Jump to content

கனடாவுக்கு தப்பிக்க முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேர் மதுரையில் கைது: கியூ பிராஞ்ச் போலீஸார் மடக்கிப் பிடித்தனர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை வழியாக கனடா நாட்டுக்கு தப்பிக்க, முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேர் மதுரையில் கைது செய்யப்பட்டனர்.

 

இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட சிலர் கனடா நாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். ஆனால் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எளிதில் செல்ல முடியாத நிலையில் கடும் கெடுபிடி இருப்பதால் வேறு வழியின்றி அந்த இளைஞர்கள் மதுரை வழியாக கனடாவுக்கு தப்பிக்க முடிவெடுத்தாகக் கூறப்படுகிறது.

இதற்காக அவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலரை அணுகியபோது, மதுரைக்கு வந்தால் இங்கிருந்து கள்ளத் தோணி மூலம் கனடாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த திருமகன், சுகந்தன், ஸ்ரீகாந்தன், கபிலன் தினேஷ் உள்ளிட்ட 23 பேரும் கள்ளதோணி மூலம் கடந்த 40 நாட்களுக்கு முன்பு, தூத்துக்குடி வழியாக மதுரை வந்துள்ளனர்.

அவர்கள் திருமங்கலம் கப்பலூர் பகுதியிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். தொழிலாளர்கள் போர்வையில் இருந்து கொண்டு கனடாவுக்கு தப்பிக்க, அவர்கள் முயற்சிப்பது குறித்து மதுரை மாவட்ட கியூ பிராஞ்ச போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து கப்பலூர் பகுதியை கியூ பிராஞ்ச் ஆய்வாளர் சண்முகம் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். நேற்று திருமகன் உள்ளிட்ட 23 பேரையும் கியூ பிராஞ்ச் போலீ ஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களது நாட்டில் இருந்து கனடாவுக்கு நேரடியாக செல்வதற்கு கெடுபிடி இருப்பதால் மதுரையில் இருந்து தூத்துக்குடி வழியாக தப்பிக்கலாம் என்ற முயற்சித்தாகவும், இங்கு வந்தபின் அதற்கான முயற்சியில் தாமதம் ஏற்பட்டதால் கப்பலூர் பகுதியில் ஒரு கம் பெனியில் வேலை பார்த்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து 23 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து, மதுரை 3 வது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்ததாக கியூ பிராஞ்ச் போலீஸார் தெரிவித்தனர்.

கனடாவுக்கு தப்பிக்க முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேர் மதுரையில் கைது: கியூ பிராஞ்ச் போலீஸார் மடக்கிப் பிடித்தனர் | 23 arrested in Madurai Airport - hindutamil.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பிழம்பு said:

இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட சிலர் கனடா நாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். ஆனால் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எளிதில் செல்ல முடியாத நிலையில் கடும் கெடுபிடி இருப்பதால் வேறு வழியின்றி அந்த இளைஞர்கள் மதுரை வழியாக கனடாவுக்கு தப்பிக்க முடிவெடுத்தாகக் கூறப்படுகிறது.

இதற்காக அவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலரை அணுகியபோது, மதுரைக்கு வந்தால் இங்கிருந்து கள்ளத் தோணி மூலம் கனடாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த திருமகன், சுகந்தன், ஸ்ரீகாந்தன், கபிலன் தினேஷ் உள்ளிட்ட 23 பேரும் கள்ளதோணி மூலம் கடந்த 40 நாட்களுக்கு முன்பு, தூத்துக்குடி வழியாக மதுரை வந்துள்ளனர்.

அவர்கள் திருமங்கலம் கப்பலூர் பகுதியிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். தொழிலாளர்கள் போர்வையில் இருந்து கொண்டு கனடாவுக்கு தப்பிக்க, அவர்கள் முயற்சிப்பது குறித்து மதுரை மாவட்ட கியூ பிராஞ்ச போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து கப்பலூர் பகுதியை கியூ பிராஞ்ச் ஆய்வாளர் சண்முகம் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். நேற்று திருமகன் உள்ளிட்ட 23 பேரையும் கியூ பிராஞ்ச் போலீ ஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களது நாட்டில் இருந்து கனடாவுக்கு நேரடியாக செல்வதற்கு கெடுபிடி இருப்பதால் மதுரையில் இருந்து தூத்துக்குடி வழியாக தப்பிக்கலாம் என்ற முயற்சித்தாகவும், இங்கு வந்தபின் அதற்கான முயற்சியில் தாமதம் ஏற்பட்டதால் கப்பலூர் பகுதியில் ஒரு கம் பெனியில் வேலை பார்த்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து 23 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து, மதுரை 3 வது மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்ததாக கியூ பிராஞ்ச் போலீஸார் தெரிவித்தனர்.

கனஹிந்து தமிழ் (hindutamil.in) செய்தியில்... இதனை எழுதியவர், 
பூணுல் போட்ட,  சங்கியாக இருப்பார் என்று அப்பட் டமாக தெரிகின்றது. டாவுக்கு தப்பிக்க முயன்ற இலங்கையைச் சேர்ந்த 23 பேர் மதுரையில் கைது: கியூ பிராஞ்ச் போலீஸார் மடக்கிப் பிடித்தனர் | 23 arrested in Madurai Airport - hindutamil.in

ஹிந்து தமிழ் (hindutamil.in) செய்தியில்... இதனை எழுதியவர், 
பூணுல் போட்ட,  சங்கியாக இருப்பார் என்று அப்பட் டமாக தெரிகின்றது. 

Link to comment
Share on other sites

11 minutes ago, தமிழ் சிறி said:

ஹிந்து தமிழ் (hindutamil.in) செய்தியில்... இதனை எழுதியவர், 
பூணுல் போட்ட,  சங்கியாக இருப்பார் என்று அப்பட் டமாக தெரிகின்றது. 

அத்துடன், ஏதோ கொள்ளை அடிச்சுப் போட்டு 'தப்பித்து'  ஓடுகின்றனர் என்பது போன்ற ஒரு பில்டப்

 

மதுரை வழியாக கனடா வுக்கு கப்பல் மூலம் செல்லலாம் என்று சொன்னதை நம்பும் அளவுக்கு எம் இளையவர்கள் இல்லை என நினைக்கின்றேன். , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

அத்துடன், ஏதோ கொள்ளை அடிச்சுப் போட்டு 'தப்பித்து'  ஓடுகின்றனர் என்பது போன்ற ஒரு பில்டப்

மதுரை வழியாக கனடா வுக்கு கப்பல் மூலம் செல்லலாம் என்று சொன்னதை நம்பும் அளவுக்கு எம் இளையவர்கள் இல்லை என நினைக்கின்றேன். , 

ஓம்... நிழலி. 
அந்தச்  செய்தியில், உள்ள வசனங்கள் அவ்வளவும், 
காழ்ப்புணர்ச்சியுடன் எழுதியுள்ளது அப்பட்டமாகவே... தெரிகின்றது.

உதாரணத்துக்கு.... அகதி முகாம், கள்ளத் தோணி, சுற்றி வளைத்து,  மடக்கிப் பிடித்தனர், போன்ற வசனங்களை பக்குவப் பட்ட  செய்தியாளர்கள், தேவையான இடத்தில் மட்டுமே   பாவிப்பார்கள்.

இது... பூணுல் கோஷ்டியின், வக்கிர செய்தி. 

மதுரை, மட்டும்.... கப்பல் வருமா?  அந்தத் துறை முகத்தின் பெயர் என்ன? என்பதனை..
ராஜ வன்னியன் சார்..  கூறினால், நாங்களும் அறிந்து கொள்ளலாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை மாவட்டத்தில் கடல் சார்ந்த பகுதிகள் கிடையாதே?

ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களின் கடல் வழியாக செல்லலாம். ஆனால் கனடாவுக்கு கப்பல் வழியாகவா..? நம்ப முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான்.... கவனித்தேன்.
கீழுள்ள...   ஈழத்தமிழ் அகதிகளின்,  உண்ணாவிரத செய்தியை கேள்விப் பட்டு,
காதால், புகை போய்... மேலுள்ள செய்தி, சோடிக்கப் பட்டுள்ளது.

பாவம்... எத்தனை, அப்பாவி  தமிழ் இளைஞர்கள்...
தங்கள் வாழ்க்கையை, வீணாக்கப் போகின்றார்களோ.  😢

 

 

1 minute ago, ராசவன்னியன் said:

மதுரை மாவட்டத்தில் கடல் சார்ந்த பகுதிகள் கிடையாதே?

ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களின் கடல் வழியாக செல்லலாம். ஆனால் கனடாவுக்கு கப்பல் வழியாகவா..? நம்ப முடியவில்லை.

மதுரையில்... முன்பெல்லாம், கடல் இல்லை என்று தெரியும்,
சிலவேளை.... புதிய அரசுகள் வந்து,  
"எய்ம்ஸ்" மருத்துவமனை கட்டிய மாதிரி...
கடலையும்,  கட்டி இருக்கலாம்... என, 
ஈழத் தமிழ் இளைஞர்கள், நினைத்து விட்டார்கள் போலுள்ளது.   😜 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 "கியூ பிராஞ்ச்"  போலீஸார்... என்றால் என்ன?
அவர்களுக்கும்.... சாதாரண,  ஏட்டு ஐயாவிற்கும்  என்ன வித்தியாசம்.

 

ப்ளீஸ்... ரெல்,  மீ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் நம்பவா போறீங்க

கருநாணிதியின் பிறந்த நாளை மையமாக வைத்து இரு பக்கமும் கொள்ளி கட்டைகள் சப்ளை செய்யப்பட்டு ஊரை கொழுத்தி விட்டுள்ளார்கள்😡.

தம்பி v உபி

தெலுங்கன் v தமிழன் என்று மாறி.

இப்போ 

ஈழத்தமிழன் v இந்திய தமிழன் என விரிவு படுத்தபடுகிறது.

பேமிலிமான், எழுவர் விடுதலை நாடகம், ஒரே நாளில் டிவிட்டரில் ஒருக்கிணைக்கப்பட்ட விதமாக தலைவர் மீது வைக்கப்பட்ட அவதூறு, இவற்றை போல இந்த பெரும் திட்டத்தின் இன்னொரு அங்கம்தான் இந்த செய்தி.

இந்த முரண் இனி இன்னும் கூர்ப்படையும்.

சில நேரம் தனியே பேரறிவாளனையும், நளினியையும் மட்டும் விடுதலை செய்து இந்த பிளவை மேலும் வலுப்படுத்த முயலவும் கூடும்.

14 minutes ago, தமிழ் சிறி said:

 "கியூ பிராஞ்ச்"  போலீஸார்... என்றால் என்ன?
அவர்களுக்கும்.... சாதாரண,  ஏட்டு ஐயாவிற்கும்  என்ன வித்தியாசம்.

 

ப்ளீஸ்... ரெல்,  மீ...

தமிழக போலீஸ் புலனாய்வுத்துறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

 

மதுரையில்... முன்பெல்லாம், கடல் இல்லை என்று தெரியும்,
சிலவேளை.... புதிய அரசுகள் வந்து,  
"எய்ம்ஸ்" மருத்துவமனை கட்டிய மாதிரி...
கடலையும்,  கட்டி இருக்கலாம்... என, 
ஈழத் தமிழ் இளைஞர்கள், நினைத்து விட்டார்கள் போலுள்ளது.   😜 😂

அடுத்த எலெக்சனுக்கு தம்பி உதயநிதி ஸ்டாலின் மதுரை கடல்ல இருந்து கொண்டுவந்திருக்கேன்னு வாளியில தண்ணி மோண்டுகிட்டு சுத்தப்போரானே..🤭

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.