Jump to content

தென்னிலங்கை மீன்களை வாங்க மறுக்கும் மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கை மீன்களை வாங்க மறுக்கும் மக்கள்

 
X-Press-pearl2-696x696.jpg
 18 Views

இலங்கையின் மேற்கு கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் கடல் மாசு அடைந்துள்ளதால் தென்னிலங்கை மக்கள் மேற்கு கடல்பகுதியில் பிடிக்கும் மீன்களை வாங்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொடவில் உள்ள மொத்த மீன் விற்பனை சந்தையில் மீன்கள் வாங்குவாரற்று தேங்கிகிடப்பதாக மீன் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எம்மிடம் அதிக மீன்கள் உள்ளது ஆனால் வாங்குவதற்கு தான் ஆட்கள் இல்லை. எனவே அதனை விநியோகிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்ததத்தினால் பெருமளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், வடக்கு கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதி பாதுகாப்பாக உள்ளதுடன், அங்கு தற்போது மீன்பிடி பருவநிலையும் உள்ளது. எனவே அங்குள்ள மீன்களை தென்னிலங்கைக்கு விநியோகம் செய்ய வேண்டும் என இலங்கை மீன்வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இராசாயணக்கழிவுகள் கலந்துள்ள கடற்பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை உண்பதை தவிர்க்குமாறு கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் கடல் உணவுத்துறை பிரிவின் தலைவர் கலாநிதி லங்கா விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=52202

Link to comment
Share on other sites

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

செய்யலாம் துல்பன் அண்ணா!! ஆனால் உள்ளூர் தேவைக்கான அளவை பூர்த்தி செய்துகொண்டு தென்னிலங்கைக்கோ மற்றைய இடங்களுக்கோ அனுப்பவேண்டும்.. எங்களில் ஒரு குணம் உள்ளது இலாபம் மட்டுமே கண்களுக்கு முன்பு தெரியும்.. உள்ளூர் மக்களும் பின்பு அதிகவிலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை வராமல், கண்கானிப்புடன் செய்தால் எல்லோரும் பயன் அடைவார்கள்

Link to comment
Share on other sites

1 minute ago, பிரபா சிதம்பரநாதன் said:

செய்யலாம் துல்பன் அண்ணா!! ஆனால் உள்ளூர் தேவைக்கான அளவை பூர்த்தி செய்துகொண்டு தென்னிலங்கைக்கோ மற்றைய இடங்களுக்கோ அனுப்பவேண்டும்.. எங்களில் ஒரு குணம் உள்ளது இலாபம் மட்டுமே கண்களுக்கு முன்பு தெரியும்.. உள்ளூர் மக்களும் பின்பு அதிகவிலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை வராமல், கண்கானிப்புடன் செய்தால் எல்லோரும் பயன் அடைவார்கள்

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் கூறியது எமது மீனவர்களுக்கான சந்தையை திறம்பட பயன்படுத்தி மீன்பிடி தொழிலை வட கிழக்கில் நவீனமயப்படுத்தலாம் என்பதையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

எமது ஊரில் இப்படியான ஒரு இணைப்பை உருவாக்க புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் முனைந்து அதற்கு தேவையான முன் அனுபவம் இருந்த ஒருவர் மூலம் முயற்சி செய்தோம். என்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து தருகிறோம் ஆனால் ஒரே அமைப்பாக தேவையை முன் வையுங்கள் என்று.

ஆனால் அந்த சிறிய ஊரிலேயே நூற்றுக்கணக்கான சங்கங்கள். தலைவர்கள்.

ஆளாளுக்கு தத்தம்மிடம் பணத்தை தாருங்கள் என்று தான் கேட்கிறார்களே தவிர அவர்களுக்குள் அவர்கள் எதுவும் பேச தயாராக இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் கூறியது எமது மீனவர்களுக்கான சந்தையை திறம்பட பயன்படுத்தி மீன்பிடி தொழிலை வட கிழக்கில் நவீனமயப்படுத்தலாம் என்பதையே. 

நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் நல்லவகையான மீன்கள், கடல் உணவுகள் எல்லாம் வெளியே போனபின்பு உள்ளூர் மக்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் போக்கூடாது.. 

- கிடைத்திருக்கும் வாய்ப்பைபற்றி பேசவேண்டும்

- எல்லாவற்றையும் விட இவர்களை     ஒன்றினைக்கவேண்டும்.. 

- இவ்வளவு வீதம் ஏற்றுமதி, இவ்வளவு வீதம் உள்ளூர் சந்தைக்கு என விதி இருக்கவேண்டும்

- உள்ளூரில் உள்ள மீனவ சங்கங்களிற்கும் இத்தனை வீதம் ஏற்றுமதி, உள்ளூர் சந்தை என குறிப்பிடவேண்டும். 

- வேறுவகையான அழுத்தங்கள் வந்தால் அதை எப்படி சமாளிக்கவேண்டும் 

- இவற்றையெல்லாம் கவனிக்கவும் வேண்டும்..

நல்லவாய்ப்பை பயன்படுத்தினால் அங்குள்ள மீனவர்கள், அதை சார்ந்து வேறு தொழில்வாய்ப்புகள் என நல்ல பயனை அடையலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுரிலும் மக்கள் கடலுனவு வாங்கப் பயப்பிடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தறையில் பிடிபடும் மீனை சியம்பலாண்டுவ வழியாக கல்முனைக்கு அனுப்பி, அங்கே இருந்து கொழும்புக்கு எடுப்பபித்தால் பிராப்ளம் சால்விட்😆

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

மாத்தறையில் பிடிபடும் மீனை சியம்பலாண்டுவ வழியாக கல்முனைக்கு அனுப்பி, அங்கே இருந்து கொழும்புக்கு எடுப்பபித்தால் பிராப்ளம் சால்விட்😆

இதனை நான் கருத்தில் கொள்கிறேன்.

இப்படிக்கு  😃

?m=02&d=20071221&t=2&i=2563959&r=img-200

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

தென்னிலங்கை மக்கள் மேற்கு கடல்பகுதியில் பிடிக்கும் மீன்களை வாங்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருவாடு போட்டு வட இலங்கைக்கு அனுப்பலாம் .....அதற்குறிய அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

எமது ஊரில் இப்படியான ஒரு இணைப்பை உருவாக்க புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் முனைந்து அதற்கு தேவையான முன் அனுபவம் இருந்த ஒருவர் மூலம் முயற்சி செய்தோம். என்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து தருகிறோம் ஆனால் ஒரே அமைப்பாக தேவையை முன் வையுங்கள் என்று.

ஆனால் அந்த சிறிய ஊரிலேயே நூற்றுக்கணக்கான சங்கங்கள். தலைவர்கள்.

ஆளாளுக்கு தத்தம்மிடம் பணத்தை தாருங்கள் என்று தான் கேட்கிறார்களே தவிர அவர்களுக்குள் அவர்கள் எதுவும் பேச தயாராக இல்லை. 

சாதியத் தூக்கிப் பிடித்தால் எப்படி ஒற்றுமை வரும் ?

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் கூறியது எமது மீனவர்களுக்கான சந்தையை திறம்பட பயன்படுத்தி மீன்பிடி தொழிலை வட கிழக்கில் நவீனமயப்படுத்தலாம் என்பதையே. 

இது மேலும் சிங்களவர்களுக்கும் கல்முனை முஸ்லிம்களுக்கும்தான் வழி வகுக்கும் 
எம்மவர்க்கு சரிவராது. வடக்கு கிழக்கு மீனவர்கள் அதிகமாக பயன்படுத்துவது 
சிறிய ரக படகுகளை அவற்றில் அதிக அளவான வலைகள் ... பிடிபட்டால் மீன்கள் ஏற்றமுடியாது 

அதுக்கு வள்ளம் போன்ற தென்னிலங்கை ரக கலன்கள் வேண்டும் 
அது வைத்திருந்தால் அதை கொண்டு வந்து கட்டுவதுக்கு இறங்குதுறை வேண்டும் 

வடபகுத்திக்கு மயிலிட்டியிலும் கொழும்புத்துறையிலும் ஒன்று உண்டு 
அதில் 10-12 வள்ளம் கட்ட முடியும்.

வேறு ஊரில் கொண்டு சென்று கட்டினால் காவலுக்கு ஆள் வேண்டும் 
தங்கள் மீன் வளத்தை அள்ளுகிறார்கள் என்று அந்த ஊரை சேர்ந்தவர்கள் வள்ளத்தை அறுத்து
கடலில் விட்ட சம்பவங்களும் உண்டு ஆதலால் .... யாரும் வள்ளம் வாங்குவதில்லை. 

இப்போ மொக்குத்தனமாக பேராசை பட்டு இழுவை முறை ஒன்றை நாலு படகுகளை ஒருங்கிணைத்து 
செய்கிறார்கள் அது மொத்த மீன் வளத்தையும் அழித்து விடும்.  எல்லா மீனையும் குஞ்சுகளையும் சேர்த்து 
அள்ளுவது. 

எல்லா கரையோர ஊருக்கும் இறங்கு துறை வேண்டும் 
சென்ற கிழமை இங்கு ஒரு திரி இருந்தது 
யாரோ ஒரு ஊர் மக்கள் திருகோணமலை பக்கம் 
கடந்த 10 வருடமாக கேட்க்கிறோம் தருகிறோம் என்று சொல்கிறார்கள் 
யாரும் இங்கு வருவது கூட இல்லை என்று சொல்லி இருந்தது.

எங்களை சுற்றி கடலும் அதன் வளமும் உண்டு 
பயன்படுத்த அமைச்சர்களுக்கும் அரசுக்கும் தெரியவில்லை.
முல்லைத்தீவில் இருந்து சர்வதேச எல்லை வரை எங்கள் கடல்தான் 

Map of the Sri Lankan Exclusive Economic Zone (EEZ) (Source: Maritime... |  Download Scientific Diagram

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

இதனை நான் கருத்தில் கொள்கிறேன்.

இப்படிக்கு  😃

?m=02&d=20071221&t=2&i=2563959&r=img-200

சாட்டோட இதுதான் சாட்டென்று தென்னிலங்கையாரை கொண்டுவந்து இறக்கப்போறார் அமைச்சர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழுவைப்படகை பயன்படுத்தி எதுவித கட்டுப்பாடுகளுமின்றி மீன் பிடிக்கும்போது பெரிய மீன்கள் மட்டுமல்லாது சிறிய குஞ்சுமீன்களும் அள்ளியெடுத்து செல்லப்படுவதால் கடலில் மீன்களின் அளவு நாளடைவில் குறைவடையும். இது நாட்டின் மீன்பிடி தொழில் மூலாதாரத்தையே நாசம் செய்யும் ஒரு நடவடிக்கையாகும். 

இலங்கை அரசாங்கம் கடல் பிராந்தியத்தில் ரோந்து கப்பல்களில் கடல்காவலர்களை ஈடுபடுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இழுவைப் படகுகளை நிறுத்தி அவற்றில் பயன்படுத்தப்படும் வலைகளின் நூல் இடுக்குவிட்ட அளவுகளை கண்காணிப்பு செய்யவேண்டும். அரசாங்கத்தால் வரையறை செய்யப்பட்ட பருமனான குஞ்சு மீன்கள் தப்பி செல்லும் அளவுக்கு வலைநூல்களின் இடைவெளி அமைக்கப்பட்டிருந்தால் மட்டும் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பதுடன் அதை மீறுபவர்களுக்கு மீன்பிடித்தடை விதிக்கப்பட்டு தண்டமும் அறவிடப்பட வேண்டும்.

கடலில் மீன் உற்பத்தியை அதிகரிக்க மேலை நாடுகளில் செய்தார்கள் என்று சொல்லிக்கொண்டு  பழைய பஸ்வண்டிகளை நடுக்கடலுக்கு எடுத்து சென்று போட்டால் மட்டும் போதாது. அதே மேலை நாடுகளில் கரையோர காவலர்கள் என்ன பொறுப்புமிக்க பணியை செய்கிறார்கள் என்று தெரிந்து அதுபோலவும் செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tulpen said:

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

இப்பவே மீன் எல்லாம் தென்னிலங்கைக்கு தான் போகுது. ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வாதவூரான் said:

இப்பவே மீன் எல்லாம் தென்னிலங்கைக்கு தான் போகுது. ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

ஜாமீன் கடல்லயே இல்லையாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசையூர் மீனுக்காக கொரோனாவைக் கணக்கில் எடுக்காத யாழ்ப்பாணத்தார்!! (Photos)

pasiayoor_groud_01-800x445-1.jpg

 

யாழ்.பாசையூர் மீன் சந்தையில் இன்றைய தினம் மீன்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முண்டியடித்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

கோவிட் தொற்று பரவல் காரணமாக தற்போது நாடளாவிய ரீதியில் பயண தடை அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாறு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டுள்ளனர்.

இதன்போது சிலர் சமூக இடைவெளிகளை பேணாதும், முகக்கவசங்களை சீராக அணியாமலும் பொறுப்பற்ற விதத்தில் மீன் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

https://vampan.net/30112/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஜாமீன் கடல்லயே இல்லையாம்🤣

மண்டையிலை  அப்புக்காத்து மூளை உள்ள ஆக்கள் தான் எப்பவும் முன்  ஜாமீன் பின் ஜாமீன் யோசினையோடை திரிவினம் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

மண்டையிலை  அப்புக்காத்து மூளை உள்ள ஆக்கள் தான் எப்பவும் முன்  ஜாமீன் பின் ஜாமீன் யோசினையோடை திரிவினம் :grin:

இல்லயண்ணை ஜாமீன் கிடைச்சால் ஒரு கிலோ வாங்கி சாட்டைக்கு அனுப்பலாம் எண்டு யோசிச்சனான்.

ஏற்கனவே 14 நாள் எண்டாங்கள். இப்ப கரூரில இன்னொரு வழக்குமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

பாசையூர் மீனுக்காக கொரோனாவைக் கணக்கில் எடுக்காத யாழ்ப்பாணத்தார்!! 

அதென்ன யாழ்ப்பாணத்தார்????😪

14 hours ago, Kapithan said:

சாதியத் தூக்கிப் பிடித்தால் எப்படி ஒற்றுமை வரும் ?

☹️

என்ன  சாதி???

புரியவில்லை

மீனவத்தொழிலை  செய்பவர்கள் ஒரு  சங்கமாவதில்  என்ன  சிக்கல்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஜாமீன் கடல்லயே இல்லையாம்🤣

உங்கடைநக்கல்நையாண்டியளைக் கொண்டு போய்க் குப்பையிலை போடுங்கோ. இது என்னுடைய அம்மா, சகோதரர்கள் சொன்னது.

Link to comment
Share on other sites

நேற்று கொழும்பில் வசிக்கும் என் அம்மாவுடன் கதைக்கும் போது மரக்கறிகளில் இருந்து எல்லாமே Apartment வாசலில் கொண்டு வந்து விற்கின்றார்கள் என்றும், ஆனால் மீன் காரரை மட்டும் வாசலுக்கு கூட வர விடுவதில்லை என்றும் சொன்னார். ஏதாவது கெமிக்கல் மீனை கொண்டு வந்து அபார்ட்மெண்ட் முழுக்க நோயை பரப்பி விடுவார்கள் என்று எவருமே மீன் வாங்குவதில்லையாம்.

7 hours ago, வாதவூரான் said:

இப்பவே மீன் எல்லாம் தென்னிலங்கைக்கு தான் போகுது. ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

ஊரில் பெரிய நண்டு, பெரிய இரால், கலவாய் போன்ற பெரிய மீன்கள் போன்றவற்றை முந்தி காண்பது அரிது என்றும் இடையில் கொரனா காலத்தில் கொஞ்சம் மலிவாக வந்ததென்றும் இப்ப அது மீண்டும் தென்னிலங்கைக்கு தான் போகின்றது என்றும் ஊரில் இருக்கும் என் உறவுகளும் சொல்கின்றனர்.

5 hours ago, colomban said:

பாசையூர் மீனுக்காக கொரோனாவைக் கணக்கில் எடுக்காத யாழ்ப்பாணத்தார்!! (Photos)

pasiayoor_groud_01-800x445-1.jpg

 

யாழ்.பாசையூர் மீன் சந்தையில் இன்றைய தினம் மீன்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முண்டியடித்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

 

உலகில் எனக்கு மிகப் பிடித்த இடங்களில் ஒன்று இந்த பாசையூர் மீன் சந்தை. மீன் குழம்பின் வாசனையை வைத்தே என்ன மீன் சமைக்கின்றனர் என்று அறியும் அளவுக்கு மீனை எனக்கு பரிச்சயம் செய்த சந்தை இது. ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும் போது மறக்காமல் போகும் இடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாதவூரான் said:

ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

நீங்கள் உங்கள் உறவினர் பற்றி எதுவும் எழுதவில்லை.

எழுதி இருந்தால் அதை நிச்சயம் கடந்து போயிருப்பேன்.

ஆனால் ஒரு பொதுகளத்தில் வந்து ஊரில ஒரு மீனும் இல்லையாம் என்று எழுதினால் நக்கல் பதில்தானே வரும்?

மேலே கொழும்பான் இணைத்த செய்தியை பாருங்கள் ஊரில் மீன் இல்லை என்றால் பாசையூர் மார்கெட்டுக்கு சனம் என்ன வெள்ளி பார்க்கவே போனது?

நீங்கள் எழுதும் கருத்துக்குத்தான் பதில் எழுத முடியும், நீங்கள் யாரை மனதில் வைத்து எழுதுகிறீர்கள் என்பதை நாம் மூக்கு சாத்திரம் பார்க்க முடியாது.

45 minutes ago, நிழலி said:

ஊரில் பெரிய நண்டு, பெரிய இரால், கலவாய் போன்ற பெரிய மீன்கள் போன்றவற்றை முந்தி காண்பது அரிது என்றும் இடையில் கொரனா காலத்தில் கொஞ்சம் மலிவாக வந்ததென்றும் இப்ப அது மீண்டும் தென்னிலங்கைக்கு தான் போகின்றது என்றும் ஊரில் இருக்கும் என் உறவுகளும் சொல்கின்றனர்.

இப்போதைய நிலைக்கு தென்னிலங்கைகு ஏற்ற முடியாததால் - ஊரில் நல்ல மலிவாக கிடைப்பதாக தகவல்.

அதனால்தான் மீன் மாக்கெட்டில் சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கிராமத்து மீன் சந்தை திறக்க அனுமதி இல்லையே? வீதிகளில் வைத்து வியாபாரம் செய்தவர்களையும் வாங்கியவர்களையும் பொலிசார் தாக்கி விரட்டிவிட்டார்கள். கடலுணவுகள் வீதி வீதியாக தனிநபர்கள் விற்பனை செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • BJPயின் வாக்கு வங்கி, பாமக வுடன் சேர்ந்து  18% ஆக வளர்ந்து வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி இப்பிடி குறைந்து கொண்டு போவதும் நல்லதல்ல. சீமான் வேறு யாருடனும் கூட்டு சேராமல் வாக்கு வங்கியை வளர்க்கமுடியாது, ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு, மக்களிடம் நிரூபிக்காவிட்டால், இப்பிடியே 5 தொடக்கம் 8 சதவீதம் வரையில், அவரின் தீவிர ஆதரவாளர்களின் அளவின் வரைக்கும் வாக்கு வங்கி இருக்கும். 
    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.