Jump to content

P2P போராட்டம் சர்வதேசத்தின் கதவுகளைப் பலமாகத் தட்டியுள்ளது – மட்டு.நகரான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

p2p போராட்டம் சர்வதேசத்தின் கதவுகளைப் பலமாகத் தட்டியுள்ளது – மட்டு.நகரான்

 
Capture-7-696x313.jpg
 54 Views

வடகிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள வடுக்களின் வலிகளை வெளிக்காட்டுவதை தடுத்தல் என பல்வேறு வகையான மனித உரிமை நிலைக்கு எதிரான, ஜனநாயக வரம்புகள் மீறப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்கான போராட்டத்தினை இராஜதந்திரப் போராட்டமாக மாற்றியமைத்ததனர். இதனையடுத்து வடகிழக்கில் செயற்பட்ட பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். பலர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் நாட்டைவிட்டு துரத்தியடிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போதைய காலத்தில் வடகிழக்கில் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும், அதேபோன்று தமிழ் மக்களின் உரிமைக்காகக் களத்தில் இறங்கிப் போராடுவோரை மிரட்டும் பணிகள் மிகவும் கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் குரல்வளையினை நசுக்கும் வகையிலான செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினைத் தொடர்ந்து செயற்பாட்டாளர்கள் மீது இலங்கை அரசாங்கம் மிகவும் கடுமையான அழுத்தங்களை முன்னெடுத்து வருகின்றது.

யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் தமிழ் மக்கள் தமது நியாயத்தினைப் பலமாக எடுத்துக் கூறுவதற்கான சந்தர்ப்பம் இல்லாத நிலையில், அனைத்துத் தடைகளையும் தாண்டி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் சர்வதேசத்தின் கதவுகளைப் பலமாகத் தட்டியது. இந்நிலையில், அது இலங்கை அரசாங்கத்தினை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

அதன் காரணமாக இன்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான ஏழுச்சி இயக்கத்தின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், குறித்த போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் என பலதரப்பட்டவர்களையும் புலி முத்திரை குத்தி விசாரணையென்ற போர்வையில் அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போது  பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு வழங்கிய ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்பு தலைவியும், இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி நிர்வாக உறுப்பினருமான கந்தையா கலைவாணி என்பவரிடமும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Capture.JPG-1-3-300x247.jpg

இந்த விசாரணைகளின்போது பொதுவாக விடுதலைப்புலிகளுடனான தொடர்புகள், புலம்பெயர் தமிழர்களுடனான உறவுகள் என ஒரு வட்டத்திற்குள் நின்று இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதுவரைக்கும் கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரைக்கும் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு வழங்கியவர்கள், அதில் கலந்து கொண்டவர்கள், அந்தப் பேரணிக்கு வாகனங்களை வாடகைக்கு வழங்கியவர்கள் என பல்வேறு தரப்பினரும் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே தமிழ் மக்களின் உரிமை சார்ந்து செயற்படுவோர் தொடர்ந்து கண்காணிக்கப்படும் நிலையில் பயங்கரவாத தடுப்பு ஊடாகவும் பல்வேறு அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அச்சுறுத்தல்களையும், பயமுறுத்தல்களையும் செய்து, தமிழ் மக்கள் மீதான ஜனநாயக மீறல்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.

தமிழ் மக்களை அடக்கி, ஒடுக்கி அவர்களின் குரல்வளையினை நசுக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் மிகவும் திட்டமிட்டு முன்னெடுத்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

ஒரு சமூகத்தின் மீதான அழுத்தங்களையும், அடாவடித்தனங்களையும் மேற்கொள்வதன் மூலம் அவர்களின் குரல்வளைகளை நசுக்கலாம் என்று சிங்கள அரசு நினைப்பதானது, எதிர்காலத்தில் இலங்கைக்கு பாரிய ஆபத்தாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் குரல் எழும்பிவிடக் கூடாது என்பதற்கான தொடர்ச்சியான செயற்பாடுகளை சிங்கள அரசுகள் தனது படை பலத்தினைக் கொண்டு முன்னெடுத்து வருகின்றது.

மறைமுகமாகவும், நேரடியாகவும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சிவில் திணைக்களங்கள் ஊடாகவும் அச்சுறுத்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு வழிகளிலும் அச்சுறுத்தப்பட்டு, அவர்கள் செயற்படாத வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்று கிழக்கு மக்களின் குரல்வளையினை நசுக்குவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள், முன்னாள் ஆயுதக் குழுக்களின் உதவிகள், ஒத்தாசைகள் பெருமளவில் வழங்கப்படுகின்றன அல்லது பெறப்படுகின்றன.

Capture.JPG-2-300x207.jpg

எதிர்காலத்தில் தமிழ் மக்களின் குரல் எவ்வாறு வெளிக் கொணரப்படவுள்ளது என்பது மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது. இன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படும்போது தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் அரசியல் கட்சிகளும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் கண்டும் காணாத வகையிலேயே செயற்படுகின்றன.

இது தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சரியான அழுத்தங்கள் பிரயோகிப்பதன் மூலமே எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் தங்களது பணிகளை சுதந்திரமாக முன்னெடுக்கும் சூழ்நிலையுருவாகும். இதனை அனைவரும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

 

https://www.ilakku.org/?p=51984

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.