Jump to content

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

  — வேதநாயகம் தபேந்திரன் —  

 மனிதனின் அடிப்படைத் தேவைகளில் இரண்டாவது தான் ஆடை.  ஆங்கில மொழியில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மட்டுமே ரவுசர் (Trouser) எனப்படும் நீளக் காற்சட்டையை எமது நாட்டில் போடலாமென்ற வழமை ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று யாவரும் ரவுசர் அணிகின்றனர். நீளக் காற்சட்டையான இதனை லோங்ஸ் (Longs) எனவும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. 

டெனிம் துணியில் தைக்கப்பட்ட இறுக்கமான நீளக் காற்சட்டைக்கு மட்டுமே ஜீன்ஸ் என்ற பெயர் உள்ளது. டெனிம் ஜீன்ஸ் எனத்தான் அழைப்பார்கள். ஆனால் இன்று எல்லா ரவுசர்களுக்கும் ஜீன்ஸ் என்ற பொதுப்பெயர் வழங்கப்படுகின்றது. 

எமது பண்பாட்டில் ரவுசர் ஆண்களுக்கு உரிய ஆடையா? அல்லது பெண்களுக்குரிய ஆடையா? எனக்கேட்டால் ஆண்களுக்குரிய ஆடைதான் என ஒரு காலத்தில் பதில் சொல்லி இருப்பார்கள். 

தற்காலத்தில் ”ரவுசர் ஆண், பெண் இருபாலாருக்கும் உரிய ஆடைதான்” எனக் கூறுவார்கள். 

தாயகத்தில் சேலை, சுடிதார் (பஞ்சாபி), பாவாடை தாவணி, கவுணுடன் இருந்த எம் குலத்துப் பெண்கள் எல்லாம் புலம்பெயர்ந்த போது டெனிம் ஜீன்ஸ் அணிந்து கோலம் மாறினார்கள். 

காலம் மாற்றவில்லை. குளிர்கால நிலை, அந்தந்த நாட்டு நாகரிகங்கள் அவர்களின் கோலத்தை மாற்றிவிட்டது. 

ஆரம்பத்தில் கொழும்பு போன்ற பெருநகரங்களில் தான் தமிழ் பெண் பிள்ளைகள் டெனிம்  ஜீன்ஸ் அணிந்தார்கள். 

தற்போது எல்லா இடங்களிலும் வளர்ந்த பெண் பிள்ளைகள் பலர் ரியூசன், பல்கலைக்கழகம்  உட்பட பொது இடங்களுக்கும் ஜீன்ஸ் போட்டுச் செல்வதைச் சாதாரணமாகக் காணலாம்.  

வேட்டியுடன் வாழ்ந்த எமது நாகரிகங்கள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என மாறி மாறி வந்த காலனித்துவ ஆட்சிகள் காரணமாக மெல்ல மெல்ல நீளக் காற்சட்டைக்கு மாறின. 

குடியேற்ற ஆட்சிக்காலங்களில் லோங்ஸ்சுடன் வரும் எம்மவர்களில் பலர் தமக்குள் ஆங்கிலத்தில் மட்டும் கதைப்பார்கள். தமிழ் தெரியாதது போல நடப்பார்கள். 

வெள்ளைத் துரைமாரால் அங்கீகரிக்கப்பட்ட கறுப்புத் துரையாகத் தம்மைக் காட்டிக் கொள்வார்கள். 

 யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் சப்பல் வீதி, முதலாம் குறுக்குத் தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, வேம்படி வீதி போன்ற வீதிகளில் வசித்தவர்களில்  பறங்கி இனத்தவர்களும் குறித்த வீதத்தில் இருந்தார்கள். அவர்களில் மிக மூத்த தலைமுறையினர் அந்நிய மொழிகளில் கதைப்பார்கள். கட்டைக் காற்சட்டை போடுவார்கள். ஜீன்ஸ் போல நீளக் காற்சட்டையும் அணிவார்கள். 

அந்தப் பிரதேசத்தை யாழ்ப்பாணத்தின் கொழும்பு -7 என்பார்கள். 1980களின் ஆரம்பத்தில் துப்பாக்கிகள் வெடிக்க ஆரம்பிக்க அவர்களில் பலர்  தமது பரம்பரைத் தொடர்பு உள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுவிட்டார்கள். 

ஏனையவர்கள் பின்னாளில் தமிழர்களுடன் கலந்து விட்டனர்.  

கட்டைக் காற்சட்டையை சோர்ட்ஸ் (Shorts) எனவும் நீளக் காற்சட்டையை பெல்ஸ் அல்லது பெல்போட்டம் எனவும், பிற்காலத்தில் ஜீன்ஸ் எனவும் அழைத்தார்கள். 

ஆனால் இந்த நீளக் காற்சட்டைகளின் நீள அகலங்கள், தையல் மாதிரிகள், அலங்காரங்கள், துணி வகைகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டன. 

உடையலங்கார நிபுணர்கள், தையல்காரர்கள் புகுத்தும் நவீனங்கள் அழகான இளைஞர்கள், இளம் பெண்கள் அணிந்து உலாவர அது பிரபலமாகிவிடுகின்றது. 

முன்னாளில் மேற்கில் உருவான ஒரு நாகரிகம் கடல் கடந்து, கண்டம் கடந்து எம் போன்ற கீழைத்தேய நாடுகளுக்கு வந்து பரவலாகப் பல மாதங்கள் எடுத்தது. 

தற்போது உலகமயமாதலும் சமூக வலைத்தளங்களது வளர்ச்சியும் ஒரு புதிய ஸ்ரைல் எமது நாட்டை எட்டிப்பார்க்க ஒரு சில நிமிடங்கள் போதும்.  

அது நாடெங்கும் பரவ ஒரு சில மணித்தியாலங்கள் போதும். 

”கிழிஞ்சதைப் போட்டால் வறுமை. கிழிச்சுப் போட்டால் நாகரிகம்” ஏழ்மையும், பணக்காரத்தனமும் ஆடையால் ஒப்பிடப்பட்டே சமூக வலைத்தளங்களில் பதிவு வருகின்றது. 

1970களின் பிற்பகுதியில் எமது நாட்டில் பெல்போட்டம் பிரபலமாக இருந்தது. 

நீளக் காற்சட்டையின் கீழ் கால் பகுதி அகன்று இருப்பதை பெல்போட்டம், பெல்ஸ் என்பார்கள். எனது சிறு வயதில் அதனை அணிந்து மகிழ்ந்துள்ளேன். 

1980களின் ஆரம்பத்தில் கால்பகுதி ஒடுக்கமான ரவுசர் பிரபலமாகத் தொடங்கியது. இந்த வகை நீளக் காற்சட்டையில் கீழ் கால் பகுதி அகலமாக இருக்காது. கால் பாதம் புகக்கூடியதான அளவாக இருக்கும். 

இந்த ரவுசர் வரத் தொடங்கிய காலத்தில் ஹொட்றொயில் (Hotroil) துணியில் தைக்கப்பட்ட   ரவுசர் பிரபலமாக இருந்தன. 

டெனிம் ஜீன்ஸ் இன்று வரை பிரபலமாக இருக்கின்றது. குளிர் நாடுகளில் குளிரைத் தாங்கக் கூடிய ஒரு வகைத் துணியாக டெனிம் அன்றும் இன்றும் இருக்கின்றது. 

ஹொட்றொயில் துணியிலான உடுப்புகள் ஒரு சில வருடங்களின் பின்பாகப் பிரபலம் இழந்து போனது. 

பின்னாளில் இத் துணியைக் காணமுடியவில்லை. அது போல ஜெலோலைன், கறா எனத் துணி வகைகள் காலத்துக்குக் காலம் ஸ்ரைலாக பிரபலமாக வந்தன. 

பிளிற்ஸ் வைத்துத் தைப்பது ஒரு காலத்தில் ஸ்ரைலாக இருந்தது. பின்னொரு காலத்தில் பிளிற்ஸ் வைக்காமல் தைப்பது ஸ்ரைலாக மாறியது. 

ரவுசருக்கு இடுப்புப் பகுதியில் இரண்டு பக்கமும் சிறியதொரு தகடு வைத்துத் தைத்து அதில் வைத்து இறுக்கிக் கட்டுவார்கள். பெல்ற் தேவைப்படாது. 

இப்படியே ஸ்ரைலுகள் காலத்துக்குக் காலம் மாறும். 

பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் படத்தின் நாயகன் சுதாகர் இடுப்பில் பெல்ற் இல்லாமல் வருவார். 

ரவுசர், ஜீன்ஸ்க்கு பெல்ற் அணிவது ஒரு ஸ்ரைலாகப் பார்க்கப்பட்டாலும் இடுப்பிலிருந்து ஜீன்ஸ் வழுகிக் கீழே இறங்காமல் பாதுகாக்கும் ஒரு கவசமே பெல்ற் எனலாம். 

வன்முறைக் காட்சிகளில் பெல்ற்ரால் ஒருவரை அடிப்பதைக் காணலாம். தனிப்பட்ட வாழ்விலும் இது போன்ற நிகழ்வுகளைக் காணலாம். 

ரவுசரில், ஜீன்சில் தையல் நாகரிகங்கள் பல விதத்தில் வரும். 

எமது பாடசாலைக் காலத்தில் ஓ.எல் பரீட்சை வரையும் காற்சட்டை போட்டோம். உயர்தர வகுப்பு வந்ததும் மெல்ல மெல்ல நெளிந்து நெளிந்து வெள்ளைக் கலரில் ரவுசர் போட்டோம். 

உயர்தர பரீட்சை எடுத்ததன் பின்னர்தான் ரவுசர்  போட்டவர்களும் உண்டு. 

இன்று ஓ.எல் (சாதாரண தரம்) படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் நீளக் காற்சட்டையாம். ரவுசர் போடும் பழக்கம் சாதாரணமாகி விட்டது. 

எமது காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் முஸ்லீம் பிரதேசத்தில் ஆப்தீன் ரெயிலர்ஸ் எனும் பெயரில் ஆப்தீன் என்பவர் கடை வைத்திருந்தார். அவரே முன்னணி ரெயிலராக இருந்தார். அவரிடம் தைத்தால் ரவுசர் நேர் சீராக இருக்கும்.  

இன்று இடுப்பு, தொடை, கால் எல்லாம் இறுக்கிப் பிடிக்கும் ரவுசர்கள், ஜீன்சுகள்தான் பாசன். அதனைப் படாத பாடுபட்டு இளசுகள் போடப்படும் பாடு இருக்கிறதே பார்க்கப் பார்க்கச் சிரிப்பு வரும். ஆனால், இதே இறுக்கமான ரவுசர்கள் எமது அப்பாக்கள் காலத்திலும் இருந்துள்ளது. கொஞ்சம் வித்தியாசம். அதற்கு முன்னதாக கொழுகொழுத்த ரவுசர்கள். இப்படி ரவுஸரின் ஸ்டைல் காலத்துக்கு காலம் மாறி, அல்லது மீண்டு வந்திருக்கிறது. 

ஜீன்ஸ், ரவுசர் தொடர்பான நினைவலைகள் மிக நீளமானவை. உங்களுக்கும் மாறுபட்ட அனுபவங்கள் இருக்கும்.  
 

 

https://arangamnews.com/?p=5288

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பேகர் இன மக்கள் வசிக்த்தார்கள் என இன்றுதான் கேள்விபடுகின்றேன்.
மிக மூத்த தலைமுறையினர் கதைத்த அந்த அன்னிய மொழி என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, colomban said:

யாழில் பேகர் இன மக்கள் வசிக்த்தார்கள் என இன்றுதான் கேள்விபடுகின்றேன்.
மிக மூத்த தலைமுறையினர் கதைத்த அந்த அன்னிய மொழி என்ன? 

என்னுடன், இரண்டு பேர் படித்தவர்கள். ஆங்கிலமும், தமிழும் சரளமாக கதைப்பார்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

யாழில் பேகர் இன மக்கள் வசிக்த்தார்கள் என இன்றுதான் கேள்விபடுகின்றேன்.
மிக மூத்த தலைமுறையினர் கதைத்த அந்த அன்னிய மொழி என்ன? 

இலங்கை போர்த்துகீச கிரயோல் என அந்த மொழிக்கு பெயர்

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கை_போர்த்துக்கீச_கிரியோல்_மொழி

https://ta.m.wikipedia.org/wiki/பரங்கியர்

ஆங்கில மூலம்:

https://en.m.wikipedia.org/wiki/Sri_Lankan_Portuguese_creole

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தாயகத்தில் சேலை, சுடிதார் (பஞ்சாபி), பாவாடை தாவணி, கவுணுடன் இருந்த எம் குலத்துப் பெண்கள் எல்லாம் புலம்பெயர்ந்த போது டெனிம் ஜீன்ஸ் அணிந்து கோலம் மாறினார்கள். 

காலம் மாற்றவில்லை. குளிர்கால நிலை, அந்தந்த நாட்டு நாகரிகங்கள் அவர்களின் கோலத்தை மாற்றிவிட்டது. 

ஒரு விழாக்கால வருடத்தில் 

நல்லூர் திருவிழாவின்போது, இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து புலம் பெயர்ந்து திரும்ப ஊருக்கு வந்த நம்மின பெண்களை சிங்கள காவல்துறை தனியே உடை மாற்றும் ஒரு பேரூந்தை வைச்சிருந்து அதுக்குள் அவர்களை ஏத்தி பாவாடை தாவணிக்கும் சேலைக்கும் மாற சொல்லி கட்டளை இட்டார்களாமே,

அப்படி பின்புறத்தை இறுக்கமாக காண்பிக்கும் நோக்கில் அவர்கள்  உலவியதுக்கு காரணம் யாழ்நகரில் கடும் குளிர் நிலவியதாலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, valavan said:

அப்படி பின்புறத்தை இறுக்கமாக காண்பிக்கும் நோக்கில் அவர்கள்  உலவியதுக்கு காரணம் யாழ்நகரில் கடும் குளிர் நிலவியதாலா?

இப்போது Skinny fit தானே நாகரீகம். அது தாயகத்திலும் இருக்கின்றதுதானே.

நல்லூர் கோவில் dress code ஐ அறிமுகப்படுத்தியுள்ளதாம். அதை மீறுபவர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் பாவடை, சட்டைக்கு பஸ்ஸுக்குள் மாறச்சொல்லிக் சிங்கள காவல்துறை கேட்டது நினைவில்லை. அப்படியானால் மாற்றுடையையும் கொடுத்திருக்கவேண்டுமே!

Link to comment
Share on other sites

லெகின்ஸ் பெண்களுக்கான உடை மட்டும் தானா, ஆண்களும் அணியலாமா...

இந்த திரி உடை பற்றியது என்பதால் இந்த கேள்வி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

  — வேதநாயகம் தபேந்திரன் —  

 மனிதனின் அடிப்படைத் தேவைகளில் இரண்டாவது தான் ஆடை.  ஆங்கில மொழியில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மட்டுமே ரவுசர் (Trouser) எனப்படும் நீளக் காற்சட்டையை எமது நாட்டில் போடலாமென்ற வழமை ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று யாவரும் ரவுசர் அணிகின்றனர். நீளக் காற்சட்டையான இதனை லோங்ஸ் (Longs) எனவும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. 

டெனிம் துணியில் தைக்கப்பட்ட இறுக்கமான நீளக் காற்சட்டைக்கு மட்டுமே ஜீன்ஸ் என்ற பெயர் உள்ளது. டெனிம் ஜீன்ஸ் எனத்தான் அழைப்பார்கள். ஆனால் இன்று எல்லா ரவுசர்களுக்கும் ஜீன்ஸ் என்ற பொதுப்பெயர் வழங்கப்படுகின்றது. 

எமது பண்பாட்டில் ரவுசர் ஆண்களுக்கு உரிய ஆடையா? அல்லது பெண்களுக்குரிய ஆடையா? எனக்கேட்டால் ஆண்களுக்குரிய ஆடைதான் என ஒரு காலத்தில் பதில் சொல்லி இருப்பார்கள். 

தற்காலத்தில் ”ரவுசர் ஆண், பெண் இருபாலாருக்கும் உரிய ஆடைதான்” எனக் கூறுவார்கள். 

தாயகத்தில் சேலை, சுடிதார் (பஞ்சாபி), பாவாடை தாவணி, கவுணுடன் இருந்த எம் குலத்துப் பெண்கள் எல்லாம் புலம்பெயர்ந்த போது டெனிம் ஜீன்ஸ் அணிந்து கோலம் மாறினார்கள். 

காலம் மாற்றவில்லை. குளிர்கால நிலை, அந்தந்த நாட்டு நாகரிகங்கள் அவர்களின் கோலத்தை மாற்றிவிட்டது. 

ஆரம்பத்தில் கொழும்பு போன்ற பெருநகரங்களில் தான் தமிழ் பெண் பிள்ளைகள் டெனிம்  ஜீன்ஸ் அணிந்தார்கள். 

தற்போது எல்லா இடங்களிலும் வளர்ந்த பெண் பிள்ளைகள் பலர் ரியூசன், பல்கலைக்கழகம்  உட்பட பொது இடங்களுக்கும் ஜீன்ஸ் போட்டுச் செல்வதைச் சாதாரணமாகக் காணலாம்.  

வேட்டியுடன் வாழ்ந்த எமது நாகரிகங்கள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என மாறி மாறி வந்த காலனித்துவ ஆட்சிகள் காரணமாக மெல்ல மெல்ல நீளக் காற்சட்டைக்கு மாறின. 

குடியேற்ற ஆட்சிக்காலங்களில் லோங்ஸ்சுடன் வரும் எம்மவர்களில் பலர் தமக்குள் ஆங்கிலத்தில் மட்டும் கதைப்பார்கள். தமிழ் தெரியாதது போல நடப்பார்கள். 

வெள்ளைத் துரைமாரால் அங்கீகரிக்கப்பட்ட கறுப்புத் துரையாகத் தம்மைக் காட்டிக் கொள்வார்கள். 

 யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் சப்பல் வீதி, முதலாம் குறுக்குத் தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, வேம்படி வீதி போன்ற வீதிகளில் வசித்தவர்களில்  பறங்கி இனத்தவர்களும் குறித்த வீதத்தில் இருந்தார்கள். அவர்களில் மிக மூத்த தலைமுறையினர் அந்நிய மொழிகளில் கதைப்பார்கள். கட்டைக் காற்சட்டை போடுவார்கள். ஜீன்ஸ் போல நீளக் காற்சட்டையும் அணிவார்கள். 

அந்தப் பிரதேசத்தை யாழ்ப்பாணத்தின் கொழும்பு -7 என்பார்கள். 1980களின் ஆரம்பத்தில் துப்பாக்கிகள் வெடிக்க ஆரம்பிக்க அவர்களில் பலர்  தமது பரம்பரைத் தொடர்பு உள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுவிட்டார்கள். 

ஏனையவர்கள் பின்னாளில் தமிழர்களுடன் கலந்து விட்டனர்.  

கட்டைக் காற்சட்டையை சோர்ட்ஸ் (Shorts) எனவும் நீளக் காற்சட்டையை பெல்ஸ் அல்லது பெல்போட்டம் எனவும், பிற்காலத்தில் ஜீன்ஸ் எனவும் அழைத்தார்கள். 

ஆனால் இந்த நீளக் காற்சட்டைகளின் நீள அகலங்கள், தையல் மாதிரிகள், அலங்காரங்கள், துணி வகைகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டன. 

உடையலங்கார நிபுணர்கள், தையல்காரர்கள் புகுத்தும் நவீனங்கள் அழகான இளைஞர்கள், இளம் பெண்கள் அணிந்து உலாவர அது பிரபலமாகிவிடுகின்றது. 

முன்னாளில் மேற்கில் உருவான ஒரு நாகரிகம் கடல் கடந்து, கண்டம் கடந்து எம் போன்ற கீழைத்தேய நாடுகளுக்கு வந்து பரவலாகப் பல மாதங்கள் எடுத்தது. 

தற்போது உலகமயமாதலும் சமூக வலைத்தளங்களது வளர்ச்சியும் ஒரு புதிய ஸ்ரைல் எமது நாட்டை எட்டிப்பார்க்க ஒரு சில நிமிடங்கள் போதும்.  

அது நாடெங்கும் பரவ ஒரு சில மணித்தியாலங்கள் போதும். 

”கிழிஞ்சதைப் போட்டால் வறுமை. கிழிச்சுப் போட்டால் நாகரிகம்” ஏழ்மையும், பணக்காரத்தனமும் ஆடையால் ஒப்பிடப்பட்டே சமூக வலைத்தளங்களில் பதிவு வருகின்றது. 

1970களின் பிற்பகுதியில் எமது நாட்டில் பெல்போட்டம் பிரபலமாக இருந்தது. 

நீளக் காற்சட்டையின் கீழ் கால் பகுதி அகன்று இருப்பதை பெல்போட்டம், பெல்ஸ் என்பார்கள். எனது சிறு வயதில் அதனை அணிந்து மகிழ்ந்துள்ளேன். 

1980களின் ஆரம்பத்தில் கால்பகுதி ஒடுக்கமான ரவுசர் பிரபலமாகத் தொடங்கியது. இந்த வகை நீளக் காற்சட்டையில் கீழ் கால் பகுதி அகலமாக இருக்காது. கால் பாதம் புகக்கூடியதான அளவாக இருக்கும். 

இந்த ரவுசர் வரத் தொடங்கிய காலத்தில் ஹொட்றொயில் (Hotroil) துணியில் தைக்கப்பட்ட   ரவுசர் பிரபலமாக இருந்தன. 

டெனிம் ஜீன்ஸ் இன்று வரை பிரபலமாக இருக்கின்றது. குளிர் நாடுகளில் குளிரைத் தாங்கக் கூடிய ஒரு வகைத் துணியாக டெனிம் அன்றும் இன்றும் இருக்கின்றது. 

ஹொட்றொயில் துணியிலான உடுப்புகள் ஒரு சில வருடங்களின் பின்பாகப் பிரபலம் இழந்து போனது. 

பின்னாளில் இத் துணியைக் காணமுடியவில்லை. அது போல ஜெலோலைன், கறா எனத் துணி வகைகள் காலத்துக்குக் காலம் ஸ்ரைலாக பிரபலமாக வந்தன. 

பிளிற்ஸ் வைத்துத் தைப்பது ஒரு காலத்தில் ஸ்ரைலாக இருந்தது. பின்னொரு காலத்தில் பிளிற்ஸ் வைக்காமல் தைப்பது ஸ்ரைலாக மாறியது. 

ரவுசருக்கு இடுப்புப் பகுதியில் இரண்டு பக்கமும் சிறியதொரு தகடு வைத்துத் தைத்து அதில் வைத்து இறுக்கிக் கட்டுவார்கள். பெல்ற் தேவைப்படாது. 

இப்படியே ஸ்ரைலுகள் காலத்துக்குக் காலம் மாறும். 

பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் படத்தின் நாயகன் சுதாகர் இடுப்பில் பெல்ற் இல்லாமல் வருவார். 

ரவுசர், ஜீன்ஸ்க்கு பெல்ற் அணிவது ஒரு ஸ்ரைலாகப் பார்க்கப்பட்டாலும் இடுப்பிலிருந்து ஜீன்ஸ் வழுகிக் கீழே இறங்காமல் பாதுகாக்கும் ஒரு கவசமே பெல்ற் எனலாம். 

வன்முறைக் காட்சிகளில் பெல்ற்ரால் ஒருவரை அடிப்பதைக் காணலாம். தனிப்பட்ட வாழ்விலும் இது போன்ற நிகழ்வுகளைக் காணலாம். 

ரவுசரில், ஜீன்சில் தையல் நாகரிகங்கள் பல விதத்தில் வரும். 

எமது பாடசாலைக் காலத்தில் ஓ.எல் பரீட்சை வரையும் காற்சட்டை போட்டோம். உயர்தர வகுப்பு வந்ததும் மெல்ல மெல்ல நெளிந்து நெளிந்து வெள்ளைக் கலரில் ரவுசர் போட்டோம். 

உயர்தர பரீட்சை எடுத்ததன் பின்னர்தான் ரவுசர்  போட்டவர்களும் உண்டு. 

இன்று ஓ.எல் (சாதாரண தரம்) படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் நீளக் காற்சட்டையாம். ரவுசர் போடும் பழக்கம் சாதாரணமாகி விட்டது. 

எமது காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் முஸ்லீம் பிரதேசத்தில் ஆப்தீன் ரெயிலர்ஸ் எனும் பெயரில் ஆப்தீன் என்பவர் கடை வைத்திருந்தார். அவரே முன்னணி ரெயிலராக இருந்தார். அவரிடம் தைத்தால் ரவுசர் நேர் சீராக இருக்கும்.  

இன்று இடுப்பு, தொடை, கால் எல்லாம் இறுக்கிப் பிடிக்கும் ரவுசர்கள், ஜீன்சுகள்தான் பாசன். அதனைப் படாத பாடுபட்டு இளசுகள் போடப்படும் பாடு இருக்கிறதே பார்க்கப் பார்க்கச் சிரிப்பு வரும். ஆனால், இதே இறுக்கமான ரவுசர்கள் எமது அப்பாக்கள் காலத்திலும் இருந்துள்ளது. கொஞ்சம் வித்தியாசம். அதற்கு முன்னதாக கொழுகொழுத்த ரவுசர்கள். இப்படி ரவுஸரின் ஸ்டைல் காலத்துக்கு காலம் மாறி, அல்லது மீண்டு வந்திருக்கிறது. 

ஜீன்ஸ், ரவுசர் தொடர்பான நினைவலைகள் மிக நீளமானவை. உங்களுக்கும் மாறுபட்ட அனுபவங்கள் இருக்கும்.  
 

 

https://arangamnews.com/?p=5288

 

ஜீன்ஸ் என்பது தனியே டெனிம் துணியால் ஆனது மட்டும் அல்ல பருத்தியால் ஆன ஒரு குறித்த ஸ்டைலில் அமையும் நீள்கால்சட்டைகள் எல்லாமே ஜீன்ஸ் என நினைக்கிறேன்.

அதே போல் அந்த துணியின் பெயர் corduroy. 

45 minutes ago, மியாவ் said:

லெகின்ஸ் பெண்களுக்கான உடை மட்டும் தானா, ஆண்களும் அணியலாமா...

இந்த திரி உடை பற்றியது என்பதால் இந்த கேள்வி...

https://www.decathlon.co.uk/browse/c0-men/c1-clothing/c3-leggings/_/N-zfpy9l

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

என்னுடன், இரண்டு பேர் படித்தவர்கள். ஆங்கிலமும், தமிழும் சரளமாக கதைப்பார்கள்.

எனக்கும் இலங்கை பேகர்கள் பற்றி தெரிவித்த இலங்கையர்கள் அவர்கள் தாய் மொழி ஆங்கிலம் என்றே தெரிவித்தனர்.

பேகர் இன மக்கள்  கிரயோல் மொழி பேசுபவர்களாக இருக்கும் போது சிறி அண்ணாவுடன் படித்த பேகர்கள்  எப்படி ஆங்கிலம் தாராளமாக கதைக்க கூடியவர்களாக இருந்தார்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கும் இலங்கை பேகர்கள் பற்றி தெரிவித்த இலங்கையர்கள் அவர்கள் தாய் மொழி ஆங்கிலம் என்றே தெரிவித்தனர்.

பேகர் இன மக்கள்  கிரயோல் மொழி பேசுபவர்களாக இருக்கும் போது சிறி அண்ணாவுடன் படித்த பேகர்கள்  எப்படி ஆங்கிலம் தாராளமாக கதைக்க கூடியவர்களாக இருந்தார்கள் :rolleyes:

பேகர் என்பது பொதுபதம். அதில் பீப் பேகர், சிக்கன் பேகர், லாம் பேகர் என்ற பலவகை உண்டு 🤣.

அதே போல்தான் இதுவும். 

ஆங்கிலோ-சிலனீஸ், டச்-சிலனீஸ், பொர்சுகீஸ்-சிலனீஸ் எல்லாம் உண்டு.

இதையெல்லாம் சேர்த்தடித்த கலவைதான் பேர்கர். 

எனக்கு பம்பலபிட்டியில் ஒரு பேர்கர் குடும்பத்தை தெரியும் அவர்கள் ஆங்கில வழி. மட்டகளப்பில் பெரிதும் டச்சு வழி.

ஆனால் அதிககாலம் நீடித்த, வாய்ப்புகளை அதிகம் உருவாக்கிய ஆங்கிலேய ஆட்சியில் கிட்டதட்ட சகல ஐரோப்பிய-சுதேசி கலப்பினத்தர் அனைவருமே ஆங்கிலத்தை கற்று கொண்டனர். 

போதாக்குறைக்கு காபிர்/காப்பிரி/காப்பிலி எனப்படும் ஆபிரிகக்கர் கூட, மேற்கு, வடக்கு, கிழக்கு கரையோரத்தில் கணிசமாக  வாழ்ந்துள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காபிர் என்பது - அரபில் நம்பிக்கையாளன் (முஸ்லிம்) என்பதன் எதிர்பதம் என்றும், அரபிகள் ஆபிரிக்காவில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரும் போது அங்கிருந்த இஸ்லாம் மீது நம்பிக்கை அற்றோரை காபிர் என் அழைத்தனர் என்றும், தெற்கில் இருந்தோர் கறுப்பர் என்பதால் - அந்த சொல்லை திரிபு படுத்தி ஐரோப்பியர் கறுப்பு மனிதரை சுட்ட பயன்படுத்தினர் என்றும் எங்கோ வாசித்தேன்.

இலங்கை காபிர்கள் பற்றிய ஒரு ஆராய்சி சிறு கட்டுரை கீழே.

 

https://journals.openedition.org/lusotopie/1164

 

இலங்கையிலும் கறுப்பின அடிமைகள் இருந்தார்கள் என்பது நம்ப கடினமான ஆனால் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சனம்  வெளியிலை எப்பிடித்தான் பாஷனை மாத்தினாலும்.....வீட்டை வந்தவுடனை எல்லாத்தையும் களட்டி எறிஞ்சு போட்டு சாறத்தை அப்பிடி இப்பிடி உதறிப்போட்டு மடிச்சு கட்டுற சந்தோசம் இருக்கெல்லே....... வாவ் என்னவொரு காத்தோடம்...என்னவொரு காத்தோட்டம் 😁

Link to comment
Share on other sites

10 hours ago, goshan_che said:

லெகின்ஸை -10 டிகிரி குளிர் வாட்டும் இடத்தில் வேலை செய்யும் பொழுது நான் வேலை பார்த்த இடத்திலேயே குளிரை தாங்கி கொள்வதற்காக உள்ளாடையாக அணிவதற்கு கொடுக்கப்பட்டது...

குளிரை தாங்கி கொள்ள அறிமுகபடுத்தியதை மிதமான வெப்ப நிலை இருக்கும் இடத்திலேயே அதை அணிந்து **** கொள்வதற்காக மாற்றிவிட்டார்களோ என்ற சந்தேகத்தை தெளிவு படுத்தி கொள்வதற்காகவே கேட்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மியாவ் said:

லெகின்ஸை -10 டிகிரி குளிர் வாட்டும் இடத்தில் வேலை செய்யும் பொழுது நான் வேலை பார்த்த இடத்திலேயே குளிரை தாங்கி கொள்வதற்காக உள்ளாடையாக அணிவதற்கு கொடுக்கப்பட்டது...

குளிரை தாங்கி கொள்ள அறிமுகபடுத்தியதை மிதமான வெப்ப நிலை இருக்கும் இடத்திலேயே அதை அணிந்து **** கொள்வதற்காக மாற்றிவிட்டார்களோ என்ற சந்தேகத்தை தெளிவு படுத்தி கொள்வதற்காகவே கேட்டேன்...

உங்களுக்கு தரப்பட்டது thermal body ware என நினக்கிறேன். இது மேல் கீழ் உடம்பை இறுக்கி பிடிக்கும், வெப்பத்தை சேமிக்கும்.

லெகின்ஸ் இப்படியான குளிர்தாங்கும் துணியிலும், மெல்லிய துணியிலும் கூட அமையலாம் என நினைக்கிறேன்.

சுடிதார், சர்வானியின் பைஜாமாவை உடம்புடன் ஒட்டி போட்டால் அதுவும் லெகின்ஸ்தானே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை உடை வந்தாலும் ........
இந்த சேலையில் இருக்கும் அழகும் வசதியும் 
வேறெதிலும் இல்லை 
இல்லை ஒரு வேளை எமக்குத்தான் அப்படி இருக்கிறதா தெரியவில்லை 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

எத்தனை உடை வந்தாலும் ........
இந்த சேலையில் இருக்கும் அழகும் வசதியும் 
வேறெதிலும் இல்லை 
இல்லை ஒரு வேளை எமக்குத்தான் அப்படி இருக்கிறதா தெரியவில்லை 

Image

சீலையை தோய்க்கிற ஆட்களுக்குத்தான், அது எவ்வளவு கஸ்ரம் என்று தெரியும். 😂 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

எத்தனை உடை வந்தாலும் ........
இந்த சேலையில் இருக்கும் அழகும் வசதியும் 
வேறெதிலும் இல்லை 
இல்லை ஒரு வேளை எமக்குத்தான் அப்படி இருக்கிறதா தெரியவில்லை 

எங்களுக்கு சோத்திலை எவ்வளவு தீராத பற்று இருக்குதோ அது மாதிரித்தான் சேலையிலும் இருக்கும்.

வெள்ளைக்காரியளுக்கு வெய்யில் அடிக்க மினிறொக் போடாட்டில் செத்துப்போவினம்.

Dünne Junge Mädchen Mit Sportlichen Hintern In Einem Roten Tartan-Minirock  Mit Blauen Penny-Skateboard Versuchen, über Den Zaun Von Einem Tropischen  Garten Zu Klettern. Outdoor-Lifestyle-Bild An Einem Sonnigen Sommertag.  Lizenzfreie Fotos, Bilder Und

Link to comment
Share on other sites

இது மருதரை மயக்குவது:

E3zmmauWEAEm7H9?format=jpg&name=medium

 

இது நாதமுனியின் தியானம்:

nintchdbpict000280874594.jpg

 

ஐயோ … குமாரசாமி தாத்தாவுக்கு இன்னமும்  ….😊 இந்த பாவாடையா கேக்குது?

46912654-d%C3%BCnne-junge-m%C3%A4dchen-m

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

ஐயோ … குமாரசாமி தாத்தாவுக்கு இன்னமும்  ….😊 இந்த பாவாடையா கேக்குது?

குமாரசாமிக்கு குறுக்கு கட்டுதான் பிடிக்கும்...🥰

ஈழத் தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை - நிமிர்வு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2021 at 00:23, goshan_che said:

இந்த காபிர் என்பது - அரபில் நம்பிக்கையாளன் (முஸ்லிம்) என்பதன் எதிர்பதம் என்றும், அரபிகள் ஆபிரிக்காவில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரும் போது அங்கிருந்த இஸ்லாம் மீது நம்பிக்கை அற்றோரை காபிர் என் அழைத்தனர் என்றும், தெற்கில் இருந்தோர் கறுப்பர் என்பதால் - அந்த சொல்லை திரிபு படுத்தி ஐரோப்பியர் கறுப்பு மனிதரை சுட்ட பயன்படுத்தினர் என்றும் எங்கோ வாசித்தேன்.

இலங்கை காபிர்கள் பற்றிய ஒரு ஆராய்சி சிறு கட்டுரை கீழே.

 

https://journals.openedition.org/lusotopie/1164

 

இலங்கையிலும் கறுப்பின அடிமைகள் இருந்தார்கள் என்பது நம்ப கடினமான ஆனால் உண்மை.

நீங்கள் இணைத்த இலங்கை Afro  தகவல் புதிதாக ஆச்சரியமாக இருந்தது.
அதில் காபிர்  என்று சொல்லியுள்ளீர்கள் நான் முஸ்லிம் மதவாதிகளின் பேச்சு சிலவற்றை வீடியோக்களில் கேட்டிருக்கிறேன். அவர்கள் காபிர் என்று மதங்களை நம்பாதோர், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்று மற்றவர்களுக்கு தான் பாவிக்கிறார்கள். தலையை மறைக்காத முஸ்லிம் பெண்ணுக்கும் காபிர் வழி செல்பவள் என்று ஏச்சும் நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

 

Theresa May steps out in sari as she hails success of 'Global Britain'  drive during India trade trip

இவர் பதவியை விட்டு விலகும் போது  கவலையாக பேசியது நினைவில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் இணைத்த இலங்கை Afro  தகவல் புதிதாக ஆச்சரியமாக இருந்தது.
அதில் காபிர்  என்று சொல்லியுள்ளீர்கள் நான் முஸ்லிம் மதவாதிகளின் பேச்சு சிலவற்றை வீடியோக்களில் கேட்டிருக்கிறேன். அவர்கள் காபிர் என்று மதங்களை நம்பாதோர், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்று மற்றவர்களுக்கு தான் பாவிக்கிறார்கள். தலையை மறைக்காத முஸ்லிம் பெண்ணுக்கும் காபிர் வழி செல்பவள் என்று ஏச்சும் நடக்கிறது.

நான் விளங்கிகொண்டபடி,

1. முஸ்லிம் = நம்பிக்கை உள்ளவர் (இஸ்லாத்தில்)

2. காபிர் = முஸ்லிம் அல்லாதவர்

3. அரபிகள்தான் முதலில் முஸ்லிம் ஆனார்கள். அதே கண்டத்தில் தெற்கே வாழ்ந்தவர்களை காபிர் என்றழைத்தாரகள்.

4. அரபிகளிடம் இருந்து கறுப்பின/காபிர் அடிமைகளை வாங்கிய ஐரோப்பியரும் அதே பெயரை பாவித்ததனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நான் விளங்கிகொண்டபடி,

1. முஸ்லிம் = நம்பிக்கை உள்ளவர் (இஸ்லாத்தில்)

2. காபிர் = முஸ்லிம் அல்லாதவர்

3. அரபிகள்தான் முதலில் முஸ்லிம் ஆனார்கள். அதே கண்டத்தில் தெற்கே வாழ்ந்தவர்களை காபிர் என்றழைத்தாரகள்.

4. அரபிகளிடம் இருந்து கறுப்பின/காபிர் அடிமைகளை வாங்கிய ஐரோப்பியரும் அதே பெயரை பாவித்ததனர். 

இறை மறுப்பளர்களைதான் காபீர்கள் எனப்படுவர். அல்லாவையும் அவரது தூதரையும் எற்றுக்கொள்ளாதவர்கள் எல்லோரும் காபிர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, colomban said:

இறை மறுப்பளர்களைதான் காபீர்கள் எனப்படுவர். அல்லாவையும் அவரது தூதரையும் எற்றுக்கொள்ளாதவர்கள் எல்லோரும் காபிர்கள்.

அல்லாவையும் தூதரையும் ஏற்று கொண்டோர் எல்லாரும் முஸ்லிம்கள்?

முஸ்லிம் என்பதன் எதிர்பதம் காபிர் என்ற என் புரிதல் சரிதானே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.