Jump to content

நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா


Recommended Posts

  • Replies 218
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

oSXGL3JvHyRaWHVNcHwjXDrcEnuUKmM2gZgirAd4 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கெல்லாம் இன்னும் தாயக கோ கோ விளையாட்டு இன்னும் நினைவில்.?

2-4-pdk28kokos_2801chn_12.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பஸ் ரயர் போட்டு ஊர் குளத்தில் மிதந்தவர் எத்தனை பேர் ரெல் மீ..

IMG-20210821-124947.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரிங் பால்..

4653-Sponge-Rubber-Ring.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

96591188_548634219401902_431584815997779

 

 

சின்ன நீர் ஓடையில் ....மீன்புடிச்சது...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இப்படியான நம்பர் போட்ட வாடகை சைக்கிளை ஓட்டியது உண்டா . ரெல் மீ.?

Daily_News_4679332971573.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தாயகத்தில் இப்படியான நம்பர் போட்ட வாடகை சைக்கிளை ஓட்டியது உண்டா . ரெல் மீ.?

Daily_News_4679332971573.jpg

தாயகத்தில்… இப்படியான, புது சைக்கிள்களுக்கு நம்பர் போட்டு வாடகைக்கு விடுவதில்லை. 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தாயகத்தில் இப்படியான நம்பர் போட்ட வாடகை சைக்கிளை ஓட்டியது உண்டா . ரெல் மீ.?

Daily_News_4679332971573.jpg

 

23 minutes ago, தமிழ் சிறி said:

தாயகத்தில்… இப்படியான, புது சைக்கிள்களுக்கு நம்பர் போட்டு வாடகைக்கு விடுவதில்லை. 🙂

ஊரில் வாடகை சைக்கிள் கலாச்சாரம் எங்கும் இருந்ததாக நினைவில்லை. ஒப்பீடளவில் இலங்கையில் சராசரி தனிநபர் வருமானம் கூட என்பதால் கிட்டதட்ட வீட்டுக்கு ஒரு பழைய சைக்கிளாவது சொந்தமாக இருந்தது (பொதுவாக).

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

 

ஊரில் வாடகை சைக்கிள் கலாச்சாரம் எங்கும் இருந்ததாக நினைவில்லை. ஒப்பீடளவில் இலங்கையில் சராசரி தனிநபர் வருமானம் கூட என்பதால் கிட்டதட்ட வீட்டுக்கு ஒரு பழைய சைக்கிளாவது சொந்தமாக இருந்தது (பொதுவாக).

 

கந்தர்மட சந்தியில் இரண்டும், ஆனைப்பந்தி சந்தியில் ஒன்றும் இருந்தது நல்ல ஞாபகம். 🙂

நாலைந்து பெடியள் உள்ள வீட்டை நம்பி… வாடகை சைக்கிள் கடை நடத்தியிருக்கலாம்.

சினிமாவுக்கு, கள்ளு அடிக்க, சுழட்டலுக்குப் போக… எப்படியும் சைக்கிள் தேவை தானே… 🤣 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

கந்தர்மட சந்தியில் இரண்டும், ஆனைப்பந்தி சந்தியில் ஒன்றும் இருந்தது நல்ல ஞாபகம். 🙂

நன்றி அண்ணா. நான் நினைத்தேன் முன்னர் இருந்திருக்க கூடும் என. எங்கள் காலத்தில் இருந்த நியாபகம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கந்தர்மட சந்தியில் இரண்டும், ஆனைப்பந்தி சந்தியில் ஒன்றும் இருந்தது நல்ல ஞாபகம். 🙂

நாலைந்து பெடியள் உள்ள வீட்டை நம்பி… வாடகை சைக்கிள் கடை நடத்தியிருக்கலாம்.

நல்ல தகவல்

Rent a சைக்கிள்  மிகச் சிறந்த வாடகை விலையில் 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

flute_1.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2021 at 12:46, தமிழ் சிறி said:

கந்தர்மட சந்தியில் இரண்டும், ஆனைப்பந்தி சந்தியில் ஒன்றும் இருந்தது நல்ல ஞாபகம். 🙂

நாலைந்து பெடியள் உள்ள வீட்டை நம்பி… வாடகை சைக்கிள் கடை நடத்தியிருக்கலாம்.

சினிமாவுக்கு, கள்ளு அடிக்க, சுழட்டலுக்குப் போக… எப்படியும் சைக்கிள் தேவை தானே… 🤣😂

சிவலிங்கபுளியடியில் சண்முகராசா சைக்கிள் கடை ....

நாச்சிமார் கோவிலடியில் ஒன்று இருந்தது......

சுபாஷ் விடுதியுடன் கூடிய சந்தியில் ஆரியகுளத்துக்கு அருகில் .....

ஆஸ்பத்திரி வீதியில் அடைக்கலம் மாதா கோயிலின் பின்னால் ஒன்று .....

பிறவுன் வீதியும் அரசடி வீதியும் சந்திக்கும் சந்தியில் ஒன்று. அவர் பெயர் மறந்து விட்டது....ஈழப்பிரியன் அவரின் வாடிக்கையாளர்.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கூட்டி எல்லாம் வரமுன்னம் ஊருக்கு வந்த   Chaly எத்தனை பேருக்கு நியாபகம் இருக்கிறது ?

large.44BBB91C-4EDF-49CA-AE09-4BD9F8B4B582.jpeg.4563b104e70c18f5eb02f2f81e5bccd5.jpeg

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

ஸ்கூட்டி எல்லாம் வரமுன்னம் ஊருக்கு வந்த   Chaly எத்தனை பேருக்கு நியாபகம் இருக்கிறது ?

large.44BBB91C-4EDF-49CA-AE09-4BD9F8B4B582.jpeg.4563b104e70c18f5eb02f2f81e5bccd5.jpeg

முன்னர் பெண்கள் பயன்படுத்துவது இதுவும் super cup 50 bike ம் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

முன்னர் பெண்கள் பயன்படுத்துவது இதுவும் super cup 50 bike ம் தானே!

ஓம். வந்த புதிசில் (88?) ஆம்பிளையள் ஓடினது. CD200, 125, C90,70,50, Chaly என்பது வரிசையாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய காலங்களில் நாங்கள் விளையாடிய விளையாட்டுகள்  சில,  (கொழும்பு அல்லாத) சிங்களப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு கூடுதலாக தெரிந்திருக்கும் இவை பற்றி என நினைக்கிறன் 😃
👉 ஜில் போல (மார்பிள் ) - இதில் கூட பல ரகங்கள், விளையாடும் முறைகள் உண்டு 
யாருக்காவது இந்த இந்த வார்த்தைகளை ஞாபகம் இருக்கிறதா ? 
டொம்பா 
ச்சிக்கா
(G)கப்பா

👉 தாராடி  - 
ஒரு டின்னில் கூழாங் கற்களை போட்டு, அந்த டின்னின் திறந்த முனையை நசுக்கி அடைத்து விடுவார்கள்.
அதை கிலுக்கினால் சத்தம் வரும் இதன் பெயர் தாராடி 
""ஹைட் அன்ட் சீக்" விளையாடுவதை போல ஒரு விளையாட்டு. தாராடியை தூற எறிய வேண்டும், தேடுவதற்கு பொறுப்பானவர் ஓடி சென்று  அதை பொறுக்கிக்கொண்டு வருவதற்கிடையில் ஏனையவர்கள் எங்கேயாவது ஒளிந்து மறைந்துகொள்வார்கள்.
தாரடியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட்டு எல்லோரையும் தேடி கண்டு பிடிக்க வேணும். ஒருவரின் மறைவிடத்தை கண்டு பிடித்தால் ஓடிச்சென்று அந்த தாரடியை எடுத்து கிளிக்கி அவரின் பெயரை சொல்லவேண்டும். 
உதாரணம் "கோஷன்வ தேக்கா தாராடி", ரதிவ தேக்கா தாராடி " இவர்கள் அவுட். அப்படி  தேடும் பொழுது மறைந்து இருந்த யாராவது ஓடி வந்து தாராடியை உதைத்தாலோ, அல்லது கையிலே எடுத்து கிலுக்கினாலோ  திரும்பவும் அவரே தேடுதலை முதலில் இருந்து ஆரம்பிக்க வேணும்.  

👉 ரப்பர் எட்ட  - ரப்பர் கொட்டைகளை மாபிள் போல வைத்து விளையாடும் விளையாட்டு.

👉 டொனிக் மூடி - ஆரஞ் பார்லி , பாண்டா போன்ற குளிர்பான போத்தல் மூடிகளை (சோடா மூடி) தேடி சேகரித்து அவற்றை வைத்து மாபிள் போல விளையாடுவோம். அதிலும் மூடியின் உள்புறத்தில் தார் வைத்தது அழுத்தி பாரமாக ஆக்கி அதனையே "ஸ்ட்ரைக்கராக" பாவிப்போம்.

👉 டின் அடுக்கி விளையாடுவது - 
👉 எல்லே - (வெளிநாட்டில் பேஸ் பால் போல )
👉 பிள்ளையார் - விளக்கம் சொல்லவே கஷ்டமான விளையாட்டு. 
இரண்டு அணிகளாக பிரிந்து,  ஒரு அணி ஓட , மற்ற அணி பிடிக்க (பந்தால் அடித்து ) அவுட் ஆக்க வேண்டும்.  பிடிக்கும் அணியில் உள்ள அனைவரும் (டென்னிஸ் பந்தை மார்பு பகுதியில் மறைத்து வைத்துக்கொண்டு யாரிடம் பந்து இருப்பது என்று தெரியாமல் காட்டிக்கொள்ளாமல் எதிர் அணியின் ஆட்களை பந்தால் அடித்து அவுட் ஆக்க வேண்டும். 
எதற்கு பிள்ளையார் என்ற பெயர் வந்ததோ தெரியவில்லை.   


இதெல்லாம் நான் அனுர, கபில, பொடி மல்லி, மஹிந்த, ஆஷா, ருவைசா, விக்கி, மனோகர், சுமேத, ரம்யா  இவர்களோடு விளையாடிய விளையாட்டு. 😃🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் அந்தக்காலத்தில விளையாடாத விளையாட்டுக்களே இல்லை😂

எவடம் எவடம் புளியடி புளியடி

1,2,3 பம்பலப்பிட்டி

கோழியும் பிராந்தும்

பசுவும் புலியும்

உருளைக்கிழங்குப் பிரட்டல்

ஒரு குடம் தண்ணி வாத்து ஒரு பூ பூத்தது 

இதுகளோட டப்பாங் கொட்டை 😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, வாலி said:

பசுவும் புலியும்

நாயும் புலியுமா?
பசுவும் புலியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

சிவலிங்கபுளியடியில் சண்முகராசா சைக்கிள் கடை ....

நாச்சிமார் கோவிலடியில் ஒன்று இருந்தது......

சுபாஷ் விடுதியுடன் கூடிய சந்தியில் ஆரியகுளத்துக்கு அருகில் .....

ஆஸ்பத்திரி வீதியில் அடைக்கலம் மாதா கோயிலின் பின்னால் ஒன்று .....

பிறவுன் வீதியும் அரசடி வீதியும் சந்திக்கும் சந்தியில் ஒன்று. அவர் பெயர் மறந்து விட்டது....ஈழப்பிரியன் அவரின் வாடிக்கையாளர்.......!   😂

 

On 13/9/2021 at 12:57, goshan_che said:

நன்றி அண்ணா. நான் நினைத்தேன் முன்னர் இருந்திருக்க கூடும் என. எங்கள் காலத்தில் இருந்த நியாபகம் இல்லை.

அநேகமாக ஊரில்.... குறிப்பிட்ட சந்திகளில்,  ஒரு வாடகை சைக்கிள் கடை இருந்துள்ளது.
கோசான் காலத்தில்... இவைகள் இல்லாமல் போனது, ஆச்சரியமாக உள்ளது.
நான் நினைக்கின்றேன்... போர்ச் சூழல், மக்களின் இடப் பெயர்வு போன்றவையால்,
இவை இல்லாமல் போயிருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அநேகமாக ஊரில்.... குறிப்பிட்ட சந்திகளில்,  ஒரு வாடகை சைக்கிள் கடை இருந்துள்ளது.
கோசான் காலத்தில்... இவைகள் இல்லாமல் போனது, ஆச்சரியமாக உள்ளது.
நான் நினைக்கின்றேன்... போர்ச் சூழல், மக்களின் இடப் பெயர்வு போன்றவையால்,
இவை இல்லாமல் போயிருக்கலாம்.

ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது ஒரு சைக்கிள் திருத்தும் கடையாவது இருந்தது.  காத்தடிப்பது, ஒட்டு போடுவது, சேர்விஸ் எல்லாம் செய்வார்கள். ஆனால் வாடகை சைக்கிள் கடை இருந்த நியாபகம் இல்லை. 

எண்பது, தொண்ணூறுகளில் யாழில் இருந்த @வாலி @நிழலி உங்களுக்கு நியாபகம் இருக்கா?

12 hours ago, Sasi_varnam said:

இதெல்லாம் நான் அனுர, கபில, பொடி மல்லி, மஹிந்த, ஆஷா, ருவைசா, விக்கி, மனோகர், சுமேத, ரம்யா  இவர்களோடு விளையாடிய விளையாட்டு. 😃🙏

ஏனப்பா கோட்ட, சாமலை சேர்க்கேல்லையே? பசில் சின்ன பொடியனா இருந்திருப்பார் என்ன🤣.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.