Jump to content

கர்ப்பிணி மனைவியை 28 கிலோ மீற்றர் தூரம் வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்ற கணவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம்.எம்.சில்வெஸ்டர்

மழை வெள்ளத்தில் நடக்க முடியாத 7 மாத கர்ப்பிணியான தனது மனைவி சாந்தனியை 22 கிலோ மீற்றர் தூரம் தூக்கிக்கொண்டு சென்ற  28 வயதான தமிழ் இளைஞன் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் சகோதர மொழி தேசிய  பத்திரிகைகள்  செய்தி வெளியிட்டுள்ளன.    

2453.JPG

இந்த சம்பவத்தை கண்ட ஷெஹான் மாலக்க கமகே  என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.  காலி மாவட்டத்தின் ஹினிதும பகுதியிலுள்ள கொடிகந்த எனும் கிராமத்தில்  வாடகை வீட்டில் வசிப்பர்களே இந்த இளம் தம்பதிகளான குமார் மற்றும் சாந்தனியாவார். 

சாந்தனியின் தாய் தந்தையரும்  ஏழ்மையின் பிடியில் வாழ்ந்து வரும் சிங்கள குடும்பமாகும். அவர்கள் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறிப்பவர்கள் ஆவர். அவர்களைப் போலவே சாந்தனியின் கணவரான குமாரும் கொழுந்து பறிக்கும் தொழிலையே தனது வாழ்வாதாரமாக செய்து வந்தார். 

தற்போது நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அந்த தொழிலுமின்றி பொருளாதார ரீதியாக பெரும் கஷ்டத்தில் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டுகின்றனர். சம்பவம் தொடர்பில் விவரித்த குமார்,

“சம்பவ தினத்துக்கு முன்னைய தினமான 3 ஆம் திகதி வியாழக்கிழமை காலையில் இருந்து கடும் மழை பெய்தது. ஆற்று பெருக்கத்ததினால் மறுநாள் அதாவது சம்பவம் நடந்த 4 ஆம் திகதியன்று வீதிகள் எங்கும் பெரும் வெள்ளம் காணப்பட்டது.

Kumar___Chandhani.jpg

 

7 மாத கர்ப்பிணித் தாயான சாந்தனியின் வயிற்றிலுள்ள சிசு இரண்டு நாட்களாக துடிக்காத காரணத்தால் எமது பகுதிக்கு பொறுப்பான ‘மிட் வைப்’ (குடும்ப நலத்தாதி) 5   மணித்தியாலங்களுக்குள் ஹினிதும வைத்தியசாலைக்கு கொண்டு சேர்க்கும்படி அறிவுறுத்தினார். 

வெள்ளம் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாததால், எனது மனைவியை தூக்கிக்கொண்டு செல்ல முற்பட்டேன். இது கஷ்டான காரியமென்றாலும், எப்படியாவது மனைவியை வைத்தியாலைக்கு அழைத்துச் சென்று எமக்கு பிறக்கப்போகும் முதல் குழந்தையை காப்பாற்ற வேண்டுமென்றே எனது மனதில் ஓடியது.

மனைவியைத் தூக்கிக்கொண்டு செல்லும் வழியில் சிலர் எமக்கு உதவினார்கள். எனக்கு களைப்பு ஏற்படும்போது, எனது நிலையறிந்து என் மனைவி சில தூரம் நடந்து வந்தார். எனினும், அவள் களைப்படைந்து காணப்படும்போது நான் மீண்டும் தூக்கிக்கொண்டு வைத்தியசாலை நோக்கி நடந்து ஒருவாறு ஹினிதும வைத்தியசாலையை அடைந்தேன்” என்றார்.

வைத்தியசாலைச்குச் சென்ற குமாருக்கும் சாந்தனிக்கும் ஹினிதும வைத்திசாலையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால், “இவருக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ வசதிகள் எமது வைத்தியசாலையில் இல்லை.உடனடியாக உடுகம வைத்திசாலைக்கு அனுமதிக்குமாறு” அங்குள்ள தாதியொருவர் கூறியமையே ஆகும். மேலும், “நீங்கள் எவ்வாறு செல்வீர்கள். வீதியெங்கும் வெள்ள நீர் காணப்படுவதால் வாகனமொன்றைக்கூட கொடுக்க முடியாதுள்ளது ” என அந்த தாதி கூறியுள்ளார்.

ஹினிதும  வைத்தியசாலையிலிருந்து 22 கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பால் உடுகம வைத்தியசாலை உள்ளது. தனது தைரியத்தை கைவிடாது நம்பிக்கையுடன் உடுகம வைத்தியசாலை நோக்கி மீண்டும் தனது மனைவியை தூக்கிக் கொண்டு நடந்து சென்றார் குமார்.

“ஹினிதும கல்வாரி தேவாலயத்தை நெருங்கிக்கொண்டிருந்வேளையில், அந்த பகுதியால் வந்த ஷெஹான் மாலக்க கமகே என்பவர் எமக்கு உதவிசெய்தார். அவர் எங்களை படம்பிடித்து எமது நிலை குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்தார். இதன்பின்னர் , நான் எனது மனைவியைத் மீண்டும் தூக்கிக்கொண்டு உடுகம வைத்திசாலையை நோக்கிச் சென்றேன். இடையில் களைப்பாகும் போது எனது மனைவி இறங்கி நடந்து வந்தார். இவ்வாறு சற்று ஓய்வெடுத்துக்கொண்டு ஹினிதுமயிலிருந்து உடுகம வைத்தியசாலைக்கு சென்றோம் ” என்றார்.

 

Kumara.jpg

 

தனது நிலை குறித்து கூறிய கர்ப்பிணித்தாயான சாந்தனிக்கு, உடுகம வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் அவருக்குத் தேவையான முதலுதவி வசதிகளை வழங்கி  உடனடியாக அவரை காலி வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அனுப்பினார்கள். 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக கடைகள் எதுவும் திறந்தில்லாததால் மனைவி சாந்தனியை காலி வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு வீடு நோக்கி மீண்டும் நடைப்பயணத்தை மேற்கொண்டார் குமார். இவ்வாறு இரவுப் பொழுது நெருங்கிக் கொண்டிருக்கையில், அவ்வழியாக வந்த பொலிஸ் வண்டி இவர் அருகே நிறுத்தி வினவினர். 

இதன்போது தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கூறியதுடன், பொலிஸ் வண்டியிலிருந்த இளம் பொலிஸார்கள் சிலர் அந்த சம்பவம் தொடர்பில் நாம் பேஸ்புக் மூலாக அறிந்திருந்தோம் எனவும், அந்த சம்பவம் உங்களுடையதா  எனவும் கேட்டிருந்தனர். அதற்கு ‘ஆம்’ என மறுமொழியளித்த குமாரிடம், அருகிலுள்ள கட்டடத்தை காட்டி இங்கே யாருமில்லை. இங்கே நீங்கள் தங்கிவிட்டு காலையில் செல்லவும் என்றதுடன், அவருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கிவிட்டு அவ்விடத்தைவிட்டு பொலிஸார் நகர்ந்தனர்.

அந்த கட்டத்தில் தங்கிவிட்டு, பின்னர் விடிந்ததும் தனது வீடு நோக்கி சென்றார் குமார். வீடு சென்று குளித்துவிட்டு , புத்துணர்ச்சியுடன் கொடிகந்த கிராமத்திலுள்ள தனது வீட்டிலிருந்து 35 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காலி வைத்தியசாலை நோக்கி மீண்டும் நடக்க ஆரம்பித்தார். பேஸ்புக் மூலாக இவரின் நிலை அறிந்த சிலர் இவருக்கு மனமுவந்து உதவி நல்கினர்.

நடந்து சென்றிருக்கையில், இவரை வாகனத்தில் ஏற்றிச்சென்றாலும் பாதையெங்கும் வெள்ள நீர் காணப்பட்டதால் தொடர்ந்தும் வாகனத்தால் பயணிக்க முடியவில்லை. இதனால், மீண்டும் தனது நடைப்பயணத்தை தொடர்ந்த  குமார் வைத்தியசாலைக்குச் சென்றதும் அவருக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது.  

சாந்தனியை பரிசோதித்த வைத்தியர்கள், அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. வயிற்றிலுள்ள சிசுவும் நலமாக இருப்பதாகவும் கர்ப்பிணித்தாய் 8 ஆவது மாதம் நிரம்பியவுடன்,  வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்க்கும்படியும் வைத்தியர்கள் தெரிவிக்க மகிழ்ச்சியில் வீடு நோக்கித் திரும்பினார் குமார்.

கர்ப்பிணி மனைவியை 28 கிலோ மீற்றர் தூரம் வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்ற கணவர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைகள்தான் எப்போதும் சொல்லெணாத் துயரடைகின்றனர்......இந்த லட்ஷணத்தில் பெரும்பான்மையாவது சிறுபான்மையாவது......அவர்கள் குடும்பம் நன்றாக வாழட்டும்.....!   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கணவன் தான் சிறந்த அப்பாவாகிறார்.மனம் உவந்த வாழ்த்துக்ள. அந்த வரும்கால தந்தைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரு நீ கடவுளடா.

காலாகாலத்துக்கும் மனைவி உனக்கு பூசை செய்வாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

குமாரு நீ கடவுளடா.

காலாகாலத்துக்கும் மனைவி உனக்கு பூசை செய்வாள்.

கணவனே கண்கண்ட தெய்வம் எண்டு முந்தியே சொல்லி வைச்சிட்டினம் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கணவன், நல்ல தந்தை, நல்ல மனைவி
உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

மருத்துவ வசதிகள் கிராமம் தோறும் சகல மக்களுக்கும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்
இலங்கையில் அதை மிக விரைவாக செய்ய வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

மருத்துவ வசதிகள் கிராமம் தோறும் சகல மக்களுக்கும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்
இலங்கையில் அதை மிக விரைவாக செய்ய வேண்டும் 

பண வசதிகள் ,மருத்துவ வசதிகள் உள்ள நாடுகளே சராசரி மருத்துவ வசதிகளுக்கு  தள்ளாடும் போது......

வாத்தியாரின் சிறிலங்காவை நோக்கிய  வேண்டுதல் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமொத்த தம்பதிகள்.. நீடூழி வாழ வாழ்த்துக்கள்..🌹

வாழக்கையில், செய்திகளில் காணும் சில கணவன் மனைவியரின் அற்ப காரணங்களுக்காக சண்டையிட்டு, அவை விவாகரத்தில், கலவரத்தில், கொலையில் முடிந்து  பிரிபவர்களை கேள்விப்படும்போது, நமக்கு ஏற்படும் மனக்கொதிப்பு இருக்கே..! அதை சொல்லி மாளாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.