Jump to content

கொரோனா நோயாளிகளை ஏற்றிவந்த பஸ் மோதியதில் விவசாயி மரணம் – மட்டுவிலில் பதற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா நோயாளிகளை ஏற்றிவந்த பஸ் மோதியதில் விவசாயி மரணம் – மட்டுவிலில் பதற்றம்

 
12-1.png
 31 Views

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பஸ் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பஸ்ஸுக்கு கற்கள் வீசப்பட்டன. அதனால் பஸ்ஸில் பாதுகாப்புக்கு பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. மட்டுவில் சந்திரபுரன் வட்டன் வேலாயுதம் (வயது-70) உயிரிழந்துள்ளார்.

தென்னிலங்கையிலிருந்து 5 பேருந்துகளில் கொவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த விவசாயி ஒருவரை பேருந்து ஒன்று மோதியதில் அவர் வீதியில் சாய்ந்தார்.

சுயநினைவற்ற அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பஸ்களுக்கு கற்கள் வீசப்பட்டன. அதனால் பஸ்களில் பாதுகாப்புக்காகப் பயணித்த இராணுவத்தினர் கற்கள் வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க முறப்பட்டனர்.

மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். கற்கள் வீசினர் என்ற குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

சம்பவத்தையடுத்து விபத்துக்குள்ளான பேருந்து தவிர்ந்த ஏனைய 4 பஸ்களும் அங்கிருந்து அனுப்பப்பட்டன.

 

https://www.ilakku.org/?p=51963

 

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய நிலமையில், தென் இலங்கையிலிருந்து ஊர்வலமாக வட இலங்கைக்கு அழைத்து வரவேண்டிய காரணம் என்ன...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2021 at 23:01, Paanch said:

கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய நிலமையில், தென் இலங்கையிலிருந்து ஊர்வலமாக வட இலங்கைக்கு அழைத்து வரவேண்டிய காரணம் என்ன...??

நீங்கள் இப்படி பிரிவினை பேசக்கூடாது.....நோயிலும் நாங்கள் தேசியத்தையும் ,நல்லிணக்கதையும் கடைபிடிக்கிறோம்....என சிங்கள மக்களுக்கு சொல்லியினம் அவையளும் நம்பி அடுத்த தேர்தலில் வாக்கு போடுவினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2021 at 15:01, Paanch said:

கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய நிலமையில், தென் இலங்கையிலிருந்து ஊர்வலமாக வட இலங்கைக்கு அழைத்து வரவேண்டிய காரணம் என்ன...??

அதைத்தான் நானும் நினைத்தேன்.. அவ்ளா பெரிய தேசம் இருக்க அதை எல்லாம் கடந்து எதுக்கு இங்க கொண்டுவாறானுவள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 

அவர்கள் வரவே மாட்டார்கள் சாமியார். மௌன விரதமாம். அவர்களுக்கு தேவையானதற்கு மட்டும் குதித்தோடி வருவார்கள் முட்டுக்கொடுத்து மல்லுக்கட்ட. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 

நாங்கள் வைப்போமல்ல....
பஸ் ரோட்டில் ஓடினால் விபத்து நடக்கத்தான் செய்யும்.....அமேரிக்காதான் விபத்துக்கள் உலகில் அதிகம் நடக்கும் நாடு.....நடைபயணிகள்,சைக்கிள் ஓட்டுனர்கள் பார்த்து ஓட வேண்டும்...2009 க்கு முதல் இப்படியான சொகுசு பஸ்கள் அந்த மக்கள் கண்டவர்களா? இப்பதான் மக்கள் நல்ல பேரூந்துகளை கண்ணால் பார்க்கிறார்கள்....
புலம்பெயர்ந்து சென்றவர்கள் இன்னும் அதே மனப்பான்மையில் தான் இருக்கின்றனர் ஆனால் இங்கு மக்கள் புது பஸ்களை விரும்புகிறார்கள்....அதற்காக மகிந்தா அரசை பாராட்ட வேண்டும்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

2009 க்கு முதல் இப்படியான சொகுசு பஸ்கள் அந்த மக்கள் கண்டவர்களா? இப்பதான் மக்கள் நல்ல பேரூந்துகளை கண்ணால் பார்க்கிறார்கள்....

அது சரிதான். ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால்? 

 

On 10/6/2021 at 18:03, உடையார் said:

தென்னிலங்கையிலிருந்து 5 பேருந்துகளில் கொவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 ஏன் என்பதே? அதனாற்தான் மாற்றுக்கருத்தாளர்கள் கருத்தாட, தடுத்தாட வரமாட்டேன் என்கிறார்கள். பயணத்தடை அமுலில். யாரும் அறியாமல் கொண்டுவந்து சேர்த்திட நினைத்ததை, அந்த நபரின் மரணம் வெளிக்கொணர்ந்துள்ளது. நாளைக்கு; வடக்கில் கொரோனா அதிகரிப்பு, மக்கள் சுகாதார முறைகளை கடைபிடிக்கவில்லை. ஆகவே வீட்டுக்கு வீடு இராணுவம் காவல் என  செய்தி வந்திருக்கும். இடம் பார்த்து சொல்லத்தான் நாமல் வடக்கிற்கு அவசரமாய் பயணம் செய்தாரோ? உலக குப்பைகள், தெற்கு  நோயாளிகள் எல்லாம் வடக்கிற்கு. நம்ம தலைவர்கள் வேறு விஷயம் ஆராயினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்துக்கு விரோதமான செயல் நடை பெற்றால் ஏன் நாங்கள் தடுத்தாட போறோம் ....அங்.. அங்...
எங்கள் விருப்ப்மும் அது தானே....

எங்கள் தலிவர்கள் பாணந்துறையில் கொரானா கைதி மரணம் பற்றி புலன்விசாரணை செய்யினம் 

6 minutes ago, satan said:

அது சரிதான். ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால்? 

 

 ஏன் என்பதே? அதனாற்தான் மாற்றுக்கருத்தாளர்கள் கருத்தாட, தடுத்தாட வரமாட்டேன் என்கிறார்கள். பயணத்தடை அமுலில். யாரும் அறியாமல் கொண்டுவந்து சேர்த்திட நினைத்ததை, அந்த நபரின் மரணம் வெளிக்கொணர்ந்துள்ளது. நாளைக்கு; வடக்கில் கொரோனா அதிகரிப்பு, மக்கள் சுகாதார முறைகளை கடைபிடிக்கவில்லை. ஆகவே வீட்டுக்கு வீடு இராணுவம் காவல் என  செய்தி வந்திருக்கும். இடம் பார்த்து சொல்லத்தான் நாமல் வடக்கிற்கு அவசரமாய் பயணம் செய்தாரோ? உலக குப்பைகள், தெற்கு  நோயாளிகள் எல்லாம் வடக்கிற்கு. நம்ம தலைவர்கள் வேறு விஷயம் ஆராயினம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

அவர்கள் வரவே மாட்டார்கள் சாமியார். மௌன விரதமாம். அவர்களுக்கு தேவையானதற்கு மட்டும் குதித்தோடி வருவார்கள் முட்டுக்கொடுத்து மல்லுக்கட்ட. 

 

6 hours ago, putthan said:

நாங்கள் வைப்போமல்ல....
பஸ் ரோட்டில் ஓடினால் விபத்து நடக்கத்தான் செய்யும்.....அமேரிக்காதான் விபத்துக்கள் உலகில் அதிகம் நடக்கும் நாடு.....நடைபயணிகள்,சைக்கிள் ஓட்டுனர்கள் பார்த்து ஓட வேண்டும்...2009 க்கு முதல் இப்படியான சொகுசு பஸ்கள் அந்த மக்கள் கண்டவர்களா? இப்பதான் மக்கள் நல்ல பேரூந்துகளை கண்ணால் பார்க்கிறார்கள்....
புலம்பெயர்ந்து சென்றவர்கள் இன்னும் அதே மனப்பான்மையில் தான் இருக்கின்றனர் ஆனால் இங்கு மக்கள் புது பஸ்களை விரும்புகிறார்கள்....அதற்காக மகிந்தா அரசை பாராட்ட வேண்டும்😁

ஒன்றுபட்ட நாட்டுக்குள் என்ற  இலங்கைக்குள் எண்டு ஏதும் நினைக்கினமோ தெரியேல்லை. இல்லாட்டில் இலங்கை அரசை விமர்ச்சிக்க மனம் இடங்குடுக்கேல்லையோ தெரியாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இலங்கை அரசை விமர்ச்சிக்க மனம் இடங்குடுக்கேல்லையோ தெரியாது..

பல பதிவுகளில் தெறித்த உண்மை அது. பின்னர் வறுமையை சொல்லி மூடிவிடுவது.உண்மையை கதைக்க முடியாது நாங்கள் ஊரில் இருக்கிறோம் என்று சொல்லிச் சொல்லியே சிங்களத்தை காப்பாற்றுவது, தமிழர் என்னென்ன செய்கிறார்கள் என்பதையும் போட்டு உடைப்பது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

. இல்லாட்டில் இலங்கை அரசை விமர்ச்சிக்க மனம் இடங்குடுக்கேல்லையோ தெரியாது...

எக்காரணம் கொண்டும் இலங்கை அரசை விமர்சிக்க மாட்டோம்...😁

 ...விமர்சித்தால் அவர்களால் அங்கு வாழ முடியாது ஆனால் அதை வெளியே சொல்லமாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து வைப்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? 😁
 

அவர்களுக்கு அது பற்றி யாழில் எழுதுவது வீண் வேலையாம்

எங்கோ  அது  பற்றி எழுதுகிறார்களாம்

சிலவேளை  நாம்  போகமுடியாத செவ்வாயில் அல்லது சூரியனில்  இருக்கும் என்று  நுினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

பல பதிவுகளில் தெறித்த உண்மை அது. பின்னர் வறுமையை சொல்லி மூடிவிடுவது.உண்மையை கதைக்க முடியாது நாங்கள் ஊரில் இருக்கிறோம் என்று சொல்லிச் சொல்லியே சிங்களத்தை காப்பாற்றுவது, தமிழர் என்னென்ன செய்கிறார்கள் என்பதையும் போட்டு உடைப்பது. 

இன்றும் தமிழர் தரப்புகளில் பிழைகளையும் குறை குற்றங்களையும் கண்டு பிடிக்கின்றார்களே ஒழிய சிங்கள தரப்பின் அட்டூழியங்களை மறந்தும் கூட முன்னிறுத்தி கதைக்கவோ கருத்தெழுதவோ மாட்டார்கள்.

4 hours ago, putthan said:

எக்காரணம் கொண்டும் இலங்கை அரசை விமர்சிக்க மாட்டோம்...😁

 ...விமர்சித்தால் அவர்களால் அங்கு வாழ முடியாது ஆனால் அதை வெளியே சொல்லமாட்டார்கள்

அடேங்கப்பா நல்லாய்ச்சொன்னியள் போங்கோ.
ஆனால்   சிங்களத்தரப்பு எது சொன்னாலும் செந்தில் ஆக்ஸன் 🤣

Senthil GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அவர்களுக்கு அது பற்றி யாழில் எழுதுவது வீண் வேலையாம்

எங்கோ  அது  பற்றி எழுதுகிறார்களாம்

சிலவேளை  நாம்  போகமுடியாத செவ்வாயில் அல்லது சூரியனில்  இருக்கும் என்று  நுினைக்கின்றேன்

அப்ப ஏனாம் சீமான் எண்ட பெயரை கண்டவுடனை வரிஞ்சு கட்டிக்கொண்டு வரிசையாய் வருகினமாம்? அதையும் அங்கையே வெள்ளுத்துக்கட்டலாமே. அதுமட்டுமில்லாமல் கலைஞர் கருநாநிதியெண்டாலும் சேம் பிரச்சனை அவையளுக்கு....

அது வேறை லெவல் இணையங்கள் விசுகர் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்நெஞ்சம் படைத்த மாற்றுகருத்து மாணிகம்ஸ்.

கால்ல விழுந்து கதறினாலும் - கிட்னிய கண்ல காட்ட மாடேங்கிறீங்களேப்பா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது.

பொலிஸ் சந்தேகநபர்களை அடிச்சுக் கொல்லுது... இப்படியும் கொல்லுது. இராணுவம் விறகு வெட்டிறவரை சுட்டுக்கொல்லுது... காட்டுக்க பன்றி பிடிக்கப் போறவனையும் கொல்லுறாங்கள்.

ஆக மொத்தத்தில் சொறீலங்கா சிங்கள இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆட்சிக்குள்.. மனித உரிமைகளை மீறியே பழகிப் போனவர்கள்..கேட்பார் கேள்வி இல்லை என்று ஆகிப்போனதால்.. மனித உரிமைகளை காக்க யாரும் இல்லை. ஆதிக்க அதிகார பேரினவாதத் திமிர் பிடித்து அலையும்.. சிங்கள.. அரச இயந்திர குற்றவாளிகளை தண்டிக்க அங்கு நீதித்துறை என்ற.. எதுவும் உருப்படியாக இல்லை. 

இந்த நிலை மிகவும் ஆபத்தான ஒன்றாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

நீங்கள் இலங்கையில் வாழ்கிறீர்கள் என்பதற்காக அதிகம் அநியாயங்களுக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது. இதே நீங்கள் ஒருவேளை அரபுலகிலோ.. ஐரோப்பாவிலோ.. கனடா அமெரிக்காவிலோ.. அவுஸி.. நியூசிலாந்திலோ வாழ்ந்திருந்தால்.. நிச்சயமாக.. இப்படி கருத்தெழுதி இருக்கமாட்டீர்கள்.

கொரோனா மரணங்களில் 125,000 மேல் மரணத்தைக் கண்ட நாட்டில் வாழ்ந்தாலும்.. இப்படி கொரோனா தோற்றாளர்கள் ஊர் விட்டு ஊர் கடத்தும் நடவடிக்கையை சொறீலங்கா சிங்கள இராணுவ அரசைத் தவிர வேறு எவரும் செய்யவில்லை. நோய் தொற்றாளர்களை அவர்கள் வாழும் வீட்டுக்குள் ஊருக்குள் தான் முடக்கினமே தவிர.. தொற்றாளர்கள் ஊர் விட்டு ஊர்.. பிரதேசம் விட்டு பிரதேசம்.. கொண்டு போகவில்லை.

அண்மையில் முழுத்தீவானா நயினாதீவிற்கு எப்படி கொரோனா நுழைந்தது. ஊரே அறியும் அதன் பின்னணி. இறுதியில் ஆலயக் குருக்கள் அதற்குப் பலி. 

சொந்த ஊருக்குள் ஒருவர் சைக்கிளில் போவது பயணத்தடைக்குள் வருமென்றால்.. நோய் தொற்றாளர்களை பிரதேசம் விட்டு பிரதேசம் கடத்தும் செயல் ஏன் அந்த பயணத் தடைக்குள் வரவில்லை. ஆம் அதையிட்டு கேள்வி கேட்க முடியாது. ஏனெனில்.. சுகாதார சேவை செய்ய வேண்டிய பணியை செய்வது இனப்படுகொலை இராணுவமும் பொலிஸும் அல்லவா.

என்றாலும்.. நீங்கள் இந்தளவுக்கு பயந்து வாழனுன்னு இல்லை. ஊரில் உள்ள எத்தனையோ மக்கள் இதனை அநியாயம் என்றே சொல்கிறார்கள். ஆனால்.. நீங்கள் அநியாயத்துக்கு நியாயம்..கற்பிப்பது மிகவும் அநியாயமானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

கொரோனா சகலருக்கும் சமமானது. இதில் கேள்வி என்னவென்றால் கொழும்பிலிருந்து இவ்வளவு தூரம் கடந்து ஏன்  கொரோனா நோயாளிகளை தமிழர் பகுதிகளுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே.

முதியவரின் மரணம் அது விபத்தாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இறந்தவர் முதியவர் என்பதற்காக ஏற்பட்ட விபத்தை சரியென நிஞாயம் கற்பிக்க முடியாது. பயணத்தடை விதிப்பவர்கள் சாதாரண மக்களின் ஜீவனோபாயத்திற்கு தகுந்த ஏற்பாடு ஏதும் செய்து கொடுத்தார்களா? அரசும், சம்பந்தப்பட்டவர்களும் ஒழுங்கு முறைகளை கடைபிடிக்கிறார்களா? பேசப்பயம் என்றால் எதுவும் பேசாமல் இருக்கலாம். ஆனால் இங்கு வலிந்து கட்டிக்கொண்டு வந்து அநிஞாயத்துக்கு வெள்ளை அடிப்பவர்கள் அநிஞாயம் செய்பவரும்,   அதன் (அரசின்) பங்காளிகளுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் பகுதியில் இருந்து கொரோனா நோயாளிகளை வடக்கிற்கு கொண்டு வந்தது தப்பில்லை, விபத்தை ஏற்படுத்தியது அதுவும் தப்பில்லை.  வயிற்றுப்பிழைப்புக்காக வெளியில் சென்ற முதியவர் விபத்தில் சிக்கி இறந்ததுதான் தப்பு இங்கு. இப்படிபட்டவர்களால் வழிநடத்தப்படும் இளம் சமுதாயம் எப்படிப்பட்ட ஆரோக்கியமான எண்ணங்களை கொண்டவர்களாக உருவாவார்கள்? என்பதை  நினைக்கவே பயமாக இருக்கிறது. பயணத்தடை அமுலில் இருக்கும்போது நாமல் வடக்கிற்கு விஜயம் செய்யலாம் தப்பில்லை. ஆனால் முதியவர் வெளியில் வந்தது தப்பு. அவர்  என்ன அரசியல் தேவைக்கா வெளியில் சென்றார்? என்ன, அவர்களின் திட்டம் இவரின் மரணத்தால் கசிந்து விட்டதே என்கிற ஆதங்கம், இறந்தவர் மேல் குற்றச் சாட்டு வைத்து நிஞாயப்படுத்துகிறார்கள் அரசின் முகவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொரோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மருத்துவ முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள் இலங்கையில் சகல இடங்களிலும் முகாம்கள் உண்டு இடம் எங்கு மீதமாக இருக்கிறதோ அங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கை பிரஜைகள் அனுப்பப்படுகிறார்கள் இதில் மத்திய கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் , முஸ்லீம்கள் .சிங்களவர்கள் அடங்கும் பஸ்ஸில் மோதுண்டவருக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் முட்டுக்கொடுப்பதை பார்த்தால் ??? பயணத்தடை இருந்தும் முதியவர் வெளியில் செல்ல முடியும் அவரிடம் உரிய பாஸ் உள்ளதா என பார்த்தால் இருந்திருந்தால் நீங்கள் எழுப்பும் கேள்விகள் சரி அப்படி பாஸ் இல்லாவிட்டால் யார்மீது பிழை இங்கும் சரி எங்கும் சரி அதிகமானவர்கள் பிழை செய்துவிட்டு அதில் தப்பிப்பதையே பார்க்கிறார்கள் ஆனால் அது பிழையென ஏற்றுக்கொள்வதில்லை  இதில் தமிழர்கள் முதலிடம் எனலாம் . 

இப்ப வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வருவாங்கள் மாற்றுக்க்கருத்தாளர்களை கேட்டவர்கள் 

கிழக்கில் கரடியனாறு , மருதமுனை , பாலமுனை , ஆகிய இடங்களில் முகாம்கள் (கொரோனோ ) முகாம்கள் உள்ளது 2 மரணங்கள் ஊரில் ஆரம்பமாகியுள்ளது . 

தனி,
அப்ப பாஸ் இல்லாமல் வெளியாலை போனால் அடிச்சுக் கொல்லலாம் அப்பிடித் தானே. உங்கடை சொந்தம் ஆருக்கும்நடந்தால் இப்பிடிச் சொல்லுவியளோ? அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்க வேணும் என்பதற்காக எப்பிடியெண்டாலும் கதைக்கலாம் என்றுநினைக்கக் கூடாது. விவசாயிகள் தோட்டத்துக்கு போக பாஸ் இருக்குத் தானே.பாஸ் இல்லாமல் வெளியாலை போய் கொரோனா வந்தால் முதியவரில் பிழை என ஏற்றுக் கொள்ளலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் @தனிக்காட்டு ராஜான்னாலும் இப்படி தனியா வந்து மாட்டி இருக்க கூடாது.

இப்ப பாருங்க கிட்னிய பிதுக்கி எடுத்திட்டாங்கல்ல?

கோஷான் ஒரு ஓரமா உக்காந்து டி குடிக்கும் போதே யோசிசிருக்க வேணாம்?

நான் போட்ட மீமுக்கு சிரிப்ப வேற போட்டுட்டு போய் மாட்டீருக்கீங்களே. என்ன புள்ளையா நீர்.🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.