Jump to content

தென்னிலங்கை மீன்களை வாங்க மறுக்கும் மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கை மீன்களை வாங்க மறுக்கும் மக்கள்

 
X-Press-pearl2-696x696.jpg
 18 Views

இலங்கையின் மேற்கு கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் கடல் மாசு அடைந்துள்ளதால் தென்னிலங்கை மக்கள் மேற்கு கடல்பகுதியில் பிடிக்கும் மீன்களை வாங்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொடவில் உள்ள மொத்த மீன் விற்பனை சந்தையில் மீன்கள் வாங்குவாரற்று தேங்கிகிடப்பதாக மீன் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எம்மிடம் அதிக மீன்கள் உள்ளது ஆனால் வாங்குவதற்கு தான் ஆட்கள் இல்லை. எனவே அதனை விநியோகிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்ததத்தினால் பெருமளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், வடக்கு கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதி பாதுகாப்பாக உள்ளதுடன், அங்கு தற்போது மீன்பிடி பருவநிலையும் உள்ளது. எனவே அங்குள்ள மீன்களை தென்னிலங்கைக்கு விநியோகம் செய்ய வேண்டும் என இலங்கை மீன்வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இராசாயணக்கழிவுகள் கலந்துள்ள கடற்பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை உண்பதை தவிர்க்குமாறு கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் கடல் உணவுத்துறை பிரிவின் தலைவர் கலாநிதி லங்கா விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=52202

Link to comment
Share on other sites

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

செய்யலாம் துல்பன் அண்ணா!! ஆனால் உள்ளூர் தேவைக்கான அளவை பூர்த்தி செய்துகொண்டு தென்னிலங்கைக்கோ மற்றைய இடங்களுக்கோ அனுப்பவேண்டும்.. எங்களில் ஒரு குணம் உள்ளது இலாபம் மட்டுமே கண்களுக்கு முன்பு தெரியும்.. உள்ளூர் மக்களும் பின்பு அதிகவிலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை வராமல், கண்கானிப்புடன் செய்தால் எல்லோரும் பயன் அடைவார்கள்

Link to comment
Share on other sites

1 minute ago, பிரபா சிதம்பரநாதன் said:

செய்யலாம் துல்பன் அண்ணா!! ஆனால் உள்ளூர் தேவைக்கான அளவை பூர்த்தி செய்துகொண்டு தென்னிலங்கைக்கோ மற்றைய இடங்களுக்கோ அனுப்பவேண்டும்.. எங்களில் ஒரு குணம் உள்ளது இலாபம் மட்டுமே கண்களுக்கு முன்பு தெரியும்.. உள்ளூர் மக்களும் பின்பு அதிகவிலை கொடுத்து வாங்கவேண்டிய நிலை வராமல், கண்கானிப்புடன் செய்தால் எல்லோரும் பயன் அடைவார்கள்

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் கூறியது எமது மீனவர்களுக்கான சந்தையை திறம்பட பயன்படுத்தி மீன்பிடி தொழிலை வட கிழக்கில் நவீனமயப்படுத்தலாம் என்பதையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

எமது ஊரில் இப்படியான ஒரு இணைப்பை உருவாக்க புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் முனைந்து அதற்கு தேவையான முன் அனுபவம் இருந்த ஒருவர் மூலம் முயற்சி செய்தோம். என்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து தருகிறோம் ஆனால் ஒரே அமைப்பாக தேவையை முன் வையுங்கள் என்று.

ஆனால் அந்த சிறிய ஊரிலேயே நூற்றுக்கணக்கான சங்கங்கள். தலைவர்கள்.

ஆளாளுக்கு தத்தம்மிடம் பணத்தை தாருங்கள் என்று தான் கேட்கிறார்களே தவிர அவர்களுக்குள் அவர்கள் எதுவும் பேச தயாராக இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் கூறியது எமது மீனவர்களுக்கான சந்தையை திறம்பட பயன்படுத்தி மீன்பிடி தொழிலை வட கிழக்கில் நவீனமயப்படுத்தலாம் என்பதையே. 

நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் நல்லவகையான மீன்கள், கடல் உணவுகள் எல்லாம் வெளியே போனபின்பு உள்ளூர் மக்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் போக்கூடாது.. 

- கிடைத்திருக்கும் வாய்ப்பைபற்றி பேசவேண்டும்

- எல்லாவற்றையும் விட இவர்களை     ஒன்றினைக்கவேண்டும்.. 

- இவ்வளவு வீதம் ஏற்றுமதி, இவ்வளவு வீதம் உள்ளூர் சந்தைக்கு என விதி இருக்கவேண்டும்

- உள்ளூரில் உள்ள மீனவ சங்கங்களிற்கும் இத்தனை வீதம் ஏற்றுமதி, உள்ளூர் சந்தை என குறிப்பிடவேண்டும். 

- வேறுவகையான அழுத்தங்கள் வந்தால் அதை எப்படி சமாளிக்கவேண்டும் 

- இவற்றையெல்லாம் கவனிக்கவும் வேண்டும்..

நல்லவாய்ப்பை பயன்படுத்தினால் அங்குள்ள மீனவர்கள், அதை சார்ந்து வேறு தொழில்வாய்ப்புகள் என நல்ல பயனை அடையலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுரிலும் மக்கள் கடலுனவு வாங்கப் பயப்பிடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தறையில் பிடிபடும் மீனை சியம்பலாண்டுவ வழியாக கல்முனைக்கு அனுப்பி, அங்கே இருந்து கொழும்புக்கு எடுப்பபித்தால் பிராப்ளம் சால்விட்😆

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

மாத்தறையில் பிடிபடும் மீனை சியம்பலாண்டுவ வழியாக கல்முனைக்கு அனுப்பி, அங்கே இருந்து கொழும்புக்கு எடுப்பபித்தால் பிராப்ளம் சால்விட்😆

இதனை நான் கருத்தில் கொள்கிறேன்.

இப்படிக்கு  😃

?m=02&d=20071221&t=2&i=2563959&r=img-200

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

தென்னிலங்கை மக்கள் மேற்கு கடல்பகுதியில் பிடிக்கும் மீன்களை வாங்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருவாடு போட்டு வட இலங்கைக்கு அனுப்பலாம் .....அதற்குறிய அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

எமது ஊரில் இப்படியான ஒரு இணைப்பை உருவாக்க புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் முனைந்து அதற்கு தேவையான முன் அனுபவம் இருந்த ஒருவர் மூலம் முயற்சி செய்தோம். என்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து தருகிறோம் ஆனால் ஒரே அமைப்பாக தேவையை முன் வையுங்கள் என்று.

ஆனால் அந்த சிறிய ஊரிலேயே நூற்றுக்கணக்கான சங்கங்கள். தலைவர்கள்.

ஆளாளுக்கு தத்தம்மிடம் பணத்தை தாருங்கள் என்று தான் கேட்கிறார்களே தவிர அவர்களுக்குள் அவர்கள் எதுவும் பேச தயாராக இல்லை. 

சாதியத் தூக்கிப் பிடித்தால் எப்படி ஒற்றுமை வரும் ?

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் கூறியது எமது மீனவர்களுக்கான சந்தையை திறம்பட பயன்படுத்தி மீன்பிடி தொழிலை வட கிழக்கில் நவீனமயப்படுத்தலாம் என்பதையே. 

இது மேலும் சிங்களவர்களுக்கும் கல்முனை முஸ்லிம்களுக்கும்தான் வழி வகுக்கும் 
எம்மவர்க்கு சரிவராது. வடக்கு கிழக்கு மீனவர்கள் அதிகமாக பயன்படுத்துவது 
சிறிய ரக படகுகளை அவற்றில் அதிக அளவான வலைகள் ... பிடிபட்டால் மீன்கள் ஏற்றமுடியாது 

அதுக்கு வள்ளம் போன்ற தென்னிலங்கை ரக கலன்கள் வேண்டும் 
அது வைத்திருந்தால் அதை கொண்டு வந்து கட்டுவதுக்கு இறங்குதுறை வேண்டும் 

வடபகுத்திக்கு மயிலிட்டியிலும் கொழும்புத்துறையிலும் ஒன்று உண்டு 
அதில் 10-12 வள்ளம் கட்ட முடியும்.

வேறு ஊரில் கொண்டு சென்று கட்டினால் காவலுக்கு ஆள் வேண்டும் 
தங்கள் மீன் வளத்தை அள்ளுகிறார்கள் என்று அந்த ஊரை சேர்ந்தவர்கள் வள்ளத்தை அறுத்து
கடலில் விட்ட சம்பவங்களும் உண்டு ஆதலால் .... யாரும் வள்ளம் வாங்குவதில்லை. 

இப்போ மொக்குத்தனமாக பேராசை பட்டு இழுவை முறை ஒன்றை நாலு படகுகளை ஒருங்கிணைத்து 
செய்கிறார்கள் அது மொத்த மீன் வளத்தையும் அழித்து விடும்.  எல்லா மீனையும் குஞ்சுகளையும் சேர்த்து 
அள்ளுவது. 

எல்லா கரையோர ஊருக்கும் இறங்கு துறை வேண்டும் 
சென்ற கிழமை இங்கு ஒரு திரி இருந்தது 
யாரோ ஒரு ஊர் மக்கள் திருகோணமலை பக்கம் 
கடந்த 10 வருடமாக கேட்க்கிறோம் தருகிறோம் என்று சொல்கிறார்கள் 
யாரும் இங்கு வருவது கூட இல்லை என்று சொல்லி இருந்தது.

எங்களை சுற்றி கடலும் அதன் வளமும் உண்டு 
பயன்படுத்த அமைச்சர்களுக்கும் அரசுக்கும் தெரியவில்லை.
முல்லைத்தீவில் இருந்து சர்வதேச எல்லை வரை எங்கள் கடல்தான் 

Map of the Sri Lankan Exclusive Economic Zone (EEZ) (Source: Maritime... |  Download Scientific Diagram

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

இதனை நான் கருத்தில் கொள்கிறேன்.

இப்படிக்கு  😃

?m=02&d=20071221&t=2&i=2563959&r=img-200

சாட்டோட இதுதான் சாட்டென்று தென்னிலங்கையாரை கொண்டுவந்து இறக்கப்போறார் அமைச்சர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இழுவைப்படகை பயன்படுத்தி எதுவித கட்டுப்பாடுகளுமின்றி மீன் பிடிக்கும்போது பெரிய மீன்கள் மட்டுமல்லாது சிறிய குஞ்சுமீன்களும் அள்ளியெடுத்து செல்லப்படுவதால் கடலில் மீன்களின் அளவு நாளடைவில் குறைவடையும். இது நாட்டின் மீன்பிடி தொழில் மூலாதாரத்தையே நாசம் செய்யும் ஒரு நடவடிக்கையாகும். 

இலங்கை அரசாங்கம் கடல் பிராந்தியத்தில் ரோந்து கப்பல்களில் கடல்காவலர்களை ஈடுபடுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இழுவைப் படகுகளை நிறுத்தி அவற்றில் பயன்படுத்தப்படும் வலைகளின் நூல் இடுக்குவிட்ட அளவுகளை கண்காணிப்பு செய்யவேண்டும். அரசாங்கத்தால் வரையறை செய்யப்பட்ட பருமனான குஞ்சு மீன்கள் தப்பி செல்லும் அளவுக்கு வலைநூல்களின் இடைவெளி அமைக்கப்பட்டிருந்தால் மட்டும் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பதுடன் அதை மீறுபவர்களுக்கு மீன்பிடித்தடை விதிக்கப்பட்டு தண்டமும் அறவிடப்பட வேண்டும்.

கடலில் மீன் உற்பத்தியை அதிகரிக்க மேலை நாடுகளில் செய்தார்கள் என்று சொல்லிக்கொண்டு  பழைய பஸ்வண்டிகளை நடுக்கடலுக்கு எடுத்து சென்று போட்டால் மட்டும் போதாது. அதே மேலை நாடுகளில் கரையோர காவலர்கள் என்ன பொறுப்புமிக்க பணியை செய்கிறார்கள் என்று தெரிந்து அதுபோலவும் செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tulpen said:

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வட கிழக்கு மீனவர்கள் தமக்குள் ஒருங்கிணைப்பை உண்டாக்கி பிடிக்கும் மீன் வளத்தை தென்னிலங்கைக்கு அனுப்பி தமது வாழ்வாதாரத்தை பெருக்கி மீன்பிடித்தொழிலை நவீனமயப்படுத்தும் செயல்களை செய்யலாம். கோத்தா அரசு இதற்கு இடைஞ்சல்களை  ஏற்படுத்தினாலும் தமிழ் மீனவர்களன் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் அதை இயலுமான அளவிற்கெனிலும் வெற்றி கொள்ள இயலும். 

இப்பவே மீன் எல்லாம் தென்னிலங்கைக்கு தான் போகுது. ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வாதவூரான் said:

இப்பவே மீன் எல்லாம் தென்னிலங்கைக்கு தான் போகுது. ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

ஜாமீன் கடல்லயே இல்லையாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசையூர் மீனுக்காக கொரோனாவைக் கணக்கில் எடுக்காத யாழ்ப்பாணத்தார்!! (Photos)

pasiayoor_groud_01-800x445-1.jpg

 

யாழ்.பாசையூர் மீன் சந்தையில் இன்றைய தினம் மீன்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முண்டியடித்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

கோவிட் தொற்று பரவல் காரணமாக தற்போது நாடளாவிய ரீதியில் பயண தடை அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாறு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டுள்ளனர்.

இதன்போது சிலர் சமூக இடைவெளிகளை பேணாதும், முகக்கவசங்களை சீராக அணியாமலும் பொறுப்பற்ற விதத்தில் மீன் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

https://vampan.net/30112/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஜாமீன் கடல்லயே இல்லையாம்🤣

மண்டையிலை  அப்புக்காத்து மூளை உள்ள ஆக்கள் தான் எப்பவும் முன்  ஜாமீன் பின் ஜாமீன் யோசினையோடை திரிவினம் :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

மண்டையிலை  அப்புக்காத்து மூளை உள்ள ஆக்கள் தான் எப்பவும் முன்  ஜாமீன் பின் ஜாமீன் யோசினையோடை திரிவினம் :grin:

இல்லயண்ணை ஜாமீன் கிடைச்சால் ஒரு கிலோ வாங்கி சாட்டைக்கு அனுப்பலாம் எண்டு யோசிச்சனான்.

ஏற்கனவே 14 நாள் எண்டாங்கள். இப்ப கரூரில இன்னொரு வழக்குமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

பாசையூர் மீனுக்காக கொரோனாவைக் கணக்கில் எடுக்காத யாழ்ப்பாணத்தார்!! 

அதென்ன யாழ்ப்பாணத்தார்????😪

14 hours ago, Kapithan said:

சாதியத் தூக்கிப் பிடித்தால் எப்படி ஒற்றுமை வரும் ?

☹️

என்ன  சாதி???

புரியவில்லை

மீனவத்தொழிலை  செய்பவர்கள் ஒரு  சங்கமாவதில்  என்ன  சிக்கல்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஜாமீன் கடல்லயே இல்லையாம்🤣

உங்கடைநக்கல்நையாண்டியளைக் கொண்டு போய்க் குப்பையிலை போடுங்கோ. இது என்னுடைய அம்மா, சகோதரர்கள் சொன்னது.

Link to comment
Share on other sites

நேற்று கொழும்பில் வசிக்கும் என் அம்மாவுடன் கதைக்கும் போது மரக்கறிகளில் இருந்து எல்லாமே Apartment வாசலில் கொண்டு வந்து விற்கின்றார்கள் என்றும், ஆனால் மீன் காரரை மட்டும் வாசலுக்கு கூட வர விடுவதில்லை என்றும் சொன்னார். ஏதாவது கெமிக்கல் மீனை கொண்டு வந்து அபார்ட்மெண்ட் முழுக்க நோயை பரப்பி விடுவார்கள் என்று எவருமே மீன் வாங்குவதில்லையாம்.

7 hours ago, வாதவூரான் said:

இப்பவே மீன் எல்லாம் தென்னிலங்கைக்கு தான் போகுது. ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

ஊரில் பெரிய நண்டு, பெரிய இரால், கலவாய் போன்ற பெரிய மீன்கள் போன்றவற்றை முந்தி காண்பது அரிது என்றும் இடையில் கொரனா காலத்தில் கொஞ்சம் மலிவாக வந்ததென்றும் இப்ப அது மீண்டும் தென்னிலங்கைக்கு தான் போகின்றது என்றும் ஊரில் இருக்கும் என் உறவுகளும் சொல்கின்றனர்.

5 hours ago, colomban said:

பாசையூர் மீனுக்காக கொரோனாவைக் கணக்கில் எடுக்காத யாழ்ப்பாணத்தார்!! (Photos)

pasiayoor_groud_01-800x445-1.jpg

 

யாழ்.பாசையூர் மீன் சந்தையில் இன்றைய தினம் மீன்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முண்டியடித்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

 

உலகில் எனக்கு மிகப் பிடித்த இடங்களில் ஒன்று இந்த பாசையூர் மீன் சந்தை. மீன் குழம்பின் வாசனையை வைத்தே என்ன மீன் சமைக்கின்றனர் என்று அறியும் அளவுக்கு மீனை எனக்கு பரிச்சயம் செய்த சந்தை இது. ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும் போது மறக்காமல் போகும் இடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாதவூரான் said:

ஊரிலை மீன் ஒண்டும் இல்லையாம்

நீங்கள் உங்கள் உறவினர் பற்றி எதுவும் எழுதவில்லை.

எழுதி இருந்தால் அதை நிச்சயம் கடந்து போயிருப்பேன்.

ஆனால் ஒரு பொதுகளத்தில் வந்து ஊரில ஒரு மீனும் இல்லையாம் என்று எழுதினால் நக்கல் பதில்தானே வரும்?

மேலே கொழும்பான் இணைத்த செய்தியை பாருங்கள் ஊரில் மீன் இல்லை என்றால் பாசையூர் மார்கெட்டுக்கு சனம் என்ன வெள்ளி பார்க்கவே போனது?

நீங்கள் எழுதும் கருத்துக்குத்தான் பதில் எழுத முடியும், நீங்கள் யாரை மனதில் வைத்து எழுதுகிறீர்கள் என்பதை நாம் மூக்கு சாத்திரம் பார்க்க முடியாது.

45 minutes ago, நிழலி said:

ஊரில் பெரிய நண்டு, பெரிய இரால், கலவாய் போன்ற பெரிய மீன்கள் போன்றவற்றை முந்தி காண்பது அரிது என்றும் இடையில் கொரனா காலத்தில் கொஞ்சம் மலிவாக வந்ததென்றும் இப்ப அது மீண்டும் தென்னிலங்கைக்கு தான் போகின்றது என்றும் ஊரில் இருக்கும் என் உறவுகளும் சொல்கின்றனர்.

இப்போதைய நிலைக்கு தென்னிலங்கைகு ஏற்ற முடியாததால் - ஊரில் நல்ல மலிவாக கிடைப்பதாக தகவல்.

அதனால்தான் மீன் மாக்கெட்டில் சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கிராமத்து மீன் சந்தை திறக்க அனுமதி இல்லையே? வீதிகளில் வைத்து வியாபாரம் செய்தவர்களையும் வாங்கியவர்களையும் பொலிசார் தாக்கி விரட்டிவிட்டார்கள். கடலுணவுகள் வீதி வீதியாக தனிநபர்கள் விற்பனை செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.