Jump to content

ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக... சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம்

ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக... சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம்

சீனாவை எதிர்த்து நிற்கும்வகையில், சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்குவதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை ஜி 7 நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சீனத் திட்டத்திற்கு உயர்தர மாற்றாக அமெரிக்க ஆதரவுடன் பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட் (பி 3 டபிள்யூ) திட்டம் இருக்க வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முயற்சி என்ற திட்டம் பல நாடுகளில் ரயில்கள், வீதிகள் மற்றும் துறைமுகங்களுக்கு நிதியளிக்க உதவியுள்ள அதேவேளை சில நாடுகளை கடனுக்குள் தள்ளும் முயற்சி என விமர்சிக்கப்பட்டது.

இருப்பினும், ஜி 7 திட்டத்திற்கு எவ்வாறு நிதி வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

உலகின் ஏழு பணக்கார ஜனநாயக நாடுகளான ஜி 7 எதிர்கால தொற்றுநோய்களைத் தடுக்கும் புதிய திட்டத்திற்கும் உறுதியளித்துள்ளது.

https://athavannews.com/2021/1222181

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Village In China Think They Found The Skeleton Of A Dragon

டிராகன் சிங்கிளா சீறுது ........!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

ஒரே பூமி ஒரே சுகாதாரம் – ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி

ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்பதுதான் உலகிற்கு இந்தியா வழங்கும் செய்தி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தொடங்கிய ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா பொருட்கள் மீதான சுங்க வரிகள், காப்புரிமை உள்ளிட்ட பலவகைக் கட்டணங்களைக் குறைப்பதற்கு உலக நாடுகள் உதவும்படி மோடி இதன்போது கேட்டுக்கொண்டார்.

கொரோனாவை முறியடிக்கவும் எதிர்காலத்தில் இது போன்ற கொடிய நோய்கள் பரவாமல் இருக்கவும் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2021/1222229

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜி-7 நாடுகளின் கருத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: சீனா கண்டனம்!

ஜி-7 நாடுகளின் கருத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: சீனா கண்டனம்!

பலவிதமான பிரச்சினைகள் குறித்து சீனாவை விமர்சித்த ஜி-7 நாடுகளின் கூட்டு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என சீனா தெரிவித்துள்ளது.

மூன்று நாட்கள் நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவில், உலகின் ஏழு பெரிய மேம்பட்ட பொருளாதார நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ‘சீனாவை மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தின.

இது உய்குர் முஸ்லீம் சிறுபான்மைக் குழுவிற்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் ஹொங்கொங் ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவையை உள்ளடக்கியதாகும்.

ஆனால், பிரித்தானியாவிலுள்ள சீனாவின் தூதரகம், ஜி-7 நாடுகளின் கூட்டு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘சீனாவை அவதூறு செய்வதை நிறுத்துங்கள், சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள், சீனாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதை நிறுத்துங்கள்’ என கூறினார்.

https://athavannews.com/2021/1222599

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நாடுகள் அடங்கிய சிறு குழுக்கள் எடுக்கும் முடிவு எப்போதோ முடிந்துவிட்டது: சீனா!

சில நாடுகள் அடங்கிய சிறு குழுக்கள் எடுக்கும் முடிவு எப்போதோ முடிந்துவிட்டது: சீனா!

சில நாடுகள் மட்டுமே உள்ள சிறு குழுக்கள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் எப்போதோ முடிந்துவிட்டது என சீனா, ஜி-7 நாடுகளிடம் தெரிவித்துள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும் சீனாவின் திட்டத்தை போன்று ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளதன் பின்னணியில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரித்தானியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஸெங் ஸெகுவாங் கூறுகையில், ‘ஒருசில நாடுகள் அடங்கிய சிறு குழுக்கள் முடிவு எடுக்கும் காலம் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துவிட்டது. சிறு குழுக்கள் இனியும் உலகை ஆள முடியாது.

சீனாவைப் பொறுத்தவரை அளவில் பெரிய நாடோ அல்லது சிறிய நாடோ, பலவீனமானதோ அல்லது பலமான நாடோ, ஏழையோ அல்லது பணக்கார நாடோ அனைத்தும் சமமே.

சர்வதேச விவகாரங்களில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். ஐ.நா., கொள்கையை ஒட்டிய சர்வதேச முடிவுகள் எட்டப்பட வேண்டும். ஜி-7 போன்ற குழுக்கள் உலகை ஆள முடியாது’ என கூறியுள்ளார்.

https://athavannews.com/2021/1222478

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
    • கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.