Jump to content

கடலில் பேருந்துகளை போடும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக... தமிழக மீனவர்கள் போராட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கடலில் பேருந்துகளை போடும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக... தமிழக மீனவர்கள் போராட்டம்!

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தமிழகத்தில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று(திங்கட்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தை  பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகுகளை மராமத்தி பணி செய்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் இந்தாண்டு  கொரோனா ஊரடங்கு காரணமாக மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தில் தங்களது படகுகளை மராமத்துப் பணி செய்யாததால் மேலும் 15 நாட்கள் மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை மராமத்தது பணி செய்து விட்டு எதிர்வரும் 30ஆம் திகதிக்கு மேல் மீன் பிடி கடலுக்கு செல்லாம் என முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி டோக்கன் அலுவலக வளாகத்தில் விசைப்படகு மீனவர்கள்  அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

மீனவர்கள் நடத்திய கூட்டத்தில் தொடர்ந்து தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை அளிக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லையில் இருந்து அருகே இந்திய, இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து துறைக்கு  சொந்தமான பேருந்துகளை கடல் பரப்பில் இறக்கி வருகின்றனர்.

பேருந்துகளின் கூடுகளை கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும் மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும், கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடற்பகுதிக்கும் செல்லகூடும் இதனால் படகுகள் மற்றும் வலைகள் சேதமடைந்து நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனடியாக இலங்கை மீன்வளத்துறை இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுத்தியுள்ளதுடன், நாளைய தினம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1222691

Link to comment
Share on other sites

"இரும்பு  அடிபுண்ட சட்டி, பித்தளை இருக்கா" என்று கூவி வரும் பழைய உலோகப் பொருட்களை வாங்கும் வியாபாரிகள் இலங்கையில் தற்போது இல்லையா..... ? இந்தப் பேரூந்துகளையும் விற்றுக் காசாக்காமல்.... கடலில் எறிகிறார்களே.....?? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

"இரும்பு  அடிபுண்ட சட்டி, பித்தளை இருக்கா" என்று கூவி வரும் பழைய உலோகப் பொருட்களை வாங்கும் வியாபாரிகள் இலங்கையில் தற்போது இல்லையா..... ? இந்தப் பேரூந்துகளையும் விற்றுக் காசாக்காமல்.... கடலில் எறிகிறார்களே.....?? 🤔

எல்லோரும் புலம் பெயர்ந்து விட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் பல்வேறு உள்நோக்கங்களோட தான் பழைய பஸ்ஸை கடலுக்க இறக்கியிருக்கிறார்! வட பகுதி மீனவர்களிடம் இழுவை படகுகள் குறைவு போல, தமிழ்நாட்டு மீனவர்களிற்குத்தான் பாதிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஏராளன் said:

அமைச்சர் பல்வேறு உள்நோக்கங்களோட தான் பழைய பஸ்ஸை கடலுக்க இறக்கியிருக்கிறார்! வட பகுதி மீனவர்களிடம் இழுவை படகுகள் குறைவு போல, தமிழ்நாட்டு மீனவர்களிற்குத்தான் பாதிப்பு.

இது முதல்ல செய்தி வந்த போது நாங்கள் யாரும் யோசிக்காத கோணம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இது முதல்ல செய்தி வந்த போது நாங்கள் யாரும் யோசிக்காத கோணம்.

 

எனவே தாடியர் விசயகாரர் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

எனவே தாடியர் விசயகாரர் 😎

தாடியர் விசயகாரரோ இல்லையோ - என்பதை விட, எமது கடல் வளங்களை தமிழக மீன் முதலாளிகள் சூறை ஆடக்கூடாது என்பதுதான் என் கரிசனை.

ஏராளனும் முன்பு இதை பற்றி கரிசனை கொண்டு எழுதியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

எனவே தாடியர் விசயகாரர் 😎

கோஷான் தாடியர சப்போர்ட் பண்ணுறார் என்று எழுந்த சந்தேகம் ஏன், அதை முதலில் சுட்டி காட்டிய ஏராளன் மீது எழவில்லை?

 

Link to comment
Share on other sites

4 minutes ago, goshan_che said:

தாடியர் விசயகாரரோ இல்லையோ - என்பதை விட, எமது கடல் வளங்களை தமிழக மீன் முதலாளிகள் சூறை ஆடக்கூடாது என்பதுதான் என் கரிசனை.

ஏராளனும் முன்பு இதை பற்றி கரிசனை கொண்டு எழுதியுள்ளார்.

ஆமாம் என்ன கரிசனை... புல்லரிக்கிறது.!!

தமிழக மீன் முதலாளிகள் மீனைத்தான் சூறையாடுகிறார்கள். சிங்கள மீன் முதலாளிகளோ... தமிழரின் கடலையே சூறையாடுகிறார்கள்.

என் இனமே, என் சனமே பாடியவரைப் பொல்லால் அடிக்கவேண்டும் போல் தோன்றவில்லையா...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிமினல் மூளை, தாடி விசயத்தோடை அலுவல் பார்த்திருக்குது.இப்ப விசயம் என்னடா, ரோலரில வந்து அடிமட்டத்துக்கு வலை போட்டு, இழுக்கிற கோஸ்ட்டியல், மீன் பிடியாயினம்...

பஸ் பிடிக்கப்போகினம்.... யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 760 பஸ் பிடிக்க, அந்த பக்கமா வாங்கோ. 

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பஸ் பிடிக்க, இந்த பக்கமா வாங்கோ. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

ஆமாம் என்ன கரிசனை... புல்லரிக்கிறது.!!

தமிழக மீன் முதலாளிகள் மீனைத்தான் சூறையாடுகிறார்கள். சிங்கள மீன் முதலாளிகளோ... தமிழரின் கடலையே சூறையாடுகிறார்கள்.

என் இனமே, என் சனமே பாடியவரைப் பொல்லால் அடிக்கவேண்டும் போல் தோன்றவில்லையா...

 

ஐயா,

உங்கள் வயதுக்கு மரியாதை தந்து பதிந்த என் கருத்தை நீக்கி விட்டு போகிறேன். இல்லை கோதாவில் இறங்குவது எண்டால் ஓகே.

5 minutes ago, Nathamuni said:

கிரிமினல் மூளை, தாடி விசயத்தோடை அலுவல் பார்த்திருக்குது.இப்ப விசயம் என்னடா, ரோலரில வந்து அடிமட்டத்துக்கு வலை போட்டு, இழுக்கிற கோஸ்ட்டியல், மீன் பிடியாயினம்...

பஸ் பிடிக்கப்போகினம்.... யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 760 பஸ் பிடிக்க, அந்த பக்கமா வாங்கோ. 

யாழ்ப்பாணம் - சாவகசேரி பஸ் பிடிக்க, இந்த பக்கமா வாங்கோ. 😜
 

ஆனைகோட்டை, மானிப்பாய், சங்கானை, சித்தங்கேணி, பண்டதரிப்பு, மாதகல்…

சில்லாலை ஏறுங்கோ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இது முதல்ல செய்தி வந்த போது நாங்கள் யாரும் யோசிக்காத கோணம்.

 

சிலர் கதைத்தவை தான் இப்படியும் இருக்கலாம் என்டு.அதை இங்கு எழுதவில்லை.

Link to comment
Share on other sites

11 minutes ago, goshan_che said:

ஐயா,

உங்கள் வயதுக்கு மரியாதை தந்து பதிந்த என் கருத்தை நீக்கி விட்டு போகிறேன். இல்லை கோதாவில் இறங்குவது எண்டால் ஓகே.

வேண்டாம் மகனே! எனக்குத் தெளிவு பிறந்துவிட்டது.!!🧐

Father-And-Son.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சுவைப்பிரியன் said:

சிலர் கதைத்தவை தான் இப்படியும் இருக்கலாம் என்டு.அதை இங்கு எழுதவில்லை.

தாடியர்ர ஆள் எண்டு கும்மிபோடுவங்கள் எண்ட முன் எச்சரிக்கையாக்கும்🤣.

நான் தான் விபரம் தெரியாமல் வார்த்தைய விட்டுட்டன்🤣.

கிட்னிய எடுக்காமல் விடமாட்டினம் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடல் எல்லைக்கு சென்று ஆழமாக சூறையாடி மீன் பிடிக்க முடியாதபடி கடலில் பஸ்களை தாடிவைத்த தமிழ் அமைச்சர் போடுகிறார் என்ற அநீதியை ஐரோப்பா யூனியன், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஐநா என்பவற்றின் கவனத்திற்கு தமிழக மீனவர்கள் உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இது நன்னா ருக்கே...😂😂

பழைய இரும்பு பித்தழைகளை இந்திய இலங்கைக் கடல் எல்லையில் போட்டால் அத்து மீறிய மீன்பிடியை நிறுத்தலாமோ ன்னோ.👍

பேஸ் பேஸ். இது ரொம்ப நன்னாருக்கே....👍👍👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே இந்த செய்தி வந்த திரியில் நான் ஒரு கருத்தும் எழுதவில்லை.

காரணம் இப்படி artificial reefs ஐ உருவாக்குவது பற்றி உலகெங்கும் இரு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. 

எல்லா முன்னெடுப்புகள் போல இதிலும் cost and benefit இருக்கும். ஆகவே இப்படி ஒரு விசயத்தை செய்வதால் cost அதிகமா, benefit அதிகமா என்று தேடிப்பார்த்தேன்.

இலங்கை கடல்வள சூழல் பாதுகாப்பு அமைப்பு உட்பட பல இடங்களில் தேடியும், இப்படி ஆய்வு செய்த தரவுகள் இருப்பதாக தெரியவில்லை.

ஆகவே இவ்வாறு செய்வது நல்லதா கெட்டதா என என்னால் ஒரு நிலைபாட்டுக்கு வர முடியவில்லை

ஆனால் அந்த திரி பல பக்கம் ஓடியும் இந்த கோணத்தில் யாரும் சிந்திக்கவில்லை என்பது இந்த செய்தியை வாசித்ததும் உறைத்தது.

இதனால் இந்திய முதளாலிகளின் பெரு வலைகளுக்கு மட்டும் அல்ல அண்மையில் @Maruthankerny எழுதிய எமது மீனவர்களின் தடை செய்யபட்ட கடல்வளத்தை அழிக்கும் மீன் பிடி முறைகளுக்கும் ஒரு கடிவாளம் போட்டது போல இருக்கும் என நினைக்கிறேன் (சரியாக தெரியவில்லை). 

எமது கடல்வளத்தின் மீதான கரிசனை நம் எல்லாருக்கும் இருக்கும். இருக்க வேண்டும். ஒருவன் அடிக்கும் கொள்ளையை தடுக்க முடியாது இருக்கிறோம் என்பதற்காக இன்னொருவன் அடிக்கும் கொள்ளையை ஆதரிக்க வேண்டியதில்லை.

இந்த புரிதல் இல்லாமல் - பேரினவாதிகள் எமது கடலை, மண்ணை கொள்ளை அடிப்பதை பற்றி நான் பக்கம் பக்கமாக எழுதும் போதெல்லாம் நிஸ்டையில் இருந்துவிட்டு - இப்போ எழும்பி வந்து புல்லரிக்கிறது…(சுய தணிக்கை).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை மீனவரும் இருவர் மூவராக சிறிய படகுகளில் சென்று வலையை விரித்துவிட்டு இயந்திரத்தை அணைத்துவிட்டு தூங்கிவிடுவர், கடல் நீரோட்டத்தில் மாதகலில் வலையை விரித்தால் காரைநகர் தாண்டி எழுவை தீவு வரை சென்றுவிடுவார்கள். இவர்களின் வலையளும் பாதிக்கப்படுமோ தெரியவில்லை. 

3 hours ago, Paanch said:

"இரும்பு  அடிபுண்ட சட்டி, பித்தளை இருக்கா" என்று கூவி வரும் பழைய உலோகப் பொருட்களை வாங்கும் வியாபாரிகள் இலங்கையில் தற்போது இல்லையா..... ? இந்தப் பேரூந்துகளையும் விற்றுக் காசாக்காமல்.... கடலில் எறிகிறார்களே.....?? 🤔

அடிவிண்ட சட்டி என்று வரும் என நினைக்கிறேன், செந்தமிழாசன்கள் நீங்கள் கூறுவது போல் கதைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

எங்கடை மீனவரும் இருவர் மூவராக சிறிய படகுகளில் சென்று வலையை விரித்துவிட்டு இயந்திரத்தை அணைத்துவிட்டு தூங்கிவிடுவர், கடல் நீரோட்டத்தில் மாதகலில் வலையை விரித்தால் காரைநகர் தாண்டி எழுவை தீவு வரை சென்றுவிடுவார்கள். இவர்களின் வலையளும் பாதிக்கப்படுமோ தெரியவில்லை. 

அடிவிண்ட சட்டி என்று வரும் என நினைக்கிறேன், செந்தமிழாசன்கள் நீங்கள் கூறுவது போல் கதைப்பார்கள்.

கட்டுப்பாடற்ற Trawler மீன்பிடி கண்டமேடைய அண்மித்த கடற்பகுதிக்குப் பொருத்தமற்றது. அது யார் மீன் பிடிக்கிறார்கள் என்பதல்ல பிரச்சனை.எப்படி பிடிக்கிறார்கள், எதனைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் கரிசனைக்கு உட்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

அமைச்சர் பல்வேறு உள்நோக்கங்களோட தான் பழைய பஸ்ஸை கடலுக்க இறக்கியிருக்கிறார்! வட பகுதி மீனவர்களிடம் இழுவை படகுகள் குறைவு போல, தமிழ்நாட்டு மீனவர்களிற்குத்தான் பாதிப்பு.

நான் நினைத்ததை நீங்கள் எழுதி உள்ளீர்கள்  ஓரள்வுக்கேனும் நமது கடல்வளம் பாதுகாக்கப்படும் இழுவைப்படகுகளால்  இதற்க்காகவே தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளார்கள் 

 

6 hours ago, goshan_che said:

இது முதல்ல செய்தி வந்த போது நாங்கள் யாரும் யோசிக்காத கோணம்.

மாற்று சிந்தனை நேற்றைய நாள்  இந்திய மீனவர் கடலில் பஸ்களை போடுவதால் மீன்பிடி குறைவடையும் என வீடியோ வெளியீடு செய்திருந்தார் நம்மவர்களின் பதில் அநேகமாக ஏராளன் சொன்ன பதிலே எங்களை மீன்வளம் ஓரளவேனும் சூறையாடப்படாமல் இருக்கும் சகோதரா நீங்கள் உங்கள் பகுதியில் மீன் பிடித்தாலே போதுமென எழுதி இருந்தார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

 

அடிவிண்ட சட்டி என்று வரும் என நினைக்கிறேன், செந்தமிழாசன்கள் நீங்கள் கூறுவது போல் கதைப்பார்கள்.

அடிப்பிடிச்ச சட்டி என்று எழுதினால் கன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கை தவிர்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு இழுவைப்படகு முதலாளிகள் அரசியல்வாதிகளாமே? அவர்களின் அழுத்தங்களால் தான் எல்லை தாண்டிய மீன்பிடிக்க வருகிறார்கள் போல.
ஆழக்கடலில் தான் இழுவைப்படகு மீன்மீடி வசதி, ஆழங்குறைந்த பாக்கு நீரிணையில் தடை செய்யப்பட்ட வலைகளையும் இழுவைப்படகையும் பாவிக்க தமிழ்நாடு மீன்வளம் அழிக்கப்பட எல்லை தாண்டல் மீன்வளத்தை நோக்கி.

3 minutes ago, goshan_che said:

அடிப்பிடிச்ச சட்டி என்று எழுதினால் கன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கை தவிர்கலாம்.

அடிப்பிடிச்சதை ஊறவைச்சு கழுவி எடுக்கலாம், அடி விட்டது பயன்படுத்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

.

அடிப்பிடிச்சதை ஊறவைச்சு கழுவி எடுக்கலாம், அடி விட்டது பயன்படுத்த முடியாது.

ஓ… அடி உடைந்த என்ற அர்தத்திலா? நான் இந்த சொல்லை இன்றுதான் கேள்வி படுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

கட்டுப்பாடற்ற Trawler மீன்பிடி கண்டமேடைய அண்மித்த கடற்பகுதிக்குப் பொருத்தமற்றது. அது யார் மீன் பிடிக்கிறார்கள் என்பதல்ல பிரச்சனை.எப்படி பிடிக்கிறார்கள், எதனைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் கரிசனைக்கு உட்பட்டது.

உண்மை தான். பல நாட்கள் மீன் பிடிபடவில்லை, இயந்திரத்திற்கான எண்ணெய்ச் செலவிற்கும் ஆட்களிற்கான சம்பளத்திற்கும் போதவில்லை என்று சொல்லுவாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

கிரிமினல் மூளை, தாடி விசயத்தோடை அலுவல் பார்த்திருக்குது.இப்ப விசயம் என்னடா, ரோலரில வந்து அடிமட்டத்துக்கு வலை போட்டு, இழுக்கிற கோஸ்ட்டியல், மீன் பிடியாயினம்...

அங்கு இது புதிது அல்ல ஏற்கனவே திருகோணமலை பக்கம் இப்படி பழைய வாகனம்களை கடலில் அமிழ்த்தியவர்கள்  தூண்டில் மீனவர்கள் பழைய ஒன்றுக்கும் உதவாத மரங்களை தறித்து  போடுவது உண்டு மீன்  வளத்துக்கு  என்று அதை கருப்பு போடுவது என்று சொல்வார்கள் .

தாடியர்  புகழ் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களால்  பரவுகிறது அதே நேரம் இங்கும் ரோலர்கள் உண்டு யுத்தம் முடிந்தபின் அவசரப்பட்டு ரோலர்களில் முதலிட்டு உள்ளார்கள் தாடியரின் இந்த வேலையால்  நம்ம ஆட்களும் பாதிக்க படுவினம் ஏனென்றால் கடல் நீரோட்டம் விசித்திரமானது இன்று ஓரிடத்தில் இருக்கும் பழைய பஸ் நீரோட்டத்தால் எல்லைதாண்டி இந்திய பகுதிகளிலும் கொண்டு போய்  விட்டு விடும் ஆனால் மீன்வளம் உருவாகும் பருத்திதுறைக்கு மேல் உள்ள கண்ட மேடை அவ்வாறானதல்ல தாடியர் இங்கு பழைய வாகனம்களை இறக்கிய இடம்கள்  நீரோட்டம் அதிகமுள்ள பகுதி  ஆனால் எப்படி பார்த்தாலும்  மீன் வளம்  அதிகரிக்கும்  சிறு தொழில் மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
    • 15 APR, 2024 | 03:58 PM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதேநேரம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர். அதேநேரம், சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181135
    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.