Jump to content

திருச்சி சிறப்பு முகாமில் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி சிறப்பு முகாமில் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகள்

Capture.JPG-1-1-696x352.jpg
 87 Views

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகள் உட்பட அங்கு தடுப்பில் உள்ளவர்கள் தங்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று(09) ஆரம்பித்துள்ளனர். 

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் தாங்கள் இந்த சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த அரசாங்கத்தில் தங்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் தங்களுக்கு சரியான நீதியை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Capture-6-1024x645.jpg

  • தமிழக முதல்வருக்கு எங்களது கோரிக்கை! சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத் தமிழரை சித்திரவதை செய்வது ஏன்?
  • இந்தக் கொடிய கொரோனா காலத்தில் எங்கள் குடும்பத்தினர் வெளியில் உள்ளனர். கருணை அடிப்படையில் எங்களை எங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழவிடுங்கள்.
  • நீதி வேண்டும். நீதி வேண்டும். தமிழக அரசே நீதி வேண்டும். சிறு சிறு குற்ற வழக்கு. தீர்வு இன்றி தண்டனைக் காலத்திற்கும் மேலாக சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ளோம்.

போன்ற பதாகைகளை வைத்து, தமிழக அரசிடம் தங்களுக்கான நீதியை வேண்டி இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள மகேந்திரன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், தான் 8 வருடங்களாக இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் பிறந்தவர்களும் இந்த முகாமில் உள்ளதாகவும், சென்ற அரசாங்கத்தில் தங்களுக்கான நீதி கிடைக்கவில்லை. இந்த அரசாங்கத்தில் அது கிடைக்கும் என்று நம்புகின்றோம். எங்களுக்கு உடனடியாக விடுதலை வேண்டும். நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு நாம் பெரும் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். முகாம்களில் எங்கள் உறவுகளுடன் வாழ கருணை காட்டுங்கள். நடவடிக்கை எடுங்கள். இல்லையெனில், எங்களை கொன்று எங்கள் உடல்களை எங்கள் உறவினர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். இந்த உண்ணாவிரதம் தொடரும். உண்ணாவிரதத்தில் இழப்புகளை சந்திக்காமல் எங்களுக்கு நல்லதொரு தீர்வினைத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

மேலும் ஒரு கைதி கருத்துத் தெரிவிக்கையில், தமிழக முதல்வருக்கு எங்கள் இரண்டாவது கோரிக்கை. சென்ற வாரம் ஒரு கோரிக்கையை வைத்திருந்தோம்.  மீண்டும் அதே கோரிக்கையை வைத்து எங்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். எங்களை தயவு செய்து விடுதலை செய்யுமாறு மிகத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறோம் என வீடியோ பதிவு செய்து சமூகவலைத் தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=51950

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணை கொலை செய்து விடுங்கள் – சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்

 
1-32.jpg
 15 Views

“சிறப்பு முகாம் எனும் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கருணை கொலை செய்து விடுங்கள்” என்ற கோரிக்கையை முன் வைத்து  ஈழ தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் 78 பேர் உள்ளனர்.

இந்நிலையில், தங்களை பொய் வழக்கில் கைது செய்தும் அந்த வழக்கில் தண்டனைக் காலத்திற்கு மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர் என்றும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஈழத் தமிழர்களிடம் காவல் உதவி ஆணையர் மணிகண்டன், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. அப்போது போராட்டம் நடத்தினால், வழக்குப் பதிவு செய்து, கைது செய்வோம் என்று  காவல்துறையின் மிரட்டுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=52016

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 80 ஈழத் தமிழர்கள் விடுதலை கோரி உள்ளிருப்பு போராட்டம்!

June 10, 2021
 

தமிழக அரசே!
ஈழத் தமிழர்களை அடைத்து வைத்துள்ள சித்திரவதை முகாம் எனும் திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடு என தமிழின உணர்வாளர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் நீண்ட நாட்களாக விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ள 80 ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

20210610_112259.jpg?resize=640%2C354
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களின் போராட்டம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் மு.க.ஸ்டாலினுக்கு அவசர கடிதம்

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் இன்று திங்கட்கிழமை ஆறாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தம்மை விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல், கருணைக் கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த அவசர கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இலங்கை வாழ் தமிழ் மக்கள் அயல் நாடானா இந்திய தாய் திரு நாட்டில் அடைக்கலம் புகுந்த வேளையில் இது வரை காலமும் ஆற்றி வந்த அளப்பரிய நன்மைகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.மேலும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு முகாம்களில் வாழும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் சிரமங்களையும் கஸ்டங்களையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான தீர்க்கமான சாகமான முடிவுகளை எடுக்குமாறு தங்களை வேண்டி நிற்கின்றேன்.அத்தோடு இந்த குடும்பங்களின் ஒரு சில குடும்ப தலைவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து தங்கள் வாழ்க்கையினை முன்னெடுக்க எதிர் பார்த்துள்ளனர்.

முகாம்களில் வாழும் ஈழத் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும், திருச்சி சிறப்பு முகாமில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களின் விடுதலை தொடர்பாகவும் இவர்களுடைய மன ஆதங்கத்தை கருத்தில் கொண்டு இவர்களுடைய விடுதலைக்காகவும் மேலான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் எனவும் நான் நம்புகிறேன் என குறித்த கடிதத்தில் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.(15)

 

 

http://www.samakalam.com/திருச்சி-சிறப்பு-முகாமில/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.