Jump to content

நவீன உலகின் பர்மா பஜார்.! - உங்களுக்காக..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நவீன உலகின் பர்மா பஜார்.! - உங்களுக்காக..

86273356_1535913876566671_41537566482775

யீவு…  இந்தப் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டீர்கள். ஆனால், இந்த நகரில் இருந்து வரும் ஒரு டஜன் பொருட்களாவது இப்போது உங்கள் வீட்டில் இருக்கும். உங்கள் வாழ்நாளில் சில ஆயிரம் ரூபாயை இந்த ஊர்ப் பொருட்களுக்காகச் செலவழித்திருப்பீர்கள். கொசு பேட்டில் ஆரம்பித்து மொபைல், ரிமோட் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான சீனப் பொருட்களின் தாயகம், சீனாவில் இருக்கும் `யீவு’ என்ற இந்த நகரம்தான்.

சீனாவின் ஷுஜியாங் மாகாணத்தில் இருக்கிறது யீவு. மற்ற சீன நகரங்களை ஒப்பிட்டால், இது பரப்பளவில் சிறியது. ஆனால், யீவுவின் வர்த்தகச் சந்தை மிகப் பெரியது.
17 முக்கியத் தொழில் துறைகளில் 4,20,000-க்கும் அதிகமான பொருட்கள் இங்கே கிடைக்கின்றன. தினமும் ஒரு லட்சம் வியாபாரிகள் தங்கள் நாடுகளுக்கு பொருட்களை வாங்க வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் யீவு-வில் இருந்து 1,500 கன்டெய்னர்கள் உலகின் பல மூலைகளுக்கும் புறப்படுகின்றன. வாரத்தின் ஏழு நாட்களும், வருடம் முழுவதும் கடைகள் திறந்திருக்கும். சீனப் புத்தாண்டு மட்டுமே யீவு-வுக்கு விடுமுறை நாள்.

சிறிய கிராமமாக இருந்த யீவு, இப்போது சிறுபொருட்களின் உலகளாவிய தலைநகரம். சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு யீவு மிகச் சிறந்த சான்று. இன்று யீவு சீனாவுக்கு மட்டும் அல்ல, உலகத்துக்கே சொந்தமானது. மற்ற நாடுகளின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ற பொருட்களைத் தயாரிப்பதில் யீவு மக்கள் கில்லாடிகள். அதற்கு பல நூற்றாண்டுகள் விரியும் அவர்களின் வரலாறும் ஒரு முக்கியக் காரணம்.

யீவு நகரம் முழுவதும் மலைப்பிரதேசம். அந்த நிலங்கள் விவசாயத்துக்கும் ஏற்றது அல்ல. எனவே, அந்தப் பகுதி மக்கள் வாழ்வாதாரத்துக்காக வணிகத்தை நம்பவேண்டி இருந்தது. அவர்கள் வசம் இருந்த ஒரே விஷயம், பழுப்பு சர்க்கரை. எனவே பழுப்பு சர்க்கரையைக் கொடுத்து, அதற்குப் பதிலாக கோழி இறகுகளைப் பண்ட மாற்றம் செய்தார்கள். கோழி இறகில் இருந்து உருவாகும் உரம் அவர்களின் நிலங்களைச் செழுமைப்படுத்தியது. அந்த இறகுகளைக் கொண்டு பலவிதமான கைவினைப்பொருட் களைச் செய்ய ஆரம்பித்தார்கள். அவற்றை விற்பனை செய்ய மற்ற ஊர்களுக்குச் செல்லும் போது, மக்களின் தேவை என்ன என்பதை அறிந்துகொண்டார்கள்.

உடனே அந்தப் பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். இன்று யீவு நகரத் தயாரிப்புகளின் சிறப்பே இதுதான். `யீவுக்குப் போனால் நம் பிரச்னையைத் தீர்க்கும் பொருளை வாங்கிவிட முடியும்’ என்ற நம்பிக்கைதான் இந்த நகரத்தின் அடிப்படை.

வரலாறு.

நீண்ட நெடுங்காலமாக சீனா ஒரு கம்யூனிஸ நாடு. அனைத்தும் பொதுவுடைமை என்ற நிலை இருந்ததால், அங்கு வணிக சுதந்திரம் (free trade) தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் வணிகத் தைப் பிரதானமாகக்கொண்ட யீவு மக்களை மற்றவர்கள் முதலாளித்துவப் பிரதிநிதிகளாகப் பார்த்தனர். ஆனால், யீவுவுக்கு வணிகத்தை விட்டால் வேறு வாழ்வாதாரம் கிடையாது. எனவே, ரகசியமாகத் தங்கள் வணிகத்தைத் தொடர்ந்தார்கள். காவல் துறையிடம் சிக்கினால் பொருள் நஷ்டத்துடன் சிறைவாசமும் கிடைக்கும். 1982-ம் ஆண்டு வரை தொடர்ந்த இந்தக் கண்ணா மூச்சி ஆட்டம் ஒரு துணிச்சல் மிக்க பெண்ணால் முடிவுக்கு வந்தது.

ஐந்து குழந்தைகளின் தாயான அந்தப் பெண்ணின் பெயர் ஃபெங் ஐ கியான். தன் குடும்பத்தைக் காப்பாற்ற வியாபாரம் மட்டுமே வழி என்பதை உணர்ந்த கியான், யீவு நகர மேயரைச் சென்று பார்த்து, `உங்கள் நகர மக்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா? பிறகு என்ன மேயர் நீங்கள்?’ எனக் கோபமாக பேசி விட்டு, அறைக்கதவைப் படாரெனச் சாத்திவிட்டு வெளியேறினார். கதவு மூடிய சத்தம் மேயரின் மூளைக்குள் பல நாட்கள் எதிரொலித்தது. பதவி பறிபோகும் அபாயம் இருந்தாலும், மக்கள்தான் முக்கியம் என முடிவெடுத்த மேயர், யீவு நகர மக்களை வணிகம் செய்ய அனுமதித்தார். முதல்முறையாக யீவு நகரின் ஹ்யூகிங்மென் தெருவில், 700 கடைகள் அமைக்கப்பட்டன. சீனாவின் முதல் சந்தை அதுதான்.

sddefault.jpg

 அதன் பின் யீவு நகரத்தின் வளர்ச்சி அசுரத்தன மாக உயர்ந்தது. தமிழ் சினிமாவில் ஒரே பாடலில் வளரும் நாயகர்களை விடவும் வேகமாக வளர்ந்தார்கள் யீவுவாசிகள். இன்று யீவு நகரில் 70,000-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன.

ஓர் ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர் யீவு நகரில் கைமாறுகிறது. இந்திய மதிப்பில் ஏறத்தாழ 40,000 கோடி ரூபாய். இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் தகவல்படி சமீபத்தில் பதிவுசெய்யப்பட்ட பொருட்களில் 60 சதவிகிதம் சீனாவில் தயாரிக்கப் படுகின்றன.

தாயம், பல்லாங்குழி போன்ற இந்தியக் கலாசார விளையாட்டுப் பொருட்களைக் கூட தயாரித்து ஏற்றுமதி செய்கிறார்கள். நம்புவீர்களா? லட்டு, பாதுஷா போன்ற நம் ஊர் ஸ்பெஷல் ஸ்வீட் வகைகளும் சீனாவில் கிடைக்கின்றன. ஆன்லைனில் ஓடர் செய்தால், நமது வீடுகளுக்கே டெலிவரி செய்கிறார்கள்.

உலகின் மிகச் சிறந்த பிராண்ட் பொருட்கள் அனைத்துக்கும் ரூப்ளிகேட் யீவுவில் கிடைக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அடிடாஸ் காலணி முதல் Gucci கண்ணாடி வரை எல்லா பிராண்டட் பொருட்களின் ஷோ ரூம்களும் யீவுவில் இருந்தன. ஆனால், இன்று அந்த ஒரிஜினல்கள் அனைவரும் கடையை மூடி விட்டார்கள்.

அவர்களின் இடத்தை அச்சு அசலான போலிப் பொருட்கள் ஆக்கிரமித்திருக் கின்றன. எந்த ஒரு புதுப்பொருளும் சந்தைக்கு வந்த பத்தாவது நாளில் யீவுவில் அதன் போலியை வாங்கலாம்.

idly-or-rice-cake-originating-from-the-i

ஆனால் `இது இட்லி இல்லை என சட்னியே வந்து சத்தியம் செய்தாலும்’ நம்ப முடியாத அளவுக்கு ஒரிஜினாலிட்டியுடன் இருக்கும்.

இப்படி எல்லாம் செய்வதால் சீனப் பொருட்கள் பற்றிய நம்பிக்கை உலக அளவில் உடைந்தாலும் இவர்களுக்குக் கவலை இல்லை. இதற்கு அவர்கள் சொல்லும் பதில்…

`இது வியாபாரம். இங்கு நம்பிக்கைகளுக்கு இடம் இல்லை.! ’என்பதே.

ஐரோப்பிய நாடுகள் முழுவதுமே யீவு நகரை நம்பித்தான் இருக்கின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் துக்காக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்களில் 60 சதவிகிதம் யீவு நகரில் வாங்கப்படுகின்றன. பொருட்களை விரைவாக தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்ல, யீவு நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்கு ஒரு ரயில் விடப்பட்டது. மொத்தம் 13,052 கி.மீ பயணம் செய்த இதுதான் உலகில் அதிக தூரம் பயணம் செய்த ரயில். 40 பெட்டிகள், 1,400 டன் எடையுள்ள பொருட்களுடன் பயணித்த இந்த ரயில் மொத்தம் 30 நாடுகளைக் கடந்து ஸ்பெயினைச் சென்று சேர்ந்தது!

போலிகளும் சீனப் பொருட்களும்!

c67d0773738d943088f56d83ead9f680.png

(லேன்ற் குரூசரை விட சொகுசான சீன ரூப்ளிகேற் .. )

சீனாவில்தான் தரத்துக்கு பெயர் போன ஆப்பிள் மொபைல்களும் தயாரிக்கப்படுகின்றன; விலை குறைந்த மொபைல்களும் தயாரிக்கப்படுகின்றன. வேண்டிய பொருட்களை வேண்டிய விலையில், வேண்டிய தரத்தில் செய்து தரக்கூடிய திறன் சீனாவுக்கு உண்டு. ஆனால், வளர்ந்து வரும் போலிகள் காரணமாக சீனாவின் பெயர் உலக அளவில் மதிப்பிழந்து வருகிறது. எந்த ஒரு பொருளையும் ‘காப்பி’ அடிக்க சீன நிறுவனங்களால் முடியும். சமீபத்திய ஆய்வுகளின்படி சீனாவில் கிடைக்கும் 40 சதவிகிதம் பொருட்கள் போலியானவை; தரம் குறைந்தவை.

அது மட்டுமின்றி ஏற்றுமதியிலும் ஏமாற்றுகிறார்கள். `வியாபாரி ஒருவர் சீனாவுக்கு சென்று, ஆயிரம் கொசு பேட்டுகளுக்கு ஓடர் தந்தால், இறக்குமதியாவதில் 200 கொசு பேட்கள் வேலை செய்யாது. சீனாவுக்கு திரும்பச் சென்று கேட்பது கூடுதல் செலவு என்பதால், இறக்குமதி செய்பவர் அதற்கும் சேர்த்து விலையைக் கூட்டி விற்றுவிடுகிறார். இது போன்ற செயல்களால் சீனா என்றாலே டூப்ளிகேற்  என்ற பிம்பம் அழுத்தமாக பதிந்து வருகிறது’ என்கிறார்கள்.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொம்மைகள் பலவற்றை, `குழந்தைகளுக்கு உகந்தது அல்ல’ எனச் சொல்லி, நம் நாட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவங்கள் உண்டு. இந்த பொம்மைகளில் காரீயம் என்ற ரசாயனம் கலந்த பெயின்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வைத்து குழந்தைகள் விளையாடினால் பல்வேறு நோய்கள் உருவாகும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுபோன்ற பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தரும் தர சான்றிதழ்களுக்கும் பொருட்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கும். பொம்மைகள் மட்டுமல்லாமல் சோப்பு, ஷாம்பு, காஸ்மெட்டிக்ஸ் என சீனப்பொருட்களில் கலப்படம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக `இந்தியாவில் இறக்குமதி ஆகும் சீனப்பொருட்களின் தரம் எப்போதும் பாஸ்மார்க்குக்கும் குறைவுதான்’ என்கிறார்கள் அதிகாரிகள்.

அதே நேரம் சீனாவின் இந்த `போலி கிங்’ இமேஜுக்குப் பின்னால் ‘பிக் பாஸ்’ அமெரிக்காவின் கை இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. `பொருளாதார ரீதியாக சீனாவின் வளர்ச்சியை அமெரிக்காவால் தடுக்க இயலவில்லை. எனவே, சீனப் பொருட்கள் குறித்த மதிப்பை சீர்குலைக்கும் உள்ளடி வேலைகளைச் செய்கிறது. சீனாவில் போலி பொருட்கள் தயாரிப்பு இருப்பது உண்மைதான் என்றாலும், இவர்கள் மிகைப்படுத்தும் அளவுக்கு இல்லை.

அப்படியானால் ஆப்பிள் உள்பட பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள், தங்களது உதிரிபாக தயாரிப்புப் பணியை சீனாவிடம் வழங்குவது ஏன்? உண்மையில், இன்று அமெரிக்கா தனது உள்நாட்டு தேவைகளுக்கு சீனப் பொருட்களையே நம்பி இருக்கிறது. அமெரிக்கர்கள் தலையில் போடும் தொப்பியில் இருந்து காலில் போடும் ஷூ வரை சீனபொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்’ என்கிறார்கள்.

https://senthilvayal.com/2015/12/06/உலகின்-பர்மா-பஜார்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.