Jump to content

பிரித்தானியாவில், 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம்!

பிரித்தானியாவில், 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம்!

கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் காரணமாக பிரித்தானியாவில் 70 சதவீத பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மக்களிடையே பொருட்கள் வாங்கும் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் குறிப்பாக ஒன்லைனில் பொருட்கள் வாங்குவதால் பல்பொருள் அங்காடிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பல்பொருள் அங்காடிகளில் உள்ள அத்தியாவசியமற்ற கடைகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் சுமார் 700 பல்பொருள் அங்காடிகள் உள்ளன. இவற்றில் 10 சதவீதம் முற்றிலுமாக மூடப்படும் சூழலில் உள்ளன. சில பல்பொருள் அங்காடிகள் பகுதியளவில் குடியிருப்புகளாகவும், அலுவலகங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

30 பல்பொருள் அங்காடிகளில் தற்போது பாதியளவு காலியாக உள்ளன. 5 பல்பொருள் அங்காடிகளில் 80 சதவீத கடைகள் காலியாகிவிட்டன. 34 பல்பொருள் அங்காடிகளில் 40 முதல் 50 சதவீதம் வரையிலான கடைகள்தான் செயற்படுகின்றன.

நொட்டிங்ஹாம், கேஸில்கேட், ஸ்டாக்டன், ஷ்ரூஸ்பரியில் உள்ளரிவர்சைட் சென்டர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இத்துடன் ஹை வைஹோம்ப், மெய்டன் ஹெட் பகுதியில் உள்ள நிகோல்சன் பகுதிகளில் விரிவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தெற்கு லண்டனில் உள்ள கேஸில் பல்பொருள் அங்காடிகள் இடிக்கப்படுகிறது.

https://athavannews.com/2021/1221257

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பிரான்சில் பல் பொருள் அங்காடிகள் வைத்திருப்பர்கள்  தான்

கொரோனா  காலப்பகுதியில் செல்வந்தர்களாகியுள்ளனர்.

இதில்  எம்மவர்களும்  அடங்குவர்

எந்தநிலையிலும்  பல்பொருள்  அங்காடிகள்  பூட்டப்படாததே  காரணம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

ஆனால் பிரான்சில் பல் பொருள் அங்காடிகள் வைத்திருப்பர்கள்  தான்

கொரோனா  காலப்பகுதியில் செல்வந்தர்களாகியுள்ளனர்.

இதில்  எம்மவர்களும்  அடங்குவர்

எந்தநிலையிலும்  பல்பொருள்  அங்காடிகள்  பூட்டப்படாததே  காரணம்

 

இங்கு ஒன்லைன் இங்கிலாந்தின் சில இடங்கள் முட்டை ,பால்,பாண்  எட்டு மணி நேரத்தில் டெலிவரி செய்கிறார்கள்  பத்து பதினாலு வருடத்தில் வர வேண்டிய மாற்றம் கொரனோ  லொக்டவுனில் மக்கள்  பழகி  விட்டார்கள் இதனால் பாரிய சூப்பர் மார்கெட்டுகள் மக்கள் வெறிசோடி போகின்றன . தேவையற்ற வாடகை அதுவும் புறநகர் பகுதிகளில் சதுர அடிக்கு கொடுக்கும் வாடகையை விட சிற்றி சென்ரர்  கடைகளுக்கு கொடுக்கும் வாடகை 30 அல்லது 40 மடங்கு அதிகமாக கொடுக்கணும் ரேட்ஸ்  எனும் கவுன்சில் வரி ஒவ்வொரு தெருவுக்கு ஒவ்வொரு மாதிரி நினைத்தப்பாட்டுக்கு அறவிட்டார்கள் இனி அதெல்லாம் கிடையாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சுமார் 700 பல்பொருள் அங்காடிகள்

 

5 hours ago, தமிழ் சிறி said:

30 பல்பொருள் அங்காடிகளில் தற்போது பாதியளவு காலியாக உள்ளன. 5 பல்பொருள் அங்காடிகளில் 80 சதவீத கடைகள் காலியாகிவிட்டன. 34 பல்பொருள் அங்காடிகளில் 40 முதல் 50 சதவீதம் வரையிலான கடைகள்தான் செயற்படுகின்றன.

இங்கே பல்பொருள் அங்காடி என்பது சூப்பர்மார்கெட் அல்ல சொப்பிங் செண்டர் என நினைக்கிறேன்.

செய்தியின் ஆங்கில மூலம் கீழே.

https://www.theguardian.com/business/2021/jun/05/up-to-70-uk-shopping-centres-could-close-amid-covid-crisis 

1 hour ago, விசுகு said:

ஆனால் பிரான்சில் பல் பொருள் அங்காடிகள் வைத்திருப்பர்கள்  தான்

கொரோனா  காலப்பகுதியில் செல்வந்தர்களாகியுள்ளனர்.

இதில்  எம்மவர்களும்  அடங்குவர்

எந்தநிலையிலும்  பல்பொருள்  அங்காடிகள்  பூட்டப்படாததே  காரணம்

 

இங்கேயும் இதுதான் நிலைமை அண்ணா.

இந்த செய்தி சொப்பிங் செண்டர் எனும் வகை வகையான கடைகளை கொண்ட கடைதொகுதிகள் பற்றியது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

இங்கேயும் இதுதான் நிலைமை அண்ணா.

இந்த செய்தி சொப்பிங் செண்டர் எனும் வகை வகையான கடைகளை கொண்ட கடைதொகுதிகள் பற்றியது என நினைக்கிறேன்.

குரைடன்  ஷொப்பிங் சென்ரர்  லொக் டவுன் முதலாவதின் பின் போனேன் அநேக கடை தொகுதிகள் மழைத்தண்ணி இறங்கியபடி சில இடங்கள் ஆளரவமற்று பேய் நகரம் போல் காட்சி அளித்தது போதாக்குறைக்கு குரைடன்  கவுன்சில் முற்று முழுதாக வங்குரோத்து திவால் அடைந்து விட்டார்கள்bankruptcy.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

குரைடன்  ஷொப்பிங் சென்ரர்  லொக் டவுன் முதலாவதின் பின் போனேன் அநேக கடை தொகுதிகள் மழைத்தண்ணி இறங்கியபடி சில இடங்கள் ஆளரவமற்று பேய் நகரம் போல் காட்சி அளித்தது போதாக்குறைக்கு குரைடன்  கவுன்சில் முற்று முழுதாக வங்குரோத்து திவால் அடைந்து விட்டார்கள்bankruptcy.

 

அநேகமாக அது விரைவில் இடிக்கப்பட்டு குடியிருப்பாகும் என நினைக்கிறேன்.

குரோய்டன் கவுன்சில் பிரச்சனை கனகாலமா இழுபடுகுது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அநேகமாக அது விரைவில் இடிக்கப்பட்டு குடியிருப்பாகும் என நினைக்கிறேன்.

குரோய்டன் கவுன்சில் பிரச்சனை கனகாலமா இழுபடுகுது.  

திவால் அடித்துவிட்டார்கள் . குரைடன்  கவுன்சில் மாத்திரம் அல்ல அநேக இங்கிலாந்து  கவுன்சில்களில் பாருங்கள் ஒராள் செய்யும் வேலைக்கு குறைந்தது நான்கு பேருக்கு மேல் வெட்டியாய் இருந்து சம்பளம் எடுத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு கிளப் போல் இருந்து கும்மி அடிப்பார்கள் எல்லாம் மக்களின் வரிப்பணம் தானே .. அதிகபடியான பிஎம்ஐ கொண்டவர்களும் அவர்கள்தான் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.