Jump to content

''இந்திய தேசியம்தான் எங்கள் முதன்மையான எதிரி!'' - சொல்கிறார் தமிழ்த் தேசியவாதி பழ.நெடுமாறன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன்

''பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்!'' என்கிறார் பழ.நெடுமாறன்.

மொழி உணர்ச்சி உச்சம் தொட்டுவரும் இந்த வேளையில், ''தமிழ் மொழி பேசுகிற மக்கள் வசிக்கிற நிலப்பகுதியைத்தான் 'தமிழகம்' என்கிறோம். ஆக, தமிழ் மக்கள் வசிக்கிற நிலப்பகுதியை ‘தமிழ்நாடு’ என்று சொல்வதில் தவறு என்ன?

அடுத்து, இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளிலேயே ‘இந்தியா எனும் பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, ‘இந்திய ஒன்றியம்’ அல்லது ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதுதான் அரசியல் சட்டப்படி சரி!'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவருகிறார் மூத்த தமிழ்த் தேசியவாதியும், 'தமிழர் தேசிய முன்னணி'யின் தலைவருமான பழ.நெடுமாறன்.

அவரிடம் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசினேன்...

''இன்றைய தேர்தல் அரசியலில் பங்கெடுத்துக்கொள்ளக்கூடிய அரசியல் கட்சிகளில், நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய தலைவர் என்று நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?''

தி.மு.க - அ.தி.மு.க
 
தி.மு.க - அ.தி.மு.க

''தேர்தல் அரசியல் என்பதே சந்தர்ப்பவாத அரசியலாக மாறிவிட்டது. 1967-ல் அமைக்கப்பட்ட தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியும் இருந்தது; முதலாளித்துவக் கட்சியான சுதந்திரா கட்சியும் இருந்தது. 1967-லிருந்தே இந்திய தேசியத்துடன் திராவிடத் தேர்தல் கட்சிகள் சமரசம் செய்துகொண்டன. இன்றைய தேதி வரையிலும் திராவிட தேர்தல் அரசியல் கட்சிகள் காங்கிரஸ், ஜனதா, பா.ஜ.க என மாறி மாறி அகில இந்தியக் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்துதானே தேர்தலைச் சந்தித்துவருகின்றன! காங்கிரஸ் கட்சி தனது சமய சார்பற்றத் தன்மையைக் கைவிட்டு, மிதவாத இந்துத்துவாக் கட்சியாகவும், பா.ஜ.க தீவிரவாத இந்துத்துவாக் கட்சியாகவும் திகழ்கின்றன. ஆனால் பல்வேறு மாநிலக் கட்சிகள் மாநில சுயாட்சிக் கோரிக்கையை மறந்து மேற்கண்ட இரு கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டுச் சேர்ந்து தேர்தலை கேலிக் கூத்தாக்கிவிட்டன. இந்தப் போக்கின் வளர்ச்சி ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றுவதில் போய் முடிந்திருக்கிறது.

கொள்கை, கோட்பாடற்ற சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டால் தமிழ்த் தேசியம் நீர்த்துப்போகும். அதனால்தான் நாங்கள் யாரையுமே இன்றைய சூழலில் ஆதரிக்க முடியாமல், ஒதுங்கி நிற்கிறோம். நாங்கள் தனியாக நின்று தேர்தலைச் சந்திக்கும் வலிமை பெறும் வரை இந்த நிலை நீடிக்கும்.''

''இன்றைய தமிழக அரசியலில், தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்கக்கூடிய கட்சியாக நீங்கள் யாரைப் பார்க்கிறீர்கள்?''

''தமிழ்த் தேசியத்தை 40 ஆண்டு காலத்துக்கும் மேலாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறவர்கள் நாங்கள்தான். 'தமிழர் தேசிய இயக்கம்' என்று முதலில் பெயர் வைத்தோம். 2002-ல் என்னைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தபோது, எங்கள் இயக்கத்துக்கும் தடை விதித்தார்கள். இன்றைய தேதிவரையிலும் அந்தத் தடை நீடித்துவருகிறது. இதை எதிர்த்து நாங்கள் தொடுத்த வழக்கு 19 வருடங்களாக உயர் நீதிமன்றத்தில் கிடப்பில் கிடக்கிறது. எனவேதான் 'தமிழர் தேசிய முன்னணி' என்ற பெயரில், 70 அமைப்புகளை ஒன்றிணைத்து எங்கள் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறோம்.

எங்களது தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டம், தடா சட்டம், பொடா சட்டம், தேசத் துரோக சட்டம் போன்ற பல வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றார்கள். சென்னையிலிருந்த எங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த எங்கள் கட்சி அலுவலகங்களை காவல்துறையினர் இழுத்துப் பூட்டி முத்திரை வைத்தார்கள். பிரபாகரனையும் அவரது புலிகள் இயக்கத்தையும் சரியான முறையில் அடையாளம் கண்டு முதன்முதலில் அவர்களுக்கு ஆதரவு திரட்டினோம் என்பதுதான் தமிழக அரசுக்கு எங்கள் மீதிருந்த கோபம். எங்கள் மாநாடுகளும், பொதுக்கூட்டங்களும், ஊர்வலங்களும் தடை செய்யப்பட்டன. அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி எங்கள் தோழர்கள் பல்வேறு கொடுமைகளைச் சந்திக்க நேர்ந்தது.

மு.க.ஸ்டாலின் - சீமான்
 
மு.க.ஸ்டாலின் - சீமான்

ஆனாலும் காவிரிப் பிரச்னை, பெரியாறுப் பிரச்னை போன்ற ஆற்று நீர்ப் பிரச்னைகளையும், தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக்காடாகத் திகழ்வதையும், தமிழே கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் திகழ வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம். ராஜீவ் கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு ஒட்டுமொத்தமாக தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. உடனே பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி 26 தமிழர்கள் உயிர்க்காப்புக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தோம்.

இந்த வழக்கில், 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், மீதமிருந்தவர்களில் மூவருக்கு ஆயுள் தண்டனையும் நால்வருக்கு தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் தொடர்ச்சியாகப் போராடி அவர்களது உயிரையும் காப்பாற்றியிருக்கிறோம். இன்றைக்கும் எழுவரின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிவருகிறோம். இவ்வாறு தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுப்பதற்கு முன்னோடிகளாக நாங்கள் இன்று வரையிலும் திகழ்ந்துவருகிறோம். ஆனாலும் தமிழ்த் தேசியம் பேசுவோர் அனைவரையும் அரவணைத்துச் செல்வதே எங்களது நோக்கம்!''

'திராவிடம் என்பதே தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது என்ற பரப்புரை இப்போது அதிகரித்துவருகிறதே?''

''இந்திய தேசியத்தைத்தான் முன்னிறுத்தி நாங்கள் எதிர்த்துவருகிறோம். ஏனெனில், மாநிலங்களின் உரிமைகளையெல்லாம் பறித்து, மத்தியில் குவித்து வைத்துக்கொண்டு, வெறும் ஊராட்சி நிலைக்கு மாநிலங்களைத் தள்ளிவிட்டார்கள். இதற்குக் காரணமான இந்திய தேசியத்தைத்தான் நாங்கள் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம்.  

மாறாக, திராவிடத் தேர்தல் கட்சிகள் இந்திய தேசியத்தோடு சமரசம் செய்துகொண்டு, கைகோத்துச் செல்ல ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 'இந்து தேசியம்' என்பது மொழிவழி தேசியத்தை அடியோடு அழித்து, மாநிலங்களையும் இல்லாமல் செய்து ஒரே ஆட்சியை மட்டும் இந்தியா முழுமைக்கும் நிலை நிறுத்தும் நோக்கம்கொண்டது. இதைப் புரிந்துகொண்டாலும்கூட பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டு சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்கள் முதன்மையான எதிரி இந்தியமே!''

பழ.நெடுமாறன்
 
பழ.நெடுமாறன்

''திராவிடம் என்ற சொல்லாடலே ஆரியத்துக்கு எதிரானதுதான் என்று திராவிடக் கட்சியினர் விளக்கம் தருகிறார்களே..?''

''சங்க நூல்களிலும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களிலும் திராவிடம் என்ற சொல்லாடல் ஓரிடத்தில்கூட இடம்பெறவில்லை. பக்தி இலக்கிய காலத்திலும் ஆரியத்துக்கு எதிரான சரியான சொல்லாடலாக 'தமிழன்' என்ற சொல்தான் கடைபிடிக்கப்பட்டுள்ளது. 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்' என்று 7-ம் நூற்றாண்டிலேயே திருநாவுக்கரசர் தனது தேவாரப் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார்..! எனவே, ஆரியன் என்பதற்கான சரியான எதிர்ப்பதம் 'தமிழன்'தான்!

இந்தியாவிலுள்ள எல்லா தேசிய இனங்களின் மொழிகளும் சம்ஸ்கிருத ஊடுருவலால் கலப்பு மொழிகளாகித் திரிந்துவிட்டன. இந்தநிலையில், நம் தமிழ் மொழி மட்டும்தான் அதற்கு அடிபணியாமல் தனது தனித்தன்மையைக் காத்துக்கொண்டிருக்கிறது. தொல்காப்பியர், திருவள்ளுவர் காலத்திலிருந்தே வடசொல் கலப்பை நாம் எதிர்த்துவருகிறோம்!''

''இந்திய தேசியம்தான் எங்கள் முதன்மையான எதிரி!'' - சொல்கிறார் தமிழ்த் தேசியவாதி பழ.நெடுமாறன் | "Indian nationality is our number one enemy!" - Says Tamil nationalist Pazha.Nedumaran - Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரானா ஊரடங்கு காலத்திலும் தன்னுடைய உயிரைப் பற்றியே கவலைப்படாமல் அலட்சியம் காட்டும் பெருவாரியான (பா)மரத் தமிழன், இந்த 'தமிழ் தேசியம்' என்பதைப் பற்றி இப்பொழுதெல்லாம் பெரிதாக அக்கறை கொள்வதில்லை என்பதே வேதனையான யதார்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

எங்களது தோழர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டம், தடா சட்டம், பொடா சட்டம், தேசத் துரோக சட்டம் போன்ற பல வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றார்கள். சென்னையிலிருந்த எங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த எங்கள் கட்சி அலுவலகங்களை காவல்துறையினர் இழுத்துப் பூட்டி முத்திரை வைத்தார்கள். பிரபாகரனையும் அவரது புலிகள் இயக்கத்தையும் சரியான முறையில் அடையாளம் கண்டு முதன்முதலில் அவர்களுக்கு ஆதரவு திரட்டினோம் என்பதுதான் தமிழக அரசுக்கு எங்கள் மீதிருந்த கோபம். எங்கள் மாநாடுகளும், பொதுக்கூட்டங்களும், ஊர்வலங்களும் தடை செய்யப்பட்டன. அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி எங்கள் தோழர்கள் பல்வேறு

இதய சுத்தியோடு தமிழ் தேசிய இயக்கம் நடத்தினால் இந்தியாவில் இதுதான் நிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐயா  போன்றவர்களின் காலத்திலேயே 

தமிழ்த்தேசியம் உயிர் பிழைக்கவேண்டும்

காவிரிப் பிரச்னை, பெரியாறுப் பிரச்னை போன்ற ஆற்று நீர்ப் பிரச்னைகளையும், தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக்காடாகத் திகழ்வதையும், தமிழே கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் திகழ வேண்டும் என்பதற்காகவும் 

எல்லோரும் சேர்ந்து  கூடி  பேவணும்

ஆட்சி அதிகாரத்தை  கைப்பற்றணும்

அதுவே இனி  தமிழும் தமிழரும்  அழியாதிருக்க  ஒரேயொரு  வழி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.