Jump to content

தென்னிலங்கை மீன்களை வாங்க மறுக்கும் மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கை மீன்களை வாங்க மறுக்கும் மக்கள்

 
X-Press-pearl2-696x696.jpg
 18 Views

இலங்கையின் மேற்கு கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் கடல் மாசு அடைந்துள்ளதால் தென்னிலங்கை மக்கள் மேற்கு கடல்பகுதியில் பிடிக்கும் மீன்களை வாங்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொடவில் உள்ள மொத்த மீன் விற்பனை சந்தையில் மீன்கள் வாங்குவாரற்று தேங்கிகிடப்பதாக மீன் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எம்மிடம் அதிக மீன்கள் உள்ளது ஆனால் வாங்குவதற்கு தான் ஆட்கள் இல்லை. எனவே அதனை விநியோகிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்ததத்தினால் பெருமளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், வடக்கு கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதி பாதுகாப்பாக உள்ளதுடன், அங்கு தற்போது மீன்பிடி பருவநிலையும் உள்ளது. எனவே அங்குள்ள மீன்களை தென்னிலங்கைக்கு விநியோகம் செய்ய வேண்டும் என இலங்கை மீன்வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இராசாயணக்கழிவுகள் கலந்துள்ள கடற்பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை உண்பதை தவிர்க்குமாறு கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் கடல் உணவுத்துறை பிரிவின் தலைவர் கலாநிதி லங்கா விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=52202

Link to comment
Share on other sites

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

செய்யலாம் துல்பன் அண்ணா!! ஆனால் உள்ளூர் தேவைக்கான அளவை பூர்த்தி செய்துகொண்டு தென்னிலங்கைக்கோ மற்றைய இடங்களுக்கோ அனுப்பவேண்டும்.. எங்களில் ஒரு குணம் உள்ளது இலாபம் மட்டுமே கண்களுக்கு முன்பு தெரியும்.. உள்ளூர் மக்களும் பின்பு அதிகவிலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை வராமல், கண்கானிப்புடன் செய்தால் எல்லோரும் பயன் அடைவார்கள்

Link to comment
Share on other sites

1 minute ago, பிரபா சிதம்பரநாதன் said:

செய்யலாம் துல்பன் அண்ணா!! ஆனால் உள்ளூர் தேவைக்கான அளவை பூர்த்தி செய்துகொண்டு தென்னிலங்கைக்கோ மற்றைய இடங்களுக்கோ அனுப்பவேண்டும்.. எங்களில் ஒரு குணம் உள்ளது இலாபம் மட்டுமே கண்களுக்கு முன்பு தெரியும்.. உள்ளூர் மக்களும் பின்பு அதிகவிலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை வராமல், கண்கானிப்புடன் செய்தால் எல்லோரும் பயன் அடைவார்கள்

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் கூறியது எமது மீனவர்களுக்கான சந்தையை திறம்பட பயன்படுத்தி மீன்பிடி தொழிலை வட கிழக்கில் நவீனமயப்படுத்தலாம் என்பதையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

எமது ஊரில் இப்படியான ஒரு இணைப்பை உருவாக்க புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் முனைந்து அதற்கு தேவையான முன் அனுபவம் இருந்த ஒருவர் மூலம் முயற்சி செய்தோம். என்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து தருகிறோம் ஆனால் ஒரே அமைப்பாக தேவையை முன் வையுங்கள் என்று.

ஆனால் அந்த சிறிய ஊரிலேயே நூற்றுக்கணக்கான சங்கங்கள். தலைவர்கள்.

ஆளாளுக்கு தத்தம்மிடம் பணத்தை தாருங்கள் என்று தான் கேட்கிறார்களே தவிர அவர்களுக்குள் அவர்கள் எதுவும் பேச தயாராக இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் கூறியது எமது மீனவர்களுக்கான சந்தையை திறம்பட பயன்படுத்தி மீன்பிடி தொழிலை வட கிழக்கில் நவீனமயப்படுத்தலாம் என்பதையே. 

நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் நல்லவகையான மீன்கள், கடல் உணவுகள் எல்லாம் வெளியே போனபின்பு உள்ளூர் மக்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் போக்கூடாது.. 

- கிடைத்திருக்கும் வாய்ப்பைபற்றி பேசவேண்டும்

- எல்லாவற்றையும் விட இவர்களை     ஒன்றினைக்கவேண்டும்.. 

- இவ்வளவு வீதம் ஏற்றுமதி, இவ்வளவு வீதம் உள்ளூர் சந்தைக்கு என விதி இருக்கவேண்டும்

- உள்ளூரில் உள்ள மீனவ சங்கங்களிற்கும் இத்தனை வீதம் ஏற்றுமதி, உள்ளூர் சந்தை என குறிப்பிடவேண்டும். 

- வேறுவகையான அழுத்தங்கள் வந்தால் அதை எப்படி சமாளிக்கவேண்டும் 

- இவற்றையெல்லாம் கவனிக்கவும் வேண்டும்..

நல்லவாய்ப்பை பயன்படுத்தினால் அங்குள்ள மீனவர்கள், அதை சார்ந்து வேறு தொழில்வாய்ப்புகள் என நல்ல பயனை அடையலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுரிலும் மக்கள் கடலுனவு வாங்கப் பயப்பிடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தறையில் பிடிபடும் மீனை சியம்பலாண்டுவ வழியாக கல்முனைக்கு அனுப்பி, அங்கே இருந்து கொழும்புக்கு எடுப்பபித்தால் பிராப்ளம் சால்விட்😆

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

மாத்தறையில் பிடிபடும் மீனை சியம்பலாண்டுவ வழியாக கல்முனைக்கு அனுப்பி, அங்கே இருந்து கொழும்புக்கு எடுப்பபித்தால் பிராப்ளம் சால்விட்😆

இதனை நான் கருத்தில் கொள்கிறேன்.

இப்படிக்கு  😃

?m=02&d=20071221&t=2&i=2563959&r=img-200

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

தென்னிலங்கை மக்கள் மேற்கு கடல்பகுதியில் பிடிக்கும் மீன்களை வாங்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருவாடு போட்டு வட இலங்கைக்கு அனுப்பலாம் .....அதற்குறிய அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

எமது ஊரில் இப்படியான ஒரு இணைப்பை உருவாக்க புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் முனைந்து அதற்கு தேவையான முன் அனுபவம் இருந்த ஒருவர் மூலம் முயற்சி செய்தோம். என்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து தருகிறோம் ஆனால் ஒரே அமைப்பாக தேவையை முன் வையுங்கள் என்று.

ஆனால் அந்த சிறிய ஊரிலேயே நூற்றுக்கணக்கான சங்கங்கள். தலைவர்கள்.

ஆளாளுக்கு தத்தம்மிடம் பணத்தை தாருங்கள் என்று தான் கேட்கிறார்களே தவிர அவர்களுக்குள் அவர்கள் எதுவும் பேச தயாராக இல்லை. 

சாதியத் தூக்கிப் பிடித்தால் எப்படி ஒற்றுமை வரும் ?

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் கூறியது எமது மீனவர்களுக்கான சந்தையை திறம்பட பயன்படுத்தி மீன்பிடி தொழிலை வட கிழக்கில் நவீனமயப்படுத்தலாம் என்பதையே. 

இது மேலும் சிங்களவர்களுக்கும் கல்முனை முஸ்லிம்களுக்கும்தான் வழி வகுக்கும் 
எம்மவர்க்கு சரிவராது. வடக்கு கிழக்கு மீனவர்கள் அதிகமாக பயன்படுத்துவது 
சிறிய ரக படகுகளை அவற்றில் அதிக அளவான வலைகள் ... பிடிபட்டால் மீன்கள் ஏற்றமுடியாது 

அதுக்கு வள்ளம் போன்ற தென்னிலங்கை ரக கலன்கள் வேண்டும் 
அது வைத்திருந்தால் அதை கொண்டு வந்து கட்டுவதுக்கு இறங்குதுறை வேண்டும் 

வடபகுத்திக்கு மயிலிட்டியிலும் கொழும்புத்துறையிலும் ஒன்று உண்டு 
அதில் 10-12 வள்ளம் கட்ட முடியும்.

வேறு ஊரில் கொண்டு சென்று கட்டினால் காவலுக்கு ஆள் வேண்டும் 
தங்கள் மீன் வளத்தை அள்ளுகிறார்கள் என்று அந்த ஊரை சேர்ந்தவர்கள் வள்ளத்தை அறுத்து
கடலில் விட்ட சம்பவங்களும் உண்டு ஆதலால் .... யாரும் வள்ளம் வாங்குவதில்லை. 

இப்போ மொக்குத்தனமாக பேராசை பட்டு இழுவை முறை ஒன்றை நாலு படகுகளை ஒருங்கிணைத்து 
செய்கிறார்கள் அது மொத்த மீன் வளத்தையும் அழித்து விடும்.  எல்லா மீனையும் குஞ்சுகளையும் சேர்த்து 
அள்ளுவது. 

எல்லா கரையோர ஊருக்கும் இறங்கு துறை வேண்டும் 
சென்ற கிழமை இங்கு ஒரு திரி இருந்தது 
யாரோ ஒரு ஊர் மக்கள் திருகோணமலை பக்கம் 
கடந்த 10 வருடமாக கேட்க்கிறோம் தருகிறோம் என்று சொல்கிறார்கள் 
யாரும் இங்கு வருவது கூட இல்லை என்று சொல்லி இருந்தது.

எங்களை சுற்றி கடலும் அதன் வளமும் உண்டு 
பயன்படுத்த அமைச்சர்களுக்கும் அரசுக்கும் தெரியவில்லை.
முல்லைத்தீவில் இருந்து சர்வதேச எல்லை வரை எங்கள் கடல்தான் 

Map of the Sri Lankan Exclusive Economic Zone (EEZ) (Source: Maritime... |  Download Scientific Diagram

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

இதனை நான் கருத்தில் கொள்கிறேன்.

இப்படிக்கு  😃

?m=02&d=20071221&t=2&i=2563959&r=img-200

சாட்டோட இதுதான் சாட்டென்று தென்னிலங்கையாரை கொண்டுவந்து இறக்கப்போறார் அமைச்சர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழுவைப்படகை பயன்படுத்தி எதுவித கட்டுப்பாடுகளுமின்றி மீன் பிடிக்கும்போது பெரிய மீன்கள் மட்டுமல்லாது சிறிய குஞ்சுமீன்களும் அள்ளியெடுத்து செல்லப்படுவதால் கடலில் மீன்களின் அளவு நாளடைவில் குறைவடையும். இது நாட்டின் மீன்பிடி தொழில் மூலாதாரத்தையே நாசம் செய்யும் ஒரு நடவடிக்கையாகும். 

இலங்கை அரசாங்கம் கடல் பிராந்தியத்தில் ரோந்து கப்பல்களில் கடல்காவலர்களை ஈடுபடுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இழுவைப் படகுகளை நிறுத்தி அவற்றில் பயன்படுத்தப்படும் வலைகளின் நூல் இடுக்குவிட்ட அளவுகளை கண்காணிப்பு செய்யவேண்டும். அரசாங்கத்தால் வரையறை செய்யப்பட்ட பருமனான குஞ்சு மீன்கள் தப்பி செல்லும் அளவுக்கு வலைநூல்களின் இடைவெளி அமைக்கப்பட்டிருந்தால் மட்டும் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பதுடன் அதை மீறுபவர்களுக்கு மீன்பிடித்தடை விதிக்கப்பட்டு தண்டமும் அறவிடப்பட வேண்டும்.

கடலில் மீன் உற்பத்தியை அதிகரிக்க மேலை நாடுகளில் செய்தார்கள் என்று சொல்லிக்கொண்டு  பழைய பஸ்வண்டிகளை நடுக்கடலுக்கு எடுத்து சென்று போட்டால் மட்டும் போதாது. அதே மேலை நாடுகளில் கரையோர காவலர்கள் என்ன பொறுப்புமிக்க பணியை செய்கிறார்கள் என்று தெரிந்து அதுபோலவும் செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tulpen said:

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

இப்பவே மீன் எல்லாம் தென்னிலங்கைக்கு தான் போகுது. ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வாதவூரான் said:

இப்பவே மீன் எல்லாம் தென்னிலங்கைக்கு தான் போகுது. ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

ஜாமீன் கடல்லயே இல்லையாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசையூர் மீனுக்காக கொரோனாவைக் கணக்கில் எடுக்காத யாழ்ப்பாணத்தார்!! (Photos)

pasiayoor_groud_01-800x445-1.jpg

 

யாழ்.பாசையூர் மீன் சந்தையில் இன்றைய தினம் மீன்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முண்டியடித்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

கோவிட் தொற்று பரவல் காரணமாக தற்போது நாடளாவிய ரீதியில் பயண தடை அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாறு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டுள்ளனர்.

இதன்போது சிலர் சமூக இடைவெளிகளை பேணாதும், முகக்கவசங்களை சீராக அணியாமலும் பொறுப்பற்ற விதத்தில் மீன் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

https://vampan.net/30112/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஜாமீன் கடல்லயே இல்லையாம்🤣

மண்டையிலை  அப்புக்காத்து மூளை உள்ள ஆக்கள் தான் எப்பவும் முன்  ஜாமீன் பின் ஜாமீன் யோசினையோடை திரிவினம் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

மண்டையிலை  அப்புக்காத்து மூளை உள்ள ஆக்கள் தான் எப்பவும் முன்  ஜாமீன் பின் ஜாமீன் யோசினையோடை திரிவினம் :grin:

இல்லயண்ணை ஜாமீன் கிடைச்சால் ஒரு கிலோ வாங்கி சாட்டைக்கு அனுப்பலாம் எண்டு யோசிச்சனான்.

ஏற்கனவே 14 நாள் எண்டாங்கள். இப்ப கரூரில இன்னொரு வழக்குமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

பாசையூர் மீனுக்காக கொரோனாவைக் கணக்கில் எடுக்காத யாழ்ப்பாணத்தார்!! 

அதென்ன யாழ்ப்பாணத்தார்????😪

14 hours ago, Kapithan said:

சாதியத் தூக்கிப் பிடித்தால் எப்படி ஒற்றுமை வரும் ?

☹️

என்ன  சாதி???

புரியவில்லை

மீனவத்தொழிலை  செய்பவர்கள் ஒரு  சங்கமாவதில்  என்ன  சிக்கல்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஜாமீன் கடல்லயே இல்லையாம்🤣

உங்கடைநக்கல்நையாண்டியளைக் கொண்டு போய்க் குப்பையிலை போடுங்கோ. இது என்னுடைய அம்மா, சகோதரர்கள் சொன்னது.

Link to comment
Share on other sites

நேற்று கொழும்பில் வசிக்கும் என் அம்மாவுடன் கதைக்கும் போது மரக்கறிகளில் இருந்து எல்லாமே Apartment வாசலில் கொண்டு வந்து விற்கின்றார்கள் என்றும், ஆனால் மீன் காரரை மட்டும் வாசலுக்கு கூட வர விடுவதில்லை என்றும் சொன்னார். ஏதாவது கெமிக்கல் மீனை கொண்டு வந்து அபார்ட்மெண்ட் முழுக்க நோயை பரப்பி விடுவார்கள் என்று எவருமே மீன் வாங்குவதில்லையாம்.

7 hours ago, வாதவூரான் said:

இப்பவே மீன் எல்லாம் தென்னிலங்கைக்கு தான் போகுது. ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

ஊரில் பெரிய நண்டு, பெரிய இரால், கலவாய் போன்ற பெரிய மீன்கள் போன்றவற்றை முந்தி காண்பது அரிது என்றும் இடையில் கொரனா காலத்தில் கொஞ்சம் மலிவாக வந்ததென்றும் இப்ப அது மீண்டும் தென்னிலங்கைக்கு தான் போகின்றது என்றும் ஊரில் இருக்கும் என் உறவுகளும் சொல்கின்றனர்.

5 hours ago, colomban said:

பாசையூர் மீனுக்காக கொரோனாவைக் கணக்கில் எடுக்காத யாழ்ப்பாணத்தார்!! (Photos)

pasiayoor_groud_01-800x445-1.jpg

 

யாழ்.பாசையூர் மீன் சந்தையில் இன்றைய தினம் மீன்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முண்டியடித்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

 

உலகில் எனக்கு மிகப் பிடித்த இடங்களில் ஒன்று இந்த பாசையூர் மீன் சந்தை. மீன் குழம்பின் வாசனையை வைத்தே என்ன மீன் சமைக்கின்றனர் என்று அறியும் அளவுக்கு மீனை எனக்கு பரிச்சயம் செய்த சந்தை இது. ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும் போது மறக்காமல் போகும் இடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாதவூரான் said:

ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

நீங்கள் உங்கள் உறவினர் பற்றி எதுவும் எழுதவில்லை.

எழுதி இருந்தால் அதை நிச்சயம் கடந்து போயிருப்பேன்.

ஆனால் ஒரு பொதுகளத்தில் வந்து ஊரில ஒரு மீனும் இல்லையாம் என்று எழுதினால் நக்கல் பதில்தானே வரும்?

மேலே கொழும்பான் இணைத்த செய்தியை பாருங்கள் ஊரில் மீன் இல்லை என்றால் பாசையூர் மார்கெட்டுக்கு சனம் என்ன வெள்ளி பார்க்கவே போனது?

நீங்கள் எழுதும் கருத்துக்குத்தான் பதில் எழுத முடியும், நீங்கள் யாரை மனதில் வைத்து எழுதுகிறீர்கள் என்பதை நாம் மூக்கு சாத்திரம் பார்க்க முடியாது.

45 minutes ago, நிழலி said:

ஊரில் பெரிய நண்டு, பெரிய இரால், கலவாய் போன்ற பெரிய மீன்கள் போன்றவற்றை முந்தி காண்பது அரிது என்றும் இடையில் கொரனா காலத்தில் கொஞ்சம் மலிவாக வந்ததென்றும் இப்ப அது மீண்டும் தென்னிலங்கைக்கு தான் போகின்றது என்றும் ஊரில் இருக்கும் என் உறவுகளும் சொல்கின்றனர்.

இப்போதைய நிலைக்கு தென்னிலங்கைகு ஏற்ற முடியாததால் - ஊரில் நல்ல மலிவாக கிடைப்பதாக தகவல்.

அதனால்தான் மீன் மாக்கெட்டில் சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கிராமத்து மீன் சந்தை திறக்க அனுமதி இல்லையே? வீதிகளில் வைத்து வியாபாரம் செய்தவர்களையும் வாங்கியவர்களையும் பொலிசார் தாக்கி விரட்டிவிட்டார்கள். கடலுணவுகள் வீதி வீதியாக தனிநபர்கள் விற்பனை செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.