Jump to content

இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்


Recommended Posts

23 minutes ago, goshan_che said:

இல்லை. இந்த திரியில் கருத்து எழுதுவதில் நாட்டம் இல்லை. 

சொன்ன சொல் மாறப்படாது. 🤭

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply
1 hour ago, குமாரசாமி said:

சாந்தி அக்கா! உங்கள் கேள்வியைப்போல்  தான் எனக்கும் இருக்கின்றது. 
அடிப்படலைக்கை இருக்கிற எங்கடை சனத்தைப்பற்றி ஒண்டுமே கதைக்காமல்/கேட்காமல் இருக்கிற நீங்கள் இந்தியாவிலை இருக்கிற சீமானை எதிர்த்து ஜலதரங்கம் வாசிக்கிறியள். அதோடை ஜேர்மன் அரசியல் பலமும் இருக்கிற ஆளெல்லோ எங்கடை சாந்தியக்கா 🤣

யேர்மனி தேசத்தின் இறையாண்மைக்கு உட்பட்ட அரசியல் மறக்காமல் குறிப்பிடவும். 🤣

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? அல்லது அதையெல்லாம் கண்ணால் காண்பதை காதால் கேட்பதை வாயால் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறீங்களோ? 

யேர்மனி எமக்கு அடைக்கலம் தந்த நாடு. எங்கள் கருத்துக்களையும் கேட்கும் அல்லவா? 🤔

Link to comment
Share on other sites

திருட்டு திராவிடம் இருக்கும் தமிழ்நாட்டில் வெக்கம், மானம், சூடு, சுரணை இருப்பவர்கள் சிறையில் இருப்பார்கள்...

மேற்குறிப்பிட்டவற்றில் கடுகளவேனும் இல்லாதவர்கள் கடைந்தெடுத்த தத்தியாக இருப்பினும் அரியணையில் அமர்ந்து துக்ளக் ஆட்சி நடத்துவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த புதிய வழக்குகள்.. எதற்காக தெரியுமா?

Velmurugan PPublished:June 12 2021, 10:36 [IST]

திருச்சி: சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும், மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த கார் ஷோரூம் உரிமையாளர் திமுக பிரமுகர் வினோத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு சர்ச்சைக்குரிய பதிவினை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து நேற்று முன்தினம் காலை வினோத்தின் கார் நிறுவனத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில இளைஞர் பாசறை செயலாளரும், சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் துரைமுருகன், மாவட்ட செயலாளர் மற்றும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட வினோத், நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ் குமார் உள்பட 10 பேர் எதற்காக விமர்சனம் செய்தாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

மன்னிப்பு கேட்டார்

வீடியோ வெளியீடு

இதில் அவரை மிரட்டியதோடு, பிரபாகரன் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனிமேல் பிரபாகரன் பற்றி பேச மாட்டேன் என்று பேச வைத்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அதன்படி வினோத் வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். பின்னர் அதனை சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார்.

சாட்டை துரைமுருகன் கைது

வினோத் கொடுத்த புகார்

இதன்பின்னர் தன்னை மிரட்டியதாக வினோத், திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதந்த புகாரின் பேரில், ஐபிசி பிரிவு 143, 147, 293 (பி),447 மற்றும் 506 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சாட்டை துரைமுருகன், வினோத், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்,.

ஐந்து பிரிவுகள்

என்னென்ன வழக்கு

இதனிடையே சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும்,மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. IPC 153A,504,505(1)(b)IT-67,2008 ஆகிய வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

திமுக வழக்கறிஞர் புகார்

திமுக வழக்கறிஞர் புகார்

திமுக வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் ராஜசேகர் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், வழக்கறிஞர் ராஜசேகர் கூறுகையில், இன்று(நேற்று) காலை 10 மணிக்கு திருப்பனந்தாளில் உள்ள எனது அலுவலகம் சென்றேன். அப்போது இணையதளத்தில் அவதூறாக ஒரு வீடியோ பரவுவதை கண்டேன். அதை பார்த்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த வீடியோவானது சாட்டை யூடியூப் தளத்தில் இருந்தது.

கருணாநிதி

குஷ்பு

அந்த வீடியோவில் பேசும் துரைமுருகன் பாண்டியன் என்னும் நபர், தன்னுடைய பதிவில் மைனர் குழந்தைகளின் புகைப்படத்தை வைத்தும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் பிஜேபியைச் சேர்ந்த குஷ்பு ஆகியோரின் புகைப்படத்தை வைத்தும் ஒரு வீடியோவினை உருவாக்கி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 14.29 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது.

வீடியோக்களை அழிக்கணும்

புகாரினால் பாய்ந்த வழக்கு

அந்த வீடியோ பதிவின் ஒரு இடத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவின் குஷ்பு ஆகியோரின் புகைப்படத்தை அவதூறாக வைத்துள்ளார். இது கோடிக்கணக்கான திமுகவினர் மனதை புண்படுத்துகிறது. அந்த வீடியோ பதிவினை சீடியாக புகாருடன் தாக்கல் செய்துள்ளேன். அந்த வீடியோவை இணையத்தில் இருந்து அழிக்க வேண்டும். மைனர் பெண் வீடியோவையும் அழிக்க வேண்டும். அவதூறு செய்த சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர்.

https://tamil.oneindia.com/news/trichirappalli/new-cases-against-saattai-duraimurugan-for-defaming-karunanidhi-and-khushboo-423738.html

Link to comment
Share on other sites

48 minutes ago, shanthy said:

யேர்மனி தேசத்தின் இறையாண்மைக்கு உட்பட்ட அரசியல் மறக்காமல் குறிப்பிடவும். 🤣

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? அல்லது அதையெல்லாம் கண்ணால் காண்பதை காதால் கேட்பதை வாயால் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறீங்களோ? 

யேர்மனி எமக்கு அடைக்கலம் தந்த நாடு. எங்கள் கருத்துக்களையும் கேட்கும் அல்லவா? 🤔

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? 

சிலருக்கு யேர்மனி ஆட்கள் போத்தல்கள் போன பிறகு ஞானம் பிறக்கும்.

எங்களுக்கு ஊரில் எங்கள் உறவுகள் இப்போதும் ஊரில் வசிக்கின்றனர். அவர்கள் கருத்து முக்கியம். யாரவது ஊரில் பிரச்சனை இல்லை என்றால் ரொம்ப சந்தோஷம் .ஆனால் எங்கள் உறவுகளுக்கு அப்படி இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

திருச்சி: சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும், மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்னது பாஜக குஷ்புவிற்காக தி.மு.க வழக்கு போடுதா, நம்புங்கப்பா நாதக பி.ஜே பி B ரீமே தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சியில் 'சாட்டை' துரைமுருகன் கைது! யார் இவர்... பின்னணி என்ன?

சீமானின் தம்பிகள்

சீமானின் தம்பிகள்

'திருடர் கழகத்தின் 3-வது புலிகேசி' என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலினை கேலியாகச் சித்திரித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தி.மு.க நிர்வாகிகளைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார். அதன் காரணமாக அவரை மிரட்டிய குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரை திருச்சி போலீஸார் கைதுசெய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது தம்பிகளைக் கைதுசெய்திருப்பதாக' சீமான் அறிக்கை வெளியிட்டார்.

சீமான் - பிரபாகரன்
 
சீமான் - பிரபாகரன்

கடந்த சில தினங்களாக, சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதன் உரிமையாளர் வினோத் என்பவர், தமிழ் ஈழத்துக்காகப் போராடிய பிரபாகரனையும், அவருடைய கொள்கையையும், சீமானையும் கடுமையாக விமர்சனம் செய்ததாகச் சொல்கிறார்கள். இதைப் பார்த்து அதற்கு பதில் அளித்த சாட்டை துரைமுருகன், பிரபாகரனைத் தவறாகப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது. மேலும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலரும் அந்தப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,

 

இந்தநிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் முற்றியநிலையில், சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் உள்ளிட்ட நான்கு பேர் சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்துக்குச் சென்று பிரபாகரனை விமர்சித்த வினோத்தை நேரில் சந்தித்துப் பேசியதோடு,

சமர் கார் ஸ்பா நிறுவனம்
 
சமர் கார் ஸ்பா நிறுவனம்

காவல்துறையினர் முன்னிலையில் வினோத்தை மறுப்பு தெரிவித்து, மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட வேண்டும் என்று எச்சரித்து வீடியோவும் வெளியிடச் செய்துள்ளனர். அவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்துபோய் வினோத் கே.கே.நகர் காவல்துறையினருக்கு புகார் கொடுத்திருக்கிறார்.

நாம் தமிழர் நிர்வாகிகளைக் கைது செய்த போலீஸார்
 
நாம் தமிழர் நிர்வாகிகளைக் கைது செய்த போலீஸார்

புகாரின் பேரில் சாட்டை துரைமுருகன் மற்றும் அவருடன் சென்று மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீதும் காவல்துறை வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்தது. அவர்கள்மீது பிரிவு 147 – கலகம் செய்தல், பிரிவு 148 – கலகம் செய்யும்போது பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

 

யார் இந்த 'சாட்டை' துரைமுருகன்?

நாம் தமிழர் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தவர். பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். `சாட்டை’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே, சமூக வலைதளங்களில் முக்கியத் தலைவர்களை ஆபாசமாகச் சித்திரித்து பல்வேறு வீடியோக்களை வெளியிடும் சம்பவம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதில் குறிப்பாக, சாட்டை துரைமுருகனும் ஒருவர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் மிக மோசமாகச் சித்திரித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

சாட்டை துரைமுருகன்
 
சாட்டை துரைமுருகன்

இந்தநிலையில், இவரது செயல்பாட்டைக் கண்டித்து தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார். 'திருடர் கழகத்தின் 3-வது புலிகேசி' என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலினைக் கேலியாகச் சித்திரித்து ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தி.மு.க நிர்வாகிகளைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

போலீஸார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை
 
போலீஸார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை

இந்தநிலையில்தான் பிரபாகரன், சீமானை விமர்சனம் செய்ததாக வினோத் என்பவரை மிரட்டியதாக இவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிரட்டியதற்காக நடந்த வழக்கு பதிவா... இல்லை தி.மு.க-வினரைத் தொடர்ந்து விமர்சனம் செய்வதால், தி.மு.க தலைமை கொடுத்த அழுத்தமா என்று கொந்தளிக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்

 

 

https://www.vikatan.com/news/politics/youtuber-saatai-durai-murugan-arrested-by-police-in-trichy-for-threatering-car-spa-centre-owner

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, அக்னியஷ்த்ரா said:

என்னது பாஜக குஷ்புவிற்காக தி.மு.க வழக்கு போடுதா, நம்புங்கப்பா நாதக பி.ஜே பி B ரீமே தான்.

இதை விட ரஜனிகாந்த் மகளை பற்றி ஒரு பொதுக்கூட்டத்தில் சாட்டை மிக மோசமாக பேசிய வீடியோ இன்னும் சுத்திட்டுதான் இருக்கு.

ஆனா இதெல்லாத்தையும் விட்டுட்டு -இவங்கள் கடுப்பாக காரணம் - அந்த வீடியோல குஸ்பு-கருணா ரெண்டு பேரயும் ஒரு போட்டோ போட்டு, ஒண்ணா போட்டு தாக்கி இருப்பார்.

இப்ப நடுநிலையாக நடவடிக்கை எடுக்கிறதா காட்ட குஸ்புவையும் இழுத்து விடுறாங்க.

இப்ப பிஜேபி வழக்கு வேண்டாம் என்றும் சொல்லேலா, வேணும் எண்டும் சொல்லேலா🤣

மிக தெளிவா தெரியுது அந்த டிவீட் திமுக சொல்லி போடவைத்த டிவீட்தான்.

சாட்டை போய் சிக்கிகொண்டார்.

இதில் திமுகவுக்கு விழுந்த மாங்காய்கள்

1. நாம் தமிழர்/தமிழ் தேசியம் வன்முறை, சகிப்புதன்மை அற்ற வழி என்ற பிம்பம்.

2. தலைவரை பற்றிய அந்த அவதூறு இந்திய லெலெவலில் டுவிட்டரில் டிரெண்டாகியது.

3. சாட்டை போல கதைக்க இனி ஆட்கள் கொஞ்சம் யோசிப்பார்கள்.

4. 7 பேர் விடுதலையில் நாடகம் ஆடி விட்டு அதை இவர்கள் தலையில் தூக்கி போடலாம்(பொய்யாக).

5. ஈழத்தமிழன் v இந்திய தமிழன் என்ற வேற்றுமையை மேலும் இதை கொண்டு ஒரு படி முன்நகர்த்தலாம்.

திருட்டு திமுக என்பது சரியாகத்தான் இருக்கு. 

Link to comment
Share on other sites

1 hour ago, appan said:

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ?  

பலமுறை எதிர்த்து எழுதி பேசியதால் அவையள் கனபேருக்கு என்னை கண்டால் வேப்பிலை கசப்பு. இனவெறி பிடித்தவள் எனும் பட்டமும் தந்து கனகாலம். 

11 minutes ago, goshan_che said:

இதை விட ரஜனிகாந்த் மகளை பற்றி ஒரு பொதுக்கூட்டத்தில் சாட்டை மிக மோசமாக பேசிய வீடியோ இன்னும் சுத்திட்டுதான் இருக்கு.

ஆனா இதெல்லாத்தையும் விட்டுட்டு -இவங்கள் கடுப்பாக காரணம் - அந்த வீடியோல குஸ்பு-கருணா ரெண்டு பேரயும் ஒரு போட்டோ போட்டு, ஒண்ணா போட்டு தாக்கி இருப்பார்.

இப்ப நடுநிலையாக நடவடிக்கை எடுக்கிறதா காட்ட குஸ்புவையும் இழுத்து விடுறாங்க.

இப்ப பிஜேபி வழக்கு வேண்டாம் என்றும் சொல்லேலா, வேணும் எண்டும் சொல்லேலா🤣

மிக தெளிவா தெரியுது அந்த டிவீட் திமுக சொல்லி போடவைத்த டிவீட்தான்.

சாட்டை போய் சிக்கிகொண்டார். 

3. சாட்டை போல கதைக்க இனி ஆட்கள் கொஞ்சம் யோசிப்பார்கள். 

நாயக்கரே சாட்டை நல்லவரா கெட்டவரா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

பிரெஞ்சு புரட்சியின் அடிநாதமே கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம்.(freedom of expression) அப்படிப்பட்ட பிரான்சில் தினமுரசு பத்திரிகை தடை செய்யப்பட்டதாகவும் அந்த தடையை மீறி அப்பத்திரிகையை விற்ற ஒரு கடைக்காரருக்கு அதை விற்க வேண்டாம் என்று புரிய வைக்கப்பட்டபோது அவரின் உடம்பில் பல இடங்களில் வீக்கங்கள் ஏற்பட்டதாக இங்கு யாழ் களத்திலேயே சில நாட்களுக்கு முன்பு  பெருமை பேசப்பட்டதே. அதைப் போன்ற ஒரு புரிதல் தான் அங்கும். 😂😂 

 

முதலில் மாட்டுக்குள்  கழுதையை கொண்டு வந்து விடுவதை நிறுத்துங்கள்

(அங்கே பகிடிக்கு  பேசப்பட்டதை  கள  உறவுகள் அறிவர்)

இந்த  திரி சம்பந்தமாக கருத்து எழுதுவதற்கு முன்னர் (கருத்து சுதந்திரத்தை  மதிப்பவர் என்ற முறையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ன  சொல்கிறாரகள் என்றும் அறிய) 

மேலே உள்ள  காணொளியை தயவு  கூர்ந்து கேளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, shanthy said:

நாயக்கரே சாட்டை நல்லவரா கெட்டவரா? 🤔

எனக்கும் இந்த டவுட் இருக்கு. 

1. சாட்டையை கட்சியை விட்டு சீமான் நீக்கினார். பலர் அப்போதே அதை கண்துடைப்பு நீக்கம் என்றார்கள். நீக்கிய நேரம் இவருடன் இனி எந்த நாதகவினரும் அரசியல் செய்ய கூடாது என்றார் சீமான். 

ஆனால் இந்த நடவடிக்கையில் நாதக பொறுபாளரும் போயுள்ளார்கள். ஆகவே சாட்டையை கட்சிக்கு வெளியே இருந்தபடி ஆபாசமாக பேசுமாறு சீமான் பணித்தார் என கொள்ளவும் முடியும்.

2. இன்னொரு வழமாக - இப்போ தலைவரை பழித்ததை எதிர்த்து சிறை போனார் என கட்சி வட்டத்தில் பெரும் ஹீரோ ஆகிவிட்டார் சாட்டை. கட்சியை விட்டு நீக்கியவர்கள் டிவீட்டை லைக் பண்ணினாலே சீமானுக்கு கெட்ட கோபம் வரும். இப்போ சாட்டையின் எழுச்சி, சீமானுக்கே ஆபத்தாய் வரலாம். சீமானும் நிச்சயம் இதை உணர்வார்.

Link to comment
Share on other sites

32 minutes ago, goshan_che said:

எனக்கும் இந்த டவுட் இருக்கு. 

1. சாட்டையை கட்சியை விட்டு சீமான் நீக்கினார். பலர் அப்போதே அதை கண்துடைப்பு நீக்கம் என்றார்கள். நீக்கிய நேரம் இவருடன் இனி எந்த நாதகவினரும் அரசியல் செய்ய கூடாது என்றார் சீமான். 

ஆனால் இந்த நடவடிக்கையில் நாதக பொறுபாளரும் போயுள்ளார்கள். ஆகவே சாட்டையை கட்சிக்கு வெளியே இருந்தபடி ஆபாசமாக பேசுமாறு சீமான் பணித்தார் என கொள்ளவும் முடியும்.

2. இன்னொரு வழமாக - இப்போ தலைவரை பழித்ததை எதிர்த்து சிறை போனார் என கட்சி வட்டத்தில் பெரும் ஹீரோ ஆகிவிட்டார் சாட்டை. கட்சியை விட்டு நீக்கியவர்கள் டிவீட்டை லைக் பண்ணினாலே சீமானுக்கு கெட்ட கோபம் வரும். இப்போ சாட்டையின் எழுச்சி, சீமானுக்கே ஆபத்தாய் வரலாம். சீமானும் நிச்சயம் இதை உணர்வார்.

இதே கருத்துதான் எனதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இத்திரியல் எழுத வேண்டாம் என்றிருந்தேன்

சாந்தியக்கா வந்திட்டா

இனி  இது 10 பக்கம் தாண்டும்

(ஏதோ  நம்மால  முடிந்தது)😜

(நமக்கும் விருது கிடைக்க  சந்தர்ப்பமுண்டல்லவா)🤣

உண்மையில் திமுக ஆட்சியில்  உள்ள கட்சி

நாம் தமிழர் வளர்ந்து  வரும் நிலையில்  உள்ள  கட்சி

அதிலும்  திமுகவை  எதிர்ப்பதே முதல் கடமை  என  அறிவித்து  செயற்படும் கட்சி

எப்பொழுதுமே மக்கள் ஆ;ட்சி அதிகாரத்திலுள்ளவர்களை கேள்வி  கேட்கவும்

அவர்களை அடுத்த தடவை  பதவி இறக்கவுமே விரும்புவர்

அது  தான் வரலாறும்  கூட.

அதே நேரத்தில் சீமான் திமுக  தலைவரை  சந்தித்தது  மட்டுமல்லாது

திமுக ஆட்சியை புகழ்ந்தும் உள்ள  நிலையில்..........

இந்த  நடவடிக்கை திமுகவை இறங்கவும்  நாம்  தமிழரை  ஏறவுமே  செய்யும்

 

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

நான் இத்திரியல் எழுத வேண்டாம் என்றிருந்தேன்

சாந்தியக்கா வந்திட்டா

இனி  இது 10 பக்கம் தாண்டும்

(ஏதோ  நம்மால  முடிந்தது)😜

(நமக்கும் விருது கிடைக்க  சந்தர்ப்பமுண்டல்லவா)🤣

10 பக்கம் தாண்டாது சொல்றேன் நம்புங்கோ விருது.  @goshan_che போட்டியில் அதிகமாக கலந்து கொள்வதில்லை என அறிவித்திருக்கிறார்.😇

அடுத்த விருது உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள்.🙆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, shanthy said:

 

சாந்தியக்கா! அங்கை ஊரிலை தென்னிலங்கை கோரோனா வருத்தக்காரரை யாழ்ப்பாண பக்கம் கொண்டு போயினமாம் ஏனெண்டு தெரியுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப்படுகொலை செய்த ராஜபக்சவுக்கு பொன்னாடை போர்த்திய கூட்டமல்லவா.

சீமானின் நெகிழ்ச்சிக்கு.. கிடைத்த பரிசு. திருந்தாத முன்னேற்றக்கழகத்திடம் திருத்தத்தை எதிர்பார்க்க முடியாது. அது போலித் திராவிடம் பேசிக்கிட்டு.. தமிழர் விரோத குடும்ப ஆட்சியை தமிழகத்தில் முன்னெடுக்க.. காங்கிரஸ் போன்ற இனப்படுகொலை நேரடிப்பங்காளிகளால் ஊட்டி வளர்க்கப்படும் ஒரு கொடிய சக்தி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

திருந்த வாய்ப்பில்லை ராஜா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்த திரிகள் நீண்டு கொண்டு செல்லும் ஒன்றுக்கும் உதவாத திரிகள் ஆனால் நம்ம வடகிழக்கில் கொரனோ  தாண்டவமாட தொடங்கி விட்டது சாதாரண கூலிவேலை செய்பவர்கள் மீனவர்கள் அனைவரும் பயணத்தடை எனும் நெருக்குவாரத்தால் மீண்டும் புலம்பெயரை நோக்கி வருகிறார்கள் இந்த சீமானின் பிரச்சனையை கதைப்பது என்றால் அனுமான் வால்  போல் நீளும் நிக்காது அதற்கிடையில் தாயகத்தில் எத்தனை தற்கொலை நடக்குதோ தெரியாது .

No photo description available.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இங்கு இந்த திரிகள் நீண்டு கொண்டு செல்லும் ஒன்றுக்கும் உதவாத திரிகள் ஆனால் நம்ம வடகிழக்கில் கொரனோ  தாண்டவமாட தொடங்கி விட்டது சாதாரண கூலிவேலை செய்பவர்கள் மீனவர்கள் அனைவரும் பயணத்தடை எனும் நெருக்குவாரத்தால் மீண்டும் புலம்பெயரை நோக்கி வருகிறார்கள் இந்த சீமானின் பிரச்சனையை கதைப்பது என்றால் அனுமான் வால்  போல் நீளும் நிக்காது அதற்கிடையில் தாயகத்தில் எத்தனை தற்கொலை நடக்குதோ தெரியாது .

No photo description available.

பெருமாள் நீங்கள சரியான நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறியள்.ஆனால் உங்கள் நியாயமான நிலைப்பாடு புறக்குடத்தில் ஊற்றிய இன்னுமொரு வாழித் தண்ணீர் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சாட்டை குறூப்பை விமர்சிப்பது நியாயமற்ற செயல்!

முதலில்: பல காலமாகத் தெரிந்த ஒரு தி.மு.க காரர் பொறி வைக்கிறார் என்று சாட்டைக்கு எப்படிப் புரியும்? 

இரண்டாவது: "புரிதல்" ஏற்படுத்திய பிறகு ஒருவர் திருத்திய கருத்தை வெளியிட்டு விட்டு, சாட்டை குழு வெளியேறிய பிறகு மீளப் போய் மாற்றுவார் என்று அவர்களுக்கு எப்படி எதிர்பார்க்க முடியும்? பலவந்தம் செய்தனர் என்று முறையிடுவார் என்று எப்படி எதிர்பார்ப்பது? வழமையாக இது சாட்டை பார்த்திருக்கக் கூடிய சினிமாக்களில் நடப்பதேயில்லையே? 

எனவே, சாட்டை குழு மீது விமர்சனமேதுமில்லை எனக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கு இந்த திரிகள் நீண்டு கொண்டு செல்லும் ஒன்றுக்கும் உதவாத திரிகள் ஆனால் நம்ம வடகிழக்கில் கொரனோ  தாண்டவமாட தொடங்கி விட்டது சாதாரண கூலிவேலை செய்பவர்கள் மீனவர்கள் அனைவரும் பயணத்தடை எனும் நெருக்குவாரத்தால் மீண்டும் புலம்பெயரை நோக்கி வருகிறார்கள் இந்த சீமானின் பிரச்சனையை கதைப்பது என்றால் அனுமான் வால்  போல் நீளும் நிக்காது அதற்கிடையில் தாயகத்தில் எத்தனை தற்கொலை நடக்குதோ தெரியாது .

No photo description available.

 

இவை அமைப்புக்கள்  ஊடாக

ஒரு  குழுமம்  ஊடாக செய்யப்பட வேண்டியவை

செய்யப்படணும்

இது  போன்று தனிப்பட்ட விளம்பரங்கள்

இதுவரை நல்ல வழிகளையோ

சரியான தேவைகளை பூர்த்தி  செய்யவோ

தேவைப்பட்டவர்களை  சென்றடையவோ  இல்லை

யாழ்  களத்திடம்  இந்த  அமைப்பு நேரடியாக  தமது  தேவை சார்ந்த திட்டத்தை சமர்ப்பிக்க

ஏற்பாடு  செய்யுங்கள்

கள  உறவுகளை  ஒன்றிணைத்து செய்யலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சாந்தி அக்கா! உங்கள் கேள்வியைப்போல்  தான் எனக்கும் இருக்கின்றது. 
அடிப்படலைக்கை இருக்கிற எங்கடை சனத்தைப்பற்றி ஒண்டுமே கதைக்காமல்/கேட்காமல் இருக்கிற நீங்கள் இந்தியாவிலை இருக்கிற சீமானை எதிர்த்து ஜலதரங்கம் வாசிக்கிறியள். அதோடை ஜேர்மன் அரசியல் பலமும் இருக்கிற ஆளெல்லோ எங்கடை சாந்தியக்கா 🤣

ஜேர்மனி என்றதும் சிங்கம் குதிச்சு என்றி ஆகுது  ஏன் சிங்கள் சாந்தி அக்கா குறிப்பிட்ட சஞ்சிகைகள் , எழுத்தாளர்கள் புலிகளுக்கும் , தலைவர்களுக்கும் இப்பவரைக்கும் அங்கிருந்து எழுதுகிறார்கள் இதற்கு நீங்கள் ஏதேனும் இடத்தில் எதிப்புக்கு கையை தூக்கி இருக்றீர்களா??

இப்படி பல நாடுகளிலும் இருந்தும் எழுதி இலங்கைக்கே பார்சல் பண்ணுகிறார்கள் அதை முகநூலில் பலர் காவிக்கொண்டே திரிகிறார்கள்  இதெல்லம் படித்து கடக்கிறார்கள் பதில் ஏதும் சொல்லாமல் .

எனக்கென்னமோ கொல்லன் பழுத்த இரும்பை கண்டால் எதையோ  ஆட்டி ஆட்டி அடிப்பது போல த்தான்  இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலருக்கு தாயக மக்கள் மீதிருக்கிற அக்கறையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

ஆனால் திரியை அடிச்சு நூத்தால் கொஞ்சம் damage control செய்யலாம் என்ற நோக்கத்திற்காக தாயக மக்களின் துன்பத்தை பயன்படுத்துறார்களாக இருந்தால் அது மிகவும் அருவருக்கத் தக்கது!

பல திசை திருப்பும் அணுகுமுறைகளில் ஒன்று: "இங்கையென்ன வாதாட்டம், அங்க பாருங்கோ முக்கியமான விசயம் நடக்குது? " 

(மாநில தமிழ்ச்சங்கம் ஊடாக தாயக மக்களுக்கு முதல் பகுதி உதவியை அனுப்பி விட்டு, தற்போது இரண்டாம் கட்டம் அனுப்ப தயார்படுத்திக் கொண்டே இதை எழுதுகிறேன் - எனவே என்னைத் திட்டாதீர்கள்!)  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

இவை அமைப்புக்கள்  ஊடாக

ஒரு  குழுமம்  ஊடாக செய்யப்பட வேண்டியவை

செய்யப்படணும்

இது  போன்று தனிப்பட்ட விளம்பரங்கள்

இதுவரை நல்ல வழிகளையோ

சரியான தேவைகளை பூர்த்தி  செய்யவோ

தேவைப்பட்டவர்களை  சென்றடையவோ  இல்லை

யாழ்  களத்திடம்  இந்த  அமைப்பு நேரடியாக  தமது  தேவை சார்ந்த திட்டத்தை சமர்ப்பிக்க

ஏற்பாடு  செய்யுங்கள்

கள  உறவுகளை  ஒன்றிணைத்து செய்யலாம்

அண்ணெய்  உங்கள் அக்கறை நல்ல விடயம்தான் கடந்த ஐந்து நாட்களா விடிகாலை நித்திரையில் ஊரில் இருந்து போன்கள்  வந்த வண்ணம் உள்ளது பயணத்தடை  என்று அன்றாடம் தொழில் புரிவோர் நிறைய பாதிக்கப்படுகினம். முன்பு உதவிகள் பெற்று இருப்பினும் அங்குள்ள விலைவாசிகளுக்கு சமாளிக்க முடியாது முடிந்தமட்டும் செய்வம் இங்கு குழுவாக செய்ய வெளிக்கிட  ஒவ்வொருவர் ஒவ்வொன்றை சொல்லி கடைசியில் அதுகளை பசியில் சாகடித்து விடுவம்.

பார்வையிழந்தவர்களின் உதவி கேரல் கடிதம் இங்கு இணைத்தது  என் பிழை தயவு செய்து நிர்வாகம் அதை அகற்றி விடவும் பாருங்க எவ்வளவு எகத்தாளமான  கருத்து வருது   இனிமேல் யாழில் எந்த  உதவி கோரல் கடிதங்கள் இனைக்கபோவதில்லை பங்கு பெறப்போவதும் இல்லை நான் கொடுப்பதை யாரும் நக்கலடிக்க போவதில்லை தானே நன்றி வணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

 

 சாந்தி அக்கா! கண்டவன் கிண்டவன் கதைக்கிறதை எல்லாம் சாட்சி வீடியோவாய் போட வெளிக்கிட்டியள் எண்டால் எல்லாம் நாறும்.பதிலுக்கு என்னிடமும் காணொளிகள் பல கைவசம் இருக்கு. வேண்டாம் உந்த விளையாட்டு. யாருக்குமே அழகில்லை. எல்லோரும் யாழ்கள நலன் கருதி/தமிழின நலன் கருதி அடக்கி வாசிப்போம். 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.