Jump to content

கொரோனா நோயாளிகளை ஏற்றிவந்த பஸ் மோதியதில் விவசாயி மரணம் – மட்டுவிலில் பதற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா நோயாளிகளை ஏற்றிவந்த பஸ் மோதியதில் விவசாயி மரணம் – மட்டுவிலில் பதற்றம்

 
12-1.png
 31 Views

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பஸ் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பஸ்ஸுக்கு கற்கள் வீசப்பட்டன. அதனால் பஸ்ஸில் பாதுகாப்புக்கு பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. மட்டுவில் சந்திரபுரன் வட்டன் வேலாயுதம் (வயது-70) உயிரிழந்துள்ளார்.

தென்னிலங்கையிலிருந்து 5 பேருந்துகளில் கொவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த விவசாயி ஒருவரை பேருந்து ஒன்று மோதியதில் அவர் வீதியில் சாய்ந்தார்.

சுயநினைவற்ற அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பஸ்களுக்கு கற்கள் வீசப்பட்டன. அதனால் பஸ்களில் பாதுகாப்புக்காகப் பயணித்த இராணுவத்தினர் கற்கள் வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க முறப்பட்டனர்.

மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். கற்கள் வீசினர் என்ற குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

சம்பவத்தையடுத்து விபத்துக்குள்ளான பேருந்து தவிர்ந்த ஏனைய 4 பஸ்களும் அங்கிருந்து அனுப்பப்பட்டன.

 

https://www.ilakku.org/?p=51963

 

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய நிலமையில், தென் இலங்கையிலிருந்து ஊர்வலமாக வட இலங்கைக்கு அழைத்து வரவேண்டிய காரணம் என்ன...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2021 at 23:01, Paanch said:

கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய நிலமையில், தென் இலங்கையிலிருந்து ஊர்வலமாக வட இலங்கைக்கு அழைத்து வரவேண்டிய காரணம் என்ன...??

நீங்கள் இப்படி பிரிவினை பேசக்கூடாது.....நோயிலும் நாங்கள் தேசியத்தையும் ,நல்லிணக்கதையும் கடைபிடிக்கிறோம்....என சிங்கள மக்களுக்கு சொல்லியினம் அவையளும் நம்பி அடுத்த தேர்தலில் வாக்கு போடுவினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2021 at 15:01, Paanch said:

கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய நிலமையில், தென் இலங்கையிலிருந்து ஊர்வலமாக வட இலங்கைக்கு அழைத்து வரவேண்டிய காரணம் என்ன...??

அதைத்தான் நானும் நினைத்தேன்.. அவ்ளா பெரிய தேசம் இருக்க அதை எல்லாம் கடந்து எதுக்கு இங்க கொண்டுவாறானுவள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 

அவர்கள் வரவே மாட்டார்கள் சாமியார். மௌன விரதமாம். அவர்களுக்கு தேவையானதற்கு மட்டும் குதித்தோடி வருவார்கள் முட்டுக்கொடுத்து மல்லுக்கட்ட. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 

நாங்கள் வைப்போமல்ல....
பஸ் ரோட்டில் ஓடினால் விபத்து நடக்கத்தான் செய்யும்.....அமேரிக்காதான் விபத்துக்கள் உலகில் அதிகம் நடக்கும் நாடு.....நடைபயணிகள்,சைக்கிள் ஓட்டுனர்கள் பார்த்து ஓட வேண்டும்...2009 க்கு முதல் இப்படியான சொகுசு பஸ்கள் அந்த மக்கள் கண்டவர்களா? இப்பதான் மக்கள் நல்ல பேரூந்துகளை கண்ணால் பார்க்கிறார்கள்....
புலம்பெயர்ந்து சென்றவர்கள் இன்னும் அதே மனப்பான்மையில் தான் இருக்கின்றனர் ஆனால் இங்கு மக்கள் புது பஸ்களை விரும்புகிறார்கள்....அதற்காக மகிந்தா அரசை பாராட்ட வேண்டும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

2009 க்கு முதல் இப்படியான சொகுசு பஸ்கள் அந்த மக்கள் கண்டவர்களா? இப்பதான் மக்கள் நல்ல பேரூந்துகளை கண்ணால் பார்க்கிறார்கள்....

அது சரிதான். ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால்? 

 

On 10/6/2021 at 18:03, உடையார் said:

தென்னிலங்கையிலிருந்து 5 பேருந்துகளில் கொவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 ஏன் என்பதே? அதனாற்தான் மாற்றுக்கருத்தாளர்கள் கருத்தாட, தடுத்தாட வரமாட்டேன் என்கிறார்கள். பயணத்தடை அமுலில். யாரும் அறியாமல் கொண்டுவந்து சேர்த்திட நினைத்ததை, அந்த நபரின் மரணம் வெளிக்கொணர்ந்துள்ளது. நாளைக்கு; வடக்கில் கொரோனா அதிகரிப்பு, மக்கள் சுகாதார முறைகளை கடைபிடிக்கவில்லை. ஆகவே வீட்டுக்கு வீடு இராணுவம் காவல் என  செய்தி வந்திருக்கும். இடம் பார்த்து சொல்லத்தான் நாமல் வடக்கிற்கு அவசரமாய் பயணம் செய்தாரோ? உலக குப்பைகள், தெற்கு  நோயாளிகள் எல்லாம் வடக்கிற்கு. நம்ம தலைவர்கள் வேறு விஷயம் ஆராயினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்துக்கு விரோதமான செயல் நடை பெற்றால் ஏன் நாங்கள் தடுத்தாட போறோம் ....அங்.. அங்...
எங்கள் விருப்ப்மும் அது தானே....

எங்கள் தலிவர்கள் பாணந்துறையில் கொரானா கைதி மரணம் பற்றி புலன்விசாரணை செய்யினம் 

6 minutes ago, satan said:

அது சரிதான். ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால்? 

 

 ஏன் என்பதே? அதனாற்தான் மாற்றுக்கருத்தாளர்கள் கருத்தாட, தடுத்தாட வரமாட்டேன் என்கிறார்கள். பயணத்தடை அமுலில். யாரும் அறியாமல் கொண்டுவந்து சேர்த்திட நினைத்ததை, அந்த நபரின் மரணம் வெளிக்கொணர்ந்துள்ளது. நாளைக்கு; வடக்கில் கொரோனா அதிகரிப்பு, மக்கள் சுகாதார முறைகளை கடைபிடிக்கவில்லை. ஆகவே வீட்டுக்கு வீடு இராணுவம் காவல் என  செய்தி வந்திருக்கும். இடம் பார்த்து சொல்லத்தான் நாமல் வடக்கிற்கு அவசரமாய் பயணம் செய்தாரோ? உலக குப்பைகள், தெற்கு  நோயாளிகள் எல்லாம் வடக்கிற்கு. நம்ம தலைவர்கள் வேறு விஷயம் ஆராயினம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

அவர்கள் வரவே மாட்டார்கள் சாமியார். மௌன விரதமாம். அவர்களுக்கு தேவையானதற்கு மட்டும் குதித்தோடி வருவார்கள் முட்டுக்கொடுத்து மல்லுக்கட்ட. 

 

6 hours ago, putthan said:

நாங்கள் வைப்போமல்ல....
பஸ் ரோட்டில் ஓடினால் விபத்து நடக்கத்தான் செய்யும்.....அமேரிக்காதான் விபத்துக்கள் உலகில் அதிகம் நடக்கும் நாடு.....நடைபயணிகள்,சைக்கிள் ஓட்டுனர்கள் பார்த்து ஓட வேண்டும்...2009 க்கு முதல் இப்படியான சொகுசு பஸ்கள் அந்த மக்கள் கண்டவர்களா? இப்பதான் மக்கள் நல்ல பேரூந்துகளை கண்ணால் பார்க்கிறார்கள்....
புலம்பெயர்ந்து சென்றவர்கள் இன்னும் அதே மனப்பான்மையில் தான் இருக்கின்றனர் ஆனால் இங்கு மக்கள் புது பஸ்களை விரும்புகிறார்கள்....அதற்காக மகிந்தா அரசை பாராட்ட வேண்டும்😁

ஒன்றுபட்ட நாட்டுக்குள் என்ற  இலங்கைக்குள் எண்டு ஏதும் நினைக்கினமோ தெரியேல்லை. இல்லாட்டில் இலங்கை அரசை விமர்ச்சிக்க மனம் இடங்குடுக்கேல்லையோ தெரியாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இலங்கை அரசை விமர்ச்சிக்க மனம் இடங்குடுக்கேல்லையோ தெரியாது..

பல பதிவுகளில் தெறித்த உண்மை அது. பின்னர் வறுமையை சொல்லி மூடிவிடுவது.உண்மையை கதைக்க முடியாது நாங்கள் ஊரில் இருக்கிறோம் என்று சொல்லிச் சொல்லியே சிங்களத்தை காப்பாற்றுவது, தமிழர் என்னென்ன செய்கிறார்கள் என்பதையும் போட்டு உடைப்பது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

. இல்லாட்டில் இலங்கை அரசை விமர்ச்சிக்க மனம் இடங்குடுக்கேல்லையோ தெரியாது...

எக்காரணம் கொண்டும் இலங்கை அரசை விமர்சிக்க மாட்டோம்...😁

 ...விமர்சித்தால் அவர்களால் அங்கு வாழ முடியாது ஆனால் அதை வெளியே சொல்லமாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 

அவர்களுக்கு அது பற்றி யாழில் எழுதுவது வீண் வேலையாம்

எங்கோ  அது  பற்றி எழுதுகிறார்களாம்

சிலவேளை  நாம்  போகமுடியாத செவ்வாயில் அல்லது சூரியனில்  இருக்கும் என்று  நுினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

பல பதிவுகளில் தெறித்த உண்மை அது. பின்னர் வறுமையை சொல்லி மூடிவிடுவது.உண்மையை கதைக்க முடியாது நாங்கள் ஊரில் இருக்கிறோம் என்று சொல்லிச் சொல்லியே சிங்களத்தை காப்பாற்றுவது, தமிழர் என்னென்ன செய்கிறார்கள் என்பதையும் போட்டு உடைப்பது. 

இன்றும் தமிழர் தரப்புகளில் பிழைகளையும் குறை குற்றங்களையும் கண்டு பிடிக்கின்றார்களே ஒழிய சிங்கள தரப்பின் அட்டூழியங்களை மறந்தும் கூட முன்னிறுத்தி கதைக்கவோ கருத்தெழுதவோ மாட்டார்கள்.

4 hours ago, putthan said:

எக்காரணம் கொண்டும் இலங்கை அரசை விமர்சிக்க மாட்டோம்...😁

 ...விமர்சித்தால் அவர்களால் அங்கு வாழ முடியாது ஆனால் அதை வெளியே சொல்லமாட்டார்கள்

அடேங்கப்பா நல்லாய்ச்சொன்னியள் போங்கோ.
ஆனால்   சிங்களத்தரப்பு எது சொன்னாலும் செந்தில் ஆக்ஸன் 🤣

Senthil GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அவர்களுக்கு அது பற்றி யாழில் எழுதுவது வீண் வேலையாம்

எங்கோ  அது  பற்றி எழுதுகிறார்களாம்

சிலவேளை  நாம்  போகமுடியாத செவ்வாயில் அல்லது சூரியனில்  இருக்கும் என்று  நுினைக்கின்றேன்

அப்ப ஏனாம் சீமான் எண்ட பெயரை கண்டவுடனை வரிஞ்சு கட்டிக்கொண்டு வரிசையாய் வருகினமாம்? அதையும் அங்கையே வெள்ளுத்துக்கட்டலாமே. அதுமட்டுமில்லாமல் கலைஞர் கருநாநிதியெண்டாலும் சேம் பிரச்சனை அவையளுக்கு....

அது வேறை லெவல் இணையங்கள் விசுகர் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்நெஞ்சம் படைத்த மாற்றுகருத்து மாணிகம்ஸ்.

கால்ல விழுந்து கதறினாலும் - கிட்னிய கண்ல காட்ட மாடேங்கிறீங்களேப்பா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது.

பொலிஸ் சந்தேகநபர்களை அடிச்சுக் கொல்லுது... இப்படியும் கொல்லுது. இராணுவம் விறகு வெட்டிறவரை சுட்டுக்கொல்லுது... காட்டுக்க பன்றி பிடிக்கப் போறவனையும் கொல்லுறாங்கள்.

ஆக மொத்தத்தில் சொறீலங்கா சிங்கள இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆட்சிக்குள்.. மனித உரிமைகளை மீறியே பழகிப் போனவர்கள்..கேட்பார் கேள்வி இல்லை என்று ஆகிப்போனதால்.. மனித உரிமைகளை காக்க யாரும் இல்லை. ஆதிக்க அதிகார பேரினவாதத் திமிர் பிடித்து அலையும்.. சிங்கள.. அரச இயந்திர குற்றவாளிகளை தண்டிக்க அங்கு நீதித்துறை என்ற.. எதுவும் உருப்படியாக இல்லை. 

இந்த நிலை மிகவும் ஆபத்தான ஒன்றாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

நீங்கள் இலங்கையில் வாழ்கிறீர்கள் என்பதற்காக அதிகம் அநியாயங்களுக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது. இதே நீங்கள் ஒருவேளை அரபுலகிலோ.. ஐரோப்பாவிலோ.. கனடா அமெரிக்காவிலோ.. அவுஸி.. நியூசிலாந்திலோ வாழ்ந்திருந்தால்.. நிச்சயமாக.. இப்படி கருத்தெழுதி இருக்கமாட்டீர்கள்.

கொரோனா மரணங்களில் 125,000 மேல் மரணத்தைக் கண்ட நாட்டில் வாழ்ந்தாலும்.. இப்படி கொரோனா தோற்றாளர்கள் ஊர் விட்டு ஊர் கடத்தும் நடவடிக்கையை சொறீலங்கா சிங்கள இராணுவ அரசைத் தவிர வேறு எவரும் செய்யவில்லை. நோய் தொற்றாளர்களை அவர்கள் வாழும் வீட்டுக்குள் ஊருக்குள் தான் முடக்கினமே தவிர.. தொற்றாளர்கள் ஊர் விட்டு ஊர்.. பிரதேசம் விட்டு பிரதேசம்.. கொண்டு போகவில்லை.

அண்மையில் முழுத்தீவானா நயினாதீவிற்கு எப்படி கொரோனா நுழைந்தது. ஊரே அறியும் அதன் பின்னணி. இறுதியில் ஆலயக் குருக்கள் அதற்குப் பலி. 

சொந்த ஊருக்குள் ஒருவர் சைக்கிளில் போவது பயணத்தடைக்குள் வருமென்றால்.. நோய் தொற்றாளர்களை பிரதேசம் விட்டு பிரதேசம் கடத்தும் செயல் ஏன் அந்த பயணத் தடைக்குள் வரவில்லை. ஆம் அதையிட்டு கேள்வி கேட்க முடியாது. ஏனெனில்.. சுகாதார சேவை செய்ய வேண்டிய பணியை செய்வது இனப்படுகொலை இராணுவமும் பொலிஸும் அல்லவா.

என்றாலும்.. நீங்கள் இந்தளவுக்கு பயந்து வாழனுன்னு இல்லை. ஊரில் உள்ள எத்தனையோ மக்கள் இதனை அநியாயம் என்றே சொல்கிறார்கள். ஆனால்.. நீங்கள் அநியாயத்துக்கு நியாயம்..கற்பிப்பது மிகவும் அநியாயமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

கொரோனா சகலருக்கும் சமமானது. இதில் கேள்வி என்னவென்றால் கொழும்பிலிருந்து இவ்வளவு தூரம் கடந்து ஏன்  கொரோனா நோயாளிகளை தமிழர் பகுதிகளுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே.

முதியவரின் மரணம் அது விபத்தாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இறந்தவர் முதியவர் என்பதற்காக ஏற்பட்ட விபத்தை சரியென நிஞாயம் கற்பிக்க முடியாது. பயணத்தடை விதிப்பவர்கள் சாதாரண மக்களின் ஜீவனோபாயத்திற்கு தகுந்த ஏற்பாடு ஏதும் செய்து கொடுத்தார்களா? அரசும், சம்பந்தப்பட்டவர்களும் ஒழுங்கு முறைகளை கடைபிடிக்கிறார்களா? பேசப்பயம் என்றால் எதுவும் பேசாமல் இருக்கலாம். ஆனால் இங்கு வலிந்து கட்டிக்கொண்டு வந்து அநிஞாயத்துக்கு வெள்ளை அடிப்பவர்கள் அநிஞாயம் செய்பவரும்,   அதன் (அரசின்) பங்காளிகளுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் பகுதியில் இருந்து கொரோனா நோயாளிகளை வடக்கிற்கு கொண்டு வந்தது தப்பில்லை, விபத்தை ஏற்படுத்தியது அதுவும் தப்பில்லை.  வயிற்றுப்பிழைப்புக்காக வெளியில் சென்ற முதியவர் விபத்தில் சிக்கி இறந்ததுதான் தப்பு இங்கு. இப்படிபட்டவர்களால் வழிநடத்தப்படும் இளம் சமுதாயம் எப்படிப்பட்ட ஆரோக்கியமான எண்ணங்களை கொண்டவர்களாக உருவாவார்கள்? என்பதை  நினைக்கவே பயமாக இருக்கிறது. பயணத்தடை அமுலில் இருக்கும்போது நாமல் வடக்கிற்கு விஜயம் செய்யலாம் தப்பில்லை. ஆனால் முதியவர் வெளியில் வந்தது தப்பு. அவர்  என்ன அரசியல் தேவைக்கா வெளியில் சென்றார்? என்ன, அவர்களின் திட்டம் இவரின் மரணத்தால் கசிந்து விட்டதே என்கிற ஆதங்கம், இறந்தவர் மேல் குற்றச் சாட்டு வைத்து நிஞாயப்படுத்துகிறார்கள் அரசின் முகவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

தனி,
அப்ப பாஸ் இல்லாமல் வெளியாலை போனால் அடிச்சுக் கொல்லலாம் அப்பிடித் தானே. உங்கடை சொந்தம் ஆருக்கும்நடந்தால் இப்பிடிச் சொல்லுவியளோ? அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்க வேணும் என்பதற்காக எப்பிடியெண்டாலும் கதைக்கலாம் என்றுநினைக்கக் கூடாது. விவசாயிகள் தோட்டத்துக்கு போக பாஸ் இருக்குத் தானே.பாஸ் இல்லாமல் வெளியாலை போய் கொரோனா வந்தால் முதியவரில் பிழை என ஏற்றுக் கொள்ளலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் @தனிக்காட்டு ராஜான்னாலும் இப்படி தனியா வந்து மாட்டி இருக்க கூடாது.

இப்ப பாருங்க கிட்னிய பிதுக்கி எடுத்திட்டாங்கல்ல?

கோஷான் ஒரு ஓரமா உக்காந்து டி குடிக்கும் போதே யோசிசிருக்க வேணாம்?

நான் போட்ட மீமுக்கு சிரிப்ப வேற போட்டுட்டு போய் மாட்டீருக்கீங்களே. என்ன புள்ளையா நீர்.🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.