Jump to content

ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல்

திருட்டு என்பது சிலருக்கு ஒரு மன வியாதி. ஒரு சிறிய பொருளாயினும், அதனை திருடிக்கொண்டு சேர்ப்பது ஒரு திரில். அந்த திரிலுக்காகவே தமது கல்வி, வேலை அனைத்தையுமே இழந்து நாசமாகும் பலரையும் காண்போம்.

இதனை மருத்துவ உலகு அங்கீகரித்தாலும், அதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக, அதனை சட்டம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சரி விசயத்துக்கு வருவோம். ஒரு பிபிசி நிகழ்ச்சி பார்த்தேன். பாலியல் பலாத்கார வழக்கு.

ஒரு பெண். அவரது வீட்டில் ஒரு சிறிய பிரச்சனை. அதனை திருத்த ஆள் வேண்டும். சூப்பர்மார்கெட் நோட்டீஸ் போர்ட்டில் ஒரு விளம்பரம். அந்த வகை வேலைகளை சிறப்பாக செய்யும் ஒருவர் குறித்து தொலைபேசி இலக்கத்துடன் இருந்தது. பேசினார். தனது பெயர் மக்தி  அஹமத் என்றும் தான் ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவர் என்றும், ஒரு பரீட்சைக்கு தயாராவதால், சம்பளம் இல்லாத லீவு எடுத்து உள்ளதாகவும், இது தனது பொழுது பொக்கு என்பதால், கைச்செலவுக்காக செய்வதாகவும் சொன்னார்.

அவரது பேச்சு, மனேர்ஸ் அவர் உண்மையிலேயே படித்தவர் என்பதை சொல்ல, வீட்டு முகவரியும் கொடுத்தார் அவர். வந்தவர் சிறப்பாக அந்த பிரச்சனையை தீர்த்துக் கொடுத்தார்.

அதே வேளை அந்த இளம் பெண் தனியே இருப்பதனையும் உறுதி செய்து கொண்டார். போகும் போது, நாளை இந்த பக்கம் வருவேன், இதனை மீண்டும் செக் பண்ணி, எல்லாம் ஓகேயா என்று பார்க்கிறேன், நீ இருப்பாயா என்று கேட்க, அவரும், ஆமாம் இருப்பேன். எங்கேயும் போகமாட்டேன், என்றார் வரப்போகும் பெரும் வில்லங்கத்தினை உணராமல்.

அடுத்த நாள் வந்தார். செக் பண்ணினார். பாத்ரூம் போகலாமா என்றார். மேலே இருக்கிறது என்றார் பெண். போனார். வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருப்பார் போலும்.

இதைப் பார்த்தீர்களா, பெண்ணை மேலே அழைத்தார். பெண்ணும் சென்றார்.

24 மணி நேரம், பெண்ணை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, பல முறை பாலியல் வக்கிரம் செய்தார். வெளியேறினார்.

பெண் பித்து பிடித்தவர் போல இருத்திருக்கிறார். பல மணி நேரத்துக்கு பின்னரே, போலீசாரை அழைத்து இருக்கிறார்.

****

அந்த பெண்ணின் நிலையினை உணர்ந்த போலீசார், ஆன் எனும் போலீஸ்காரியை விசாரணைக்கு பொறுப்பாக அமர்த்தினார்கள்.

ஆனுக்கு முன் பெரிய சவால். இரண்டு முக்கிய விடயம் மட்டுமே அவரிடம் இருந்தன.

மக்தி என்னும் பெயர், முகத்தில் வலது பக்கத்தில் ஒரு மரு.  போன் இயங்கவில்லை. நோட்டீஸ் போர்ட்டில் போட்ட போது, cctv இருக்கவில்லை அல்லது இயங்கவில்லை. ஆகவே அங்கேயும் சிக்கவில்லை.

வேறு யாருக்கும் இவர் சேவை செய்தாரா என்று கேட்பதில் பலன் இல்லை. ஆகவே என்ன செய்வது. அவர் ஒரு டாக்டர் என்று பொய் சொல்லி இருக்கலாம். அவர்கள் இப்படி கீழ்த்தரமான கிரிமினல் வேலைகளை செய்வார்களா என்ன என்று நினைத்திருந்தார்.

வீட்டில் இருந்து டீவியை பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்தார். செய்தியில், இங்கிலாந்தின் பொது மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒரு கேள்விக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பொறி ஒன்று தட்டியது. மறுநாள் அவர்களது அலுவலகத்தினை அழைத்தார். மக்தி அஹமத் என்ற பெயரில் உள்ள சகல டாக்டர் பெயர் லிஸ்ட் வேண்டுமே. 

வந்தது.

மருத்துவ கவுன்சில், பதிவு இருந்தால் மட்டுமே வேலை செய்ய முடியும். பதிவுக்கு படங்கள் கொடுக்க வேண்டும்.

படம் என்றால், முகத்தில் அந்த மரு இருக்குமே.... 

இருந்தது ஒருவருக்கு.....

மீண்டும் அழைத்தார், அந்த நபர் எங்கே வேலை செய்கிறார் என்று சொல்ல முடியுமா?

சில கண நேர மௌனம். நூறாண்டுகள் செல்வது போல தவித்தார் ஆன்.

மன்னிக்க வேண்டும், ஆபிசர் ஆன்,  திருட்டு ஒன்று காரணமாக, அவர் பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இனி அவர் வேலை செய்ய முடியாதே. 

'எப்போது நடந்தது அது'.....  'ஐந்து வருடமாகிறது'.

சாண், ஏற முலம் சறுக்கியது. அடுத்து என்ன..... காபி மெசின் பக்கம் போனார். அழுத்தினார். எடுக்காமலே யோசனையில் இருந்தார். பின்னால் வந்தார் இன்னோரு அதிகாரி.

என்ன, ஆன் கப்பினை  எடுக்காமலே யோசனையிலே இருக்கிறாய் என்றார் அவர்.

விசயத்தினை சொன்னார்.

****

அட இதுவா விசயம்.

இப்ப, ஆள் விசயம், கைவிரல், எல்லாமே நம்ம போலீஸ் டேட்டாபேஸில் இருக்குமே....

அட.... ஆமால்ல... காபி கப்பினை வீசி விட்டு விரைந்தார்.

அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்தார்.... பல படங்களை வைத்தார், மரு உள்ள படங்கள். அதில் மக்தி படமும் இருந்தது.

24 மணிநேரம் மிக அண்மையாக இருந்த ஒருவர், மறக்க முடியுமா?

இவன்தான் என்று கை காட்டினார்.

சரி நெருங்கியாகி விட்டது, ஆள் எங்கே என்று தேடுவது.

மண்டையை போட்டு உடைத்தார். போன் நம்பர்.... கம்பெனிக்கு அடித்தார்... அது PAY AS YOU GO: இலக்கம். முகவரி இராது.

 

*****

அவரது பழைய வேலை இடத்துக்கு சென்று, நண்பர்கள் இருப்பார்களா என்று விசாரித்தால், அனைவரும் ஒதுங்கிக் கொள்கிறார்கள். 

அவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. 6 வாரத்தில் வந்து இருந்தார். கிரிமினல் ரெகார்ட் காரணமாக இவர் வீடுகள் எடுத்து இருக்க முடியாது. ஆகவே யாராவது நண்பர்கள் உதவி இருக்க வேண்டும்.

மிக கடுமையான தேடல்களின் பின்னர், இவர் தங்கி இருந்த முகவரி கிடைத்தது.

போனார். ஆள் இல்லை. இரண்டு வருடத்துக்கு முன்னரே போய் விட்டாரே. 

ம்ம்ம்.. நன்றி சொல்லி, கிளம்பிய போது... ஒரு நிமிடம்... தனக்கு வரக்கூடிய கடிதங்களை தனக்கு forward பண்ணுமாறு ஒரு முகவரி தந்து போனார்.

அந்த முகவரிக்கு சென்றார் ஆன். அது பெட் & பிரெக்பாஸ்ட் அமைப்பு. 

ஆமாம், இந்த படத்தில் உள்ள நபர் இங்கே இருந்தார். பணம் தர முடியாததால், போனவாரம் அனுப்பி வைத்தோம். ஒரு காரில் கிளம்பி சென்றார், எங்கே போனார் என்று தெரியவில்லை.

cctv பார்த்து, கார் இலக்கம் பிடித்து, காரை பிடித்து.... ட்ரைவரை கண்டு பிடித்து.....

.... கேட்டால் தனது நண்பர் ஒருவரின் மூடப்பட்ட ரெஸ்டாரண்ட் ஒன்றின் மேல்தளத்தில் தங்கி இருக்கிறார் என்று தகவல் கிடைத்தது.

போலீசார் சென்றபோது, நல்ல உறக்கத்தில் இருந்தார் டாக்டர் மக்தி அஹமது MBBS. 

கட்டிலில் என்று நினைப்பீர்கள். இல்லை. 

அவரது கல்விக்கும் பொருத்தம் இல்லாத ஒரு கேவலமான நிலையில், ஒரு அழுக்கான இடத்தில், ஒரு மேசையின் கீழ், ஸ்லீப்பிங் பை ஒன்றினுள் குறுக்கியபடியே படுத்திருந்தார். 

பத்து வருட தண்டனை வழங்கப்பட்டு உள்ளே இருக்கிறார். 

இளமையில் திரில் காரணமாக திருடியது, தனது வாழ்வினையே நாசமாக்கியது என்று சொல்லி அழுதார்.  திருட்டு விடயமாக சிக்கியபின்னர், தனது மனைவி, பிள்ளையுடன் தன்னை விட்டு நீங்கி, விவாகரத்து செய்து விட்டதாகவும் அழுதார் அவர்.

எல்லாம் இழந்த பின்னர், இனி என்ன வாழ்வு என்று விரக்தி கொண்டே, மேலும் தவறுகள் இழைத்ததாகவும் சொன்னார் அவர்.

ஒரு டாக்டர். மிகச்சிறப்பான பல்கலைக்கழக கல்வி. பிரயோசனம் இல்லாமல் போய் விட்டதே.

****

இதனை எழுதும் போது, தமிழ் சிறியர் சொன்ன ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. மைதானத்தில் ஒரு பேனையினை கண்டு எடுத்துக் கொண்டு வீடு போயிருக்கிறார். அதனை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு வருமாறு இரவு நேரத்தில் தந்தை திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்.

****

சிறு, சிறு திருட்டுகளை சிரித்து ஊக்குவிக்க கூடாது. உடனேயே அதனை கண்டித்து திருத்த வேண்டும், இல்லாவிடில் முதலுக்கே மோசமாகிவிடும் என்பதே இந்த கதை சொல்லும் கருத்து.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல்

திருட்டு என்பது சிலருக்கு ஒரு மன வியாதி. ஒரு சிறிய பொருளாயினும், அதனை திருடிக்கொண்டு சேர்ப்பது ஒரு திரில். அந்த திரிலுக்காகவே தமது கல்வி, வேலை அனைத்தையுமே இழந்து நாசமாகும் பலரையும் காண்போம்.

இதனை மருத்துவ உலகு அங்கீகரித்தாலும், அதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக, அதனை சட்டம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சரி விசயத்துக்கு வருவோம். ஒரு பிபிசி நிகழ்ச்சி பார்த்தேன். பாலியல் பலாத்கார வழக்கு.

ஒரு பெண். அவரது வீட்டில் ஒரு சிறிய பிரச்சனை. அதனை திருத்த ஆள் வேண்டும். சூப்பர்மார்கெட் நோட்டீஸ் போர்ட்டில் ஒரு விளம்பரம். அந்த வகை வேலைகளை சிறப்பாக செய்யும் ஒருவர் குறித்து தொலைபேசி இலக்கத்துடன் இருந்தது. பேசினார். தனது பெயர் மக்தி  அஹமத் என்றும் தான் ஒரு பதிவு செய்யப்பட்ட மருத்துவர் என்றும், ஒரு பரீட்சைக்கு தயாராவதால், சம்பளம் இல்லாத லீவு எடுத்து உள்ளதாகவும், இது தனது பொழுது பொக்கு என்பதால், கைச்செலவுக்காக செய்வதாகவும் சொன்னார்.

அவரது பேச்சு, மனேர்ஸ் அவர் உண்மையிலேயே படித்தவர் என்பதை சொல்ல, வீட்டு முகவரியும் கொடுத்தார் அவர். வந்தவர் சிறப்பாக அந்த பிரச்சனையை தீர்த்துக் கொடுத்தார்.

அதே வேளை அந்த இளம் பெண் தனியே இருப்பதனையும் உறுதி செய்து கொண்டார். போகும் போது, நாளை இந்த பக்கம் வருவேன், இதனை மீண்டும் செக் பண்ணி, எல்லாம் ஓகேயா என்று பார்க்கிறேன், நீ இருப்பாயா என்று கேட்க, அவரும், ஆமாம் இருப்பேன். எங்கேயும் போகமாட்டேன், என்றார் வரப்போகும் பெரும் வில்லங்கத்தினை உணராமல்.

அடுத்த நாள் வந்தார். செக் பண்ணினார். பாத்ரூம் போகலாமா என்றார். மேலே இருக்கிறது என்றார் பெண். போனார். வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருப்பார் போலும்.

இதைப் பார்த்தீர்களா, பெண்ணை மேலே அழைத்தார். பெண்ணும் சென்றார்.

24 மணி நேரம், பெண்ணை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, பல முறை பாலியல் வக்கிரம் செய்தார். வெளியேறினார்.

பெண் பித்து பிடித்தவர் போல இருத்திருக்கிறார். பல மணி நேரத்துக்கு பின்னரே, போலீசாரை அழைத்து இருக்கிறார்.

****

அந்த பெண்ணின் நிலையினை உணர்ந்த போலீசார், ஆன் எனும் போலீஸ்காரியை விசாரணைக்கு பொறுப்பாக அமர்த்தினார்கள்.

ஆனுக்கு முன் பெரிய சவால். இரண்டு முக்கிய விடயம் மட்டுமே அவரிடம் இருந்தன.

மக்தி என்னும் பெயர், முகத்தில் வலது பக்கத்தில் ஒரு மரு.  போன் இயங்கவில்லை. நோட்டீஸ் போர்ட்டில் போட்ட போது, cctv இருக்கவில்லை அல்லது இயங்கவில்லை. ஆகவே அங்கேயும் சிக்கவில்லை.

வேறு யாருக்கும் இவர் சேவை செய்தாரா என்று கேட்பதில் பலன் இல்லை. ஆகவே என்ன செய்வது. அவர் ஒரு டாக்டர் என்று பொய் சொல்லி இருக்கலாம். அவர்கள் இப்படி கீழ்த்தரமான கிரிமினல் வேலைகளை செய்வார்களா என்ன என்று நினைத்திருந்தார்.

வீட்டில் இருந்து டீவியை பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்தார். செய்தியில், இங்கிலாந்தின் பொது மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒரு கேள்விக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பொறி ஒன்று தட்டியது. மறுநாள் அவர்களது அலுவலகத்தினை அழைத்தார். மக்தி அஹமத் என்ற பெயரில் உள்ள சகல டாக்டர் பெயர் லிஸ்ட் வேண்டுமே. 

வந்தது.

மருத்துவ கவுன்சில், பதிவு இருந்தால் மட்டுமே வேலை செய்ய முடியும். பதிவுக்கு படங்கள் கொடுக்க வேண்டும்.

படம் என்றால், முகத்தில் அந்த மரு இருக்குமே.... 

இருந்தது ஒருவருக்கு.....

மீண்டும் அழைத்தார், அந்த நபர் எங்கே வேலை செய்கிறார் என்று சொல்ல முடியுமா?

சில கண நேர மௌனம். நூறாண்டுகள் செல்வது போல தவித்தார் ஆன்.

மன்னிக்க வேண்டும், ஆபிசர் ஆன்,  திருட்டு ஒன்று காரணமாக, அவர் பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இனி அவர் வேலை செய்ய முடியாதே. 

'எப்போது நடந்தது அது'.....  'ஐந்து வருடமாகிறது'.

சாண், ஏற முலம் சறுக்கியது. அடுத்து என்ன..... காபி மெசின் பக்கம் போனார். அழுத்தினார். எடுக்காமலே யோசனையில் இருந்தார். பின்னால் வந்தார் இன்னோரு அதிகாரி.

என்ன, ஆன் கப்பினை  எடுக்காமலே யோசனையிலே இருக்கிறாய் என்றார் அவர்.

விசயத்தினை சொன்னார்.

****

அட இதுவா விசயம்.

இப்ப, ஆள் விசயம், கைவிரல், எல்லாமே நம்ம போலீஸ் டேட்டாபேஸில் இருக்குமே....

அட.... ஆமால்ல... காபி கப்பினை வீசி விட்டு விரைந்தார்.

அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்தார்.... பல படங்களை வைத்தார், மரு உள்ள படங்கள். அதில் மக்தி படமும் இருந்தது.

24 மணிநேரம் மிக அண்மையாக இருந்த ஒருவர், மறக்க முடியுமா?

இவன்தான் என்று கை காட்டினார்.

சரி நெருங்கியாகி விட்டது, ஆள் எங்கே என்று தேடுவது.

மண்டையை போட்டு உடைத்தார். போன் நம்பர்.... கம்பெனிக்கு அடித்தார்... அது PAY AS YOU GO: இலக்கம். முகவரி இராது.

 

*****

அவரது பழைய வேலை இடத்துக்கு சென்று, நண்பர்கள் இருப்பார்களா என்று விசாரித்தால், அனைவரும் ஒதுங்கிக் கொள்கிறார்கள். 

அவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. 6 வாரத்தில் வந்து இருந்தார். கிரிமினல் ரெகார்ட் காரணமாக இவர் வீடுகள் எடுத்து இருக்க முடியாது. ஆகவே யாராவது நண்பர்கள் உதவி இருக்க வேண்டும்.

மிக கடுமையான தேடல்களின் பின்னர், இவர் தங்கி இருந்த முகவரி கிடைத்தது.

போனார். ஆள் இல்லை. இரண்டு வருடத்துக்கு முன்னரே போய் விட்டாரே. 

ம்ம்ம்.. நன்றி சொல்லி, கிளம்பிய போது... ஒரு நிமிடம்... தனக்கு வரக்கூடிய கடிதங்களை தனக்கு forward பண்ணுமாறு ஒரு முகவரி தந்து போனார்.

அந்த முகவரிக்கு சென்றார் ஆன். அது பெட் & பிரெக்பாஸ்ட் அமைப்பு. 

ஆமாம், இந்த படத்தில் உள்ள நபர் இங்கே இருந்தார். பணம் தர முடியாததால், போனவாரம் அனுப்பி வைத்தோம். ஒரு காரில் கிளம்பி சென்றார், எங்கே போனார் என்று தெரியவில்லை.

cctv பார்த்து, கார் இலக்கம் பிடித்து, காரை பிடித்து.... ட்ரைவரை கண்டு பிடித்து.....

.... கேட்டால் தனது நண்பர் ஒருவரின் மூடப்பட்ட ரெஸ்டாரண்ட் ஒன்றின் மேல்தளத்தில் தங்கி இருக்கிறார் என்று தகவல் கிடைத்தது.

போலீசார் சென்றபோது, நல்ல உறக்கத்தில் இருந்தார் டாக்டர் மக்தி அஹமது MBBS.

பத்து வருட தண்டனை வழங்கப்பட்டு உள்ளே இருக்கிறார். 

இளமையில் திரில் காரணமாக திருடியது, தனது வாழ்வினையே நாசமாக்கியது என்று சொல்லி அழுதார்.  திருட்டு விடயமாக சிக்கியபின்னர், தனது மனைவி, பிள்ளையுடன் தன்னை விட்டு நீங்கி, விவாகரத்து செய்து விட்டதாகவும் அழுதார் அவர்.

எல்லாம் இழந்த பின்னர், இனி என்ன வாழ்வு என்று விரக்தி கொண்டே, மேலும் தவறுகள் இழைத்ததாகவும் சொன்னார் அவர்.

ஒரு டாக்டர். மிகச்சிறப்பான பல்கலைக்கழக கல்வி. பிரயோசனம் இல்லாமல் போய் விட்டதே.

****

இதனை எழுதும் போது, தமிழ் சிறியர் சொன்ன ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. மைதானத்தில் ஒரு பேனையினை கண்டு எடுத்துக் கொண்டு வீடு போயிருக்கிறார். அதனை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு வருமாறு இரவு நேரத்தில் தந்தை திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்.

****

சிறு, சிறு திருட்டுகளை சிரித்து ஊக்குவிக்க கூடாது. உடனேயே அதனை கண்டித்து திருத்த வேண்டும், இல்லாவிடில் முதலுக்கே மோசமாகிவிடும் என்பதே இந்த கதை சொல்லும் கருத்து.
 

நாதம்,

எழுதி முடிஞ்சோ? கருத்து எழுத இப்ப 2.30 மணத்தியாலமா நான் வெயிட்டிங் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இதனை மருத்துவ உலகு அங்கீகரித்தாலும், அதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக, அதனை சட்டம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பகிடியில்லை நாதம், உண்மையிலே ரசித்து வாசித்தேன்.

கடைசியில் போட்டிருந்த மெசேஜ் நைஸ் டச்👌.

ஒரு கொசுறு தகவல்:

இந்த சிறு திருட்டுக்களை கிளெப்டோமேனியா என்பார்கள். நீங்கள் சொன்னது போல் இது இருப்பதை ஒரு defence ஆக காட்டி திருட்டு வழக்கில் இருந்து தப்ப முடியாதுதான்.

ஒரு குற்றம் செய்ததாக காணப்பட ஒருவரின் செயலும்(act), அந்த குற்றத்தை செய்ய விரும்பிய மன நிலையும் முக்கியம் (intention).

பொதுவாக ஒருவரது intention ஐ இல்லாது ஆக்கும் மனநிலைகளுக்கே diminished responsibility அதாவது அந்த செயலை செய்யும் எண்ணம் வரும் அளவுக்கு மனநிலை உள்ளவர் அல்ல என்ற அடிப்படையில் விலக்கு (defence) வழங்கபடும்.

ஆனால் இப்படியான திருட்டுகளில் திருட்டு செயலும், திருடும் எண்ணமும் இருப்பதால் சட்டம் இதை ஒரு திருட்டாகவே கருதும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் பெருவிளையாடல் அல்லவே. டாக்குத்தர் சின்ன திருட்டுக்களை விட்டுவிட்டு பாம்பெண்ணை பிஸினஸ் செய்திருக்கலாம்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய ராணியின் பாட்டி குயீன் மேரி (5 ம் ஜோர்ஜின் மனைவி) க்கும் இந்த பிரச்சனை இருந்ததாக சொல்வார்கள்.

சொல்ல மறந்தது:

பி பி சியில் பார்த்ததை மிகவும் தத் ரூபமாக எழுதியுள்ளீர்கள். 👏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான எழுத்து நடை.. திறில் படம் பார்த்ததுபோல் இருந்தது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில வாழ்ந்த காலங்களில சில கிழவியள் கதை சொல்லுற போது, கேட்டுக்கொண்டே இருக்க வேணும் போல இருக்கும்!
அது மாதிரி...அடுத்ததாக என்ன நடக்குமோ என ஆவலைத் தூண்டும் ஒரு எழுத்து நடை..!
தொடர்ந்தும் எழுதுங்கள்,நாதம்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறும்படம் பார்த்த மாதிரி இருக்கிறது.

தகவலுக்கு நன்றி நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நாத்தின் எழுத்தைப் பற்றி எழுதியவர்களுக்கு ஒரு விடையம்.அவர் இப்படியான பலதை ழுதியுள்ளார்.அப்படி எழுதுவதில் அபார திறமையுள்ளவர்.ஆனால் விதி யாரைத்தான் விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மூச்சில் வாசிக்க வைத்த, சிறப்பான எழுத்து.  நன்றி நாதம்ஸ். 👍 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Meilleurs GIFs Rusk | Gfycat

சிறியர் கொண்டுபோன பேனை எழுதாத பேனையாய் இருக்குமோ........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

இங்கு நாத்தின் எழுத்தைப் பற்றி எழுதியவர்களுக்கு ஒரு விடையம்.அவர் இப்படியான பலதை ழுதியுள்ளார்.அப்படி எழுதுவதில் அபார திறமையுள்ளவர்.ஆனால் விதி யாரைத்தான் விட்டது.

விதி (rule) எல்லாருக்கும் பொதுவானது. 

அது யாரையும் விடாது.

முகமன் பாராது.

எல்லாருக்கும் நல்ல பிள்ளைக்கு நடிக்காது.

நேற்று நல்லா எழுதினார் என்று இன்றைய பிழையை கவனியாது போகாது.

நேற்று பிழையாக எழுதினார் என்று இன்றைய நல்ல எழுத்தை பாராட்டாமலும் போகாது.

விதி வலியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

இங்கு நாத்தின் எழுத்தைப் பற்றி எழுதியவர்களுக்கு ஒரு விடையம்.அவர் இப்படியான பலதை ழுதியுள்ளார்.அப்படி எழுதுவதில் அபார திறமையுள்ளவர்.ஆனால் விதி யாரைத்தான் விட்டது.

ஆகா.... இப்பிடியுமா ஆப்படிப்பது...

நம்ம விதி, இந்த கண்ராவியை எல்லாம் வாசித்து துளைக்க வேண்டிக் கிடக்குது எண்டுறியள்.....  😜

14 hours ago, goshan_che said:

பகிடியில்லை நாதம், உண்மையிலே ரசித்து வாசித்தேன்.

கடைசியில் போட்டிருந்த மெசேஜ் நைஸ் டச்👌.

ஒரு கொசுறு தகவல்:

இந்த சிறு திருட்டுக்களை கிளெப்டோமேனியா என்பார்கள். நீங்கள் சொன்னது போல் இது இருப்பதை ஒரு defence ஆக காட்டி திருட்டு வழக்கில் இருந்து தப்ப முடியாதுதான்.

ஒரு குற்றம் செய்ததாக காணப்பட ஒருவரின் செயலும்(act), அந்த குற்றத்தை செய்ய விரும்பிய மன நிலையும் முக்கியம் (intention).

பொதுவாக ஒருவரது intention ஐ இல்லாது ஆக்கும் மனநிலைகளுக்கே diminished responsibility அதாவது அந்த செயலை செய்யும் எண்ணம் வரும் அளவுக்கு மனநிலை உள்ளவர் அல்ல என்ற அடிப்படையில் விலக்கு (defence) வழங்கபடும்.

ஆனால் இப்படியான திருட்டுகளில் திருட்டு செயலும், திருடும் எண்ணமும் இருப்பதால் சட்டம் இதை ஒரு திருட்டாகவே கருதும்.

கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி, தல...

 

11 minutes ago, goshan_che said:

விதி (rule) எல்லாருக்கும் பொதுவானது. 

அது யாரையும் விடாது.

முகமன் பாராது.

எல்லாருக்கும் நல்ல பிள்ளைக்கு நடிக்காது.

நேற்று நல்லா எழுதினார் என்று இன்றைய பிழையை கவனியாது போகாது.

நேற்று பிழையாக எழுதினார் என்று இன்றைய நல்ல எழுத்தை பாராட்டாமலும் போகாது.

விதி வலியது.

கண காலத்துக்கு பிறகு, டுடே பப் கோயிங் வித் பிரண்ட்ஸ்.... டு ராய்ஸ் தி கிளாஸ். 🦔

பாராட்டியோர், லைக் அடித்தோர் அனைவருக்கும் நன்றி.

***

எனக்கு, இந்த ஒனாண்டிப்புலவரில் கணக்க விசயம் இருக்கிற மாதிரி தெரியுது.... ஆள் அடக்கி வாசிக்குது... அவரது பாணி எழுத்து பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

 

கண காலத்துக்கு பிறகு, டுடே பப் கோயிங் வித் பிரண்ட்ஸ்.... டு ராய்ஸ் தி கிளாஸ். 🦔

பாராட்டியோர், லைக் அடித்தோர் அனைவருக்கும் நன்றி.

எனக்கு, இந்த ஒனாண்டிப்புலவரில் கணக்க விசயம் இருக்கிற மாதிரி தெரியுது.... ஆள் அடக்கி வாசிக்குது... அவரது பாணி எழுத்து பிடிக்கும்.

👍🏿

என்ஜாயி நாதமுனி

Pubஇல நல்லா மப்பாகி 🤣

ஜின் ஊத்தி Fun ஆகி

கோலா சேர்த்து ஒண்ணாக்கி 🤣

பிகு: பெருமாள் வந்து கட்டிப்பிடிப்பார் கவனம்.

பிகு பிகு: ஓனாண்டிக்கு நான் ஒண்ணாம் நம்பர் ரசிகன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

ஒரு டாக்குத்தரின் பெரு விளையாடல்

நாதா! உங்கள் எழுத்து எனக்கு பிடித்திருக்கு :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2021 at 19:43, குமாரசாமி said:

நாதா! உங்கள் எழுத்து எனக்கு பிடித்திருக்கு :cool:

ஏதாவது பரிசு கொடுக்கிறது நாதருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ரகம். இப்படிப் பல ரகங்கள். நம்ம டாக்குத்தர் சிலரும் சந்தர்ப்பம் கிடைத்தால் தப்புச் செய்வார்கள் என்பதற்கு.. பழைய வழக்குகள் கட்டியம் சொல்லுகின்றன. 

ஆனால் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார சேவை உத்தியோகத்தரா.. அது டாக்டர்.. தாதி.. ச்பிசியோ.. யாராகவும் இருக்கலாம்.. இப்போது ஆன்லைனில் சோதனை செய்து பார்க்க முடியும்.

https://www.gmc-uk.org/registration-and-licensing/the-medical-register

https://www.hcpc-uk.org/check-the-register/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 19:43, தனிக்காட்டு ராஜா said:

ஏதாவது பரிசு கொடுக்கிறது நாதருக்கு 

ஆ.... ஆயிரம் பொற்காசுகளா.... மண்டபத்தில் யாரும் எழுதித்தரவில்லை. நானே தான் எழுதினேன். 😳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஆ.... ஆயிரம் பொற்காசுகளா.... மண்டபத்தில் யாரும் எழுதித்தரவில்லை. நானே தான் எழுதினேன். 😳

யாரங்கே இந்தப் பொற்காசுகளை புலவரிடம் கொடுத்து விடுங்கள்......!  😁

1000 Gold Coins Prize Scheme from Vedic Days! | Tamil and Vedas

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இடையில இரன்டு பித்தலைக் காசு தெரியிற மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

என்ன இடையில இரன்டு பித்தலைக் காசு தெரியிற மாதிரி இருக்கு.

நாளும் பொழுதும் காசோட புளங்கிறவனுக்கு கழுகுக்கண் எண்டு என்ர ஆச்சி அடிக்கடி சொல்லுறவ..😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • By KELUM BANDARA   Colombo, April 18 (Daily Mirror) - Sri Lanka is still at a loss to thwart the efforts by a city council in Canada to construct what it called a Tamil genocide monument, and to counter the allegations by the Canadian politicians, an informed source said . Brampton city council in Canada has approved the final design for the Tamil Genocide Memorial, a monument the city promised three years ago, according to foreign media. The media said it is a 4.8-metre tall stainless steel monument built in Chinguacousy Park in the Bramalea area to commemorate the lives lost in the Sri Lankan civil war — what many people in the Tamil community call a genocide. Canada's Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day in 2022. A well placed diplomatic source said that Sri Lanka remains on high alert as Canadian leaders may make genocide allegations next month when the country marks the war victory. Last year, Canadian Prime Minister Justin Trudeau’s genocide accusations sparked a diplomatic dispute between the two nations. Sri Lanka responded with protests by summoning the Canadian envoy. A well-placed diplomatic source informed Daily Mirror yesterday that the Sri Lankan government is keen to ascertain whether such allegations will be repeated this time, despite previous protests by Sri Lanka. “Canadian leaders have a history of making such allegations, even though the Canadian federal government has concluded that the events in Sri Lanka during the war do not amount to genocide,” the official said. However, the official said Sri Lanka had been unable to thwart the efforts by the Brampton city council to construct the monument. The Canadian Federal government which rejected genocide allegations, however, has no jurisdiction over the city council making it difficult for Sri Lanka to stop the move. SL on alert on possible genocide allegations by Canada - Top Story | Daily Mirror
    • இதுக்கு மேலை விளங்கப் படுத்த எனக்குத் தெரியாது ராசா..... 🤣
    • மாதவன். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும்  கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்; யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன். நாட்டின்  சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது . ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன்  மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச) யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 03:43 PM   கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல்  உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும்  சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.    இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு! | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.