Jump to content

முஸ்லீம் மக்களுக்கு விரோதமாக நடந்தவர்கள் தமிழ் இனவாதிகள் என கூறிய கலையரசன் எம்.பிக்கு பாராட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மக்களுக்கு விரோதமாக நடந்தவர்கள் தமிழ் இனவாதிகள் என கூறிய கலையரசன் எம்.பிக்கு பாராட்டு

 

முஸ்லீம் மக்களுக்கு விரோதமாக நடந்தவர்கள்  தமிழ்  இனவாதிகள் என   தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் கூறியிருப்பதை பாராட்டுவதாக  என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள  உலமா கட்சி காரியாலயத்தில் இன்று(14)  நடைபெற்ற விசேட  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு  தொடர்ந்தும்   கருத்து வெளியிட்ட அவர்

முஸ்லீம் தமிழ் கட்சிகளின் பொதுவான போக்கு தேர்தலுக்கு பின்னர் ஒரு பேச்சு.அதற்கு முன்னர் ஒரு பேச்சு.தேர்தலுக்கு முன்னர் முஸ்லீம் காங்கிரஸ் தரப்பில் தமிழரா என எதிர்ப்பது மற்றும் தமிழர் தரப்பில் முஸ்லீமா என எதிர்ப்பதே தொடர்கதையாகிறது.இதன் பின்னர் தேர்தலின் பின்னர் தமிழ் முஸ்லீம் கட்சிகள்  வேறொன்றை பேசுவதை வழமையாக பார்க்கின்றோம்.இந்த வகையில் அந்த காலத்தில் கலையரசன் எம்.பி போன்றவர்கள் முஸ்லீம் மக்களுக்கு விரோதமாக நடந்தவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.முஸ்லீம்களுக்கு எதிராக இனவாதம் பேசியவர்களில் கலையரசன் என்பவரும் ஒருவராவார்.

தமிழ் பிரதேச செயலகத்தை பிரிந்து முஸ்லீம் பிரதேச செயலகம் வேறாகவும் தமிழ் பிரதேச செயலகம் வேறாகவும் வர வேண்டும் என கூறியவரும் கலையரசன் ஆவார்.இவர் தற்போது கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளின் முக்கிய காரணம் தமிழ் இனவாதம் தான் என்பதை பகிரங்கமாக ஒரு ஊடகத்தின் வாயிலாக  ஏற்றுக்கொண்டுள்ளார்.முதலில் அவர்  இந்த உண்மையை இவ்வாறு ஏற்றுக்கொண்டமைக்கு பாராட்டு தெரிவிக்க விரும்புகின்றேன்.

1980க்கு முன்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் முஸ்லீம் மக்கள் மிக ஒற்றுமையுடனே வாழ்ந்து வந்தார்கள்.1980 பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்கள் முஸ்லீம்கள் மீது ஆயுதங்களினால் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன.இதனால் அவர்கள் மீது முஸ்லீம்களுக்கு பயம் ஏற்பட்டிருந்தது.இந்த பயத்தினை போக்குவதற்காக தான் முஸ்லீம் தரப்பிலும் ஆயுதம் ஏந்தியிருந்தார்கள்.இதனை விட முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இருந்தார்கள்.எனினும் வட மாகாணத்தில் 1 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம் மக்கள் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட கொடுமைகளையும் கண்டோம்.

ஆகவே கலையரசன் கூறுவதை போன்று ஆயுதம் தாங்கிய போராளிகள் மேற்கொண்ட செயற்பாடு காரணமாக தான் முஸ்லீம் தமிழ் மக்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டது என்பதை தெளிவு படுத்துகின்றார்.எனவே இந்த நேரத்தில் அவர் குறித்த உண்மையை கூறியதற்காக பாராட்டுகின்றோம்.எங்களை பொறுத்தவரை தமிழ் முஸ்லீம் ஒற்றுமையினையை விரும்புகின்றோம் என குறிப்பிட்டார்.

https://jaffnazone.com/news/26486

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலையரசனை பாராட்டிய உலாமா கட்சி தலைவர் முபாராக்கு பாராட்டுக்கள் ...

AusTa தலைவர் Thalaivar RR

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

கலையரசனை பாராட்டிய உலாமா கட்சி தலைவர் முபாராக்கு பாராட்டுக்கள் ...

AusTa தலைவர் Thalaivar RR

சிவப்பு தொப்பி மெளவி உடான்ஸ் சாமியாரின் குரு. அவரை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அல்லக்கையின்  கருத்துக்கு பதிலிடாமல் நகருவதே சிறந்தது. இது தமிழரை சீண்டி விருது வாங்க திண்டாடுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.