Jump to content

ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் செயற்பாடு சரியா? – தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு தமிழர் விடுதலையில் மு.க.ஸ்டாலின் செயற்பாடு சரியா? – தமிழத்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்

Capture.JPG-1-2-696x593.jpg
 320 Views

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி, 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பாக தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சியில் இருக்கும் மு.க.ஸ்டாலின் அரசு என்ன முடிவை எடுக்கும் என்பது பற்றி தமிழர் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் ஐயா அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.

கேள்வி – இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஏழு தமிழர்களைத் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய முடியும். ஆனால் இந்திய அரசு அதைத் தடுத்து வருகிறது. இந்நிலையில் புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அணுகுமுறை எவ்வாறுள்ளது?

பதில் –  இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 – சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி அவர்களுக்குத் தண்டனைக் குறைப்பு வழங்குவது, அவர்களை விடுதலை செய்வது ஆகிய அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என்று கூறுகிறது. இந்த அதிகாரம் தங்குதடையற்ற அதிகாரம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக சதாசிவம் இருந்த போது அவரது தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயம் தீர்ப்பு வழங்கியது.

அதன் பிறகு ஏழு தமிழர் விடுதலை வழக்கிற்காக நீதிபதி எச்.எல்.தத் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயமும் இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி மாநில அரசு கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தங்குதடையற்றது என்று கூறிவிட்டது.

ஆனால் அரசமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு அரசுக்குள்ள 161ஆம் உறுப்பின் அதிகாரத்தைச் செயற்படுத்த விடாமல் மாநில ஆளுநர் மூலம் இந்திய ஆட்சியாளர்கள் தடுத்துக் கொண்டுள்ளார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் கொஞ்சநஞ்ச மாநில உரிமைகளும் தமிழ் நாட்டிற்குப் பொருந்தாது என்றே இந்திய அரசின் காங்கிரஸ் ஆட்சியும் செயற்பட்டது. இப்போதுள்ள பாசக ஆட்சியும் செயற்படுகின்றது.

இந்திய அரசின் இந்த சட்டவிரோத ஆதிக்கங்களை, அதிகார ஆக்கிரமிப்புகளை எதிர்த்துத் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகள் நிலைநாட்டப்படும். மாநில அரசியல் இங்கு இல்லை.

மேற்கண்ட நீதிபதி எச்.எல். தத் ஆயத்தின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 2018 செப்டெம்பர் மாதம் அஇஅதிமுக அமைச்சரவை ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் அமைச்சரவை அனுப்பி வைத்த ஏழு தமிழர் விடுதலை முடிவின் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்தார். தமது விடுதலை தொடர்பாகத் தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் கடந்த சில மாதங்களுக்கு முன், ஆளுநர் அப்படியே கிடப்பில் போட்டு வைப்பது சரியல்ல என்று நீதிபதி நாகேஸ்வரராவ் விமர்சனம் செய்தது. அடுத்த தடவை இவ் வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் ஆளுநர் முடிவை அறிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

அதன் பிறகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தந்திரமாக, ஏழு தமிழர் விடுதலை குறித்த தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவை, இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆய்வுக்கு அனுப்பி  விட்டார். அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படியான சிறையாளர் விடுதலையில், குடியரசுத் தலைவர்க்கு அதிகாரம் எதுவும் இல்லை. குடியரசுத் தலைவர் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் ஏழு தமிழர்களை விடுவிக்கக் கோரிக்கை வைத்து குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியது இந்திய அரசமைப்புச் சட்டம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ள 161ஆம் உறுப்பு அதிகாரத்தை விட்டுக் கொடுத்தது போல் ஆயிற்று என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மீண்டும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161ஐப் பயன்படுத்தி ஆளுநருக்கு நெருக்குதல் கொடுத்திருக்க வேண்டும். மாநில ஆளுநர் என்பவர்  அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட மாநில அமைச்சரவையின் முடிவுகளை நிறைவேற்ற வேண்டியது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை எடுத்துக் காட்டி சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, சிறைக் கைதிகளுக்கு விடுப்புகள் வழங்க,  தமிழ்நாடு தண்டனைக் குறைப்பு, சட்ட அதிகாரம் வழங்குகிறது. அச் சட்டத்தின் பிரிவு 40 இன்படி காலவரம்பற்ற சிறை விடுப்பை (Leave) ஏழு தமிழர்களுக்கும் மு.க.ஸ்டாலின் அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நான் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளேன்.

எங்களின் இக் கோரிக்கைக்கு ஆதரவாக இரண்டு முன் நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன்.

மராட்டிய மாநிலத்தில், வெடிகுண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் சற்றொப்ப 200 பேரை – பொது மக்களை கொன்ற பயங்கரவாதிகள் – நிழல் உலகத் தாதாக்களைக் கொண்ட குழுவுடன் இந்தி நடிகர் சஞ்சய் தத் கூட்டாகச் செயற்பட்டார். அவர்களின் துப்பாக்கி இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது என்ற குற்றச்சாட்டில் 6 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 3 ½ ஆண்டு மட்டுமே மொத்தமாக அவர் சிறையில் இருந்தார். அவருக்கு இரண்டு கட்டங்களில் பரோல் என்ற விடுமுறையை 90 நாள், 90 நாள் என்று தொடர்ந்து நீடித்து விடுதலை செய்தது மராட்டிய அரசு.

அதற்கும் முன்பு, தமிழ்நாட்டில் ஐயா புலவர் கலியப்பெருமாள் அவர்கள் நக்சல்பாரி இயக்கத்தின் வழியாக கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தார். பலரின் கோரிக்கையை ஏற்று, அவரின் தூக்குத் தண்டனை வாழ்நாள் தண்டனையாக குடியரசுத் தலைவரால் குறைக்கப்பட்டது. அதன் பிறகு, புதுதில்லியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் கோரிக்கையை ஏற்று, புலவர் கலியப்பெருமாள் அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலவரம்பற்ற விடுப்பு  அளித்து, சிறையிலிருந்து விடுவித்தது. அவ்வாறான விடுப்பில் புலவர் இருந்த போது அப்போதிருந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவரை நிரந்தரமாக விடுதலை செய்திருந்தார்.

இந்த எடுத்துக் காட்டுகளை எடுத்துக் கூறித்தான் ஏழு தமிழர்களுக்கும் காலவரம்பற்ற சிறை விடுப்புத் தருமாறு நான் முதலமைச்சரைக் கோரியிருந்தேன்.

அற்புதம் அம்மாள் அவர்களின் வேண்டுகோளை ஏற்று. தம்பி பேரறிவாளனுக்கு மட்டும் ஒரு மாதம் சிறை விடுப்புக் கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

ஏழு தமிழர்களுக்கும் காலவரம்பற்ற சிறை விடுப்புத் தரவேண்டும். அவர்களில் உள்ள தமிழீழத் தமிழர்களைப் பராமரித்துப் பாதுகாக்க முன்வரும் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும். இலங்கை ஏதிலியர் என்ற வரையறுப்பில் அவர்களைத் தமிழ்நாட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

இதைத் திமுக ஆட்சி செயற்படுத்த வேண்டும். இதற்கு முன்பிருந்த எடப்பாடி ஆட்சியிலிருந்து மாறுபட்ட ஆட்சியாக மு.க.ஸ்டாலின் இவ்வாறு செயற்பட வேண்டும் என்று கோருகிறோம்.

கேள்வி – தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் ஏழு தமிழர் விடுதலை தொடர்பான தங்கள் வாக்குறுதிகளை  நிறைவேற்றாததற்கான காரணம் என்ன?

பதில் – முதலில் அவர்களுக்குத்  தமிழினம் சார்ந்த கொள்கை இல்லை. அவர்கள் பேசுவது திராவிட இனம்; கூட்டணி சேர்ந்து இந்திய ஏகாதிபத்தியவாதக் கட்சிகளுடன் அவற்றின் ஆட்சிகளுடன்!

இந்தியத் தேசியவாதியான மம்தா பனர்ஜிக்கு இருக்கும் வங்காளி இன உணர்வு, மனத்துணிச்சல் போல் தமிழ்நாட்டுத் திராவிடத் தலைவர்களுக்குத் தமிழின உணர்வும் இல்லை. துணிச்சலும் இல்லை. பதவியைப் பாதுகாக்க மண்டியிடத் தயங்காதவர்கள்.

கேள்வி – ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பது, தமிழினத்திற்கு எதிரான ஓர் அரசியல் வன்முறை என்று பார்க்கலாமா?

 பதில் – ஏழு தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பது, அரசியல் வன்முறை – சட்ட விரோதச் செயல் – தமிழர்களுக்கு  எதிரான இனப்பாகுபாடு.

இந்தியாவின் தந்தை  என்று போற்றப்படும் காந்தியடிகளை 1948 ஜனவரி 30 அன்று ஆரியத்துவ வெறியர்கள் சுட்டுக் கொன்றார்கள். அக் கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்றவர் கோபால் கோட்சே. காந்தி நேரடியாகச் சுட்ட நாதுராம் கோட்சேயின் தம்பி, நாதுராம் கோட்சேவுக்குத் தூக்கு. கோபால் கோட்சேவுக்கு வாழ்நாள் தண்டனை. மராட்டியச் சிறையில் இருந்தார். 16 ஆண்டுகளில் 1964ஆம் ஆண்டு மராட்டிய காங்கிரசு ஆட்சி கோபால் கோட்சேயை விடுதலை செய்தது.

காங்கிரசுக்காரர்களாக இருந்த மராட்டிய காங்கிரசுத் தலைவர்களுகு்க மராத்தியர் என்ற இன உணர்ச்சி  இருந்தது. அதனோடு, கோபால் கோட்சே மராட்டிய சித்பவன பிராமணர்!

மனுதர்மப்படி கொலைக் குற்றம் செய்திருந்தாலும் பிராமணர்களைத் தண்டிக்கக் கூடாது.   தலைமுடியை  (மயிரை) மட்டும் தான் அகற்ற வேண்டும்.

நம்முடைய ஏழு தமிழர்களும் முப்பதாண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலில் தமிழின உணர்ச்சி ஆட்சியாளர்களிடையே இல்லை.

அத்துடன் இந்த ஏழுபேரும் பிராமணர்கள் அல்ல. சூத்திரர்கள்!  தாய் மண்ணிலேயே தமிழர்களுக்கு நடக்கும் இன ஒதுக்கலைப் புரிந்துகொண்டு இளந் தலைமுறையின் தமிழ்த் தேசிய எழுச்சி கொள்ள வேண்டும்.

 

 

https://www.ilakku.org/?p=51975

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மணியரசனின் பார்வை மிக தெளிவானது. பல புதிய விடயங்களை இதில் சொல்லி உள்ளார்.

இதை வாசித்த பின் நான் யோசிப்பது:

ஸ்டாலின் செய்ய வேண்டியது உடனடி விடுதலை. அதன் பின் விடுதலை செய்தது பிழை என்று எதிர் தரப்பு கோர்ட்டுக்கு போகட்டும்.

ஜனாதிபதி பதிலழிக்காவிட்டால் இதை செய்வாரோ ஸ்டாலின் ?

அல்லது இது விடயத்தை கிடப்பில் போடும் வேலையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

..அல்லது இது விடயத்தை கிடப்பில் போடும் வேலையோ?

சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்தும் சனாதிபதிக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதுவதெனறால், எனக்கென்னமோ இது வழக்கம்போல கிடப்பில் போடும் வேலை போலத்தான் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஐயா மணியரசனின் பார்வை மிக தெளிவானது. பல புதிய விடயங்களை இதில் சொல்லி உள்ளார்.

இதை வாசித்த பின் நான் யோசிப்பது:

ஸ்டாலின் செய்ய வேண்டியது உடனடி விடுதலை. அதன் பின் விடுதலை செய்தது பிழை என்று எதிர் தரப்பு கோர்ட்டுக்கு போகட்டும்.

ஜனாதிபதி பதிலழிக்காவிட்டால் இதை செய்வாரோ ஸ்டாலின் ?

அல்லது இது விடயத்தை கிடப்பில் போடும் வேலையோ?

நல்ல ஐடியா. இருந்தாலும் நான் நினைப்பது....

பரோலில் ஒவ்வொருவராக அனுப்பி விடுவது. ஒவ்வொருமாதமாக நீடித்து, ஒரு ஆறு மாதம் ஓட விட்டு, சத்தமே இல்லாமல், மீடியா மறந்த நிலையில் விடுதலை பத்திரத்தில் கையெழுத்தினை போடுவது.

ஆறின கஞ்சி பழம் கஞ்சி ஆகி... மறந்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

நல்ல ஐடியா. இருந்தாலும் நான் நினைப்பது....

பரோலில் ஒவ்வொருவராக அனுப்பி விடுவது. ஒவ்வொருமாதமாக நீடித்து, ஒரு ஆறு மாதம் ஓட விட்டு, சத்தமே இல்லாமல், மீடியா மறந்த நிலையில் விடுதலை பத்திரத்தில் கையெழுத்தினை போடுவது.

ஆறின கஞ்சி பழம் கஞ்சி ஆகி... மறந்து விடுவார்கள்.

அப்படி மறக்கும் விசயமாக இது எனக்கு தெரியவில்லை.

இவர்கள் விடுதலை ஆனதும் இது இந்தியா முழுக்க எதிரொலிக்கும். எப்போ விட்டாலும் ஒரு கிழமைக்கு அதுதான் சென்சேசனல் செய்தியாக இருக்கும். காங்கிரசும் சும்மா இராது. கிசோர் சாமி, சு சாமி என்று சங்கிகளும் இதை பெரிதாக்குவார்கள்.

ஆனால் ஸ்டாலின் இதை நிச்சயம் அரசியல் கண்ணோட்டத்தோடுதான் பார்ப்பார். அவருக்கு லாபமா நட்டமா என்று. தனது தந்தையை போல் தனது ஆட்சிக்கு ரிஸ்க்கான எதையும் செய்யமாட்டார்.

அண்மைய சமூக வலைத்தள அவதூறுகள், தனியே தம்பிகளுக்கும், உபிகளுக்கும் இடையான மோதலாக தெரியவில்லை.

பெரியார், அண்ணா, கருணாநிதி மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, போரட்டத்தையும், தலைவரையும், ஈழத்தமிழர்களையும் விமர்சிக்கும் இல்லை கொச்சைபடுத்தும் முடிவுக்கு திமுக வந்து விட்டதோ என்பது என் ஐயம்.

அப்படியாயின் இவர்களை ஏன் விடுதலை செய்யவேண்டும், கிடப்பில் போட்டால் நல்லது என நினைக்க கூடும்.

மறுவளமாக, தாம் ஒன்றும் தெலுங்குகாரர் அல்ல, எமக்கும் தமிழுணர்வு உண்டு என்பதை காட்டி ஹீரோ ஆக இவர்களை விடுவிக்கவும் செய்யலாம்.

எப்போதும் போல இப்போதும் இவர்கள் வாழ்க்கை அரசியல் கால்பந்துதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
    • "ஒவ்வொன்றாக குறிப்பிட்டு கேட்டால்தான் தருவீர்களா?" - தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மார்ச் 2024 தேர்தல் பத்திர எண்களை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, இந்தத் தகவலை ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச். 18) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “தேர்தல் பத்திரங்களில் இருந்து பெறப்படும் பணம் குறித்த முழுமையான தகவல்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று 2024 பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது'' என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ”அனைத்து தகவல்களையும் தர வேண்டும்” "அந்த உத்தரவின்படி, எஸ்பிஐ இரண்டு பகுதிகளாக தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏப்ரல் 12, 2019 முதல், தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் பெயர், பத்திரம் வாங்கப்பட்ட தொகை மற்றும் பிற தகவல்கள் உட்பட தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது" என தெரிவித்தார். "இரண்டாம் பகுதியில், இடைக்கால உத்தரவு வரும் வரை அரசியல் கட்சிகள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களைப் பெற்றன, எத்தனை பத்திரங்களை பணமாக்கின என்ற விவரங்களை கேட்டிருந்தோம்" என தெரிவித்தார். “அந்த உத்தரவை நீங்கள் படித்தால், அதில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவை பணமாக்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை எஸ்பிஐ தரவில்லை என்பது தெளிவாகிறது” என்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “எஸ்பிஐ தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரங்களின் எண்கள் மற்றும் சீரியல் எண்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பாக இத்தகைய தகவல் எஸ்பிஐ-யிடம் இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிக்க வேண்டும்” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.   பட மூலாதாரம்,ANI சரமாரி கேள்விகள் எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, எஸ்பிஐ எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றார். "நீதிமன்ற உத்தரவின்படி கடந்த வியாழன் மாலை 5 மணிக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம். எந்த தகவலும் மறைக்கப்படவில்லை" என அவர் கூறினார். ”நீங்கள் (நீதிமன்றம்) குறிப்பிட்ட தகவலை கேளுங்கள், நாங்கள் தருகிறோம் என்பது போன்று எஸ்பிஐ அணுகுமுறை இருக்கிறது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார். "எஸ்பிஐ தலைவராக, உங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நீங்களே பகிரங்கப்படுத்த வேண்டும்" என்றார். பத்திரத்தில் உள்ள எண் பாதுகாப்பு அம்சமா அல்லது தணிக்கையின் ஒரு பகுதியா என்று தலைமை நீதிபதி கேட்டார். இதற்குப் பதிலளித்த சால்வே, பத்திரத்தில் உள்ள எண் ஒரு பாதுகாப்பு அம்சம் என கூறினார். இதற்கு, "பத்திரத்தை பணமாக்க கிளைக்கு செல்லும்போது, பத்திரம் போலியா, இல்லையா என்பதை சரிபார்க்க இந்த எண் உள்ளதா?" என கேட்டார். ”இது ரூபாய் நோட்டு போன்றது” என சால்வே கூறினார். இந்த எண்களின் அடிப்படையில் என்ன தகவல் கிடைக்கும் என நீதிமன்றம் கேட்டது. இதைத்தொடர்ந்து எஸ்பிஐ தேர்தல் பத்திர எண்களை வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.   அசோசெம், ஃபிக்கி மனுக்கள் தள்ளுபடி இதனிடையே, தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என ASSOCHAM, FICCI ஆகிய நிறுவனங்களும் மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுவரை என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. அந்தத் தகவலின்படி, இந்த காலகட்டத்தில் பாஜக ரூ.6,987 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், ரூ. 1,600 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த நிறுவனம் மொத்தம் 1,368 பத்திரங்களை வாங்கியது, அதன் மதிப்பு ரூ.1,360 கோடிக்கும் அதிகமாகும். இருப்பினும், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. சில கட்சிகள் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட்டன தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்தது. தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செப்டம்பர் 2023 வரை இந்தத் தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்திருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அத்தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது. சில கட்சியினர் தங்களுக்கு யார், எவ்வளவு மதிப்பிலான பத்திரங்களை வழங்கினர், எப்போது பணமாக்கினோம் என்பது போன்ற முழுமையான தகவல்களை சமர்ப்பித்துள்ள நிலையில், பல கட்சியினர் எந்தெந்த பத்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் பெற்றனர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகளில், அதிமுக, திமுக, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு யார் நன்கொடை அளித்தனர் என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளனர். சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை எங்கிருந்து பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி பாஜக சொல்லும் காரணம் என்ன? அதேசமயம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் 2019-ம் ஆண்டு வரை நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மட்டும் அளித்துள்ளன. நவம்பர் 2023-ல் இந்த கட்சிகள் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த போது, நன்கொடையாளர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. இவைதவிர, பெரும்பாலான கட்சிகள் நன்கொடை அளித்தவர்கள் குறித்து தகவல் தரவில்லை. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனடைந்த கட்சிகளில் முதலிடத்தில் பாஜகவும் இரண்டாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் மௌனம் காத்துவருகின்றனர். கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையத்திடம், பாஜக தாக்கல் செய்த மனுவில், “அரசியல் நிதியில் கணக்கு வைப்பதற்கும், நன்கொடையாளர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய சூழ்நிலையில், அச்சட்டத்தின் கீழ், நன்கொடையாளர்களின் பெயர்களை கட்சி அறியவோ அல்லது அதன் பதிவுகளை வைத்திருக்கவோ தேவையில்லை. நன்கொடையாளர்களின் பெயர்கள் பற்றிய பதிவுகள் எங்களிடம் இல்லை” என தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/c994d1gdpzvo
    • கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணை! 19 MAR, 2024 | 11:08 AM   விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179097
    • 19 MAR, 2024 | 11:21 AM   வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை  (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று  உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார்.  குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம்,  அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.   https://www.virakesari.lk/article/179099
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.