெளிப்படும். இந்தத் தாக்கத்தில் இருந்து மீள வேண்டுமாயின் இருக்கும் ஒரே வழிமுறை என்னவெனில், கடலில் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்ரிக் துண்டுகளை முடிந்தளவு கடலில் இருந்து அகற்றியாக வேண்டும். அதனை அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் இலங்கை கடற்படை இணைந்து வேறு எவரையேனும் இணைத்துக்கொள்ள முடியுமென்றால் அவர்களையும் இணைத்துக் கொண்டு உடனடியாக இந்த செயலில் இறங்க வேண்டும்.

வியாபார நோக்கமாக மாத்திரம் இந்த செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாது எமது கடல் வளத்தை பாதுகாக்க, கடல் உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்பட வேண்டும் – என்றார்.

 

https://www.ilakku.org/?p=51808

பரவ முதல் அகற்றுவது நல்ல ஆலோசனை, அரசு செயற்படுத்துகிறதா என்று பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஏராளன் said:

பரவ முதல் அகற்றுவது நல்ல ஆலோசனை, அரசு செயற்படுத்துகிறதா என்று பார்ப்போம்.

வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட கடன் வாங்கும் கூட்டம் இங்கெல்லாம் சிலவழிப்பார்கள்  என்று நான் நினைக்கவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையைத் தூக்கிய அனுமாருக்கு விதை ஒரு பாரமா என்று கேட்பார்கள்.  இந்து சமுத்திரத்தில் ஒரு நாளில் நூற்றுக்கணக்கில் கப்பல்களும் ஆயிரக்கணக்கில் மீன் பிடிப்படகுகளும் உலாவுகின்றன.  அதில் ஒரு கப்பலுக்கு இப்படியாகிட்டது.  அதனைப் பெரிதாக்காமல் ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டியதுதான்.   இதற்கெல்லாம் போயி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, karu said:

மலையைத் தூக்கிய அனுமாருக்கு விதை ஒரு பாரமா என்று கேட்பார்கள்.  இந்து சமுத்திரத்தில் ஒரு நாளில் நூற்றுக்கணக்கில் கப்பல்களும் ஆயிரக்கணக்கில் மீன் பிடிப்படகுகளும் உலாவுகின்றன.  அதில் ஒரு கப்பலுக்கு இப்படியாகிட்டது.  அதனைப் பெரிதாக்காமல் ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டியதுதான்.   இதற்கெல்லாம் போயி......

அப்ப  மீனை பிடிக்கலாமா அந்தோணியாரே ?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதுமானது. அறியாமலே சொன்னாராம்? மிதந்ததை தொட்டவருக்கே அரிப்பு எடுக்குதாமே?

14 hours ago, உடையார் said:

வேறு எவரையேனும் இணைத்துக்கொள்ள முடியுமென்றால் அவர்களையும் இணைத்துக் கொண்டு உடனடியாக இந்த செயலில் இறங்க வேண்டும்.

பொறுங்கள் ஏதாவது நாடுகள் தஞ்சமளிக்க வருவினம், வாங்கி அமுக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2021 at 19:47, பெருமாள் said:

அப்ப  மீனை பிடிக்கலாமா அந்தோணியாரே ?🤣

மூக்கு மயிர் உதிர்ந்து ஆள்ப்பாரம் குறைவதில்லை.  ஆந்தப் பெரிய மகாசமுத்திரத்தில்  ஒரு கப்பல் மூழ்குவதால் ஒன்றும் நடைபெறப் போவதில்லை.  மீன்களையென்ன திமிங்கலங்களையே பிடிக்கலாம்.  ஊரைக்கூட்டி எலிபிடிக்கும் வேலையெல்லாம் வீண்  வேலை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, karu said:

மூக்கு மயிர் உதிர்ந்து ஆள்ப்பாரம் குறைவதில்லை.  ஆந்தப் பெரிய மகாசமுத்திரத்தில்  ஒரு கப்பல் மூழ்குவதால் ஒன்றும் நடைபெறப் போவதில்லை.  மீன்களையென்ன திமிங்கலங்களையே பிடிக்கலாம்.  ஊரைக்கூட்டி எலிபிடிக்கும் வேலையெல்லாம் வீண்  வேலை.

 

ஏன் ரென்சன் ஆகிரீங்க  சிலரிடம் கேள்வி கேட்பது உண்டு விளக்கமான  கருத்துக்களை எதிர்பார்த்தே நானும் முதலில் அதுக்குதான் உங்களிடம் கேட்டது உங்களை கோபப்படுத்தும் என்று நினைக்கவில்லை இந்த நேரமில்லா உலகில் எல்லாத்தையும் தேடி படிக்க முடியாது பாஸ் .

கடைசியில் உங்கள் கருத்துதான் நம்ம கருத்தும் எட்டாம் திகதி கேட்டனான் பதிலை  காணவில்லை நாமளே தேடியதில் இந்த விடயத்தை இரு அரசுகளும் ஊதி  பெருபிக்கின்றன ஏதோ  ஒரு காரணத்துக்கு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.