Jump to content

சூரிய கிரகணத்தை கர்ப்பிணிகள் பார்க்கலாமா? கிரகணம் பற்றிய அச்சமும் - அறிவியல் உண்மைகளும் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • எம். மணிகண்டன்
  • பிபிசி தமிழ்

முக்கிய வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான சூரிய கிரகணம் ஜூன் 10-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இது குறித்தும், சூரியனைப் பற்றி நமக்குத் தெரியாத புதிர்கள் குறித்துமான கேள்விகளுக்கு நமக்கு பதில் தருகிறார் இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன்.

சூரிய கிரகணம் என்பது என்ன?

மிக எளிமையாகச் சொல்வதென்றால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். தமிழில் இதைச் சூரியன் மறைப்பு என்று கூறலாம்.

தற்போது நடக்கும் சூரிய கிரகணம் எப்படிப்பட்டது?

இப்போது நடக்க இருப்பது வளையவடிவச் சூரிய கிரகணம். இதைக் கங்கண சூரிய கிரகணம் என்றும் கூறலாம். கையில் நாம் போடும் வளைய வடிவக் கங்கணத்தை இது குறிக்கிறது.

சந்திரன் வட்டவடிவம். சூரியனும் வட்ட வடிவமாகத் தெரிகிறது. சந்திரன் சூரியனை மறைக்கும்போது அது முழுமையாக மறைப்பதில்லை. அதனால் சந்திரனைச் சுற்றியுள்ள, சூரியனை மறைக்காத பகுதிகள் ஒளி வட்டமாகக் கண்ணுக்குத் தெரியும். அப்போது சூரியன் நடுவில் கறுப்பாகவும், சுற்றிலும் நெருப்பு வளையமாகவும் தென்படும். அதுபோன்ற சூரிய கிரகணம்தான் இப்போது நடக்க இருக்கிறது.

ஜூன் 10-ஆம் தேதி நடக்கும் சூரிய கிரகணத்தை எங்கிருந்தெல்லாம் பார்க்கலாம்?

எப்போதுமே சூரிய கிரகணம் என்பது உலகத்தின் ஒரு சிறு பகுதியில் மட்டும்தான் தென்படும். தற்போது நடக்கும் சூரிய கிரணம் இந்தியாவில் தெரியாது. அமெரிக்காவின் அலாஸ்கா, ஐரோப்பா ரஷ்யாவின் சில பகுதிகள், கனடா போன்ற இடங்களில் இருந்துதான் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.

நேரில் பார்க்க இயலாதவர்கள் வேறு எந்த வழியில் பார்க்க முடியும்?

இந்தியாவில் நேரடியாக சூரிய கிரகணத்தைப் பார்க்க இயலாதவர்கள் இணையதளங்களில் பார்க்கலாம். நாசா உள்ளிட்ட பல அமைப்புகள் இணையதளங்களிலும், தொலைக்காட்சிகளும் சூரியகிரகணத்தைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.

சூரிய கிரகணத்தின்போது சூரியனில் இருந்து ஆபத்தான கதிர்கள் வெளிப்படுமா?

சூரிய கிரகணம் குறித்து முக்கியமான மூடநம்பிக்கை, கிரகணம் என்பது சூரியனில் நடக்கிறது என்பதுதான். இது முற்றிலுமாகத் தவறு. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனில் எந்தவிதமான மாற்றமும் நடைபெறுவதில்லை. இந்தியாவில்தான் இதுகுறித்த அதிக தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன.

சூரிய கிரகணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெளிநாடுகளில் சூரியகிரகணம் கொண்டாடப்படுகிறது. மக்கள் பொது இடங்களிலும் திறந்த வெளிகளிலும் கூடி பாதுகாப்பான முறையில் இதைக் காண்கிறார்கள். இந்தியாவில் சூரியகிரகணம் பற்றிய அச்சம் நிலவுகிறது. இது தேவையில்லாதது.

சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் வெளியே வரலாமா?

தாராளமாக வெளியே வரலாம். வழக்கமான நாள்களில் சூரியன் எப்படியிருக்குமோ அப்படித்தான் சூரியகிரகணம் நடக்கும் நாளிலும் இருக்கும். வெயிலில் குடையைப் பிடித்தால் எப்படி சூரியஒளி நம்மீது படாதோ அதைப் போன்றதுதான் சூரியனைச் சந்திரன் மறைக்கும் நிகழ்வும். அது வெறும் நிழலைப் போலத்தான். வேறெதுவும் இல்லை.

அதே நேரத்தில் வெறும் கண்ணால் சூரியனைப் பார்க்கக்கூடாது. அதற்காக உருவாக்கப்பட்டுள்ள கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டும்.

சூரியனைப் பற்றி நமக்குத் தெரியாத புதிர்கள் என்னென்ன?

அறிவியலைப் பொறுத்தவரை தெரியாதவை என்னெவெல்லாம் இருக்கிறது என்பதைப் பற்றிப் படிப்பதே தனிப்பிரிவு. சூரியனை பற்றி அப்படித் தெரியாத, புரிந்து கொள்ள இயலாத பல அம்சங்கள் இருக்கின்றன.

நமது வீட்டில் நெருப்பு இருக்கிறதென்றால், அதன் அருகே செல்லச் செல்ல வெப்பமும் அதிகமாகும். விலகிச் சென்றால் வெப்பம் குறையும். சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5 ஆயிரம் டிகிரி செல்சியஸ். ஆனால் சூரியனை விட்டு சற்று வெளியே வந்தால் அதன் வெப்பநிலை ஒரு லட்சம் டிகிரி செல்சியஸுக்கும் அதிகம்.. அதாவது சூரியனின் மேற்பரப்பைவிட சூரியனுக்கு சற்று தள்ளியிருக்கும் சுற்றுப்புறம் அதிக வெப்பநிலையில் இருக்கிறது. இதை Solar Coronal Heating Mystery. நெருங்கிச் சென்றால் வெப்பநிலை அதிகமாக இருக்கும், விலகிச் சென்றால் வெப்பம் குறைவாக இருக்கும் என்று அறிவியல் கூறும் நிலையில், சூரியனில் இருக்கும் இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டறியப்படவில்லை.

இன்னும் ஆய்வுகள் இந்தச் சிக்கலைப் பற்றிப் பல கோட்பாடுகள் இருந்தாலும், அவற்றால் முழுமையாக விளக்க முடியவில்லை. இன்றுவரை அது புதிர்தான்.

சூரிய கிரகணம்

சூரியனைப் பற்றி முக்கியமாக நடக்கும் ஆய்வுகள் என்னென்ன?

சூரியனைப் பற்றி நமக்குத் தெரிந்த முக்கியமான அம்சம், அதன் ஆற்றலுக்குக் காரணம் அங்குள்ள அணுக்கள் ஒன்றுடன் மோதி பிணைகின்றன என்பதுதான். இந்தப் பிணைப்பின் மூலம் வெளிப்படும் ஆற்றலே சூரியனின் ஒட்டுமொத்த ஆற்றலுக்கும் காரணமாகிறது. இது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதே முயற்சியை பூமியில் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பிரான்ஸ் நாட்டில் ITER (International Thermonuclear Experimental Reactor) என்ற பெயரில் வெப்ப அணுக்கரு ஆய்வு உலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் கூட்டு முயற்சியில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. சூரியனில் நடக்கும் அதே செயலை பூமியில் செயற்கையாக நடத்த முடியுமா என்று இங்கு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கூட்டாக ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு நாடுகள் தனித்தனியாகவும் இதே ஆய்வைச் செய்து வருகின்றன. சீனா தனியாகச் செய்துவரும் ஆய்வு முக்கியக் கட்டத்தை எட்டியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதைச் செயற்கைச் சூரியன் என்கிறார்கள். உண்மையில் இது செயற்கைச் சூரியன் அல்ல. சூரியனில் நடப்பதைப் போன்ற நிகழ்வை பூமியில் நடத்துவதற்கான முயற்சிதான் இது.

இதுபோன்ற திட்டங்களின் மூலம் மிகக் குறைந்த செலவில் அதிக அளவிலான ஆற்றலைப் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

சூரிய கிரகணத்தை கர்ப்பிணிகள் பார்க்கலாமா? கிரகணம் பற்றிய அச்சமும் - அறிவியல் உண்மைகளும் என்ன? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.