Jump to content

அரசியல் தஞ்சம் கோரிய 20 தமிழர்களை இன்று நாடு கடத்தும் முயற்சியில் ஜேர்மனி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தஞ்சம் கோரிய 20 தமிழர்களை இன்று நாடு கடத்தும் முயற்சியில் ஜேர்மனி

ஜேர்மனியில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் சுமார் 20 பேரை இன்று புதன்கிழமைபலவந்தமாக நாடுகடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பெருந்தொகையான தமிழ் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தார்கள்.

german-refugess-300x225.jpg

ஜேர்மனியிலிருந்து இவ்வருடம் இரண்டாவது தடவையாக இன்று இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு கடத்தப்படவுள்ளார்கள். இதற்கு எதிராக பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு, வேறு பல மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து ஜேர்மனியின் போட்சைம் ((Pforzheim) நகரில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டத்தை நேற்று முன்தினம் மாலையிலிருந்து முன்னெடுத்து வருகிறது.

இரவு பகலாகத் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்தப் போராட்டம் இன்று மாலை வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்.

கடுமையான மழை மற்றும் குளிருக்கு மத்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஜேர்மன் நாட்டு மக்களும் பங்கெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 4.00 மணி முதல் பிராங்போர்ட் விமான நிலையத்தைச் சூழ்ந்து போராட்டத்தை நடத்துவதற்கும் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன என்று தெரியவருகின்றது.

பிராங்போர்ட் விமான நிலையத்தின் ஊடாகவே குறிப்பிட்ட 20 தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களும் நாடு கடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி சுமார் 25 இலங்கைத் தமிழ் அகதிகளைப் பலத்த எதிர்ப்புகளின் நடுவிலும் ஜேர்மனி பலவந்தமாக நாடு கடத்தியிருந்தது. விமான நிலையத்தை சுற்றிவளைத்து தமிழர்கள் போராட்டம் நடத்திய போதிலும், இரகசியமாக அவர்கள் விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

இதேவேளையில், பிரேமன் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த விராஜ் மென்டிஸ் எடுத்த முயற்சியில் இன்று நாடு கடத்தப்படவிருந்த செல்லத்துரை என்ற தமிழ் அகதி நேற்று மாலை விடுதலை செய்ப்பட்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.
 

https://thinakkural.lk/article/123762

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் Pforzheim தடுப்பு முகாமைச் சுற்றிக் கடும் பதற்றம் – காவல்துறையினர் குவிப்பு

 
WhatsApp-Image-2021-06-09-at-12.42.50-PM
 96 Views

நாடுகடத்தலுக்காக ஈழத்தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போட்ஸ்ஹைம்  (Pforzheim) தடுப்பு முகாமுக்கு எதிரில் கடந்த 70 மணித்தியாலங்களாக தமிழ் மக்களும் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர்களும் மிக அதிகளவில் திரண்டு திட்டமிடப்பட்ட நாடுகடத்தலைத் தடுப்பதற்காக தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.

WhatsApp-Image-2021-06-09-at-12.23.13-PM

இந்தச் சூழ் நிலையில் தற்போது தடுப்பு முகாம் அமைந்துள்ள இடத்தில் ஜேர்மனி நாட்டுக் காவல் துறையினர் அதிகமாகக் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு பகுதிகளாக ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள முடியாதவாறு தடுக்கப் பட்டிருக்கிறார்கள்.

WhatsApp-Image-2021-06-09-at-12.46.41-PM

பன்னிரண்டு ஈழத்தமிழ் அகதிகளை ஏற்றிச்செல்ல வாகனம் ஒன்று தயாராக வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாகனம் செல்லவிடாமல் தடுப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையாகப் போராடி வருகிறார்கள்.

WhatsApp-Image-2021-06-09-at-12.22.33-PM

இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து தலைமை தாங்கிவரும் சகோதர இன ஊடகவியலாளர் விராஜ் மென்டிஸ் தானும் கைதுசெய்யப்படலாம் என்று இலக்கு ஊடகத்துக்குத் தற்போது தெரிவத்திருக்கிறார்.

 

 

https://www.ilakku.org/?p=51916

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் அகதிகளில் ஒரு பகுதியினர் ஏற்றிச் செல்லப் பட்டிருக்கின்றனர் – மனித உரிமை ஆர்வலர் விராஜ் மென்டிஸ்

 
WhatsApp-Image-2021-06-09-at-12.22.33-PM
 189 Views

ஜேர்மனியிலிருந்து ஈழத்தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து பிரேமன் மனித உரிமை அமைப்பும் ஏனைய சில அமைப்புகளும் இணைந்து ஜேர்மனியில் போட்ஸ்ஹைம் நகரில் அமைந்துள்ள தடுப்பு முகாமுக்கு எதிரில் கடந்த திங்கள் மாலையிலிருந்து ஒரு தொடர் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.

மனித உரிமை ஆர்வலர் விராஜ் மென்டிஸ் இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிவருகிறார். அவர் தற்போது அனுப்பி வைத்துள்ள செய்தியைக் கீழே தருகிறோம்.

“ஒரு வாகனம் தடுப்பு முகாமுக்கு உள்ளே வந்து அகதிகளில் ஒரு பகுதியினரைக் கொண்டு சென்றிருக்கிறது. அந்த வாகனத்தைச் செல்லவிடாமல் தடுக்க நாங்கள் முயற்சித்தோம். ஆனால் காவல்துறையினர் எங்களைத் தள்ளிவிட்டபின் வாகனம் வெளியேறியது.

வாகனம் சிறியதாக இருக்கின்ற படியால் மேலும் சில தமிழ் அகதிகள் உள்ளே இருக்கலாம் என எண்ணுகிறோம். அதனால் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.

அண்மையில் சிறீலங்காவுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வந்திருக்கும் ஜேர்மன் இனத்தவர்கள் நால்வரைக் கொண்ட குழுவில் மூவரின் கடவுச்சீட்டு விபரங்களை காவல்துறையினர் எடுத்திருக்கிறார்கள்.”

மேலும் தகவல்களுக்கு https://humanrights.de/ என்ற இணையத்தை பார்வையிடலாம்…

 

 

https://www.ilakku.org/?p=51933

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.