Jump to content

"பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!"
***************************************
குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.
கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்...
நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சமைப்பது, அவரை ரித்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.
அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்துகொடுத்து பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மலைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார். அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.
திருதராஷ்டிரா இப்போது சொல் என்றார் கிருஷ்ணன்..
அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.
வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார். ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே!
சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான்.அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன்.
புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய்.
அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.
ஆனால், நான்சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.
அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய். ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.
தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார்.
தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.
நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். **************************************
பகிர்வு.
துரை. சுவேந்தி.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

“ நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். “

இது அவரவர் தனிப்பட்ட விடயமாக இருந்தாலும் இதில் ஒரு விடயத்தை ஏற்க முடியவில்லை.. அதைப்பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்.. 

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு எதுவித இடையூறுகளும் இல்லாமல் இருக்கும் பொழுது, எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை தடம் புரளும் பொழுது, உங்களது பெற்றவர்கள் ஏதாவது பிழை செய்திருப்பார்கள், அதனால்தான் இப்படி” என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?. 

எங்களது செயல்களால்/எங்களின் முடிவுகளால்தான் எங்களின் வாழ்க்கையும் நடைபெறுகிறது, அதை எப்படி எங்களது பெற்றவர்களின் செயல்களில் போடலாம்.. 

அதேபோல, எங்களது செயல்களுக்கு எங்களது பிள்ளைகள் பலனை அனுபவிப்பார்கள் என்பதும் எந்தவிதத்தில் சரி? 

நான் தவறு செய்தால் அதற்கான தண்டனையை நான்தானே அனுபவிக்கவேண்டும், அப்பொழுதுதானே நாளைக்கு என் பிள்ளை அதே தவறை செய்யாது வளருவார்கள்!

இரண்டாவது, பிள்ளைகளின் தவறான செயல்களை பார்த்து பெற்றவர்கள் மனம்வருந்தினால் முற்பிறப்பின் பலனின் விளைவாகத்தான் இப்படியான பிள்ளைகள் என்பதும் எந்தவிதத்தில் நியாயம், முற்பிறப்பில் என்ன தவறு என தெரியாமல் தற்போதைய வாழ்வில் தண்டனை அனுபவிப்பது சரியா? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2021 at 12:56, பிரபா சிதம்பரநாதன் said:

“ நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். “

இது அவரவர் தனிப்பட்ட விடயமாக இருந்தாலும் இதில் ஒரு விடயத்தை ஏற்க முடியவில்லை.. அதைப்பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்.. 

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு எதுவித இடையூறுகளும் இல்லாமல் இருக்கும் பொழுது, எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை தடம் புரளும் பொழுது, உங்களது பெற்றவர்கள் ஏதாவது பிழை செய்திருப்பார்கள், அதனால்தான் இப்படி” என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?. 

எங்களது செயல்களால்/எங்களின் முடிவுகளால்தான் எங்களின் வாழ்க்கையும் நடைபெறுகிறது, அதை எப்படி எங்களது பெற்றவர்களின் செயல்களில் போடலாம்.. 

அதேபோல, எங்களது செயல்களுக்கு எங்களது பிள்ளைகள் பலனை அனுபவிப்பார்கள் என்பதும் எந்தவிதத்தில் சரி? 

நான் தவறு செய்தால் அதற்கான தண்டனையை நான்தானே அனுபவிக்கவேண்டும், அப்பொழுதுதானே நாளைக்கு என் பிள்ளை அதே தவறை செய்யாது வளருவார்கள்!

இரண்டாவது, பிள்ளைகளின் தவறான செயல்களை பார்த்து பெற்றவர்கள் மனம்வருந்தினால் முற்பிறப்பின் பலனின் விளைவாகத்தான் இப்படியான பிள்ளைகள் என்பதும் எந்தவிதத்தில் நியாயம், முற்பிறப்பில் என்ன தவறு என தெரியாமல் தற்போதைய வாழ்வில் தண்டனை அனுபவிப்பது சரியா? 

 

உலகின் மூத்த மொழி தமிழ்.இது உலகமே ஒத்துக்கொண்ட விடயம்.
தமிழின வரலாறுகள்  மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கின்றது.
இந்தோனிசியாவில் தமிழர் வழிபடும் தெய்வ சிற்பங்கள் காடுகளில் தேடுவாரற்று இருக்கின்றது.
கொரிய மொழியுடன் தமிழ் மொழி ஒற்றுமை பற்றிய ஆராய்சிகள் ஏராளம்.
கம்போடியாவில் சைவ கோவில் குளங்கள்.
இலங்கையிலும் காலி தொடக்கம் காங்கேசந்துறை வரைக்கும் தமிழர் வாழ்ந்த அடையாளங்கள்.இன்னும் பல ஆயிரம் தமிழினம் சம்பந்தப்பட்ட அடையாளங்களை சொல்லலாம்.

இருந்தாலும் இன்று தமிழனுக்கு ஒரு சொந்த நாடில்லை. ஏன் என்று உங்களால் விளக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2021 at 12:56, பிரபா சிதம்பரநாதன் said:

“ நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். “

இது அவரவர் தனிப்பட்ட விடயமாக இருந்தாலும் இதில் ஒரு விடயத்தை ஏற்க முடியவில்லை.. அதைப்பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்.. 

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு எதுவித இடையூறுகளும் இல்லாமல் இருக்கும் பொழுது, எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை தடம் புரளும் பொழுது, உங்களது பெற்றவர்கள் ஏதாவது பிழை செய்திருப்பார்கள், அதனால்தான் இப்படி” என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?. 

எங்களது செயல்களால்/எங்களின் முடிவுகளால்தான் எங்களின் வாழ்க்கையும் நடைபெறுகிறது, அதை எப்படி எங்களது பெற்றவர்களின் செயல்களில் போடலாம்.. 

அதேபோல, எங்களது செயல்களுக்கு எங்களது பிள்ளைகள் பலனை அனுபவிப்பார்கள் என்பதும் எந்தவிதத்தில் சரி? 

நான் தவறு செய்தால் அதற்கான தண்டனையை நான்தானே அனுபவிக்கவேண்டும், அப்பொழுதுதானே நாளைக்கு என் பிள்ளை அதே தவறை செய்யாது வளருவார்கள்!

இரண்டாவது, பிள்ளைகளின் தவறான செயல்களை பார்த்து பெற்றவர்கள் மனம்வருந்தினால் முற்பிறப்பின் பலனின் விளைவாகத்தான் இப்படியான பிள்ளைகள் என்பதும் எந்தவிதத்தில் நியாயம், முற்பிறப்பில் என்ன தவறு என தெரியாமல் தற்போதைய வாழ்வில் தண்டனை அனுபவிப்பது சரியா? 

 

நானும்  உங்களைப்போல்த்தான்  எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கும்  ஒருவன்

ஆனால் எமது முதாதையர்களின் சில  விடயங்களை அதிகம் கேள்விக்குட்படுத்துதல் ஆகாது?

ஏனெனில் அவற்றின் தேவையும் செயற்பாட்டின் நன்மையும் கருதி நிறுத்திக்கொள்வதே உகந்தது?

உன் வினை உன்னைச்சுடும்என்பதற்கும்  உன் வினை  உன் பிள்ளையை சுடும்  என்பதற்குமான கனதியை  பாருங்கள்.  எது அதிகம் வேலை  செய்யும்?? எனவே தேவைக்கேற்ற பலனை  அதிகம் தரக்கூடிய தொடுதலே முக்கியம்?

எங்கப்பா  தாத்தா  செய்த  பாவம் எனக்கெதுக்கு வரணும் என்று

இப்படியொரு  கேள்வியை சிறு  வயதில் முதியவர் ஒருவரிடம் நான் வைத்தபோது...

தாத்தா  வைத்த மாம்பழம்  வேண்டும்?

தாத்தா  வைத்த தென்னைமரம் பனைமரம் வேண்டும்?

தாத்தாவின் அறுணாக்கொடியிலிருந்து பொல்லுவரை வேண்டும்?

ஆனால் அவர்விதைத்த கெடுதல்கள்  வேண்டாம்  உனக்கு??

என்ன  நியாயம் என்று சொல்லு  பார்ப்பம் என்றார்

மூச்சு விடல  நான்??

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமீறல்கள் குற்றங்கள் செய்தவர்களே சிறை மீண்டு தங்கள் வாழ்வை மீளமைத்துக் கொள்ளும் மேற்கு நாடுகளில் வாழ்ந்தாலும் இது போன்ற மூட நம்பிக்கைகளை விட முடியாதவர்களாக இருக்கிறோம்! இந்த லட்சணத்தில் மூத்த மொழி மூத்த இனமென்று நாம் பின்பக்கத்தால் விடுகிற வாய்விலேயே முன்னோக்கி எப்படி நகர்வதாம்?😂

சரி, ஒரு பேச்சுக்கு இந்த மூட நம்பிக்கை, பிறவிப் பலன், பெற்றோர் புன்ணியமெல்லாம் சரியென்று எடுத்தால்: பெற்றோர் சரியாக இல்லாதவன் கடினமாக உழைக்க வேண்டியதில்லை, ஏனெனில் எப்படியும் அவனுக்கு பெற்றோர் பாவம் பூமராங் போல வந்து தாக்கப் போகிறது. பெற்றோர் புண்ணியவான்களாக இருப்பவனும் கடினமாக உழைக்க வேண்டியதில்லை, அவனைப் புண்ணியமே காக்கும்!

இது கிட்டத் தட்ட அரச உதவி பெற்றுக் கொண்டு சும்மா இருப்பது போன்ற நிலை தான்!

Link to comment
Share on other sites

முன்னோர்கள் சொன்னார்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு அத்தனை அடி முட்டாள்தனங்களையும் ஏற்று கொள்ள முடியாது. முன்னோர்கள் சொன்னவற்றில் எது சரியானது எது மூடப்பழக்கம் என்று சிந்தித்து அறிந்து கொள்ளும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சி  பெற்ற காலத்தில் இது போல் சமூக வலைத்தளங்களிலும் மூடப்பழக்கங்களை பரப்புவோர்  உள்ளனர். விசுகு இங்கு கூறிய மாம்பழ கதை போல் தாத்தா நட்ட  மாமரத்தில் இருந்து பழங்கள் கிடைப்பது போல்    அதை உருவாக்கிய தாத்தா செய்த criminals  எல்லாவற்றுக்கும்  பேரனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற முட்டாள்தனத்தை கேள்வி கேட்காமல் விசுகு ஏற்றுக்கொண்டதை போல் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட ஒரு அறிவுடைய சிறுவன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.  

 முன்னோர்கள் எனப்படுபவர்களும் எம்மை போல் பிறந்து வாழ்ந்து செத்துப்போன  சாதாரண மனிதர்கள் தான். அவர்களில் அறிவுடையோரும் இருந்திருப்பார்கள். அடிமுட்டாள்களும் இருந்திருப்பார்கள். ஆகவே முன்னோர்கள் சொன்னாதால்  மட்டும் அவை எல்லாம் சரி என கதையளப்பவர்களை புறக்கணித்து ஒவ்வொரு பிள்ளைகளும் தமது சொந்த அறிவை உபயோகித்து சிந்தித்து செயற்படுவதே சரியானது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2021 at 05:56, பிரபா சிதம்பரநாதன் said:

“ நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். “

இது அவரவர் தனிப்பட்ட விடயமாக இருந்தாலும் இதில் ஒரு விடயத்தை ஏற்க முடியவில்லை.. அதைப்பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்.. 

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு எதுவித இடையூறுகளும் இல்லாமல் இருக்கும் பொழுது, எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை தடம் புரளும் பொழுது, உங்களது பெற்றவர்கள் ஏதாவது பிழை செய்திருப்பார்கள், அதனால்தான் இப்படி” என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?. 

எங்களது செயல்களால்/எங்களின் முடிவுகளால்தான் எங்களின் வாழ்க்கையும் நடைபெறுகிறது, அதை எப்படி எங்களது பெற்றவர்களின் செயல்களில் போடலாம்.. 

அதேபோல, எங்களது செயல்களுக்கு எங்களது பிள்ளைகள் பலனை அனுபவிப்பார்கள் என்பதும் எந்தவிதத்தில் சரி? 

நான் தவறு செய்தால் அதற்கான தண்டனையை நான்தானே அனுபவிக்கவேண்டும், அப்பொழுதுதானே நாளைக்கு என் பிள்ளை அதே தவறை செய்யாது வளருவார்கள்!

இரண்டாவது, பிள்ளைகளின் தவறான செயல்களை பார்த்து பெற்றவர்கள் மனம்வருந்தினால் முற்பிறப்பின் பலனின் விளைவாகத்தான் இப்படியான பிள்ளைகள் என்பதும் எந்தவிதத்தில் நியாயம், முற்பிறப்பில் என்ன தவறு என தெரியாமல் தற்போதைய வாழ்வில் தண்டனை அனுபவிப்பது சரியா? 

 

மண்டூர் குரூப் தரை இறங்கி இருப்பதால் இது இனி ஒரு ப்ளோவில் தான் போகும் 
என்பதால் வாசித்துவிட்டு ஏதும் எழுதாமல் செல்வதே உத்தமம் என்று தெரிகிறது 
இருந்தும் .....

எது?
எதுக்காக?
யாரால்? யாருக்கு?

என்பதுதான் அதற்கான பொருளை கொடுக்கும் தவிர்த்து 
விஞ்ஞான விளக்கம் என்பது விஞானத்துக்கு மட்டுமே உதவும் 
இங்கு சிலர் "விஞ்ஞான விளக்கம்" என்று பீற்றுவதை பார்த்து இருப்பீர்கள் 
"விஞ்ஞான விளக்கம்" என்று உலகில் எதுவுமே இல்லை. எப்போதும் கேள்விகள் உடையதுதான் விஞ்ஞானம் 
அப்போது எமக்கு என்ன தரவுகள் ஆதாரம் கையில் இருக்கிறதோ அதை வைத்து நாம் 
ஒரு லாஜிக் ரீதியான முடிவுக்கு வருகிறோம் தவிர ... எந்த விஞ்ஞானியும் இதுதான் முடிந்த முடிவு என்று 
யாழ்கள உலக விஞ்ஞானிகள் போல உளறுவதில்லை.
பூமி தட்டை என்றதும் விஞ்ஞான விளக்கம்தான் மனிதன் சுற்றி சுற்றி நடந்து கடலில் போய் முடியும்போது 
அந்த முடிவை கொண்டான். பின்பு ஒரே சூரியன் எப்படி அதே கிழக்கில் ஒவ்வொரு நாளும் என்ற கேள்வி வரும்போது  அது உருண்டை என்று கொண்டான். 

இதற்கு முந்தியே வானியல் சாஸ்திரம் வானில் தெரிந்த நட்ஷத்திரங்களில் 9 கோள்கள் இருக்கிறது    
என்பதை கண்டறிந்தது உலகின் இன்னொரு பகுதி. 

பகவத்கீதையை நான் மூன்று முறை படித்துவிட்டேன் 
ஆறுதலான நேரம் கிடைக்கும்போதும் இன்னுமொருமுறை மிக ஆழமாக படிக்க விரும்புகிறேன் 

என்னைப்பொறுத்தவரை குருஸ்தோஸ்திர போர்க்களம் என்று பகவத்கீதை ஒரு உண்மையான போரை பற்றி பேசவில்லை . (இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம் மட்டுமே) அது ஒரு உண்மையான போர்க்களாமாக பார்க்கும்போது நிறைய  முரண்பாடு இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை பகவத்கீதை எனக்கு என்னுடன் ஆனா  போரை பற்றியே பேசுகிறது. நான் கடவுளை பின்பற்றி கடவுளை அடைய நினைத்தால்  ... எனக்கு குறுக்கே என்ன இருக்கும் ? இதை நான் எவ்வாறு தாண்ட முடியும்? இதில் நான் யாருடன் எல்லாம் சண்டை  போட வேண்டி வரும்? அதன் முடிவு என்னவாக இருக்கும்? இறுதியில் அதன் பலன் என்னவாக  இருக்கும்   என்று  அதில் தெளிவாக  இருக்கிறது. அந்த கோணத்தில் படிக்கும்போது மட்டுமே அது பொருள்படுகிறது  
மற்றும்படி  அதில் தாராளமான முரண்பாடு உண்டு. 

உதாரணத்துக்கு அதன் தொடக்கமே திருதராஸ்டிதான் அவனுக்கு கண் தெரியாது  போர்க்களம் எவ்வாறு? இருக்கிறது  யார் யார் எல்லாம் எதிரில் இருக்கிறார்கள்? என்று கேட்க்கிறான் ... யார் யார் எல்லாம் எதிரில் இருக்கிறார்கள்  என்று விபரிக்கப்படுகிறது. பின்பு அர்ஜுனன் சுற்றி பார்க்கிறான் ... தனது குரு ... உறவினர்கள் ... உற்றார் என்று தனது சுற்றமே நிற்கிறது. கிருஷ்னரிடம் சொல்கிறான் இவர்களையெல்லாம் கொன்றுவிட்டு  அந்த வெற்றியை வைத்து நான் என்ன செய்யமுடியும்? அவ்வாறு ஒரு வெற்றி எதற்கு ? 
நாம் தோற்றுவிட்டோம் என்று அறிவித்துவிட்டு சென்றுவிடுவோம் கிருஸ்ணா என்கிறான்.

அப்போதான் கிருஷ்ணன் பேச தொடங்குகிறான் ....... நான் எனது தாய் தந்தை குரு உற்றார் உறவினர் ஆச பாசங்கள் எல்லாம் திறந்து  அவற்றுடன் போராடி வெளியேறும்போது... நான் எதை அடைந்துகொள்வேன். 
என்பதே அந்த விளக்கமாக இருக்கிறது.

பகவத்கீதை சரியா/தவறா?
என்பதுக்கான பதில் நாம் பகவத்கீதையை சரியா புரிகிறோமா இல்லையா என்பதில்தான் உண்டு.

சிறுவயதில் குழந்தைக்கு உணவு ஊட்ட தாய் இத்தியில் உம்மாண்டி இருக்கு என்று சொல்லி பயம்காட்டி 
உணவை ஊட்டி விடுகிறார். அது ஒரு தற்காலிக தீர்வாக அப்போது இருந்தாலும் ... நாம் பதின்ம வயதை எட்டும்போது  இருட்டு வந்ததும் அந்த உம்மாண்டியை எதிர்கொள்ள நேர்ந்துவிடுகிறது. அப்போது உம்மாண்டி  நல்லவர்களுக்கு ஒன்றும் செய்யாது தீயவர்களையே பிடிக்கும் என்று ஒரு நம்பிக்கை கதையை  
கூறிவிடுவார்கள். அதில் எமக்கு உருமாண்டியுடன் ஒரு உறவும் நாம் நல்லவர்களாக இருந்துவிட வேண்டும் எனும்  எண்ணமும் தோன்றிவிடுகிறது.

சிலர் வெளிநாடு வந்ததும் தாம்தான் விஞ்ஞானிகள் என்று எண்ணி 
உருமாண்டி என்று ஒன்று இல்லை என்பதை தாம்தான் கண்டுபிடித்ததாக இங்கே எழுதி 
பெருமைப்பட்டு கொள்கிறார்கள். உம்மண்டி என்பது ஒரு கற்பனை என்பது அந்த தாய்க்கும் தெரிந்ததுதான். 

மேலே இருக்கும் கதையில் அவர்கள் முன்னையோரின் தவறுகளை எங்கள் தலையில் கட்டிவிட 
எண்ணவில்லை. முன்னையோர் ஒரு தவறான வழியில் சென்று இருந்தால் கூட அதை தொடர வேண்டிய தேவை  எங்களுக்கு இல்லை. தவறு என்பது எமது மூதையர் தாய்/தந்தையர் செய்திருப்பினும் தவறே அதை திருத்தவேண்டியது எங்கள் கடமை .... அல்லது அதன் பலனை நாம் பெறுவோம் என்றுதான் சொல்கிறது. 

மேலிருக்கும் கதையை நாம் உலகில் இப்போ அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம் 
எமது முன்னையோர் முன்னேற்றம் என்று காடழித்தது நகரங்களை உருவாக்கினார்கள்  
நாம் தூசுபடிந்த காற்று  மழையின்மை .. வறட்ச்சி ... இரசாயன மரக்கறிகள் என்று போராடுகிறோம்.

இந்த கதையை சரியாக புரிந்து நாம் சரியாக செயல்பாடாது போனால் 
எமது அடுத்த தலைமுறைதான் அதற்கான அறுவடையை செய்யப்போவது 

அது சரியா/தவறா?  நீதியா/நியாயமா? என்பதெல்லாம் மழையை தோற்றுவிக்காது 
இயற்கை சுழற்சிதான் மழையை தோற்றுவிக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா? ஆர் யூ ஷுவர் மருதர்? இது விஞ்ஞான முறைமை பற்றி நீங்கள் படித்த பிறகா அல்லது படிக்காமலே உணர்ந்த பிறகு தெரிந்த உண்மையா?😎

யாரந்த 9 கிரகங்களையும் முதலில் கண்டு பிடித்தார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2021 at 05:56, பிரபா சிதம்பரநாதன் said:

“ நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வோம். “

இது அவரவர் தனிப்பட்ட விடயமாக இருந்தாலும் இதில் ஒரு விடயத்தை ஏற்க முடியவில்லை.. அதைப்பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்.. 

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு எதுவித இடையூறுகளும் இல்லாமல் இருக்கும் பொழுது, எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை தடம் புரளும் பொழுது, உங்களது பெற்றவர்கள் ஏதாவது பிழை செய்திருப்பார்கள், அதனால்தான் இப்படி” என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?. 

எங்களது செயல்களால்/எங்களின் முடிவுகளால்தான் எங்களின் வாழ்க்கையும் நடைபெறுகிறது, அதை எப்படி எங்களது பெற்றவர்களின் செயல்களில் போடலாம்.. 

அதேபோல, எங்களது செயல்களுக்கு எங்களது பிள்ளைகள் பலனை அனுபவிப்பார்கள் என்பதும் எந்தவிதத்தில் சரி? 

நான் தவறு செய்தால் அதற்கான தண்டனையை நான்தானே அனுபவிக்கவேண்டும், அப்பொழுதுதானே நாளைக்கு என் பிள்ளை அதே தவறை செய்யாது வளருவார்கள்!

இரண்டாவது, பிள்ளைகளின் தவறான செயல்களை பார்த்து பெற்றவர்கள் மனம்வருந்தினால் முற்பிறப்பின் பலனின் விளைவாகத்தான் இப்படியான பிள்ளைகள் என்பதும் எந்தவிதத்தில் நியாயம், முற்பிறப்பில் என்ன தவறு என தெரியாமல் தற்போதைய வாழ்வில் தண்டனை அனுபவிப்பது சரியா? 

 

இந்த கதையை காவி திரிபவர்கள் சிந்தனையில் தெளிவின்மை அறியாமை இருக்கிறதே தவிர 
இந்த கதையை உருவாக்கியவன் தெளிவு உள்ளவன்தான் 
சிலர் மூடத்தனமாக பலதையும் நம்பி விடுகிறார்கள்.

இந்த கதை எழுதியவனுக்கு நூறுவீதம் தெரியும் 
200-300 வருடம் முன்பு வாழ்ந்த எம் முன்னோர் இனி சவக்காலைக்குள்ளால் 
எழும்பிவந்து அவர்கள் பிழையை திருத்தப்போவதில்லை என்று 

ஆனால் அடுத்துவரும் ஒரு 200-300 வருடங்களில் இப்போ இந்த கதையை வாசித்துக்கொண்டு வாழ்ந்த்துக்கொண்டு இருக்கும் நாம் இன்னொரு தலைமுறையின் முன்னோராக இருப்போம் 
ஆகவே அந்த தலைமுறையை பாதிக்காத ஒரு வாழ்வு முறையை நாம் வாழவேண்டிய கட்டயாம் 
எமக்கிருக்கிறது என்பதே இதன்மூலம் நாம் புரிய கூடியது .

நான் குடித்துவிட்டு காரை ஓடி சென்று இன்னொரு காரில் மோதினால் 
அதன் பிரதிபலனை எனது பிள்ளை எதிர்காலத்தில் சந்திக்கிறது என்பதை எங்களால் மறுக்க முடியாது 
என்னுடைய வாழ்க்கை தராதரம் எனது பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதே 
இங்கு கூறப்படுகிறது. இங்கு திருந்தவேண்டியது நான்தான் அதனால் வரும் 
பின் விளைவுகளை திருத்தக்கூடிய சக்தியை விடவும் அதை அனுபவிக்க கூடிய ஒரு 
வாழ்க்கையே பிள்ளைக்கு அமையும் என்பதை விட அதுதானே அமைகிறது. 
அதை எங்கள் கண்ணாலேயே பார்க்கிறோமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Maruthankerny said:

இந்த கதையை காவி திரிபவர்கள் சிந்தனையில் தெளிவின்மை அறியாமை இருக்கிறதே தவிர 
இந்த கதையை உருவாக்கியவன் தெளிவு உள்ளவன்தான் 
சிலர் மூடத்தனமாக பலதையும் நம்பி விடுகிறார்கள்.

இந்த கதை எழுதியவனுக்கு நூறுவீதம் தெரியும் 
200-300 வருடம் முன்பு வாழ்ந்த எம் முன்னோர் இனி சவக்காலைக்குள்ளால் 
எழும்பிவந்து அவர்கள் பிழையை திருத்தப்போவதில்லை என்று 

ஆனால் அடுத்துவரும் ஒரு 200-300 வருடங்களில் இப்போ இந்த கதையை வாசித்துக்கொண்டு வாழ்ந்த்துக்கொண்டு இருக்கும் நாம் இன்னொரு தலைமுறையின் முன்னோராக இருப்போம் 
ஆகவே அந்த தலைமுறையை பாதிக்காத ஒரு வாழ்வு முறையை நாம் வாழவேண்டிய கட்டயாம் 
எமக்கிருக்கிறது என்பதே இதன்மூலம் நாம் புரிய கூடியது .

நான் குடித்துவிட்டு காரை ஓடி சென்று இன்னொரு காரில் மோதினால் 
அதன் பிரதிபலனை எனது பிள்ளை எதிர்காலத்தில் சந்திக்கிறது என்பதை எங்களால் மறுக்க முடியாது 
என்னுடைய வாழ்க்கை தராதரம் எனது பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதே 
இங்கு கூறப்படுகிறது. இங்கு திருந்தவேண்டியது நான்தான் அதனால் வரும் 
பின் விளைவுகளை திருத்தக்கூடிய சக்தியை விடவும் அதை அனுபவிக்க கூடிய ஒரு 
வாழ்க்கையே பிள்ளைக்கு அமையும் என்பதை விட அதுதானே அமைகிறது. 
அதை எங்கள் கண்ணாலேயே பார்க்கிறோமே. 

சரி, மருதர். 9 கிரகங்களை யார் கண்டு பிடித்தது முதலில்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மூடநம்பிக்கை முட்டாள்தனம் அது இது என்று வகுப்பெடுக்க அனைவருக்கும் தெரியும் வரும். ஆனால் நன்றாக சிந்தித்தால் நிதானமாக மனசாட்சியுடன் பேசினால் எல்லோரிடமும் அது உண்டு இடம் வலம் நேரம் காலம் வயதைப் பொறுத்து அது மாறுபடும். அவ்வளவு தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்,

மாதா பிதா வினை மக்களுக்கு(மக்கட்கு-பிள்ளைகளுக்கு) என்பது

(தீயனவற்றிற்குத் துணை போன/செய்த) பெற்றோர், பிள்ளைகள் எதிர் கொள்ளும் தீராத/தீர்க்க முடியாத துன்பங்களைப் பார்ப்பதனூடாக அடையும் வேதனையே அவர்களுக்கான தண்டனை. 

என்பதாகவே புரிந்து கொள்கிறேன். 

ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா ?

அப்படிப்பார்த்தால்..

யூதர்களை பரிசோதனை எலிகளாகப் பயன்படுத்திய ஜேர்மனியின் இன்றைய நிலை.. உலகப் பொருளாதார வல்லரசு.

ஜப்பானின் மீது அணுக்குண்டு வீசிய அமெரிக்கா உலக வல்லரசு...

அதிகம் யோசிக்க வேண்டாம்.. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதி எப்போது கிடைக்கும்..? இலங்கையில் தமிழினம் கருவறுக்கப்பட்ட பின்னரா ? .. 😏

அரசன் அன்றறுப்பான். தெய்வம் நின்றறுக்கும்.

மாதா பிதா வினை மக்களுக்கு.

என்பன போன்ற வாக்கியங்கள் எல்லாமே மனிதர் அற வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டவைகளே(பயமுறுத்தி) தவிர, எங்கள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதற்காக சொல்லப்பட்டவை அல்ல. 

அன்னம் தண்ணி(பால்) அடிக்கிற கதைகள் எல்லாமே "பகுத்து அறி" என்பதற்கானவையே.. 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

நான்,

மாதா பிதா வினை மக்களுக்கு(மக்கட்கு-பிள்ளைகளுக்கு) என்பது

(தீயனவற்றிற்குத் துணை போன/செய்த) பெற்றோர், பிள்ளைகள் எதிர் கொள்ளும் தீராத/தீர்க்க முடியாத துன்பங்களைப் பார்ப்பதனூடாக அடையும் வேதனையே அவர்களுக்கான தண்டனை. 

என்பதாகவே புரிந்து கொள்கிறேன். 

ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா ?

அப்படிப்பார்த்தால்..

யூதர்களை பரிசோதனை எலிகளாகப் பயன்படுத்திய ஜேர்மனியின் இன்றைய நிலை.. உலகப் பொருளாதார வல்லரசு.

ஜப்பானின் மீது அணுக்குண்டு வீசிய அமெரிக்கா உலக வல்லரசு...

அதிகம் யோசிக்க வேண்டாம்.. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதி எப்போது கிடைக்கும்..? இலங்கையில் தமிழினம் கருவறுக்கப்பட்ட பின்னரா ? .. 😏

அரசன் அன்றறுப்பான். தெய்வம் நின்றறுக்கும்.

மாதா பிதா வினை மக்களுக்கு.

என்பன போன்ற வாக்கியங்கள் எல்லாமே மனிதர் அற வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டவைகளே(பயமுறுத்தி) தவிர, எங்கள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதற்காக சொல்லப்பட்டவை அல்ல. 

அன்னம் தண்ணி(பால்) அடிக்கிற கதைகள் எல்லாமே "பகுத்து அறி" என்பதற்கானவையே.. 😂

இதைத்தான் அதிகம் உள்ளே போகத் தேவையில்லை என்றேன். எதுக்கு சொல்லப்படுகிறது என்பது புரிந்தால் போதும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:

இங்கே மூடநம்பிக்கை முட்டாள்தனம் அது இது என்று வகுப்பெடுக்க அனைவருக்கும் தெரியும் வரும். ஆனால் நன்றாக சிந்தித்தால் நிதானமாக மனசாட்சியுடன் பேசினால் எல்லோரிடமும் அது உண்டு இடம் வலம் நேரம் காலம் வயதைப் பொறுத்து அது மாறுபடும். அவ்வளவு தான். 

சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கும் இந்தத் திரியில் இருக்கும் மூட நம்பிக்கை போன்ற நம்பிக்கைகள் பற்றி  மட்டுமே  பேசப்படுகிறது. சமூகப் பாதிப்பில்லாத, மற்றவனின் மூக்கை அணுகாத நம்பிக்கைகள்- எவ்வளவு தான் அர்த்தமில்லாமல் இருந்தாலும் - யாரும் வைத்துக் கொள்ளட்டும்.

ஆனால், நம்பிக்கைகளுக்கு போலி விஞ்ஞானப் பெயின்ற் அடித்து வலுவூட்ட மருதர் போன்றோர் முயல்வர் தான். அதனால் தான் ஒன்பது கிரகங்களை யாரோ முதலே கண்டு பிடித்து விட்டதாகக் கூறியிருக்கிறார்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பிரித்தானியா   முன்னர் செய்த கொடுமைகளுக்கு இன்று அதன் பலனை அனுபவிக்கின்றது.
அதே போல்  ஜேர்மனியும் முன்னர் செய்த கொடுமைகளுக்கு இன்று  அதன் பலனை அனுபவிக்கின்றது..

இதே போல் தமிழினத்திற்கும் ஒரு கதை உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கும் இந்தத் திரியில் இருக்கும் மூட நம்பிக்கை போன்ற நம்பிக்கைகள் பற்றி  மட்டுமே  பேசப்படுகிறது. சமூகப் பாதிப்பில்லாத, மற்றவனின் மூக்கை அணுகாத நம்பிக்கைகள்- எவ்வளவு தான் அர்த்தமில்லாமல் இருந்தாலும் - யாரும் வைத்துக் கொள்ளட்டும்.

ஆனால், நம்பிக்கைகளுக்கு போலி விஞ்ஞானப் பெயின்ற் அடித்து வலுவூட்ட மருதர் போன்றோர் முயல்வர் தான். அதனால் தான் ஒன்பது கிரகங்களை யாரோ முதலே கண்டு பிடித்து விட்டதாகக் கூறியிருக்கிறார்!

 

உங்களுக்கு தமிழ் வாசிப்பில் குறைபாடு இருந்தால் அதை திருத்திக்கொள்ளுங்கள் 

நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பதை முதலில் வாசியுங்கள் பின்பு உங்கள் பித்தலாட்டங்களை காட்டுங்கள் 
இன்றைய இணைய காலத்திலில் ஒரு 5 வயது குழந்தையே யார் யார் எதை கண்டு பிடித்தான் என்பதை 5 நிமிடத்தில் ஆதாரத்தோடு காட்டும் 

உங்களை போன்ற தமிழ் புரியாத விரண்டாவதிகளுடன் உருண்டுபுரள எங்களுக்கு எந்த வில்லங்கமும் இல்லை 
அப்படியே கல் எறிவதாக ஓரமாக உங்கள் பித்தலாட்டத்தை ஆடிக்கொண்டே போகலாம். 

ஒரு ஆக்கபூர்வமான ஒரு விவாதத்துக்கு  ஒருவன் இருந்தால் அவனுடன் பேசுவதில் பலன் உண்டு 
உங்களைப்போன்ற பித்தலாட்டம் ஆடி ஆவத்துக்கு ஒன்றும் இல்லை 

காளிதாசனின் இலக்கியத்திலே இது இருக்கு ..........

ஒவ்வாரு நாள் சூரிய மறைவிலும் இது உண்டு 

 

 

1*_uf1AOAjck5zGXRdAQhelQ.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலி நம்பிக்கைகளுக்கு  விஞ்ஞானப் பெயின்ற் அடித்து வலுமிக்கதாக காட்டும் முயற்ச்சிகளை மதம் மாற்றி பிரசாரிகள், இந்திய பிஜேபியினர் சமீப காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2021 at 08:30, குமாரசாமி said:

உலகின் மூத்த மொழி தமிழ்.இது உலகமே ஒத்துக்கொண்ட விடயம்.
தமிழின வரலாறுகள்  மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கின்றது.
இந்தோனிசியாவில் தமிழர் வழிபடும் தெய்வ சிற்பங்கள் காடுகளில் தேடுவாரற்று இருக்கின்றது.
கொரிய மொழியுடன் தமிழ் மொழி ஒற்றுமை பற்றிய ஆராய்சிகள் ஏராளம்.
கம்போடியாவில் சைவ கோவில் குளங்கள்.
இலங்கையிலும் காலி தொடக்கம் காங்கேசந்துறை வரைக்கும் தமிழர் வாழ்ந்த அடையாளங்கள்.இன்னும் பல ஆயிரம் தமிழினம் சம்பந்தப்பட்ட அடையாளங்களை சொல்லலாம்.

இருந்தாலும் இன்று தமிழனுக்கு ஒரு சொந்த நாடில்லை. ஏன் என்று உங்களால் விளக்க முடியுமா?

வணக்கம் !!

நீங்கள் ஏன் இந்த கேள்வியை கேட்டீர்கள் என ஓரளவிற்கு ஊகிக்கமுடிகிறது.. என்னால் உடனடியாக பதில் எழுத முடியவில்லை, மன்னிக்கவும்..

இன்று 30/6/2021 நிதியாண்டு இறுதிநாள் என்பதால், எனது வேலையில் நேற்றும் இன்றும் அதிக வேலைகள்..ஆகையால் எனது பதிலை இன்றிரவு அல்லது நாளை எழுதுகிறேன்.. 

நன்றி.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரேக்க இரசதோஷத்தினுடன் படுத்து கிடந்தது பெயிண்டிங் பழகியவர்கள் வந்துவிட்டார்கள் 

இனி திரி பூரா சித்திரம்தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

உங்களுக்கு தமிழ் வாசிப்பில் குறைபாடு இருந்தால் அதை திருத்திக்கொள்ளுங்கள் 

நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பதை முதலில் வாசியுங்கள் பின்பு உங்கள் பித்தலாட்டங்களை காட்டுங்கள் 
இன்றைய இணைய காலத்திலில் ஒரு 5 வயது குழந்தையே யார் யார் எதை கண்டு பிடித்தான் என்பதை 5 நிமிடத்தில் ஆதாரத்தோடு காட்டும் 

உங்களை போன்ற தமிழ் புரியாத விரண்டாவதிகளுடன் உருண்டுபுரள எங்களுக்கு எந்த வில்லங்கமும் இல்லை 
அப்படியே கல் எறிவதாக ஓரமாக உங்கள் பித்தலாட்டத்தை ஆடிக்கொண்டே போகலாம். 

ஒரு ஆக்கபூர்வமான ஒரு விவாதத்துக்கு  ஒருவன் இருந்தால் அவனுடன் பேசுவதில் பலன் உண்டு 
உங்களைப்போன்ற பித்தலாட்டம் ஆடி ஆவத்துக்கு ஒன்றும் இல்லை 

காளிதாசனின் இலக்கியத்திலே இது இருக்கு ..........

ஒவ்வாரு நாள் சூரிய மறைவிலும் இது உண்டு 

 

 

1*_uf1AOAjck5zGXRdAQhelQ.jpeg

மருதர்: தமிழ் புரியாமல் உங்கள் பின் நவீனத்துவ பந்திகளில் புதைந்திருக்கும் கற்பனைகளை எப்படிப் புரிந்து கொள்வதாம்?😂

"ஒன்பது கிரகங்களை முன்னதாகவே உலகின் இன்னொரு பகுதியில் கண்டு பிடித்து" விட்டார்களென்றால் அது யார் என்பது இலகுவான கேள்வியல்லவா? ஐந்து வயதுப் பிள்ளை உங்கள் வீட்டில் இல்லையோ தேடிச் சொல்ல?

இதுக்குப் போய் பாரதி தாசன் அது இதென்று சும்மா சடையலெல்லாம் ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

போலி நம்பிக்கைகளுக்கு  விஞ்ஞானப் பெயின்ற் அடித்து வலுமிக்கதாக காட்டும் முயற்ச்சிகளை மதம் மாற்றி பிரசாரிகள், இந்திய பிஜேபியினர் சமீப காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

கௌரவர்கள் IVF இனால் பிறந்தார்கள், புஷ்பக விமானம் தான் அப்போதைய UAV ! இது போன்ற கோமாளிக் கருத்துகளைத்  தான் நீங்கள் நம்பி, புதுத் தியரியாகப் பரப்ப வேண்டும். இப்படிச் செய்தால் உங்களை ஐன்ஸ்ரைன் என்று மக்கள் நம்புவர் (ஏனெனில் ஐன்ஸ்ரைனின் சார்புக் கோட்பாட்டின் சில பகுதிகளும் உடனே ஏற்றுக் கொள்ளப் படவில்லை!😂)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் மேலே நானும் எழுதி இருக்கிறேன் 
முதலில் தமிழ்   பின்பு மற்றதை பார்க்கலாம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

இதைத்தான் மேலே நானும் எழுதி இருக்கிறேன் 
முதலில் தமிழ்   பின்பு மற்றதை பார்க்கலாம் 
 

மருதர்: உலகின் ஒரு பகுதியில் 9 கிரகங்களை யாரோ முதலில் கண்டு பிடித்திருக்கிறார்கள், அது யாரென்று உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது கண்டு பிடிக்கப் பட்டவை கிரகங்கள் அல்ல என்பது தற்போது  புரிந்து விட்டதா?

இதைத் தான் சுட்டிக் காட்டினேன். விஞ்ஞானம் என்பது சும்மா இணையத்தில் தேடும் போது வருவதையெல்லாம் அடித்து விடுவதல்ல! ஆனால், கிரேக்க ஞானிகளோடு படுத்திருந்து படிக்க வேண்டியதுமில்லை. அதற்குரிய வழிகள் இருக்கின்றன. இதெல்லாம் புரியாமல் சும்மா நான் வாசித்தேன் சொல்கிறேன் என்றால் சொல்லுங்கள், ஆனால் ஒருவன் சுட்டிக் காட்டும் போது தவறெனில் ஏற்றுக் கொள்ளுங்கள்.

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2021 at 06:01, Maruthankerny said:

என்னுடைய வாழ்க்கை தராதரம் எனது பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதே 
இங்கு கூறப்படுகிறது. இங்கு திருந்தவேண்டியது நான்தான். 

நானும் அதைத்தான் கூறுகிறேன்.. 
பாவ/புண்ணியங்கள், முன்வினைப்பயன்கள் என்பதைவிட,  எனது பெற்றோர்களின் வாழ்க்கைமுறை, அவர்கள் கூறிவளர்த்த பண்புகளுடன் எனது முடிவுகளால் மட்டுமே
என் வாழ்க்கை உள்ளது. 

அதே போல நாளை, எனது நிகழ்கால வாழ்க்கையும் அனுபவங்களும் நான் எவ்வகையான பண்புகளை  என் பிள்ளைகளுக்கு சொல்லிவளர்க்கிறேன், வழி காட்டுகிறேன் என்பதும், அவர்களது முடிவுகள் எதிர்கொள்ளும் அனுபவங்களுமே அவர்களது வாழ்க்கையை தீர்மானிக்கும்.. 
அவ்வளவுதான்.. இதற்கு ஏன் யாருமே நிரூபிக்க முடியாத முற்பிறப்பின் பலன்களை கொண்டுவந்து சேர்க்கவேண்டும்?

 

On 29/6/2021 at 08:30, குமாரசாமி said:

பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் அவரவர் தனிப்பட்ட விடயம் என்றாலும் கூட எங்களை சுற்றி நடக்கும் சம்பவங்களைப்பார்க்கும் பொழுது, அனேகமானவர்கள் சுயநலத்துடனும், போட்டி மனப்பாங்குடனும், அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர்களாக இருக்கும் பொழுது அவர்களின் சந்ததி தீமைகளை அனுபவிக்கும் என்றால்.. அதிலும் முரண்பாடுதான் உள்ளது.. அதனால்தான் நான் நிரூபிக்க முடியாத பாவ/புண்ணியங்கள், முற்பிறப்பு பயன்களை கூறுவதை ஏற்கமுடியவில்லை. அவ்வளவுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் அவரவர் தனிப்பட்ட விடயம் என்றாலும் கூட எங்களை சுற்றி நடக்கும் சம்பவங்களைப்பார்க்கும் பொழுது, அனேகமானவர்கள் சுயநலத்துடனும், போட்டி மனப்பாங்குடனும், அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர்களாக இருக்கும் பொழுது அவர்களின் சந்ததி தீமைகளை அனுபவிக்கும் என்றால்.. அதிலும் முரண்பாடுதான் உள்ளது.. அதனால்தான் நான் நிரூபிக்க முடியாத பாவ/புண்ணியங்கள், முற்பிறப்பு பயன்களை கூறுவதை ஏற்கமுடியவில்லை. அவ்வளவுதான். 

நான் எழுதுவது அனுபவங்கள்/நேரில் கண்டவைகளை வைத்து மட்டுமே.

எனக்கு தெரிந்து ஊரிலோ இங்கேயோ வட்டிக்கு காசு கொடுத்தவர்களின் குடும்பங்களின் வாழ்க்கை சீரழிந்ததாகவே காண்கின்றேன். பிள்ளைகள் படித்து பட்டம் பதவி பெற்றாலும் ஏதோ ஒரு முக்கிய குறைகளுடனேயே வாழ்கின்றார்கள்.

மற்றவர்களின் காணி வீடுகளை அபகரித்தவர்களின் பிள்ளைகள் வீடு வசதியில்லாமல் அலைவதை காண்கின்றேன்.

அன்று  இந்தோனேசியா தொடக்கம் கம்போடியா ஈறாக ஆண்டவர்கள் என்ன பாவங்களை செய்தார்களோ யாருக்குத்தெரியும்? 
இன்று தமிழன் நாடில்லாமல் தவிக்க?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.