Jump to content

பிரித்தானியாவில், 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம்!

பிரித்தானியாவில், 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம்!

கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் காரணமாக பிரித்தானியாவில் 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மக்களிடையே பொருட்கள் வாங்கும் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் குறிப்பாக ஒன்லைனில் பொருட்கள் வாங்குவதால் பல்பொருள் அங்காடிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பல்பொருள் அங்காடிகளில் உள்ள அத்தியாவசியமற்ற கடைகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் சுமார் 700 பல்பொருள் அங்காடிகள் உள்ளன. இவற்றில் 10 சதவீதம் முற்றிலுமாக மூடப்படும் சூழலில் உள்ளன. சில பல்பொருள் அங்காடிகள் பகுதியளவில் குடியிருப்புகளாகவும், அலுவலகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

30 பல்பொருள் அங்காடிகளில் தற்போது பாதியளவு காலியாக உள்ளன. 5 பல்பொருள் அங்காடிகளில் 80 சதவீத கடைகள் காலியாகிவிட்டன. 34 பல்பொருள் அங்காடிகளில் 40 முதல் 50 சதவீதம் வரையிலான கடைகள்தான் செயற்படுகின்றன.

நொட்டிங்ஹாம், கேஸில்கேட், ஸ்டாக்டன், ஷ்ரூஸ்பரியில் உள்ளரிவர்சைட் சென்டர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இத்துடன் ஹை வைஹோம்ப், மெய்டன் ஹெட் பகுதியில் உள்ள நிகோல்சன் பகுதிகளில் விரிவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தெற்கு லண்டனில் உள்ள கேஸில் பல்பொருள் அங்காடிகள் இடிக்கப்படுகிறது.

https://athavannews.com/2021/1221257

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பிரான்சில் பல் பொருள் அங்காடிகள் வைத்திருப்பர்கள்  தான்

கொரோனா  காலப்பகுதியில் செல்வந்தர்களாகியுள்ளனர்.

இதில்  எம்மவர்களும்  அடங்குவர்

எந்தநிலையிலும்  பல்பொருள்  அங்காடிகள்  பூட்டப்படாததே  காரணம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

ஆனால் பிரான்சில் பல் பொருள் அங்காடிகள் வைத்திருப்பர்கள்  தான்

கொரோனா  காலப்பகுதியில் செல்வந்தர்களாகியுள்ளனர்.

இதில்  எம்மவர்களும்  அடங்குவர்

எந்தநிலையிலும்  பல்பொருள்  அங்காடிகள்  பூட்டப்படாததே  காரணம்

 

இங்கு ஒன்லைன் இங்கிலாந்தின் சில இடங்கள் முட்டை ,பால்,பாண்  எட்டு மணி நேரத்தில் டெலிவரி செய்கிறார்கள்  பத்து பதினாலு வருடத்தில் வர வேண்டிய மாற்றம் கொரனோ  லொக்டவுனில் மக்கள்  பழகி  விட்டார்கள் இதனால் பாரிய சூப்பர் மார்கெட்டுகள் மக்கள் வெறிசோடி போகின்றன . தேவையற்ற வாடகை அதுவும் புறநகர் பகுதிகளில் சதுர அடிக்கு கொடுக்கும் வாடகையை விட சிற்றி சென்ரர்  கடைகளுக்கு கொடுக்கும் வாடகை 30 அல்லது 40 மடங்கு அதிகமாக கொடுக்கணும் ரேட்ஸ்  எனும் கவுன்சில் வரி ஒவ்வொரு தெருவுக்கு ஒவ்வொரு மாதிரி நினைத்தப்பாட்டுக்கு அறவிட்டார்கள் இனி அதெல்லாம் கிடையாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சுமார் 700 பல்பொருள் அங்காடிகள்

 

5 hours ago, தமிழ் சிறி said:

30 பல்பொருள் அங்காடிகளில் தற்போது பாதியளவு காலியாக உள்ளன. 5 பல்பொருள் அங்காடிகளில் 80 சதவீத கடைகள் காலியாகிவிட்டன. 34 பல்பொருள் அங்காடிகளில் 40 முதல் 50 சதவீதம் வரையிலான கடைகள்தான் செயற்படுகின்றன.

இங்கே பல்பொருள் அங்காடி என்பது சூப்பர்மார்கெட் அல்ல சொப்பிங் செண்டர் என நினைக்கிறேன்.

செய்தியின் ஆங்கில மூலம் கீழே.

https://www.theguardian.com/business/2021/jun/05/up-to-70-uk-shopping-centres-could-close-amid-covid-crisis 

1 hour ago, விசுகு said:

ஆனால் பிரான்சில் பல் பொருள் அங்காடிகள் வைத்திருப்பர்கள்  தான்

கொரோனா  காலப்பகுதியில் செல்வந்தர்களாகியுள்ளனர்.

இதில்  எம்மவர்களும்  அடங்குவர்

எந்தநிலையிலும்  பல்பொருள்  அங்காடிகள்  பூட்டப்படாததே  காரணம்

 

இங்கேயும் இதுதான் நிலைமை அண்ணா.

இந்த செய்தி சொப்பிங் செண்டர் எனும் வகை வகையான கடைகளை கொண்ட கடைதொகுதிகள் பற்றியது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

இங்கேயும் இதுதான் நிலைமை அண்ணா.

இந்த செய்தி சொப்பிங் செண்டர் எனும் வகை வகையான கடைகளை கொண்ட கடைதொகுதிகள் பற்றியது என நினைக்கிறேன்.

குரைடன்  ஷொப்பிங் சென்ரர்  லொக் டவுன் முதலாவதின் பின் போனேன் அநேக கடை தொகுதிகள் மழைத்தண்ணி இறங்கியபடி சில இடங்கள் ஆளரவமற்று பேய் நகரம் போல் காட்சி அளித்தது போதாக்குறைக்கு குரைடன்  கவுன்சில் முற்று முழுதாக வங்குரோத்து திவால் அடைந்து விட்டார்கள்bankruptcy.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

குரைடன்  ஷொப்பிங் சென்ரர்  லொக் டவுன் முதலாவதின் பின் போனேன் அநேக கடை தொகுதிகள் மழைத்தண்ணி இறங்கியபடி சில இடங்கள் ஆளரவமற்று பேய் நகரம் போல் காட்சி அளித்தது போதாக்குறைக்கு குரைடன்  கவுன்சில் முற்று முழுதாக வங்குரோத்து திவால் அடைந்து விட்டார்கள்bankruptcy.

 

அநேகமாக அது விரைவில் இடிக்கப்பட்டு குடியிருப்பாகும் என நினைக்கிறேன்.

குரோய்டன் கவுன்சில் பிரச்சனை கனகாலமா இழுபடுகுது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அநேகமாக அது விரைவில் இடிக்கப்பட்டு குடியிருப்பாகும் என நினைக்கிறேன்.

குரோய்டன் கவுன்சில் பிரச்சனை கனகாலமா இழுபடுகுது.  

திவால் அடித்துவிட்டார்கள் . குரைடன்  கவுன்சில் மாத்திரம் அல்ல அநேக இங்கிலாந்து  கவுன்சில்களில் பாருங்கள் ஒராள் செய்யும் வேலைக்கு குறைந்தது நான்கு பேருக்கு மேல் வெட்டியாய் இருந்து சம்பளம் எடுத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு கிளப் போல் இருந்து கும்மி அடிப்பார்கள் எல்லாம் மக்களின் வரிப்பணம் தானே .. அதிகபடியான பிஎம்ஐ கொண்டவர்களும் அவர்கள்தான் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.