Jump to content

வடக்கு கடலினுள் பேரூந்துகள் - கடல் வளத்தை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

No description available.

மேலும்,  குறித்த வளங்களின் அதிகரிப்பானது மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டது எனவும் தெரிவித்துள்ளார்.

செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் வகையில், வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No description available.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில், வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு, பயன்படுத்த முடியாது கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மற்றும் புகையிரதப் பெட்டிகளை இறக்கி விடுவதன் மூலம் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு  ஏதுவான கடல் நீரடிப் பாறைக்கு இணையான  சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

No description available.

அந்தவகையில்,  கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில் இன்று(11.06.2021) ஆரம்பிக்கப்பட்ட, குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 30 பேரூந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No description available.

இந்நிலையில், முதலாவது தொகுதி பேரூந்துகளை காங்கேசன் துறை, துறைமுகத்தில் இருந்து ஏற்றிச் சென்ற சயுரு எனும்  கப்பல், அடையாளப்படுத்தப்பட்ட கடல் பகுதியில் குறித்த பேரூந்துகளை கடலின் அடியில் இறக்கியுள்ளது.

No description available.

இதேபோன்று எஞ்சிய பேரூந்துகளும் எதிர்வரும் நாட்களில் கடலில் இறக்கி விடப்படும் என்று கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுளில் மேற்கொள்ளப்படுவது போன்று, செயற்கை முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு  ஏதுவான சூழலை உருவாக்குவதன் மூலம் எமது கடல் வளத்தினை  கணிசமானளவு அதிகரித்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ள, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெ.சுதாகரன் தலைமையிலான அணியினருக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன் கடற்படையினயருக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கடலினுள் பேரூந்துகள் - கடல் வளத்தை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு பைத்தியம் முற்றிவிட்டது. இப்படி பிற உலோக மற்றும் இரசாயனக் கலப்பு இரும்பை மற்றும் இரசாயனக் குப்பைகளை கடலுக்குள் கொட்டுவது எப்படி கடல்வாழ் உயிரினங்களுக்கு உதவும்...??! இவை எப்படி அழிக்கப்படும் இயற்கையான உயிரின முருகைக்கற்பாறைகளுக்கு ஈடாகும். 

இந்த இரும்புகளும்.. அவற்றி உள்ள இதர இரசாயனங்களும் கடல் நீரில் தாக்கமடைவதால்.. இன்னும் இன்னும் கடல் உயிரினங்களுக்கு பாதகாமன சூழல் உருவாகுமே தவிர.. அவற்றிற்கு சாதகமான சூழல் உருவாக உடனடிச் சாத்தியம் குறைவே ஆகும்.

 

Although the ocean covers two-thirds of the surface of the Earth, it is surprisingly vulnerable to human influences such as our noise, overfishing, pollution, and waste dumping from human activities.

https://www.marinebio.org/conservation/ocean-dumping/

---------------

இந்த தாடியன் தனது அறியாமையால் சொந்த ஆதாயத்திற்காக சொந்த இனத்தை காட்டிக்கொடுத்து அழிந்து வாழ்ந்தது மட்டுமல்ல.. இன்று அந்த இனத்தின் இயற்கை வளங்களையும்... அதன் எதிர்கால சந்ததியையும் அழித்து அதில் தனது ஆதாயத்தை அடைய நினைக்கிறார். இந்த முட்டாள்களை இவர்களின் அறியாமைகளையும் தமிழினம் தான் இன்னும் காத்து வருகின்றமை எமது இனத்தில் இருக்கும் இன்னொரு பக்க.. சாபக் கேடு.  என்ன செய்வது...????!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு நாடுகளில் இப்படி செய்கின்றார்களா? சூழலியல் நிபுணர்கள்தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். நம்ம  ஐங்கரநேசன் ஐயா இதுபற்றி என்ன கூறுகின்றார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வேறு நாடுகளில் இப்படி செய்கின்றார்களா? சூழலியல் நிபுணர்கள்தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். நம்ம  ஐங்கரநேசன் ஐயா இதுபற்றி என்ன கூறுகின்றார்?

The gray list includes water highly contaminated with arsenic, copper, lead, zinc, organosilicon compounds, any type of cyanide, flouride, pesticides, pesticide by-products, acids and bases, beryllium, chromium, nickel and nickel compounds, vanadium, scrap metal, containers, bulky wastes, lower level radioactive material and any material that will affect the ecosystem due to the amount in which it is dumped.

இன்னும் ஐங்கரநேசனும்.. சுமந்திரனும்.. தான் சொல்லனுமா.

சுயமாக தேடுங்கள்.. உலகப் பரப்பெங்கும்.. இதுவே இன்றைய பேசு பொருள்.

ஆனால்.. டக்கிளஸ் தேவானந்த போன்ற முட்டாள்கள்.. மக்களையும்.. வளங்களையும் தவறாகப் பயன்படுத்தி.. தமது ஆதாயத்தை பார்க்க விளைகிறார்களே தவிர.. சொறீலங்கா சிங்கள ஆட்சியாளர்களின் வழியை பின்பற்றி.. வேறு உருப்படியாக எதையும் சிந்திப்பவர்களாக இல்லை.

ஆனால்... மக்கள் இது குறித்து சிந்திக்கவும் அறிவூட்டவும் படனும். இளைய தலைமுறை இணைய உலாவிகள்.. இதில் அதிகம் பங்களிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது? புது சிந்தனையாய் கிடக்கு!!!!! 😲

No description available.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா இது? புது சிந்தனையாய் கிடக்கு!!!!! 😲

No description available.

உலகில்..  குப்பைகளை கையாள்வது இன்று பல பில்லியன்கள் புரளும் வியாபாரம். 

சொறீலங்கா... உட்பட 3ம்  உலக நாடுகளின் அதிகார வர்க்கங்கள்.. இதன் மூலம் அதிக கொமிசன் இலாபம் பெறுகிறார்கள்.  சொறீலங்கா உலகெங்கும் இருந்து..மருத்துவக் கழவுகள்.. பிளாஸ்ரிக்.. மற்றும் இரும்புக் கழிவுகளை வா வா என்று அழைத்து.. அழகான இலங்கைத் தீவை நாசமாக்கி வருவதுடன்.. மகிந்த கும்பல்.. இதை ஒரு மாபியா வர்த்தகமாகவே செய்து வருகிறது. அந்த கும்பலின் அங்குத்துவனான டக்கிளஸ் இதில் இறங்கி இருப்பது புதிய விடயமல்ல.

ஏலவே வடக்கில்..பிரித்தானிய மருத்துவக் கழிவுகளை புதைத்த விவகாரத்தில்.. சிக்கலில் மாட்டியவர்கள்.. இவர்களே. இப்போ கடலுக்குள் இரும்பக் கொட்டி.. இந்த வியாபாரத்தை உள்ளூரிலும் அறிமுகப்படுத்துகிறாகள்.

இந்த இரும்பை.. உலோகங்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தலாம். ஆனால்.. அதற்கான முதலீடுகளுக்கு வாய்ப்பளிக்காமல்.. இப்படி குறுகிய வழியில்.. சூழலை இயற்கை வளங்களை அழித்து இலாபமீட்ட முனைகிறார்கள்.

இங்கு பேசப்படுவது.. இவ்வளவு தொன் கழிவகற்றலுக்கு இவ்வளவு மில்லியன் என்பது தான். இதில் எவ்வளவு மில்லியனை தாடியன் பொக்கட்டுக்குள் போட்டானோ..??! முன்னர் சொந்த இனத்தை  காட்டிக்கொடுத்து கொலை செய்து பிழைத்தான்... இப்படி அதற்கு வழி குறைஞ்சிட்டு என்றவுடன்.. இப்படி செய்கிறான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nedukkalapoovan said:

The gray list includes water highly contaminated with arsenic, copper, lead, zinc, organosilicon compounds, any type of cyanide, flouride, pesticides, pesticide by-products, acids and bases, beryllium, chromium, nickel and nickel compounds, vanadium, scrap metal, containers, bulky wastes, lower level radioactive material and any material that will affect the ecosystem due to the amount in which it is dumped.

இன்னும் ஐங்கரநேசனும்.. சுமந்திரனும்.. தான் சொல்லனுமா.

சுயமாக தேடுங்கள்.. உலகப் பரப்பெங்கும்.. இதுவே இன்றைய பேசு பொருள்.

ஆனால்.. டக்கிளஸ் தேவானந்த போன்ற முட்டாள்கள்.. மக்களையும்.. வளங்களையும் தவறாகப் பயன்படுத்தி.. தமது ஆதாயத்தை பார்க்க விளைகிறார்களே தவிர.. சொறீலங்கா சிங்கள ஆட்சியாளர்களின் வழியை பின்பற்றி.. வேறு உருப்படியாக எதையும் சிந்திப்பவர்களாக இல்லை.

ஆனால்... மக்கள் இது குறித்து சிந்திக்கவும் அறிவூட்டவும் படனும். இளைய தலைமுறை இணைய உலாவிகள்.. இதில் அதிகம் பங்களிக்கலாம். 

 

மேக்கூரி உணவு சங்கிலியில் செறிவு அடைந்து அதன் உச்சத்தில் உள்ள மீன்கள் உண்ணும் மனிதனை பாதிக்கின்றது ஒரு பிரச்சனை.

இங்கு சீ.றீ.பீ பேருந்து, மற்றும் புகையிரத பெட்டிகளில் உள்ள உலோகங்கள், இரசாயனங்கள் மீன்கள், கடல் வாழ் உயிரிகள் மூலம் உணவுச்சங்கிலியினுள் உள் வாங்கப்பட்டு கடைசியில் மனிதனை சென்றடையுமா என்பதுதான் எனது இப்போதைய வினா.

இந்த பிரச்சனை பற்றி ஏற்கனவே சிந்தித்து அதன் பாதிப்புக்கள் புறக்கணிக்கப்பட கூடியது என்று நினைத்து முடிவு எடுத்தார்களோ என்னமோ... 

கடலுக்குள் இறக்கப்படும் பேருந்துகளின், புகையிரத வண்டிகள் அமைவிடங்களை ஜீ.பி.எஸ் டாக்ஸ் மூலம் இணைக்கப்பட/ குறிக்கப்படவேண்டியது அவசியம் என கருதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No description available.

எனக்கென்னமோ இந்த கனதியில்லா தகர டப்பாக்கள் கடல் சீற்றம் கொந்தளிப்பின்போது ,

ஒண்டு உருண்டு கரைக்கு வரும் இல்லாட்டில் மேல எழும்பி போற வாற  கப்பல்களில் மோதி சேதப்படுத்தும் என்றுதான் தோணுது.

No description available.

இதெல்லாம் இறுதி போரின் முன்பு வன்னி பக்கம் ஓடி திரிஞ்ச பேரூந்துக்களாயிருக்குமோ என்று ஒரு சந்தேகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

மேக்கூரி உணவு சங்கிலியில் செறிவு அடைந்து அதன் உச்சத்தில் உள்ள மீன்கள் உண்ணும் மனிதனை பாதிக்கின்றது ஒரு பிரச்சனை.

இங்கு சீ.றீ.பீ பேருந்து, மற்றும் புகையிரத பெட்டிகளில் உள்ள உலோகங்கள், இரசாயனங்கள் மீன்கள், கடல் வாழ் உயிரிகள் மூலம் உணவுச்சங்கிலியினுள் உள் வாங்கப்பட்டு கடைசியில் மனிதனை சென்றடையுமா என்பதுதான் எனது இப்போதைய வினா.

இந்த பிரச்சனை பற்றி ஏற்கனவே சிந்தித்து அதன் பாதிப்புக்கள் புறக்கணிக்கப்பட கூடியது என்று நினைத்து முடிவு எடுத்தார்களோ என்னமோ... 

கடலுக்குள் இறக்கப்படும் பேருந்துகளின், புகையிரத வண்டிகள் அமைவிடங்களை ஜீ.பி.எஸ் டாக்ஸ் மூலம் இணைக்கப்பட/ குறிக்கப்படவேண்டியது அவசியம் என கருதுகின்றேன்.

மேலுள்ள இணைப்பை படியுங்கள். நீங்கள் இன்னும் சாதாரண தர அறிவுக்கு அப்பால் சிந்திக்க விளைகிறீர்கள் இல்லை. டக்கிளஸ் சாதாரண தரம் தாண்டினாரோ தெரியாது. அவரின் சிந்தனை மக்களையும் மண்ணையும் அழிப்பதோடு அல்ல.. வளங்களையும் சந்ததிகளையும் அழிப்பது வரை தொடர்வது ஆபத்து. 

இந்த வாகனங்கள் கலப்புலோகங்களால் ஆனவை. பாரமான உலோகங்கள் பாதகமான விளைவுகளை உண்டு பண்ணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யு கே யில்  தெருவோரத்தில் புதிதாக ஒரு சிறு தூணை நாட்ட வேண்டுமென்றாற் கூட அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு அறிவித்து அவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லையென்று முடிவு செய்த பிறகே உள்ளூர் கவுன்சில் அதைச் செய்யும் வழக்கம் உள்ளது.   வடபகுதியில் கடலெங்கும் இவ்வாறு இரும்புக் கழிவுகளை எவ்வித அறிவித்தலுமின்றி அந்தப் பிரதேச மக்களினதும் கரையோர மீன்பிடித் தொழிலாளர்களினதும் கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்காமல்  கொட்டுவது, அதைக் கேட்கப் பார்க்க யாருமில்லையென்பதனாலேயே.  தென்பகுதியிலும் இவ்வாறு செய்யப் போகிறார்களோ தெரியாது.  அப்போது இந்த நடவடிக்கைகளுக் கெதிராகப் பௌத்த பிக்குகளும் பொது மக்களும் கிளர்ந்தெழுவார்கள்.   தமிழன் நாதியற்றுப் போன இனமாதலால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.   இது ஐநா வின் சுற்றுச்சூழல் பிரிவுக்குக் கொண்டு போகப்பட வேண்டிய விடயமாகும்.  தக்க ஆய்வு முடிவுகளின்றி இவ்வாறு புவியின் சுற்றாடலை மனம்போன போக்கில் நாசம் செய்ய முற்படுவது ஒரு சர்வதேச விவகாரமாகும்.  மக்கள் இதற்காகத் திரண்டு தமது எதிர்ப்பை ஐநா வரை கொண்டு செல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா அரசு : இந்திய மீனவர்கள் எமது கடலில் வருவதை தடுப்பதற்கு நீர் என்ன நடவடிக்கை எடுத்தீர் இதுவரை?
அமைச்சர் : வடபகுதியில் உள்ள பஸ் வண்டி,ரயில் வண்டிகளை தடுப்பு சுவராக போட்டு உள்ளேன் ,கடற்படையின் உதவியுடன்....அது இந்திய மீனவர்களின் வலைகளை கிழித்து விடும்.
கோத்தாஅரசு : மகிழ்ச்சி ,இரட்டிப்பு மகிழ்ச்சி....தென்பகுதியிலும் அதிக வண்டிகள் இருக்கு அதை இங்கு போட்டால் பிக்குமார் குழப்பியடிப்பாங்கள்....அ
தையும் அங்கு போட முடியுமா?
அமைச்சர் : ஆகட்டும் பிரபு
கோத்தா அரசு :அதனால் உங்கள் மக்களுக்கு எதாவது தீங்கு வராதா?
அமைச்சர் : பிரபு நீங்களே இப்படி பிரித்து பேசலாமா? அவங்கள் கிடந்தாங்கள் .அங்கு மீன் அதிகமாக பிடிபட்டால் எங்கள் நாட்டுமக்களுக்கு தானே நல்லம் (சிங்கள ஜனதாவட்ட)ஜெய வேவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, karu said:

யு கே யில்  தெருவோரத்தில் புதிதாக ஒரு சிறு தூணை நாட்ட வேண்டுமென்றாற் கூட அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு அறிவித்து அவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லையென்று முடிவு செய்த பிறகே உள்ளூர் கவுன்சில் அதைச் செய்யும் வழக்கம் உள்ளது.   வடபகுதியில் கடலெங்கும் இவ்வாறு இரும்புக் கழிவுகளை எவ்வித அறிவித்தலுமின்றி அந்தப் பிரதேச மக்களினதும் கரையோர மீன்பிடித் தொழிலாளர்களினதும் கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்காமல்  கொட்டுவது, அதைக் கேட்கப் பார்க்க யாருமில்லையென்பதனாலேயே.  தென்பகுதியிலும் இவ்வாறு செய்யப் போகிறார்களோ தெரியாது.  அப்போது இந்த நடவடிக்கைகளுக் கெதிராகப் பௌத்த பிக்குகளும் பொது மக்களும் கிளர்ந்தெழுவார்கள்.   தமிழன் நாதியற்றுப் போன இனமாதலால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.   இது ஐநா வின் சுற்றுச்சூழல் பிரிவுக்குக் கொண்டு போகப்பட வேண்டிய விடயமாகும்.  தக்க ஆய்வு முடிவுகளின்றி இவ்வாறு புவியின் சுற்றாடலை மனம்போன போக்கில் நாசம் செய்ய முற்படுவது ஒரு சர்வதேச விவகாரமாகும்.  மக்கள் இதற்காகத் திரண்டு தமது எதிர்ப்பை ஐநா வரை கொண்டு செல்ல வேண்டும்.

ஜேர்மனியில்  மரத்தை வெட்டுவதற்கும் அரச அனுமதி வேண்டும். ஒரு சில இடங்களில் வீட்டுக்கு வர்ணம் பூசுவதென்றாலும் அரசின் அனுமதி வேண்டும்.

ஆசியாவில்......

ஒரு நாடு மாட்டு மூத்திரத்தை குடிக்கும் நாடு.
இன்னொரு நாடு   பழைய பேரூந்துகளை கடலில் இறக்கி மீன் வளர்க்கும் நாடு.

நல்ல சோடிப்பொருத்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு பெல் அடிச்ச ஜீ குடுத்த ஜடியா போல… 

ஆனால் ஏதோ ஒரு இயற்கை டொக்குமென்ரியில கப்பல் மூழ்கி இருக்கும் இடத்தில் நிறைய மீன்கள் உண்ணும் அல்காக்கள் வளந்துருப்பதையும் அங்கு மீன் இறால் போன்றவை அதிகமாக இருப்பதையும் காட்டி இருந்தார்கள் என்று ஞாபகம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரோலியா  நியுசிலாந்தில் சீமெட்டினால் செய்யபட்ட பெரிய ஓட்டைகள் கொண்ட உருவங்களை மீன் வளர்ச்சிக்கு என்று கடலில் இறக்கபட்டதை டொக்குமென்ரியில் பார்த்த நினைவு உள்ளது.

Link to comment
Share on other sites

இப்படிப்பட்ட செயற்கையான வாழ்விடங்கள் அமைப்பது உலகெங்கும் நடைபெறுவது வழமை தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவுஸ்ரோலியா  நியுசிலாந்தில் சீமெட்டினால் செய்யபட்ட பெரிய ஓட்டைகள் கொண்ட உருவங்களை மீன் வளர்ச்சிக்கு என்று கடலில் இறக்கபட்டதை டொக்குமென்ரியில் பார்த்த நினைவு உள்ளது.

சனம் இருக்க வீடு இல்லை சிறிலங்காவில் பிறகு நாங்கள் எப்படி மீன் குஞ்சுக்கு சீமென்டில் வீடு கட்டுறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைக்கு எதிராக... சிந்திப்பவன், மனிதனே அல்ல.
எமது கடலில்... பழைய, இரும்புகளை புதைக்க வேண்டிய தேவை என்ன?
இதனை...  டக்ளஸ்,   காலி, கொழும்பு  கடல்களில்  புதைப்பாரா.........?

இதற்கு முன்... மீன்கள், இனப் பெருக்கம் செய்ய வில்லையா?
பழைய... இரும்பு, குப்பைகளை.. போட்டால் தான்...
மீன்... குடும்பம், நடத்தும் என்று... 
தாடிக்காரனுக்கு,  யார்... சொல்லிக் கொடுத்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, putthan said:

சனம் இருக்க வீடு இல்லை சிறிலங்காவில் பிறகு நாங்கள் எப்படி மீன் குஞ்சுக்கு சீமென்டில் வீடு கட்டுறது

அதனால் தான் அங்கே பழைய பஸ்சை கடலில் போடுகிறார்கள். சனம் இருக்க வசதிகள் கொண்ட வீடுகள் நிறைந்த யுஎஸ்சிலேயே பழைய ரெயினை கடலில் போடுகிறார்கள்.

1 hour ago, zuma said:

இப்படிப்பட்ட செயற்கையான வாழ்விடங்கள் அமைப்பது உலகெங்கும் நடைபெறுவது வழமை தான்.


சரியான நேரத்தில் உண்மையை விளங்கபடுத்தினீர்கள். அல்லது ஐநாவே வந்து இறங்கி இருக்கும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதனால் தான் அங்கே பழைய பஸ்சை கடலில் போடுகிறார்கள். சனம் இருக்க வசதிகள் கொண்ட வீடுகள் நிறைந்த யுஎஸ்சிலேயே பழைய ரெயினை கடலில் போடுகிறார்கள்.


 

 

 

அமேரிக்கா காரன்  சொன்னால் சரியாத்தான் இருக்கும் .....
இந்த சீனா சிந்தனையாளர் ஏன் அமேரிக்காவை பின்பற்றுகிறார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

அமேரிக்கா காரன்  சொன்னால் சரியாத்தான் இருக்கும் .....
இந்த சீனா சிந்தனையாளர் ஏன் அமேரிக்காவை பின்பற்றுகிறார்...

இது அமெரிக்கன் சிந்தனை சீன சிந்தனை இல்லை
இப்படிப்பட்ட செயற்கையான வாழ்விடங்கள் அமைப்பது உலகெங்கும் நடைபெறுவது வழமை தான்.- Zuma
நீங்கள் உலக நடை முறைக்கு எதிரான  தனி சிந்தனை  கொண்டவராக இருப்பது கஷ்டமானதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை எல்லாவற்றிலும் உலக நடைமுறைகளை பின்பற்றியிருந்தால் இந்த விமர்சனம் எழுந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

193398245_183248753729224_56407136360103

52.jpg

☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

இப்படிப்பட்ட செயற்கையான வாழ்விடங்கள் அமைப்பது உலகெங்கும் நடைபெறுவது வழமை தான்.

 

இந்த நாடுகள் எல்லாமே கடலுக்குள் கழிவுகளை கொட்டிட்டு தான்.. கடல் மாசாகுது என்றும் அழுகினம். பிறகு மாநாடு போட்டு அதை பற்றி கதைக்கினம். பின் மாசுக் கட்டுப்பாடுன்னு பல பில்லியன் டாலர்களை செலவு செய்யினம்.

ஆனால்.. எமது பூமி.. இயற்கையாகவே அமைந்த படிமப்பாறைகளால் ஆனது. அங்கு இயற்கையாகவே சுண்ணாம்புப்பாறைகளை உருவாக்கத்தக்க உயிரினங்கள் உருவாகி... மீன்கள் உட்பட எல்லா கடல் வாழ் உயிரினங்களுக்கும் தகுந்த வாழ்விடங்களை உருவாக்குகின்றன.. இயற்கைக்கு பாதகமின்றி. அங்கு ஒரு சூழலியல் சமனிலை பேணப்படுகிறது.

ஆனால்.. இப்படி.. உருக்குலைந்த வாகனங்களை கொட்டுவது.. பல கடல் சார் சூழலியல் பிரச்சனைகளுக்கு முன்னோடி.. ஆகும். ஏலவே.. கடலுக்குள் மனிதக் கழிவுகளை கொட்டி.. அது வேற பிரச்சனை. ஏலவே.. கடலுக்குள் பிளாஸ்ரிக்கை கொட்டி அது பிரச்சனை. ஏலவே கடலுக்குள் பிளாஸ்ரிக் குறுங்குண்டுகளை கொட்டி அது பிரச்சனை.. ஏலவே கடலுக்குள் வலைகளை அறுத்து அதனால் பிரச்சனை. இதுமட்டுமன்றி கடல் மாசாதல் இன்னும் பல வழிமுறைகளில் மனிதனால் தொடரப்படுகிறது.  எத்தனையோ கடல்வாழ் உயிரினங்கள் அருகிவரும் உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பது.

எனவே தகுந்த ஆய்வுகள் இன்றி மேற்கொள்ளப்படும்.. இப்படியான முட்டாள் தனச் செயற்பாடுகளால்.. எமது  தாயக கடல் வாழ்...  உயிரினங்களுக்கு ஆபத்தான காரியங்களை ஆற்றுவதாலே அதிகமாக இருக்கும். அது முழுமையாக உணரப்படும் போது.. பல உயிரினங்களும் இயற்கை சூழலும்.. குறிப்பாக.. Niche.. நுண்சூழல்..  மீளமுடையாத பாதிப்பை எட்டி இருக்கும். .

கடலுக்குள் திட்டமிட்ட வகையில்.. இப்படியான உலோகக் கழிவுகளை கொட்டுவது... உலகின் கண்ணுக்கு இன்னும் சரியாக காட்டப்படாததால்.. இவற்றின் பாதக விளைவுகள் பற்றி பலர் அறியாமல் இருக்கின்றனர். 

 

This study seeks to examine how sunken automotives are affecting the surrounding environment; “automotives” in this context are defined as any vehicle that moves on a motor (including planes, trains, boats, and cars). Pollution from automotives is a nearly untouched section of marine science with little more than speculation as to how they are affecting benthic environments. Anti-fouling paint, PBDE’s, oil/coal shipments, and other metal contaminations can cause sickness for marine organisms or severe phytoplankton blooms which may result in anoxic conditions lower in the water column. Sediment samples were sent to the University of Washington’s SEFS analysis lab for a total heavy metal contamination count, while other samples were sent through a Coulter Counter to cross examine the grainsize in the environment. Most of the metals studied show no correlation with variables that would normally produce a correlation, such as grainsize. There was a positive correlation between the size of the automotive and the percentage of metal present. Most metals did not show a correlation between grainsize and percentage of pollution, the exceptions being copper and magnesium. There was also little difference between fresh and saltwater environments. The pollution from sunken automotives gives off a decaying value for approximately 80 years, before fading into a negligible amount; given the harmful effects of these pollutants on the environment, the recommended solution would be to pull sunken automotives up shortly after they sink to avoid as much pollution as possible, especially larger sea-going vessels. Automotive pollution requires further study to draw confident correlations and conclusions.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

With many wrecks in the water, their positive impact on the environment has become noticeable. The wrecks off the Hawaiian coast have created opportunities for the islands to grow ecologically, financially, historically and culturally. These wrecks can help the environment because, over time, they can become a viable habitat for many marine plants and animals and improve water quality. They have also developed into popular recreation and eco-tourism destinations.

However, the wrecks do have adverse environmental impacts as well. The impact of vehicle crashes can physically hurt coral reefs and prevent further growth. Researchers believe that the deterioration of wrecks will release harmful metals and chemicals that could potentially hurt future marine communities. Marine archeologists are concerned by the environmental effects of the oil that resides in wrecks. There are an estimated 2.5-20 million tons of oil in wrecks worldwide, which can smother marine life, release harmful toxins, and is expensive and difficult to clean.

Researchers continue to monitor the positive and negative affects that wrecks have on the natural environment in Hawaii and beyond.

https://namepa.net/2019/02/19/how-do-wrecks-impact-the-marine-environment/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.