Jump to content

ராஜபக்ச அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது- இந்திய ஊடகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது- இந்திய ஊடகம்

 

இந்து சமுத்திரத்தில் சீனா ஆழமாக கால்பதிப்பதால் இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்தியா மறுபரிசீலனை வருவதாக பல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என தி பிரின்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து தி பிரின்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது.
கடந்த மாதம் இலங்கை சர்ச்சைக்குரிய 1.4 பில்லியன் திட்டமான கொழும்பு துறைமுகநகர திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
இதற்கு சீனா நிதியுதவி வழங்குகின்றது.
ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கொழும்புடனான உறவுகளிற்கு புத்துயுர் கொடுக்கும் நோக்கத்துடன் காணப்பட்ட புதுடில்லி, தற்போது இந்தியாவை சமநிலையில் வைத்திருப்பதை கைவிட்டுவிட்டு சீனாவின் பக்கம் சாய்வது குறித்த உறுதியான நிலைப்பாட்டை கொழும்பு எடுத்துள்ளதாக கருதுகின்றது என பல வட்டாரங்கள் தெரிவித்தன.
Gotabaya-with-Modi-300x169.jpg
கடந்த மாதம் இலங்கை நாடாளுமன்றம் சர்ச்சைக்குரிய கொழும்புதுறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு திட்டத்தை நிறைவேற்றியது.
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும், கொழும்பு துறைமுகநகரம் இலங்கைக்குள் ஒரு சீன மாகாணமாக மாறலாம் என்ற கரிசனைகளிற்கு மத்தியிலும் இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றியது.
உத்தேச புதிய கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு பரந்துபட்ட அதிகாரங்களை கொண்டிருக்கும் என கருதப்படுகின்றது.மேலும் இலங்கையின் மாநகரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் சட்டமூலங்கள் கொழும்பு துறைமுக நகரை கட்டுப்படுத்தாது.
இதன்காரணமாக இது ஜனநாயக ரீதியில் செயற்படாது என்ற கரிசனைகள் காணப்படுகின்றன.
கொழும்புதுறைமுகநகரம் காரணமாகவும்,- அம்பாந்தோட்டை துறைமுகநகரத்திற்கு என்ன நடந்தது என்பதன் காரணமாகவும்( கொழும்பு 99 வருட குத்தகையை மேலும் நீடிக்க தீர்மானித்துள்ளது என்ற ஊகங்களிற்கு மத்தியில்)இலங்கை முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது என தெரிவித்த ஒரு வட்டாரம் இந்தியாவிற்கு இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம், இந்திய அரசாங்கங்களிற்கும் சவால்கள் ஏற்படலாம் என தெரிவித்தது.
இந்தியா இலங்கை உறவுகள் கடந்த பெப்ரவரியில் இலங்கை முத்தரப்பு கொழும்பு துறைமுக கிழக்குகொள்கலன் முனைய அபிவிருத்தி திட்டத்தை கைவிட்டதை தொடர்ந்து வீழ்ச்சியடைய ஆரம்பித்தன.
port-city5-300x200.jpg
 
அதற்கு பதில் இலங்கை இந்தியாவிற்கு மேற்குகொள்கலன் முனையத்தை வழங்கியது – அரசாங்கங்களிற்கு இடையிலான உடன்படிக்கை போலயில்லாமல் தனியார் உடன்பாடு போன்று இது வழங்கப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் ராஜபக்ச சகோதாரர்களிற்கும் இடையிலான ஆரம்ப காலநட்புறவு தற்போது மறையத்தொடங்கியுள்ளது என்பது தெளிவான விடயம் என தெரிவித்த தகவல் அறிந்த வட்டாரங்கள் இந்தியாவிற்கு முதலிடம் என்ற இலங்கையின் கொள்கை வேகமாக காணாமல்போகின்றது என தெரிவித்தன.
இதுசீனா இலங்கையை இந்தியாவிலிருந்து விலக்கிகொண்டு சென்றுள்ளதால் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இந்து சமுத்திரத்தில் தனது பிரசன்னத்தை பேணலாம் என சீன கருதுகின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை அடானி குழுமம் அபிவிருத்தி செய்துவரும் மேற்கு கொள்கலன் முனையத்தை இலங்கையில் கால்பதிப்பதற்கு இந்தியா நம்பியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜபக்ச அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:
அதேவேளை அடானி குழுமம் அபிவிருத்தி செய்துவரும் மேற்கு கொள்கலன் முனையத்தை இலங்கையில் கால்பதிப்பதற்கு இந்தியா நம்பியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜபக்ச அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வட்டாரங்கள் கடும் வட்டாரங்கள் போல 
அழுகிப்போன நாறல் மீனை இன்னும் மோந்து கொண்டு திரியும் வட்டாரம், இதனை தூக்கிக்கொண்டு கோத்தாவிடம் வந்தால் ஒரு  தென்னிலங்கை  ஆர்ப்பாட்டம் போதும் பின்னங்கால் பிடரியிலடிபட ஓடுவினம்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை அழித்தவர்களே எமக்கான தீர்வினை முன்வைக்கப்போவதில்லை. தமிழர்களின் உண்மையான காவலர்கள் புலிகள்தான் என்பது கூத்தமைப்பிற்கும் இந்தியாவுக்கும் மேற்குலகிற்கும் தெரிகிறதோ இல்லையோ கோத்தாவுக்கும் மகிந்தவுக்கும் நன்றாகவே தெரியும். ஆகவேதான் புலிகள் அற்ற வெளியில் துரித சிங்கள மயமாக்கலில் அவன் இறங்கியிருக்கிறான். இந்தியா எனும் பிச்சைக்கார நரிகளின் ஊளையினை அவன் கணக்கிலெடுக்கப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்டிக்கழிக்க வேண்டியதில்லை

இனி தீர்வை  தமிழருடன் செய்துவிட்டு இலங்கையிடம்  கொடுக்க  வைக்க  எமது தலைவர்கள்  இதை  பயன்படுத்தவேண்டும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரேப் வாட்டர் கணக்கா அடிச்சு விடுகினம்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

70 வருடமாக பக்கத்திலிருந்தே ஒன்றும் செய்ய முடியாத இந்தியா இனி என்னதை கிழிக்கப்போகிறது.....

தமிழகத்தில் பிரிவினை கேட் கிறார்கள் என வட இந்தியர்களை உசுப்பேத்தி அரசியல் செய்ய வேண்டிது தான்.....மிச்சம் ....
இதில வல்லரசு கனவு வேற

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.