Jump to content

பாக்டீரியா தொற்றிய கொசுவைப் பரப்பி டெங்கு வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வு: 77 சதவீதம் பலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • ஜேம்ஸ் கலேகர்
  • பிபிசி சுகாதாரம் & அறிவியல் செய்தியாளர்

பாக்டீரியா தொற்றிய கொசுக்களைப் பரப்பி டெங்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு திட்டத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் 77 சதவீதம் டெங்கு பரவல் கட்டுப்படுவது தெரியவந்துள்ளது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

வோல்பாசியா என்ற இந்த 'அற்புத' பாக்டீரியா தொற்றிய கொசுக்களிடம் டெங்கு கிருமியை பரப்பும் தன்மை கணிசமாகக் குறைகிறது.

இந்த பரிசோதனை இந்தோனீசியாவில் இருக்கும் யோக்யகர்தா நகரத்தில் மேற்கொள்ளப்பட்டது. டெங்கு வைரஸை இது முற்றாக ஒழிக்கும் என்ற நம்பிக்கையோடு இப்பரிசோதனை விரிவுபடுத்தப்படுகிறது.

உலகம் முழுவதையும் பாடாய்ப் படுத்தும் டெங்கு வைரசுக்கு இது ஒரு தீர்வாக இருக்கலாம் என உலக கொசு திட்ட அணியினர் கூறுகிறார்கள்.

50 ஆண்டுகளுக்கு முன் வெகு சிலர் மட்டும் டெங்கு வைரஸ் குறித்து கேள்விப்பட்டிருந்தனர், ஆனால் இப்போது இது இடைவிடாமல் மெதுவாகப் பரவும் பெருந்தொற்றாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

1970ம் ஆண்டு உலகில் மொத்தம் ஒன்பது நாடுகளில் மட்டுமே டெங்கு காய்ச்சல் பரவியது. தற்போது ஆண்டுக்கு 40 கோடி பேர்டெங்கு வைரசால் பாதிக்கப்படுகிறார்கள்.

டெங்கு தொற்றியவர்களுக்கு எலும்பிலும், தசைகளிலும் கடுமையான வலி உண்டாகும். டெங்கு அதிக அளவில் பரவத் தொடங்கினால் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் குவியத் தொடங்கிவிடும்.

எதிரிக்கு எதிரி

கொசுக்கள்

பட மூலாதாரம்,WORLD MOSQUITO PROGRAMME

இந்த பரிசோதனையில் வோல்பாசியா (Wolbachia) பாக்டீரியா தொற்றிய கொசுக்கள் பயன்படுத்தப்பட்டன. இவை இயற்கையாகவே அற்புதத் தன்மை கொண்டவை என ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் கேட்டி ஆண்டர்ஸ் கூறுகிறார்.

வோல்பாசியா பாக்டீரியா கொசுக்களுக்கு தீங்கு விளைவிக்காது, ஆனால் கொசுக்களின் உடலில் எந்த பகுதியில் டெங்கு வைரஸ் குடியேறுமோ, அந்த இடங்களில் எல்லாம் இந்த வோல்பாசியா பாக்டீரியா சென்று அமர்ந்து கொள்ளும்.

பாக்டீரியா தான் இருக்கும் இடத்துக்காக வைரசோடு போட்டியிடுகிறது, அந்த பாக்டீரியாவை வெளியே தள்ளி, அந்த இடத்தை பிடிக்க டெங்கு வைரசுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே கொசு கடிக்கும்போது டெங்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

இந்த பரிசோதனையில் வோல்பாசியா தொற்றிய 50 லட்சம் கொசு முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை கொசு முட்டைகள் நகரில் தண்ணீர் இருக்கும் வாளிகளில் வைக்கப்பட்டன. கொசு கூட்டத்தில் பாக்டீரியா தொற்றிய கொசுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆயின.

யோக்யகர்த்தா நகரம் 24 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் பாதியில் மட்டுமே கொசுக்கள் விடுவிக்கப்பட்டன.

கொசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

'நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' என்கிற அறிவியல் சஞ்சிகையில், இந்த பரிசோதனையின் முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. கொசுக்கள் விடுவிக்கப்பட்ட பிறகு டெங்கு தொற்று 77 சதவீதம் குறைவாகப் பதிவானது. அதே போல டெங்கு தொற்றியவர்கள் மத்தியிலும் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு நோய் முற்றியவர்கள் எண்ணிக்கையும் 86 சதவீதம் குறைந்திருப்பதாக அப்பரிசோதனை முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இது மிகவும் உற்சாகமளிக்கிறது. உண்மையில் நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்த பரிசோதனை முடிவுகள் சிறப்பாக வந்திருக்கின்றன" என்று ஆண்டர்ஸ் பிபிசியிடம் கூறினார்.

டெங்கு வைரசைக் கட்டுப்படுத்தும் இந்தமுறை மிக சிறப்பாக இருக்கிறது, கொசுக்கள் நகரம் நெடுகிலும் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் இத்திட்டம், டெங்குவை ஒழிக்கும் நோக்கத்துடன் அப்பிராந்தியத்தின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

"இந்த முடிவுகள் அற்புதமானவை" என உலக கொசு திட்ட அமைப்பின், தாக்க மதிப்பீட்டு பிரிவின் இயக்குநராக இருக்கும் டாக்டர் ஆண்டர்ஸ் கூறினார்.

"டெங்கு வைரஸ் ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சனையாக இருக்கும் பெரிய நகரங்களில் இம்முறை பயன்படுத்தப்படும் போது, இது இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறோம்."

வோல்பாசியா, தான் குடியிருக்கும் கொசுக்களின் இனபெருக்கத்தன்மையை மாற்றியமைக்கும். இதன் மூலம் கொசுக்களின் அடுத்த தலைமுறைக்கும் இந்த பாக்டீரியா கொண்டுசெல்லப்படும்.

அதாவது ஒரு முறை வோல்பாசியா பாக்டீரியா கொசுக்களின் உடலில் அமர்ந்துவிட்டால், அது நீண்ட காலத்துக்கு ஒட்டிக்கொண்டு, டெங்கு தொற்றை ஏற்படவிடாமல் பாதுகாப்பு வழங்கும்.

கொசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது மற்ற கட்டுப்பாட்டு முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கொசுக்களை அடக்குவதற்கு பூச்சிக்கொல்லிகள் அல்லது அதிக எண்ணிக்கையிலான மலட்டு ஆண் கொசுக்களை விடுவித்தல் போன்ற வழிமுறைகளை மேற்கொள்வதென்றால் தொடர்ந்து அது போன்ற பணிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

"இந்த பரிசோதனையின் முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என யோக்யகர்தா நகரத்தின் நோய் தடுப்புத் தலைவர் மருத்துவர் யூடிரியா அமெலியா கூறினார்

"இந்த வழிமுறையை யோக்யகர்த்தாவின் அனைத்து பகுதிகளுக்கும், இந்தோனீசியாவின் அனைத்து நகரங்களுக்கும் விரிவாக்க முடியும் என நம்புகிறோம்." என்றார் அவர்.

டெங்கு வைரசைப் பரப்பும் ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) வகை கொசுவுக்கு பொதுவாக வோல்பாசியா நோய்த் தொற்று ஏற்படாது. எனவே பல ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தப் பரிசோதனை வெற்றி அடைந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.

வோல்பாசியா டெங்கு காய்ச்சலை முழுமையாக நசுக்க போதுமானதாக இருக்கும் என நோய் மாதிரி ஆய்வுகள் கணித்துள்ளன.

ஜிகா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் சிக்கன்குனியா போன்ற பிற நோய்களும் கொசு கடியால்தான் பரவுகின்றன. அந்த நோய்களைக் கட்டுப்படுத்துவதில் கூட இந்த முறை ஒரு தீர்வாக அமைய வாய்ப்பிருக்கிறது என பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் உலக சுகாதாரம் மற்றும் மருத்துவ பேராசிரியர் டேவிட் ஹமர் கூறுகிறார்.

பாக்டீரியா தொற்றிய கொசுவைப் பரப்பி டெங்கு வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வு: 77 சதவீதம் பலன் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.