Jump to content

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

எனவே தோற்ற தமிழர் தரப்பில் இருந்து சரியான வரலாறு எப்போதும் வராது.

அப்படி சொல்ல முடியாது ஜி. வென்றவர்களை விட நம் தரப்பில் இருந்து சரியான வரலாறு வரவே வாய்ப்பு அதிகம். அவர்களது வெறும் வெற்றிகளிப்பு மட்டுமே.

ஹிட்லர் சொன்னது தோற்றால் விளக்கம் கொடுக்கும் நிலையில் இருப்பதை விட இல்லாமல் போவதே மேல். அதுதான் எம் விடயத்திலும் நடந்தது.

13 minutes ago, putthan said:

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் ....ஆகவே தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்று அர்த்தமில்லை.....

👆🏼👌

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, putthan said:

வெற்றியடைந்தால் சரித்திரம் தோல்வி என்றால் சம்பவம்....என்று நம்ம ஆள் சொன்னதை இது நினைவு படுத்துகின்றது....விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் ....ஆகவே தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்று அர்த்தமில்லை.....
 

தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதால்தான் விடுதலைப் புலிகளும் தோற்றார்கள். பெருமளவு  தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தை புலிகள் இராணுவ ரீதியில் உச்சம்பெற முன்னரே கைவிட்டுவிட்டார்கள். தன்னலமான வாழ்வைத்தான் அதிகம் பேர் விழைந்தார்கள். அப்படி இருந்தும் புலிகள் பாரிய சாதனைகள் புரிந்து இறுதியில் இல்லாமல் ஆகிவிட்டார்கள். 

இப்போது மாவட்ட சபை அல்லது கிராம சபை அதிகாரம் கூட இல்லாமல் இருந்துகொண்டு தமிழர் தோற்கடிக்கப்படவில்லை என்று சொல்வது யூதக் கனவில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்றுதான் பொருள்! I 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

ஆனால் ஒருதலைப்பட்சமாக ஒருதரப்பு மட்டும் வரலாற்றை எழுதினால் அதை எதிர்காலத்தில் ஏற்றுக் கோள்ள மாட்டார்கள். யார் எழுதினாலும் நம்பக தன்மையுடன் அனைத்து தரப்பினரின்  தவறுகளையும் ஏற்றுக் கொண்டு எழுத வேண்டும். இல்லை என்றால் அது வெறும் ஒரு பக்க பிரச்சாரம் ஆகிவிடும். எதிர் காலத்தில் அதன் உண்மைத்தன்மையை ஆராயவார்கள். சும்மா எழுந்த பாட்டுக்கு இவர் தியாகம் செய்தார் இவர் எழுதினால் எல்லாம் சரியாக இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு நம்ப முடியாது. 

மக்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்தவர்கள் பக்க சார்பாக எழுதுவார்கள் என்பதை நம்பினால் அதை கேள்வி ஞானம் மூலம் கதை எழுதுபவர்கள்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

அப்படி சொல்ல முடியாது ஜி. வென்றவர்களை விட நம் தரப்பில் இருந்து சரியான வரலாறு வரவே வாய்ப்பு அதிகம். அவர்களது வெறும் வெற்றிகளிப்பு மட்டுமே.

நான் சொல்ல வந்தது இறுதிக்கட்ட போராட்ட வரலாறு. அப்போதைய இராணுவ, அரசியல் சிந்தனைகள் தெரிந்தவர்கள் இல்லையென்றுதான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதால்தான் விடுதலைப் புலிகளும் தோற்றார்கள். பெருமளவு  தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தை புலிகள் இராணுவ ரீதியில் உச்சம்பெற முன்னரே கைவிட்டுவிட்டார்கள். தன்னலமான வாழ்வைத்தான் அதிகம் பேர் விழைந்தார்கள். அப்படி இருந்தும் புலிகள் பாரிய சாதனைகள் புரிந்து இறுதியில் இல்லாமல் ஆகிவிட்டார்கள். 

இப்போது மாவட்ட சபை அல்லது கிராம சபை அதிகாரம் கூட இல்லாமல் இருந்துகொண்டு தமிழர் தோற்கடிக்கப்படவில்லை என்று சொல்வது யூதக் கனவில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்றுதான் பொருள்! I 

விடுதலை புலிகள்/ஆயுத போராட்டம் தோற்றது என்பதை ஒத்து கொள்ளாமை எவ்வளவு யதார்தத்துக்கு புறம்பானதோ, அதே போலத்தான் தமிழர்கள் தோற்றுப்போனார்கள் என்று சொல்வதும். 

இலங்கை தீவில் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் நெடியது. எல்லாளனுக்கும் முந்தியது.

1979-2009 அது தனிநாடு என்ற மாயமானின் பின்னால் போனது. தோற்றது.

ஆனால் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் வேறு பட்ட வடிவங்களில் தொடரும். 

4 minutes ago, கிருபன் said:

நான் சொல்ல வந்தது இறுதிக்கட்ட போராட்ட வரலாறு. அப்போதைய இராணுவ, அரசியல் சிந்தனைகள் தெரிந்தவர்கள் இல்லையென்றுதான் நினைக்கின்றேன்.

தமிழினி அக்கா எழுதி சென்றுள்ளாவே?

இதே யாழில் பகலவன் அண்ணா எழுதியுள்ளாரே?

 

பத்து பக்கம் வந்திட்டு யுரேக்கா!

Link to comment
Share on other sites

8 minutes ago, விசுகு said:

மக்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்தவர்கள் பக்க சார்பாக எழுதுவார்கள் என்பதை நம்பினால் அதை கேள்வி ஞானம் மூலம் கதை எழுதுபவர்கள்?????

விசுகு வரலாற்றை எழுதும் திறன்மிகு வரலாற்றாசிரியர்கள் சும்மா கேள்வி ஞானம் மூலம் எழுதுவதில்லை. ஒவ்வொரு சம்பவத்தையும் பல கோணங்களில் சரி பார்ப்பார்கள். ஆய்வுக்குட்படுத்துவார்கள். வேறு பல வரலாற்றாளர்களிடம் கருத்து பரிமாற்றம் செய்வார்கள். அனைத்து தரப்பினரின் செய்திகளையும் அவதானிப்பார்கள. அதன் பின்னரே எழுதுவார்கள். அதுவே கூடியளவுக்கு சரியானதாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

தமிழினி அக்கா எழுதி சென்றுள்ளாவே?

இதே யாழில் பகலவன் அண்ணா எழுதியுள்ளாரே?

 

இவை எல்லாம் சிறு துண்டுகளான வரலாறு.  

 

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

நான் கனம் பண்ண தயாராக மட்டும் அல்ல அதற்காக வழியையும் விட்டு பல வருடங்களாச்சு. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை?????

ஆயுதப் போராட்டத்துக்கு எமது மக்கள் கொடுத்த பல வருடங்களுடன் ஒப்பிடும் போது அந்த பல வருடங்கள் மிகக் குறைவானவை, இல்லையா விசுகு? உண்மையில், ஆயுதப் போராட்டத்தோடு ஒப்பிடும்போது இராஜதந்திர சமாதான தீர்வுக்கான பாதை கடினமானதும் மிக நீண்டகாலம் எடுப்பதுமாகவே இருக்கும். ஆகவே எங்கள் வாழ்நாளில் நாம் எந்த மாற்றத்தையும் காணும் சாத்தியம் இல்லை. வழி விட்டு கனம் பண்ணுவது மிகவும் பாராட்டுக்குரியது. நீங்கள் உயர்ந்த மனிதர் என்பதையும் அது காட்டுகிறது. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதால்தான் விடுதலைப் புலிகளும் தோற்றார்கள். பெருமளவு  தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தை புலிகள் இராணுவ ரீதியில் உச்சம்பெற முன்னரே கைவிட்டுவிட்டார்கள். தன்னலமான வாழ்வைத்தான் அதிகம் பேர் விழைந்தார்கள். அப்படி இருந்தும் புலிகள் பாரிய சாதனைகள் புரிந்து இறுதியில் இல்லாமல் ஆகிவிட்டார்கள். 

இப்போது மாவட்ட சபை அல்லது கிராம சபை அதிகாரம் கூட இல்லாமல் இருந்துகொண்டு தமிழர் தோற்கடிக்கப்படவில்லை என்று சொல்வது யூதக் கனவில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்றுதான் பொருள்! I 

விடுதலை புலிகளின் கனவு ஈழம் ..........தமிழரின் நிலைப்பாடு வடக்கு கிழக்கு தாயகம் ....
விடுதலைப்புலிகள் ஈழம் தருவோம் என்றார்கள் ஆதரவு வழங்கினார்கள் தமிழர்கள் அதை செயல்படுத்தி காட்டினார்கள் .....
தமிழர் தாயக கோட்பாடு இன்னும் தொடர்கிறது ,....அதை அழிப்பதில் சிங்களமும் தொடர்ந்து செயற்படுகிறது ....

யூதர்களின் கனவாக இருக்கலாம் நிச்சயம் எமது காலத்தில் நனவாக மாறது என்பதும் எமக்கு தெரியும் ....சிறிலங்காவில் தொடர்ந்து மகிந்தா குடும்பம் ஆட்சியிலிருக்க போவதில்லை என்பதும் தெரியும் அரசியலில் எதுவும் நடக்கும்....

யூதர்களின் கனவு ஆயிரம் வருடங்களுக்கு பின்பு நனவாக முடியுமென்றால் ஏன் எங்கள் கனவு நனவாக முடியாது ....எதுவும் நடக்கலாம்....தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை 
என்ற வாதத்தை வைப்பீர்கள்.....மனித சமுகம் ஒற்றுமையில்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கு.....ஒற்றுமையாக வாழ்ந்தால் அவன் மனிதனல்ல....யூதர்களிடையே மோதல்கள் உண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, putthan said:

விடுதலை புலிகளின் கனவு ஈழம் ..........தமிழரின் நிலைப்பாடு வடக்கு கிழக்கு தாயகம் ....
விடுதலைப்புலிகள் ஈழம் தருவோம் என்றார்கள் ஆதரவு வழங்கினார்கள் தமிழர்கள் அதை செயல்படுத்தி காட்டினார்கள் .....
தமிழர் தாயக கோட்பாடு இன்னும் தொடர்கிறது ,....அதை அழிப்பதில் சிங்களமும் தொடர்ந்து செயற்படுகிறது ....

யூதர்களின் கனவாக இருக்கலாம் நிச்சயம் எமது காலத்தில் நனவாக மாறது என்பதும் எமக்கு தெரியும் ....சிறிலங்காவில் தொடர்ந்து மகிந்தா குடும்பம் ஆட்சியிலிருக்க போவதில்லை என்பதும் தெரியும் அரசியலில் எதுவும் நடக்கும்....

யூதர்களின் கனவு ஆயிரம் வருடங்களுக்கு பின்பு நனவாக முடியுமென்றால் ஏன் எங்கள் கனவு நனவாக முடியாது ....எதுவும் நடக்கலாம்....தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை 
என்ற வாதத்தை வைப்பீர்கள்.....மனித சமுகம் ஒற்றுமையில்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கு.....ஒற்றுமையாக வாழ்ந்தால் அவன் மனிதனல்ல....யூதர்களிடையே மோதல்கள் உண்டு...

நல்ல கருத்து புத்தன் 👍👍👍👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

விடுதலை புலிகளின் கனவு ஈழம் ..........தமிழரின் நிலைப்பாடு வடக்கு கிழக்கு தாயகம் ....
விடுதலைப்புலிகள் ஈழம் தருவோம் என்றார்கள் ஆதரவு வழங்கினார்கள் தமிழர்கள் அதை செயல்படுத்தி காட்டினார்கள் .....
தமிழர் தாயக கோட்பாடு இன்னும் தொடர்கிறது ,....அதை அழிப்பதில் சிங்களமும் தொடர்ந்து செயற்படுகிறது ....

யூதர்களின் கனவாக இருக்கலாம் நிச்சயம் எமது காலத்தில் நனவாக மாறது என்பதும் எமக்கு தெரியும் ....சிறிலங்காவில் தொடர்ந்து மகிந்தா குடும்பம் ஆட்சியிலிருக்க போவதில்லை என்பதும் தெரியும் அரசியலில் எதுவும் நடக்கும்....

யூதர்களின் கனவு ஆயிரம் வருடங்களுக்கு பின்பு நனவாக முடியுமென்றால் ஏன் எங்கள் கனவு நனவாக முடியாது ....எதுவும் நடக்கலாம்....தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை 
என்ற வாதத்தை வைப்பீர்கள்.....மனித சமுகம் ஒற்றுமையில்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கு.....ஒற்றுமையாக வாழ்ந்தால் அவன் மனிதனல்ல....யூதர்களிடையே மோதல்கள் உண்டு...

பிரதேச அரசியலும் அதே இடத்தில் வந்து நிற்பதுதான் முக்கியமான விடயம்.

முன்பு அமேரிக்கா என்றால் இப்போ சீனா 
ஆனால் பிரச்சனையின் வடிவம் ஒன்றுதான். 

ஜே ர் ஜெயவர்த்தனா இந்திராகாந்தியை மதிக்காது அமேரிக்க சார்பு ஆனதாலேயே 
இந்திரா அரசு ஈழ மக்கள் பக்கம் சார்ந்து இருந்தார்கள் போராளிகளுக்கு ஆயுத பயிற்சி கூட கொடுத்தார்கள் 

பாகிஸ்தான் - இந்திய முறுகல் நிலை தோன்றியபோது 
பாகிஸ்தானுக்கு போரை தொடங்க சொல்லிவிட்டு அமெரிக்கா 
யுத்தகப்பலை கொழும்பு துறைமுகம் நோக்கி அனுப்பியது 

அமெரிக்க சற்றும் எதிர்பாக்காமல் (இப்போதைய சிரியா தரை இறக்கம்போல)
சோவியத் யூனியன் (ரஸ்யா) தனது கப்பலை கொண்டுவந்து இந்தியாவில் கட்டியது 
அதனாலேயே அன்றைய முறுகல் போர் தொடங்கமால் நின்றது 

அதன் பின்புதான் இந்திரா- ஜெ ஆர் முறுகல் முற்றியது 

இப்போ மீண்டும் இந்தியாவின் எதிரியான சீனா சார்பெடுத்து 
நிற்கிறது சிங்களம் .... இப்போது பழைய எதிரிகள் இருவரும் நண்பர்கள் 
என்றாலும் ஆடுவதுக்கு மைதானத்தில் இடம் இல்லை. 

ஈழத்தமிழரை பொறுத்தவரை உயிர் உடைமைகள் அழிந்தாலும் 
பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக ஐ நா வரை கொண்டு சென்று விட்டார்கள் 

எந்த அரசியல் நகர்வும் எட்டாத இந்தியாவே இதில் பெரும் தோல்வி கண்டிருக்கிறது 
இந்தியாவின் தோல்வி தொடருமா?  
இந்திய இளைய தலைமுறை ஏதாவது ஒரு காய்யை நகர்த்துமா?
என்பதிலும் இலங்கை நிலைமை மாறுவதுக்கு  சாத்தியம் உண்டு 

பிராந்திய அரசியல் என்பதை 
பிரதேச அரசியல் என்று எழுதிவிட்டேன் 
மாற்றி வாசிக்கவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maruthankerny said:

பிரதேச அரசியலும் அதே இடத்தில் வந்து நிற்பதுதான் முக்கியமான விடயம்.

முன்பு அமேரிக்கா என்றால் இப்போ சீனா 
ஆனால் பிரச்சனையின் வடிவம் ஒன்றுதான். 

ஜே ர் ஜெயவர்த்தனா இந்திராகாந்தியை மதிக்காது அமேரிக்க சார்பு ஆனதாலேயே 
இந்திரா அரசு ஈழ மக்கள் பக்கம் சார்ந்து இருந்தார்கள் போராளிகளுக்கு ஆயுத பயிற்சி கூட கொடுத்தார்கள் 

பாகிஸ்தான் - இந்திய முறுகல் நிலை தோன்றியபோது 
பாகிஸ்தானுக்கு போரை தொடங்க சொல்லிவிட்டு அமெரிக்கா 
யுத்தகப்பலை கொழும்பு துறைமுகம் நோக்கி அனுப்பியது 

அமெரிக்க சற்றும் எதிர்பாக்காமல் (இப்போதைய சிரியா தரை இறக்கம்போல)
சோவியத் யூனியன் (ரஸ்யா) தனது கப்பலை கொண்டுவந்து இந்தியாவில் கட்டியது 
அதனாலேயே அன்றைய முறுகல் போர் தொடங்கமால் நின்றது 

அதன் பின்புதான் இந்திரா- ஜெ ஆர் முறுகல் முற்றியது 

இப்போ மீண்டும் இந்தியாவின் எதிரியான சீனா சார்பெடுத்து 
நிற்கிறது சிங்களம் .... இப்போது பழைய எதிரிகள் இருவரும் நண்பர்கள் 
என்றாலும் ஆடுவதுக்கு மைதானத்தில் இடம் இல்லை. 

ஈழத்தமிழரை பொறுத்தவரை உயிர் உடைமைகள் அழிந்தாலும் 
பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக ஐ நா வரை கொண்டு சென்று விட்டார்கள் 

எந்த அரசியல் நகர்வும் எட்டாத இந்தியாவே இதில் பெரும் தோல்வி கண்டிருக்கிறது 
இந்தியாவின் தோல்வி தொடருமா?  
இந்திய இளைய தலைமுறை ஏதாவது ஒரு காய்யை நகர்த்துமா?
என்பதிலும் இலங்கை நிலைமை மாறுவதுக்கு  சாத்தியம் உண்டு 

அருமையான விளக்கம் .....இதை எல்லாம் புறம் தள்ளி புலி புராணம் பாடியும்,இணக்க அரசியல் புராணம் பாடியும் ஒன்றும் நடக்க போவதில்லை ......70 ஆண்டுகளுக்கு முதல் செய்ய வேண்டியதை இப்ப செய்து பிராந்திய அரசியலை மாற்ற முனைகின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, putthan said:

விடுதலை புலிகளின் கனவு ஈழம் ..........தமிழரின் நிலைப்பாடு வடக்கு கிழக்கு தாயகம் ....
விடுதலைப்புலிகள் ஈழம் தருவோம் என்றார்கள் ஆதரவு வழங்கினார்கள் தமிழர்கள் அதை செயல்படுத்தி காட்டினார்கள் .....
தமிழர் தாயக கோட்பாடு இன்னும் தொடர்கிறது ,....அதை அழிப்பதில் சிங்களமும் தொடர்ந்து செயற்படுகிறது ....

யூதர்களின் கனவாக இருக்கலாம் நிச்சயம் எமது காலத்தில் நனவாக மாறது என்பதும் எமக்கு தெரியும் ....சிறிலங்காவில் தொடர்ந்து மகிந்தா குடும்பம் ஆட்சியிலிருக்க போவதில்லை என்பதும் தெரியும் அரசியலில் எதுவும் நடக்கும்....

யூதர்களின் கனவு ஆயிரம் வருடங்களுக்கு பின்பு நனவாக முடியுமென்றால் ஏன் எங்கள் கனவு நனவாக முடியாது ....எதுவும் நடக்கலாம்....தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை 
என்ற வாதத்தை வைப்பீர்கள்.....மனித சமுகம் ஒற்றுமையில்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கு.....ஒற்றுமையாக வாழ்ந்தால் அவன் மனிதனல்ல....யூதர்களிடையே மோதல்கள் உண்டு...

புத்தன், உங்கள் முதல் பந்தியில் தமிழர்களின் தாயகக் கனவும் புலிகளின் தனிநாட்டுக் கனவும் வேறு  வேறானவை என்று சொல்வதன் மூலம் தமிழர்கள் தமிழீழம் என்ற தனிநாட்டில் முழுநம்பிக்கை கொள்ளவில்லை கூறுகின்றீர்கள். அதாவது தமிழர்கள் தனிநாட்டுக்குக் கீழ் ஒரு தீர்வுக்குத் தயாராக இருந்தார்கள், ஆனால் புலிகள் தனிநாட்டுக் கொள்கையில் இருந்து இறங்கவில்லை. மக்களின் நிலைப்பாடும், மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களும் ஒத்த கருத்தில் இல்லாதபோது இரண்டு தரப்புமே தோல்விநோக்கித்தான் போவார்கள். “ஏதாவது தீர்வு வந்தால் போதும்” என்று பார்வையாளர்களாக இருக்கும் மனப்பான்மை அதிகரித்தது மக்கள் அரசியல் தனிநாடுதான் தீர்வு என்று நம்பும் அளவிற்கு அரசியல் மயப்படுத்தப்படாமைதான் காரணம். மறுவளமாக தனிநாடு யதார்த்தத்தில் கிட்டாது என்பதை ஏற்று அதற்குக் கீழே ஒரு தீர்வை ஏற்கும் நிலைக்கும், அதை நோக்கி சிங்களத்தை நகர்த்தும் நிலைக்கும் சமாதானக் காலத்தைப் பாவிக்கவில்லை. இதனால் இப்போது அதிகாரமில்லாத மாகாணசபை கூட தமிழர்களிடம் இல்லை. சிங்களம் அதைக்கூட இல்லாமல் செய்து மத்தியில் அதிகாரங்களைக் குவிக்கின்றது.

 

யூதர்களுக்கு இஸ்ரேல் கிடைத்தது அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லரசுகளின் ஆதரவால். தமிழர்களுக்கு இப்படி ஒரு வல்லரசைக்கூட ஆதரவாக திரட்டும் வல்லமை இல்லை. ஏன் குறைந்த பட்சம் உரிமைகளுக்காக போராடும் பிற உலக இனங்களின் ஆதரவைக்கூட திரட்டமுனைவதில்லை. இலண்டனின் பலஸ்த்தீனியர்கள், பர்மியர்கள் போல பல இனங்கள் அடிக்கடி போராட்டங்கள் நடத்துவர். அதில் தமிழர்கள் கலந்துகொள்வதேயில்லை. இப்படி ஒடுக்கப்படும் இனங்களோடு ஓரணியில் சேரமுடியாமல் எங்களை “தனித்துவமாக” கருதியனால்தான் முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்தபோது எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2021 at 05:12, குமாரசாமி said:

அன்றும் அவர்கள் சிந்தித்ததினால் தான் சிங்கள பிரதேசங்களில் தமிழர்கள் கடை வைத்திருந்தார்கள். வீடுகள் வைத்திருந்தார்கள். சொந்த ஊரில் இருந்தது போல் இருந்தார்கள்.வெள்ளவத்தை,கொள்ளுப்பிட்டி,பம்பலப்பிட்டி என தமிழர்கள் வாழ்ந்தார்கள்.

என்னவொண்டு சிங்களத்துக்கு இனவாதம் முத்த பற தெமில எண்டு சொல்லி செல்லமாய் கன்னத்திலை தட்டினவங்கள் அவ்வளவுதான்...

மட்டக்களப்பு எல்லையள்லை சிங்களவன் அடிச்சு நொருக்கினாலும் பிரச்சனை இல்லை....அவர்களும் சிந்திக்கின்றார்கள் எண்டு நாங்கள் சொல்லுவம்.

தற்போது  சிங்களவர்கள் இலங்கையின் விலைவாசிக்கும் வீடுகளின் வாடகைக்கும்  நகரவாழ்கையில் இருந்து கிராமப்புற , காட்டுப்பகுதிகளுக்குள் நுழைகிறார்கள்  ஆனால் அவர்கள் வெளியேறிய பகுதிகளை தமிழர்கள் விலைகொடுத்து வாங்குகிறார்கள் விசாரியுங்கள்  தாத்தா நீங்கள் சொன்ன அத்தனை பகுதிகள் பக்கமும்  

இன்று சிங்களவர்கள் எல்லைக்காணிக்களுக்குள் ஏன் வருகிறார்கள் அரசாங்கமும் குடியேற்றுக்கிறது என பாருங்கள் உதாரணம் திரிகோணமலையிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை

நாளை வவுனியாவிலிருந்து வடக்கும் பக்கம் நகரலாம் 

Link to comment
Share on other sites

On 16/6/2021 at 11:17, குமாரசாமி said:

ஈழத்தமிழர் பற்றிய உண்மையான வரலாறுகள்/பிரச்சனைகள் எனக்கு தெரியும் போது ஏன் பிள்ளைகளை வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்?
சாந்தி அக்காவுக்கு காமெடி கூடிப்போச்சுது...😂

இதென்ன கோதாரிக்கரைச்சல் கடவுளே🤔 உங்களுக்கும் எனக்கும் உண்மை வரலாறு தெரியும். 

உங்களைப் போலவும் என்னைப் போலவும் புலம்பெயர்ந்த அகதிப் பெற்றோரின் மகளின் ஆய்வு பற்றி இங்கு பேசப்படுகிறது. 

ஆக உங்களதும் எனதும் பிள்ளைகளின் தலைமுறை தான் குறித்த மாணவி. 

நீங்கள் ஏற்கனவே உங்கள் மகளாக இருந்திருந்தால் பிள்ளைக்கு புரிய வைத்து உண்மையான வரலாற்றை சொல்லியிருப்பேன் என்று எழுதியிருந்தீர்கள். 

அந்த உண்மையை உங்கள் பிள்ளைகளுக்கு உரக்கச் சொல்லி ஒரு ஆய்வை நடத்தினால் இனி வரும் மாணவர்கள் பயன்பெறக்கூடுமென்று தான் கேட்டேன். 🙄

 

20 hours ago, goshan_che said:

தமிழினி அக்கா எழுதி சென்றுள்ளாவே?

அது தமிழினி அக்கா எழுதவில்லை வேறு யாரோ எழுதி எங்கள் போராட்டத்தை விமர்சனம் செய்யப்பட்டதென ஊரெல்லாம் நடந்த கலவரம் உங்களுக்குத் தெரியாது போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, shanthy said:

அது தமிழினி அக்கா எழுதவில்லை வேறு யாரோ எழுதி எங்கள் போராட்டத்தை விமர்சனம் செய்யப்பட்டதென ஊரெல்லாம் நடந்த கலவரம் உங்களுக்குத் தெரியாது போல. 

தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

புத்தன், உங்கள் முதல் பந்தியில் தமிழர்களின் தாயகக் கனவும் புலிகளின் தனிநாட்டுக் கனவும் வேறு  வேறானவை என்று சொல்வதன் மூலம் தமிழர்கள் தமிழீழம் என்ற தனிநாட்டில் முழுநம்பிக்கை கொள்ளவில்லை கூறுகின்றீர்கள். அதாவது தமிழர்கள் தனிநாட்டுக்குக் கீழ் ஒரு தீர்வுக்குத் தயாராக இருந்தார்கள், ஆனால் புலிகள் தனிநாட்டுக் கொள்கையில் இருந்து இறங்கவில்லை. மக்களின் நிலைப்பாடும், மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களும் ஒத்த கருத்தில் இல்லாதபோது இரண்டு தரப்புமே தோல்விநோக்கித்தான் போவார்கள். “ஏதாவது தீர்வு வந்தால் போதும்” என்று பார்வையாளர்களாக இருக்கும் மனப்பான்மை அதிகரித்தது மக்கள் அரசியல் தனிநாடுதான் தீர்வு என்று நம்பும் அளவிற்கு அரசியல் மயப்படுத்தப்படாமைதான் காரணம். மறுவளமாக தனிநாடு யதார்த்தத்தில் கிட்டாது என்பதை ஏற்று அதற்குக் கீழே ஒரு தீர்வை ஏற்கும் நிலைக்கும், அதை நோக்கி சிங்களத்தை நகர்த்தும் நிலைக்கும் சமாதானக் காலத்தைப் பாவிக்கவில்லை. இதனால் இப்போது அதிகாரமில்லாத மாகாணசபை கூட தமிழர்களிடம் இல்லை. சிங்களம் அதைக்கூட இல்லாமல் செய்து மத்தியில் அதிகாரங்களைக் குவிக்கின்றது.

 

யூதர்களுக்கு இஸ்ரேல் கிடைத்தது அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லரசுகளின் ஆதரவால். தமிழர்களுக்கு இப்படி ஒரு வல்லரசைக்கூட ஆதரவாக திரட்டும் வல்லமை இல்லை. ஏன் குறைந்த பட்சம் உரிமைகளுக்காக போராடும் பிற உலக இனங்களின் ஆதரவைக்கூட திரட்டமுனைவதில்லை. இலண்டனின் பலஸ்த்தீனியர்கள், பர்மியர்கள் போல பல இனங்கள் அடிக்கடி போராட்டங்கள் நடத்துவர். அதில் தமிழர்கள் கலந்துகொள்வதேயில்லை. இப்படி ஒடுக்கப்படும் இனங்களோடு ஓரணியில் சேரமுடியாமல் எங்களை “தனித்துவமாக” கருதியனால்தான் முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்தபோது எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

 

சிங்களவர்கள் சுதந்திரத்தின் பின்பு சிறிலங்கா முழுவதும் சிங்களமயமாக வேண்டும் சிறிலங்காவில் வேற்று இனத்தவர்களுக்கு தனி பிராந்தியம் இருக்க அனுமதித்தால் அது தமது சிரிலங்கா என்ற அடையாளத்துக்கு பாதகமான சூழலை உருவாக்கும் என்ற நோக்கில் 1948 இல் இருந்தே காய் நகர்த்தி கொண்டு செல்கிறார்கள் ...வேறு இனத்தவர் வாழலாம் ஆனால் தனி பிராந்தியமாக வாழக்கூடாது என்பதில் அக்கறை காட்டி வருகிறது.

தமிழர்கள் வடக்கு கிழக்கை தமது பிரேதேசமாக வைத்திருக்க போராடிக் கொண்டு இருக்கின்றனர் .இதில் புலிகள்/மற்றும் அரசியல் தலைவர்களின்  தனிநாட்டு கோரிக்கை இதை ஓர் சர்வதேச பிரச்சனையாக இட்டு சென்றுள்ளது....
சிங்களம் மேற்குடனும் இந்தியாவுடனும் கை கோர்க்கும் வரை எமது தாயக கோட்பாடு நிலைத்து நிற்க்கும்......இன்றைய ராஜபாக்சாக்கள் தொடர்ந்து சீனா பக்கம் நின்றால் ,அவர்கள் நலன் கருதிஇந்தியா அமெரிக்கா எம்மை அரவணைக்கும்....

பலஸ்தீனர்கள்,பர்மனியர்களின் போராட்ட்டதில் பங்கு கொள்வதில்லை என்ற குற்றசாட்டு வைத்துள்ளீர்கள்.....பலஸ்தீனரின் போராட்டத்தில் எவ்வளவு சக்தி வாய்ந்த நாடுகள் ஆதரவாக இருந்தும் ஒன்றும் பண்ண முடியவில்லை......தெரு ஊர்வலங்களை விட ஐ.நா....ஐரோப்பிய நாடுகளின் மையம் போன்றவற்றின் செல்வாக்கு அதிகம் என்பதை நீங்கள் தற்பொழுது அறிந்திருப்பீர்கள் என் நம்புகிறேன்...

ஒர் அறையில் குறைந்தது 50 பேர் இருந்து கியுபா புரட்சி,பலஸ்தீனம்,கஸ்மீர் விடுதலை,ஈழ விடுதலைகளை பேசுவதால் எந்த பிரயோசனமும் இல்லை...இன்றைய காலகட்டத்தில் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

பலஸ்தீனர்கள்,பர்மனியர்களின் போராட்ட்டதில் பங்கு கொள்வதில்லை என்ற குற்றசாட்டு வைத்துள்ளீர்கள்.....பலஸ்தீனரின் போராட்டத்தில் எவ்வளவு சக்தி வாய்ந்த நாடுகள் ஆதரவாக இருந்தும் ஒன்றும் பண்ண முடியவில்லை......தெரு ஊர்வலங்களை விட ஐ.நா....ஐரோப்பிய நாடுகளின் மையம் போன்றவற்றின் செல்வாக்கு அதிகம் என்பதை நீங்கள் தற்பொழுது அறிந்திருப்பீர்கள் என் நம்புகிறேன்...

உண்மையில் இதையும் செய்யணும் செய்தல் நல்லது

ஆனால் அதை யார் செய்வது??

ஒருவரையே கே காட்டிவிட்டு கேள்வி மட்டும் கேட்டதன் பயனை தான் இப்போது அனுபவிக்கின்றோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

உண்மையில் இதையும் செய்யணும் செய்தல் நல்லது

ஆனால் அதை யார் செய்வது??

ஒருவரையே கே காட்டிவிட்டு கேள்வி மட்டும் கேட்டதன் பயனை தான் இப்போது அனுபவிக்கின்றோம்.

 

ஒருவரைக் கையைக் காட்டி விட்டு ஏனையோர் ஒதுங்கியதா அல்லது முன் வந்து ஆலோசனை, விமர்சனம் வைக்க முற்பட்டோர் ஒதுக்கப் பட்டு அல்லது கொல்லப் பட்டதா?

எது இன்றைய நிலைக்கும் காரணம் என நினைக்கிறீர்கள்? (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!- ஒரு வரியை அசால்ட்டாகத் துக்கிப் போட்டு தவறான வரலாற்றைப் பரப்பக் கூடாது!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

பலஸ்தீனர்கள்,பர்மனியர்களின் போராட்ட்டதில் பங்கு கொள்வதில்லை என்ற குற்றசாட்டு வைத்துள்ளீர்கள்.....பலஸ்தீனரின் போராட்டத்தில் எவ்வளவு சக்தி வாய்ந்த நாடுகள் ஆதரவாக இருந்தும் ஒன்றும் பண்ண முடியவில்லை......தெரு ஊர்வலங்களை விட ஐ.நா....ஐரோப்பிய நாடுகளின் மையம் போன்றவற்றின் செல்வாக்கு அதிகம் என்பதை நீங்கள் தற்பொழுது அறிந்திருப்பீர்கள் என் நம்புகிறேன்...

பலஸ்தீனியர்களுக்கு தீர்வு கிடைக்காததற்குக் காரணம் அமெரிக்க என்ற வல்லரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதும், தொடர்ந்தும் இஸ்ரேலின் பாதுகாப்புக்காக பெருந்தொகையை ஒதுக்கீடு செய்வதும்தான். மேலும் அரபு நாடுகள் பலஸ்தீனிய விடயத்தில் ஒற்றுமையாக அழுத்தம் கொடுக்கும் நிலையிலும் இல்லை என்பதும் காரணம்.

மக்களின் போராட்டங்கள், லொபியிங் எல்லாம் தேவை. மக்களின் போராட்டம் இல்லாவிட்டால், ஆதரவு இல்லை என்று பெரிய நாடுகள் அக்கறை காட்டாமல் விடும். தெருவில் இறங்காமல் மாற்றங்கள் மூடிய அறைக்குள் வந்துவிடாது. 

நம்மவர்கள் தெருவில் பெருமளவு இறங்காமல் வெறும் அடையாள ஆர்ப்பாட்டங்களை செய்வதும், ஜெனீவாவில் வருடாவரும் வடையும், ரீயும் குடிக்கப்போவதும் தொடருமானால், சிங்களம் தான் நினைத்த மாதிரியான காரியங்களில் தொடர்ந்தும் ஈடுபடும். ஐரோப்பிய ஒன்றிய ஜிபிஎஸ் பிளஸ் சலுகை நிறுத்தம் எல்லாவற்றையும் வெட்டியாடும்போது எமக்கு  விளங்கும்.

 

13 hours ago, putthan said:

ஒர் அறையில் குறைந்தது 50 பேர் இருந்து கியுபா புரட்சி,பலஸ்தீனம்,கஸ்மீர் விடுதலை,ஈழ விடுதலைகளை பேசுவதால் எந்த பிரயோசனமும் இல்லை...இன்றைய காலகட்டத்தில் ....

ஆம். தெருவில் இறங்காமல் கதைத்துக்கொண்டிருந்தால் ஒரு பிரயோசனமும் இல்லை. ஆனால் இடதுசாரிகள் 80 களுக்கு முன்னர் முக்கிய மாற்றங்களை தாயகத்தில் போராடி ஏற்படுத்தியவர்கள். அவர்களால்தான் சாதி ஒடுக்குமுறைக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, இரட்டைக் குவளைமுறை, கோயில் அனுமதி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கிடைத்தது. பின்னர் இயக்கங்கள் இடதுசாரி சிந்தனை முறையில் தோன்றி, வலதுசாரிகளாக மாறி இடதுசாரிகளை இல்லாமல் ஆக்கினார்கள் அல்லது மெளனிக்கக் செய்தார்கள். அதனால்தான் அவர்கள் இப்போது ஒரு அறையில் குழுமி தங்களுக்குள் பேசிக்கொள்கின்றார்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஒருவரைக் கையைக் காட்டி விட்டு ஏனையோர் ஒதுங்கியதா அல்லது முன் வந்து ஆலோசனை, விமர்சனம் வைக்க முற்பட்டோர் ஒதுக்கப் பட்டு அல்லது கொல்லப் பட்டதா?

எது இன்றைய நிலைக்கும் காரணம் என நினைக்கிறீர்கள்? (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!- ஒரு வரியை அசால்ட்டாகத் துக்கிப் போட்டு தவறான வரலாற்றைப் பரப்பக் கூடாது!)

நீங்கள் தொடர்ந்து முட்டையில் உரோமம் புடிங்கி கொண்டே இருங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2021 at 11:57, தனிக்காட்டு ராஜா said:

தற்போது  சிங்களவர்கள் இலங்கையின் விலைவாசிக்கும் வீடுகளின் வாடகைக்கும்  நகரவாழ்கையில் இருந்து கிராமப்புற , காட்டுப்பகுதிகளுக்குள் நுழைகிறார்கள்  ஆனால் அவர்கள் வெளியேறிய பகுதிகளை தமிழர்கள் விலைகொடுத்து வாங்குகிறார்கள் விசாரியுங்கள்  தாத்தா நீங்கள் சொன்ன அத்தனை பகுதிகள் பக்கமும்  

இன்று சிங்களவர்கள் எல்லைக்காணிக்களுக்குள் ஏன் வருகிறார்கள் அரசாங்கமும் குடியேற்றுக்கிறது என பாருங்கள் உதாரணம் திரிகோணமலையிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை

நாளை வவுனியாவிலிருந்து வடக்கும் பக்கம் நகரலாம் 

இது நடக்கும் நடக்கும் என்று நான் இங்கு திரும்ப திரும்ப எழுதுகிறேன் 
நடக்கிறது என்று நீங்கள் உறுதி செய்துகொண்டு இருக்கிறீர்கள் 

இது இன ரீதியான நகர்வு அல்ல 
வர்க்க ரீதியான நகர்வு 

பணக்கார வர்க்கம் தமிழரில் சரி சிங்களவரிலும் சரி 
ஏழைகளை ஏய்த்து பிழைத்தாவது தப்பி கொள்வார்கள் 

இருப்பக்கமும் ஏழைகள் மிதிக்கப்படுவார்கள் என்பது எதிர் பாராத ஒன்று அல்ல 
எம் கண் முன்னே நடக்க போகும் ஒன்று 

ஆயுத போர் வந்தபோது வசதியான தமிழர்கள் விமானம் ஏறினார்கள் 
ஏழைகள்தான் புலிகள் ஆனார்கள் ... சிங்கள இனவெறியர்களின் அனைத்து குண்டுகளையும் 
தலையில் தாங்கினானார்கள் .... இப்போ முன்னாள் போராளிகள் வீதிகளில் நிற்கிறார்கள் 

பணக்கார தமிழர்கள் உல்லாச விடுமுறைக்கு ஏஸி ரூம் புக் பண்ணி வந்து போகிறார்கள் 
அவர்கள் பிள்ளைகள் பேஸ்புக்கில் பியூடிபியுள் கோக்கனட் ட்ரீ என்று போட்டொ போடுகிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இது நடக்கும் நடக்கும் என்று நான் இங்கு திரும்ப திரும்ப எழுதுகிறேன் 
நடக்கிறது என்று நீங்கள் உறுதி செய்துகொண்டு இருக்கிறீர்கள் 

இது இன ரீதியான நகர்வு அல்ல 
வர்க்க ரீதியான நகர்வு 

பணக்கார வர்க்கம் தமிழரில் சரி சிங்களவரிலும் சரி 
ஏழைகளை ஏய்த்து பிழைத்தாவது தப்பி கொள்வார்கள் 

இருப்பக்கமும் ஏழைகள் மிதிக்கப்படுவார்கள் என்பது எதிர் பாராத ஒன்று அல்ல 
எம் கண் முன்னே நடக்க போகும் ஒன்று 

ஆயுத போர் வந்தபோது வசதியான தமிழர்கள் விமானம் ஏறினார்கள் 
ஏழைகள்தான் புலிகள் ஆனார்கள் ... சிங்கள இனவெறியர்களின் அனைத்து குண்டுகளையும் 
தலையில் தாங்கினானார்கள் .... இப்போ முன்னாள் போராளிகள் வீதிகளில் நிற்கிறார்கள் 

பணக்கார தமிழர்கள் உல்லாச விடுமுறைக்கு ஏஸி ரூம் புக் பண்ணி வந்து போகிறார்கள் 
அவர்கள் பிள்ளைகள் பேஸ்புக்கில் பியூடிபியுள் கோக்கனட் ட்ரீ என்று போட்டொ போடுகிறார்கள் 

 

ஐயா

இவ்வுலகில்

ஒரு மரத்தை  வெட்டினால் இன்னொரு  மரத்தையாவது நீ நடணும்  எனும்  கோட்பாடு வளர்ந்து விட்டாலும்

சிங்கம்  ஆட்டை சாப்பிடுவது விதி என்பதும்  இருக்கத்தானே  செய்கிறது

எனவே ..............????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

 

 

ஆம். தெருவில் இறங்காமல் கதைத்துக்கொண்டிருந்தால் ஒரு பிரயோசனமும் இல்லை. ஆனால் இடதுசாரிகள் 80 களுக்கு முன்னர் முக்கிய மாற்றங்களை தாயகத்தில் போராடி ஏற்படுத்தியவர்கள். அவர்களால்தான் சாதி ஒடுக்குமுறைக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, இரட்டைக் குவளைமுறை, கோயில் அனுமதி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கிடைத்தது. பின்னர் இயக்கங்கள் இடதுசாரி சிந்தனை முறையில் தோன்றி, வலதுசாரிகளாக மாறி இடதுசாரிகளை இல்லாமல் ஆக்கினார்கள் அல்லது மெளனிக்கக் செய்தார்கள். அதனால்தான் அவர்கள் இப்போது ஒரு அறையில் குழுமி தங்களுக்குள் பேசிக்கொள்கின்றார்கள்.

 

 

பாராளுமன்ற இடதுசாரிகளாக மாறி பொக்கட்டுக்குள்ள பணத்தை போடுயினம் .....அதற்கு ஏற்ற வகையில் அவர்களின் தலைவரும் முன்னாள் இடதுசாரி  பின்னாளில் முதல் பணக்காரன் ....🤣🤣🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.