Jump to content

ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் செயற்பாடு சரியா? – தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் செயற்பாடு சரியா? – தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்

Capture.JPG-1-2-696x593.jpg
 320 Views

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி, 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பாக தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சியில் இருக்கும் மு.க.ஸ்டாலின் அரசு என்ன முடிவை எடுக்கும் என்பது பற்றி தமிழர் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் ஐயா அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

கேள்வி – இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஏழு தமிழர்களைத் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய முடியும். ஆனால் இந்திய அரசு அதைத் தடுத்து வருகிறது. இந்நிலையில் புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அணுகுமுறை எவ்வாறுள்ளது?

பதில் –  இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 – சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி அவர்களுக்குத் தண்டனைக் குறைப்பு வழங்குவது, அவர்களை விடுதலை செய்வது ஆகிய அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என்று கூறுகிறது. இந்த அதிகாரம் தங்குதடையற்ற அதிகாரம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சதாசிவம் இருந்த போது அவரது தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயம் தீர்ப்பு வழங்கியது.

அதன் பிறகு ஏழு தமிழர் விடுதலை வழக்கிற்காக நீதிபதி எச்.எல்.தத் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயமும் இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி மாநில அரசு கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தங்குதடையற்றது என்று கூறிவிட்டது.

ஆனால் அரசமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு அரசுக்குள்ள 161ஆம் உறுப்பின் அதிகாரத்தைச் செயற்படுத்த விடாமல் மாநில ஆளுநர் மூலம் இந்திய ஆட்சியாளர்கள் தடுத்துக் கொண்டுள்ளார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் கொஞ்சநஞ்ச மாநில உரிமைகளும் தமிழ் நாட்டிற்குப் பொருந்தாது என்றே இந்திய அரசின் காங்கிரஸ் ஆட்சியும் செயற்பட்டது. இப்போதுள்ள பாசக ஆட்சியும் செயற்படுகின்றது.

இந்திய அரசின் இந்த சட்டவிரோத ஆதிக்கங்களை, அதிகார ஆக்கிரமிப்புகளை எதிர்த்துத் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகள் நிலைநாட்டப்படும். மாநில அரசியல் இங்கு இல்லை.

மேற்கண்ட நீதிபதி எச்.எல். தத் ஆயத்தின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 2018 செப்டெம்பர் மாதம் அஇஅதிமுக அமைச்சரவை ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் அமைச்சரவை அனுப்பி வைத்த ஏழு தமிழர் விடுதலை முடிவின் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்தார். தமது விடுதலை தொடர்பாகத் தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் கடந்த சில மாதங்களுக்கு முன், ஆளுநர் அப்படியே கிடப்பில் போட்டு வைப்பது சரியல்ல என்று நீதிபதி நாகேஸ்வரராவ் விமர்சனம் செய்தது. அடுத்த தடவை இவ் வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் ஆளுநர் முடிவை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

அதன் பிறகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தந்திரமாக, ஏழு தமிழர் விடுதலை குறித்த தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவை, இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆய்வுக்கு அனுப்பி  விட்டார். அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படியான சிறையாளர் விடுதலையில், குடியரசுத் தலைவர்க்கு அதிகாரம் எதுவும் இல்லை. குடியரசுத் தலைவர் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் ஏழு தமிழர்களை விடுவிக்கக் கோரிக்கை வைத்து குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியது இந்திய அரசமைப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ள 161ஆம் உறுப்பு அதிகாரத்தை விட்டுக் கொடுத்தது போல் ஆயிற்று என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மீண்டும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161ஐப் பயன்படுத்தி ஆளுநருக்கு நெருக்குதல் கொடுத்திருக்க வேண்டும். மாநில ஆளுநர் என்பவர்  அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட மாநில அமைச்சரவையின் முடிவுகளை நிறைவேற்ற வேண்டியது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை எடுத்துக் காட்டி சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, சிறைக் கைதிகளுக்கு விடுப்புகள் வழங்க,  தமிழ்நாடு தண்டனைக் குறைப்பு, சட்ட அதிகாரம் வழங்குகிறது. அச் சட்டத்தின் பிரிவு 40 இன்படி காலவரம்பற்ற சிறை விடுப்பை (Leave) ஏழு தமிழர்களுக்கும் மு.க.ஸ்டாலின் அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நான் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளேன்.

எங்களின் இக் கோரிக்கைக்கு ஆதரவாக இரண்டு முன் நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன்.

மராட்டிய மாநிலத்தில், வெடிகுண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் சற்றொப்ப 200 பேரை – பொது மக்களை கொன்ற பயங்கரவாதிகள் – நிழல் உலகத் தாதாக்களைக் கொண்ட குழுவுடன் இந்தி நடிகர் சஞ்சய் தத் கூட்டாகச் செயற்பட்டார். அவர்களின் துப்பாக்கி இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது என்ற குற்றச்சாட்டில் 6 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 3 ½ ஆண்டு மட்டுமே மொத்தமாக அவர் சிறையில் இருந்தார். அவருக்கு இரண்டு கட்டங்களில் பரோல் என்ற விடுமுறையை 90 நாள், 90 நாள் என்று தொடர்ந்து நீடித்து விடுதலை செய்தது மராட்டிய அரசு.

அதற்கும் முன்பு, தமிழ்நாட்டில் ஐயா புலவர் கலியப்பெருமாள் அவர்கள் நக்சல்பாரி இயக்கத்தின் வழியாக கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். பலரின் கோரிக்கையை ஏற்று, அவரின் தூக்குத் தண்டனை வாழ்நாள் தண்டனையாக குடியரசுத் தலைவரால் குறைக்கப்பட்டது. அதன் பிறகு, புதுதில்லியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் கோரிக்கையை ஏற்று, புலவர் கலியப்பெருமாள் அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலவரம்பற்ற விடுப்பு  அளித்து, சிறையிலிருந்து விடுவித்தது. அவ்வாறான விடுப்பில் புலவர் இருந்த போது அப்போதிருந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவரை நிரந்தரமாக விடுதலை செய்திருந்தார்.

இந்த எடுத்துக் காட்டுகளை எடுத்துக் கூறித்தான் ஏழு தமிழர்களுக்கும் காலவரம்பற்ற சிறை விடுப்புத் தருமாறு நான் முதலமைச்சரைக் கோரியிருந்தேன்.

அற்புதம் அம்மாள் அவர்களின் வேண்டுகோளை ஏற்று. தம்பி பேரறிவாளனுக்கு மட்டும் ஒரு மாதம் சிறை விடுப்புக் கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

ஏழு தமிழர்களுக்கும் காலவரம்பற்ற சிறை விடுப்புத் தரவேண்டும். அவர்களில் உள்ள தமிழீழத் தமிழர்களைப் பராமரித்துப் பாதுகாக்க முன்வரும் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும். இலங்கை ஏதிலியர் என்ற வரையறுப்பில் அவர்களைத் தமிழ்நாட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

இதைத் திமுக ஆட்சி செயற்படுத்த வேண்டும். இதற்கு முன்பிருந்த எடப்பாடி ஆட்சியிலிருந்து மாறுபட்ட ஆட்சியாக மு.க.ஸ்டாலின் இவ்வாறு செயற்பட வேண்டும் என்று கோருகிறோம்.

கேள்வி – தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் ஏழு தமிழர் விடுதலை தொடர்பான தங்கள் வாக்குறுதிகளை  நிறைவேற்றாததற்கான காரணம் என்ன?

பதில் – முதலில் அவர்களுக்குத்  தமிழினம் சார்ந்த கொள்கை இல்லை. அவர்கள் பேசுவது திராவிட இனம்; கூட்டணி சேர்ந்து இந்திய ஏகாதிபத்தியவாதக் கட்சிகளுடன் அவற்றின் ஆட்சிகளுடன்!

இந்தியத் தேசியவாதியான மம்தா பனர்ஜிக்கு இருக்கும் வங்காளி இன உணர்வு, மனத்துணிச்சல் போல் தமிழ்நாட்டுத் திராவிடத் தலைவர்களுக்குத் தமிழின உணர்வும் இல்லை. துணிச்சலும் இல்லை. பதவியைப் பாதுகாக்க மண்டியிடத் தயங்காதவர்கள்.

கேள்வி – ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பது, தமிழினத்திற்கு எதிரான ஓர் அரசியல் வன்முறை என்று பார்க்கலாமா?

 பதில் – ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பது, அரசியல் வன்முறை – சட்ட விரோதச் செயல் – தமிழர்களுக்கு  எதிரான இனப்பாகுபாடு.

இந்தியாவின் தந்தை  என்று போற்றப்படும் காந்தியடிகளை 1948 ஜனவரி 30 அன்று ஆரியத்துவ வெறியர்கள் சுட்டுக் கொன்றார்கள். அக் கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்றவர் கோபால் கோட்சே. காந்தி நேரடியாகச் சுட்ட நாதுராம் கோட்சேயின் தம்பி, நாதுராம் கோட்சேவுக்குத் தூக்கு. கோபால் கோட்சேவுக்கு வாழ்நாள் தண்டனை. மராட்டியச் சிறையில் இருந்தார். 16 ஆண்டுகளில் 1964ஆம் ஆண்டு மராட்டிய காங்கிரசு ஆட்சி கோபால் கோட்சேயை விடுதலை செய்தது.

காங்கிரசுக்காரர்களாக இருந்த மராட்டிய காங்கிரசுத் தலைவர்களுகு்க மராத்தியர் என்ற இன உணர்ச்சி  இருந்தது. அதனோடு, கோபால் கோட்சே மராட்டிய சித்பவன பிராமணர்!

மனுதர்மப்படி கொலைக் குற்றம் செய்திருந்தாலும் பிராமணர்களைத் தண்டிக்கக் கூடாது.   தலைமுடியை  (மயிரை) மட்டும் தான் அகற்ற வேண்டும்.

நம்முடைய ஏழு தமிழர்களும் முப்பதாண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலில் தமிழின உணர்ச்சி ஆட்சியாளர்களிடையே இல்லை.

அத்துடன் இந்த ஏழுபேரும் பிராமணர்கள் அல்ல. சூத்திரர்கள்!  தாய் மண்ணிலேயே தமிழர்களுக்கு நடக்கும் இன ஒதுக்கலைப் புரிந்துகொண்டு இளந் தலைமுறையின் தமிழ்த் தேசிய எழுச்சி கொள்ள வேண்டும்.

 

 

https://www.ilakku.org/?p=51975

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மணியரசனின் பார்வை மிக தெளிவானது. பல புதிய விடயங்களை இதில் சொல்லி உள்ளார்.

இதை வாசித்த பின் நான் யோசிப்பது:

ஸ்டாலின் செய்ய வேண்டியது உடனடி விடுதலை. அதன் பின் விடுதலை செய்தது பிழை என்று எதிர் தரப்பு கோர்ட்டுக்கு போகட்டும்.

ஜனாதிபதி பதிலழிக்காவிட்டால் இதை செய்வாரோ ஸ்டாலின் ?

அல்லது இது விடயத்தை கிடப்பில் போடும் வேலையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

..அல்லது இது விடயத்தை கிடப்பில் போடும் வேலையோ?

சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்தும் சனாதிபதிக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதுவதெனறால், எனக்கென்னமோ இது வழக்கம்போல கிடப்பில் போடும் வேலை போலத்தான் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஐயா மணியரசனின் பார்வை மிக தெளிவானது. பல புதிய விடயங்களை இதில் சொல்லி உள்ளார்.

இதை வாசித்த பின் நான் யோசிப்பது:

ஸ்டாலின் செய்ய வேண்டியது உடனடி விடுதலை. அதன் பின் விடுதலை செய்தது பிழை என்று எதிர் தரப்பு கோர்ட்டுக்கு போகட்டும்.

ஜனாதிபதி பதிலழிக்காவிட்டால் இதை செய்வாரோ ஸ்டாலின் ?

அல்லது இது விடயத்தை கிடப்பில் போடும் வேலையோ?

நல்ல ஐடியா. இருந்தாலும் நான் நினைப்பது....

பரோலில் ஒவ்வொருவராக அனுப்பி விடுவது. ஒவ்வொருமாதமாக நீடித்து, ஒரு ஆறு மாதம் ஓட விட்டு, சத்தமே இல்லாமல், மீடியா மறந்த நிலையில் விடுதலை பத்திரத்தில் கையெழுத்தினை போடுவது.

ஆறின கஞ்சி பழம் கஞ்சி ஆகி... மறந்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

நல்ல ஐடியா. இருந்தாலும் நான் நினைப்பது....

பரோலில் ஒவ்வொருவராக அனுப்பி விடுவது. ஒவ்வொருமாதமாக நீடித்து, ஒரு ஆறு மாதம் ஓட விட்டு, சத்தமே இல்லாமல், மீடியா மறந்த நிலையில் விடுதலை பத்திரத்தில் கையெழுத்தினை போடுவது.

ஆறின கஞ்சி பழம் கஞ்சி ஆகி... மறந்து விடுவார்கள்.

அப்படி மறக்கும் விசயமாக இது எனக்கு தெரியவில்லை.

இவர்கள் விடுதலை ஆனதும் இது இந்தியா முழுக்க எதிரொலிக்கும். எப்போ விட்டாலும் ஒரு கிழமைக்கு அதுதான் சென்சேசனல் செய்தியாக இருக்கும். காங்கிரசும் சும்மா இராது. கிசோர் சாமி, சு சாமி என்று சங்கிகளும் இதை பெரிதாக்குவார்கள்.

ஆனால் ஸ்டாலின் இதை நிச்சயம் அரசியல் கண்ணோட்டத்தோடுதான் பார்ப்பார். அவருக்கு லாபமா நட்டமா என்று. தனது தந்தையை போல் தனது ஆட்சிக்கு ரிஸ்க்கான எதையும் செய்யமாட்டார்.

அண்மைய சமூக வலைத்தள அவதூறுகள், தனியே தம்பிகளுக்கும், உபிகளுக்கும் இடையான மோதலாக தெரியவில்லை.

பெரியார், அண்ணா, கருணாநிதி மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, போரட்டத்தையும், தலைவரையும், ஈழத்தமிழர்களையும் விமர்சிக்கும் இல்லை கொச்சைபடுத்தும் முடிவுக்கு திமுக வந்து விட்டதோ என்பது என் ஐயம்.

அப்படியாயின் இவர்களை ஏன் விடுதலை செய்யவேண்டும், கிடப்பில் போட்டால் நல்லது என நினைக்க கூடும்.

மறுவளமாக, தாம் ஒன்றும் தெலுங்குகாரர் அல்ல, எமக்கும் தமிழுணர்வு உண்டு என்பதை காட்டி ஹீரோ ஆக இவர்களை விடுவிக்கவும் செய்யலாம்.

எப்போதும் போல இப்போதும் இவர்கள் வாழ்க்கை அரசியல் கால்பந்துதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.