Jump to content

ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக... சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம்

ஜி 7 உச்சிமாநாடு: சீனாவுக்கு போட்டியாக... சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்கும் திட்டதிற்கு அங்கீகாரம்

சீனாவை எதிர்த்து நிற்கும்வகையில், சிறந்த உட்கட்டமைப்பை உருவாக்குவதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை ஜி 7 நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சீனத் திட்டத்திற்கு உயர்தர மாற்றாக அமெரிக்க ஆதரவுடன் பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட் (பி 3 டபிள்யூ) திட்டம் இருக்க வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முயற்சி என்ற திட்டம் பல நாடுகளில் ரயில்கள், வீதிகள் மற்றும் துறைமுகங்களுக்கு நிதியளிக்க உதவியுள்ள அதேவேளை சில நாடுகளை கடனுக்குள் தள்ளும் முயற்சி என விமர்சிக்கப்பட்டது.

இருப்பினும், ஜி 7 திட்டத்திற்கு எவ்வாறு நிதி வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

உலகின் ஏழு பணக்கார ஜனநாயக நாடுகளான ஜி 7 எதிர்கால தொற்றுநோய்களைத் தடுக்கும் புதிய திட்டத்திற்கும் உறுதியளித்துள்ளது.

https://athavannews.com/2021/1222181

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Village In China Think They Found The Skeleton Of A Dragon

டிராகன் சிங்கிளா சீறுது ........!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

ஒரே பூமி ஒரே சுகாதாரம் – ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி

ஒரே பூமி ஒரே சுகாதாரம் என்பதுதான் உலகிற்கு இந்தியா வழங்கும் செய்தி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தொடங்கிய ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா பொருட்கள் மீதான சுங்க வரிகள், காப்புரிமை உள்ளிட்ட பலவகைக் கட்டணங்களைக் குறைப்பதற்கு உலக நாடுகள் உதவும்படி மோடி இதன்போது கேட்டுக்கொண்டார்.

கொரோனாவை முறியடிக்கவும் எதிர்காலத்தில் இது போன்ற கொடிய நோய்கள் பரவாமல் இருக்கவும் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2021/1222229

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜி-7 நாடுகளின் கருத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: சீனா கண்டனம்!

ஜி-7 நாடுகளின் கருத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: சீனா கண்டனம்!

பலவிதமான பிரச்சினைகள் குறித்து சீனாவை விமர்சித்த ஜி-7 நாடுகளின் கூட்டு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என சீனா தெரிவித்துள்ளது.

மூன்று நாட்கள் நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவில், உலகின் ஏழு பெரிய மேம்பட்ட பொருளாதார நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ‘சீனாவை மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தின.

இது உய்குர் முஸ்லீம் சிறுபான்மைக் குழுவிற்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் ஹொங்கொங் ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவையை உள்ளடக்கியதாகும்.

ஆனால், பிரித்தானியாவிலுள்ள சீனாவின் தூதரகம், ஜி-7 நாடுகளின் கூட்டு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘சீனாவை அவதூறு செய்வதை நிறுத்துங்கள், சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள், சீனாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதை நிறுத்துங்கள்’ என கூறினார்.

https://athavannews.com/2021/1222599

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நாடுகள் அடங்கிய சிறு குழுக்கள் எடுக்கும் முடிவு எப்போதோ முடிந்துவிட்டது: சீனா!

சில நாடுகள் அடங்கிய சிறு குழுக்கள் எடுக்கும் முடிவு எப்போதோ முடிந்துவிட்டது: சீனா!

சில நாடுகள் மட்டுமே உள்ள சிறு குழுக்கள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் எப்போதோ முடிந்துவிட்டது என சீனா, ஜி-7 நாடுகளிடம் தெரிவித்துள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும் சீனாவின் திட்டத்தை போன்று ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளதன் பின்னணியில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரித்தானியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஸெங் ஸெகுவாங் கூறுகையில், ‘ஒருசில நாடுகள் அடங்கிய சிறு குழுக்கள் முடிவு எடுக்கும் காலம் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துவிட்டது. சிறு குழுக்கள் இனியும் உலகை ஆள முடியாது.

சீனாவைப் பொறுத்தவரை அளவில் பெரிய நாடோ அல்லது சிறிய நாடோ, பலவீனமானதோ அல்லது பலமான நாடோ, ஏழையோ அல்லது பணக்கார நாடோ அனைத்தும் சமமே.

சர்வதேச விவகாரங்களில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். ஐ.நா., கொள்கையை ஒட்டிய சர்வதேச முடிவுகள் எட்டப்பட வேண்டும். ஜி-7 போன்ற குழுக்கள் உலகை ஆள முடியாது’ என கூறியுள்ளார்.

https://athavannews.com/2021/1222478

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.