Jump to content

மீளாய்வுக்கு உள்ளாகிறது பயங்கரவாத தடைச்சட்டம்: அலி சப்ரி..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.ராம்)
நடைமுறையில் உள்ள 1979ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். 

அத்துடன், நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படும் விமர்சனங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பினை மையப்படுத்தியே இந்த மீளாய்வு முன்னெடுக்கப்பட்டு திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ali.jpg

இதற்காக நீதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களும் கூட்டாக இணைந்து பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்காக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  மேலும், இந்த மீளாய்வைச் செய்வதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்குரிய அனுமதியை அமைச்சரவையிடத்திலிருந்து பெறவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

இதற்காக, அமைச்சரவைப் பத்திரமொன்றை முதலில் தயார் செய்வதற்கு நீதி, வெளிவிவகார, பாதுகாப்பு அமைச்சுக்களிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்த விடயத்தினை அடுத்துவரும் காலப்பகுதியில் விரைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

இதேவேளை, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அந்ததீர்மானத்தில் இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்தோடு, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவது, மீளாய்வு செய்வது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவை உட்பட சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவான புதிய சட்டத்தினை அல்லது திருத்தப்பட்ட சட்டத்தினை உருவாக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஜுன் மாதம் நான்காம் திகதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மீளாய்வுக்கு உள்ளாகிறது பயங்கரவாத தடைச்சட்டம்: அலி சப்ரி..! | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

June 12, 20211:

அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இருதரப்பு வர்த்தக உறவுகளை இது பாதிக்கக்கூடும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் இன்று இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு பலமான செய்தியை சொல்லியுள்ளது.

மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் தன்னிச்சையாக தடுத்துவைத்தல், சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றால் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக தனது கவனத்தை இந்தத் தீர்மானம் வெளிப்படுத்தியுள்ளது. சிறுபான்மை சமூகங்கள் உட்பட சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களை குறிவைக்க அரசாங்கம் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக, பிரபல வழக்கறிஞரான ஹெஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞரான அனாஃப் ஜசீம் ஆகியோர் இருவரும் இந்தச் சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற பரவலான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தடைசெய்ததையும் ஐரோப்பிய நாடாளுமன்றம் கண்டித்தது. கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள முன்னாள் இராணுவ தளபதிகள் அரசாங்கத்தின் மூத்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இத் தீர்மானம் குறிப்பிடுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை, ஆதாரங்களை சேகரித்து அதனை ஆய்வுக்குட்படுத்தி எதிர்காலத்தில் அதனை பயன்படுத்துவதற்காக ஒரு புதிய முயற்சிக்கு ஒப்புதல் அளித்திருந்தது. மீண்டும் கடுமையான மனித உரிமை மீறல்கள் நிகழும் இலங்கையின் மோசமான இருட்டான பாதையின், ஆனால் துல்லியமான படத்தை ஐரோப்பிய பாராளுமன்றத் தீர்மானம் வழங்குகிறது. அதில் இன அடிப்படையிலான, சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான பாகுபாடு, மூன்றாம் பாலின மக்களின் நிலை மற்றும் ஆடை தொழிற்சாலைத் தொழிலாளர் எதிர்கொள்ளும் நெருக்கடி ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன

2017 ஆம் ஆண்டு முதல், ஜிஎஸ்பி+ ( GSP+) எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளப்பட்ட வர்த்தக உடன்படிக்கையினால் இலங்கை பயனடைந்து வந்துள்ளது. சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களை நடைமுறைபடுத்துவதில் காணப்படும் முன்னேற்றத்திற்கு ஏற்ப, சிறந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தை வாய்ப்புகளை இது வழங்கிவந்தது. இத் தீர்மானம் “ஜி.எஸ்.பி + ஐ இலங்கை அரசாங்கம் அதன் பயங்கரவாத தடைச் சட்டத்தை, சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கமைவாக முற்று முழுதாக இசைந்து நடப்பதற்கும், அதன் முன்னேற்றத்திற்கும் அழுத்தம் கொடுப்பதற்குரிய ஒரு ஊக்கியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஆணையத்திடம் அழைப்பு விடுத்திருக்கிறது.

குறிப்பாக, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் ஐ.நா. வின் திட்டத்திற்கு வழங்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியை, உடனடியாக மீள் மதிப்பீடு செய்ய வேண்டுமெனவும் , அதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இலங்கையின் சிவில் சமூகத்திற்கான தங்கள் ஆதரவை அதிகரிக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஆணையத்தை இத் தீர்மானம் கோருகிறது.

இலங்கை அரசாங்கம் தன்னை நட்பு நாடுகள் அக்கறையுடன் அவதானித்து வருவதை உணர்ந்து கொள்வதுடன், உலகெங்கிலும் உள்ள அதன் நண்பர்கள் இலங்கையில் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஒன்றுபட்டுச் செயல்பட முடியும் என்பதையும் உணர்த்த வேண்டும்."""""

இந்தச் செய்தி இன்று ahalnews.Com ல் வந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.