Jump to content

கடலில் பேருந்துகளை போடும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக... தமிழக மீனவர்கள் போராட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

அங்கு இது புதிது அல்ல ஏற்கனவே திருகோணமலை பக்கம் இப்படி பழைய வாகனம்களை கடலில் அமிழ்த்தியவர்கள்  தூண்டில் மீனவர்கள் பழைய ஒன்றுக்கும் உதவாத மரங்களை தறித்து  போடுவது உண்டு மீன்  வளத்துக்கு  என்று அதை கருப்பு போடுவது என்று சொல்வார்கள் .

தாடியர்  புகழ் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களால்  பரவுகிறது அதே நேரம் இங்கும் ரோலர்கள் உண்டு யுத்தம் முடிந்தபின் அவசரப்பட்டு ரோலர்களில் முதலிட்டு உள்ளார்கள் தாடியரின் இந்த வேலையால்  நம்ம ஆட்களும் பாதிக்க படுவினம் ஏனென்றால் கடல் நீரோட்டம் விசித்திரமானது இன்று ஓரிடத்தில் இருக்கும் பழைய பஸ் நீரோட்டத்தால் எல்லைதாண்டி இந்திய பகுதிகளிலும் கொண்டு போய்  விட்டு விடும் ஆனால் மீன்வளம் உருவாகும் பருத்திதுறைக்கு மேல் உள்ள கண்ட மேடை அவ்வாறானதல்ல தாடியர் இங்கு பழைய வாகனம்களை இறக்கிய இடம்கள்  நீரோட்டம் அதிகமுள்ள பகுதி  ஆனால் எப்படி பார்த்தாலும்  மீன் வளம்  அதிகரிக்கும்  சிறு தொழில் மீனவர்கள் வாழ்வாதாரம் மேம்படும். 

நல்ல கருத்து பெருமாள். 

இந்த நீரோட்டம் பற்றி ஒரு கேள்வி. இங்கே போடப்படும் பஸ்கள் எல்லாம் கழட்டின பிறகும் ஒரு 500 கிலோ வரும் என நினைகிறேன். எங்கள் பக்கம் உள்ள நீரோட்டம் இவ்வளவு கனத்தை நகர்த்த வல்லதா?

பெரும் நீரோட்டங்கள் எந்த பெரும் பாரத்தையும் கிளப்பும் என கேள்விபட்டுளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இந்த நீரோட்டம் பற்றி ஒரு கேள்வி. இங்கே போடப்படும் பஸ்கள் எல்லாம் கழட்டின பிறகும் ஒரு 500 கிலோ வரும் என நினைகிறேன். எங்கள் பக்கம் உள்ள நீரோட்டம் இவ்வளவு கனத்தை நகர்த்த வல்லதா?

அவ்வளவுக்கு தெரியாது மாரி  கடல் நீரோட்டம்களில்  விழும் உடல்கள் பொருள்கள் கொடியாக்கரையிலும் வடமராட்சி கடல் பகுதிகளிலும் மாறி மாறி கரையேறும் செய்திகளை அங்கிருந்தபோது தெரிந்துகொண்டேன் .

வயதானவர்களின் கருத்துக்கள் உதாரணமாய் சேது சமுத்திர திட்டம் வரும்போது ஒரு மதிய நேரத்தின் பின்  வாசிகசாலையில் அந்த செய்தியை படித்துவிட்டு சிரித்துக்கொண்டார்கள் அப்போது 1980இன் இறுதிப்பகுதிகள் 300 கோடி மதிப்பீடு அவர்கள் சொன்னார்கள் அத்திட்டம் இந்தியர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது காரணம் அந்த பகுதியில்  உள்ள நீரோட்டம் மண்ணை கொண்டுவந்து கொண்டிருக்கும் பத்து மடங்கு சிலவாகும் அப்படியும் பாரமான கப்பல்கள் தரைதட்டி விடும் என்றார்கள்  .

இவ்வளவு காலம் போனபின் அவர்கள் சொன்னது அவ்வளவும் உண்மையாகின்றது .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாடிக்காரர் முந்தி பயத்தில் கடற்புலிகள் கடலால் வந்து போட்டிடுவாய்ங்களோ என்ற நடுக்கத்தில்.. தீவக பனைகளை வெட்டி.. சொறீலங்கா கடற்படை மூலம் கடலில் நட்டவர். 

அதுசரி.. கலப்புலோக.. உக்கல்களை.. கடலுக்க போட்டால்.. கடலில மிதக்குமாப்பா.. மீன்கள் எல்லாம்.. இப்ப கடலுக்கு அடியில தான் குடி இருப்பினம் போல. வலை போடுறது கஸ்டம்... மீனவர்கள் வரமாட்டார்களாம்.

அந்த மீனவர்களுக்கே தெரியுது.. இதனால்.. சூழல் மாசு தான் முக்கிய பிரச்சனை என்று.. உந்த தாடியனுக்கு தெரியல்லையே.... அவரின் விசிறிகளுக்கும் புரியல்லையே.  அவருக்கு ஒரு கிலோவை கடலுக்க கொட்ட ஒரு இலட்சம் கொமிசன் கொடுத்திருப்பாய்ங்க. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாடியன் பஸ்சுகளை இறக்குறான் எண்டுபோட்டு, அங்கால கருணாநிதி பெத்த கேடியன் பழைய ரயில்பெட்டிகளை கொண்டுவந்து இறக்கபோறானோ தெரியல.

Link to comment
Share on other sites

7 hours ago, ஏராளன் said:

அடிவிண்ட சட்டி என்று வரும் என நினைக்கிறேன், செந்தமிழாசன்கள் நீங்கள் கூறுவது போல் கதைப்பார்கள்.

உங்கள் பின்னூட்டத்தின் பின், நீங்கள் சுட்டிய 'அடிவிண்ட சட்டி' சரியானது என நானும் நினைக்கிறேன். ஆனால் பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரிகள் நான் எழுதியதுபோலவே கூவிக் கேட்டு வந்தது என் நினைவில் ஒலித்ததால் அதனை அப்படியே எழுதினேன். 🙏  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அவ்வளவுக்கு தெரியாது மாரி  கடல் நீரோட்டம்களில்  விழும் உடல்கள் பொருள்கள் கொடியாக்கரையிலும் வடமராட்சி கடல் பகுதிகளிலும் மாறி மாறி கரையேறும் செய்திகளை அங்கிருந்தபோது தெரிந்துகொண்டேன் .

வயதானவர்களின் கருத்துக்கள் உதாரணமாய் சேது சமுத்திர திட்டம் வரும்போது ஒரு மதிய நேரத்தின் பின்  வாசிகசாலையில் அந்த செய்தியை படித்துவிட்டு சிரித்துக்கொண்டார்கள் அப்போது 1980இன் இறுதிப்பகுதிகள் 300 கோடி மதிப்பீடு அவர்கள் சொன்னார்கள் அத்திட்டம் இந்தியர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது காரணம் அந்த பகுதியில்  உள்ள நீரோட்டம் மண்ணை கொண்டுவந்து கொண்டிருக்கும் பத்து மடங்கு சிலவாகும் அப்படியும் பாரமான கப்பல்கள் தரைதட்டி விடும் என்றார்கள்  .

இவ்வளவு காலம் போனபின் அவர்கள் சொன்னது அவ்வளவும் உண்மையாகின்றது .  

நன்றி பெருமாள். உந்த சேது திட்ட நேரம் நானும் இந்த மண் மூடும் என்பதை பற்றி கேள்விபட்டனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

தாடியன் பஸ்சுகளை இறக்குறான் எண்டுபோட்டு, அங்கால கருணாநிதி பெத்த கேடியன் பழைய ரயில்பெட்டிகளை கொண்டுவந்து இறக்கபோறானோ தெரியல.

இரக்கமாட்டார்கள் அங்கு ஓடும் பாரிய மீன்பிடி ரோலர்கள் திமுகாவின் பினாமிகளின் சொத்து என்று தமிழ்நாட்டு பத்திரிகைகளில் வந்த செய்தி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இலங்கை அரசாங்கத்திற்கு செயற்பாடுகளை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் பேருந்து எதிரே மீனவர்கள் இன்று(புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை அளிக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லையில் இருந்து அருகே இந்திய இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து துறைக்கு சொந்தமான பேருந்துகளை கடல் பரப்பில் இறக்கி வருகின்றனர்.

பேருந்துகளின் கூடுகளை கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும் மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும், கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடற்பகுதிக்கும் செல்லகூடும் இதனால் படகுகள் மற்றும் வலைகளை சேதமடைந்து படகு ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனடியாக இலங்கை மீன்வளத்துறை இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

அதேபோல் நாளுக்கு நாள் உயர்ந்து டீசல் விலையால் மீனவர்கள் தங்களது படகுகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனவே மத்திய, மாநில அரசுகள் கலால்,சாலை வரிகளை நீக்கி மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் இலங்கை மீன் வளத்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியிருந்தனர்.

PHOTO-2021-06-16-11-58-45.jpg

https://athavannews.com/2021/1223021

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?
-ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை)
உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோடுகின்ற வாகனங்கள், ரயில் பெட்டிகள், கப்பல்கள், யுத்த தாங்கிகள், கடற் பகுதிக்கு கப்பல்களில் எடுத்துச் செல்லப்பட்டு, செயற்கையாக முருகைக் கற்பாறைகள் வளர்வதற்காகவும், மீன்களின் குடித்தொகையை அதிகரிப்பதற்காகவும் அமிழ்த்தப்படுகின்றன.
2007ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரை, நியுயோர்க்கில் பாவித்து ஒதுக்கப்பட்ட2500 க்கும் மேற்பட்ட நிலக்கீழ் ரயில்பெட்டிகள், அத்திலாந்திக் சமுத்திரப் பகுதிகளில் அமிழ்த்தப்பட்டிருக்கின்றன. இது உலகம் முழுவதும் நெடுங்காலமாக செய்யப்படும் ஒரு நடைமுறையாகும். இதன் மூலம் மீன்கள், சிலந்திரேற்றாக்கள், முருகைக் கற்பாறைகள், அதனை நம்பிய உயிரினங்கள், மற்றும் கடற்தாவரங்கள் வளர்ந்து, நிலைத்துநிற்கக்கூடிய ஒரு சூழற்றொகுதியை உருவாக்குகின்றன. 
நடத்தைச் சூழலியலின் (Behavioural Ecology), உணவு சூழலியலில் (Ecology of feeding) இந்த அமிழ்க்கப்பட்ட வாகனங்கள், முக்கியமான பங்கை வகிக்கின்றன. எப்படி ஒரு இரைகொல்லி விலங்கானது, இரைகளைக் கொல்வதற்கான திறன்களை அவைகளின் கூர்ப்புப் பொறிமுறைகளில் விருத்தி செய்துகொண்டிருக்கின்றனவோ அதே போன்று இரைகளும், இரைகொல்லிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ,அவைகளை அடையாளம் காண்பதில், பிடித்துக்கொள்வதில் கடினங்களை ஏற்படுத்தல் போன்ற திறன்களை சமாந்தரமாக விருத்திசெய்துகொண்டிருக்கின்றன. இதற்கு இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதி உதவுகின்றன. அவைகள் ஒழிந்து கொள்வதற்கும், தப்பித்துக்கொள்வதற்கும் பாரிய பங்காற்றுகின்றன. அதே வேளை, ஆழங்களைப் பொறுத்து சிறிய புற்கள், அல்காக்கள் பிளாந்தன்கள் சேரும்போது, தாவரவுண்ணி, ஊனுண்ணி, அனைத்துமுண்ணி போன்ற விலங்குகளின் உயிரியல் பன்மைத்துவம் அதிகரிக்கும்போது உணவுகளின் அளவும் அதிகரிக்கின்றன. ஒழிந்துகொண்டு மற்ற உயிரினங்களையும் வேட்டையாடுகின்றன. வேகமாக நீந்தி உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத, நீரோட்டத்தினால் இலகுவில் அடித்துச் செல்லப்படக்கூடிய உயிரினங்களுக்கும் இந்தச் சூழற்றொகுதி ஒரு வரப்பிரசாதமாகும். இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதியினால் வளர்ச்சி வீதம் அதிகரித்து மீன்களின் குடித்தொகையும், மற்ற விலங்குகளின் குடித்தொகையும் அதிகரிக்கும்.
அதேபோன்று நடத்தைச் சூழலியலின், இனப்பெருப்பெருக்கச் சூழலியலிலும் (Ecology of reproduction), இடவாதிக்க சூழலியலிலும் (Ecology of space) முக்கிய பங்காற்றக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. விலங்குகள் தங்களுக்கான ஆதிக்க இடங்களையும் (territories), வீட்டு வீச்சு இடங்களையும் (home range), அதிபாவனை இடங்களையும் (core area) உருவாக்கிக் கொள்ளுகின்றன. வளங்களுக்கான பங்கீடுகளில் (partitioning resources) ஆரோக்கியத்தன்மை ஏற்பட்டு போட்டியும் குறைக்கப்படுகின்றன. மேலும் பாதுகாப்பளிக்கக்கூடிய, உற்பத்திகூடிய மறைவிடங்களை உருவாக்குவதன் மூலம், இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதியானது, புணரும், இனப்பெருக்க, உணவு, பல்நோக்கு ஆதிக்க பரப்புக்களை ( mating, breeding, feeding, and multi-purpose territories) உருவாக்குகின்றன. அத்துடன் நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படாது, மீன்களின் முட்டைகளை ஒட்டிவைத்து, முட்டைகள் குஞ்சுகளாய் விருத்தியாவதற்கும் உதவுகின்றன. அத்துடன் இந்த குஞ்சுகளுக்கும்  எதிரிகளிடமிருந்து பாதுகாப்பளிக்கின்றன. இந்தச் சூழற்றொகுதியின் மறைவிடம் காரணமாக பெற்றார் கவனிப்புக்கு (parental care) சக்திச் செலவு குறைவாக செய்யப்படுகின்றன. மேலும் தங்களுடைய இணைகைளைத் தெரிவு (mate selection) செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இதனால் விலங்குகளின் தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்புகளும், இனப்பெருக்க வெற்றியும் (Reproductive success), வளர்ச்சி வேகமும் (growth rate) அதிகரிக்கின்றன.
மன்னார் கடலில் இருபது பாவித்து, கழிக்கப்பட்ட பஸ்களை இலங்கை அரசாங்கம் கடலில் அமிழ்த்திய நடவடிக்கைக்கு எதிராக இந்திய, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவ சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளன. அதற்கு அவர்கள் கூறும் காரணம், நிறைய மீன்வளங்களை அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகு கவர்ந்துவிடும். இதனால் இந்தியாவில் மீன்வளம் குறையும். இது சிறுபிள்ளைத்தனமான காரணமாக தெரிந்தாலும், அதற்குப் பின்னாலுள்ள காரணம் என்பது, இந்த பஸ்கள் அவர்களது கடல்அடித்தள இழுவை வலைகளை (bottom set trawler nets) சேதமாக்குவதுடன், இலங்கை மீன்வளங்களை கவர்ந்துகொள்வதிலும், அழிப்பதிலும் அந்தப் பிரதேசத்தில் அவர்களுக்கு பாரிய தடைகளாயிருக்கும் என்பது எல்லோராலும் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகும்.
பொதுவாக, கழிக்கப்பட்ட பொருட்களை கடலில் வீசுவது நல்லதல்ல. குறிப்பாக உலோகப் பொருட்கள், இவை கடலில் கரையக்கூடியன. பாரமான உலோகங்கள், அவற்றின் நியம அளவைிவட கடற்சூழற்றொகுதியில் அதிகரிக்கும்போது, உணவுச் சங்கிலிகளின் மூலம், மனிதர்களையும், மற்றைய விலங்குகளையும் அடைந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும். ஆனால் நன்மைகைளையும், தீமைகளையும் ஒப்பிடும்போது, இங்கே நன்மைகளின் அளவு அதிகரிக்க வேண்டுமானால், கடலில் வாகனங்கள் அமிழ்த்தப்படுவதற்கு முன், அந்த வாகனங்களிலுள்ள, பொலித்தீன், பிளாஸ்ரிக்கிலான சக்கரங்கள் (டயர்கள்), இருக்கைகள், மேலுறைகள், பட்டிகள் போன்றவை கவனமாக அகற்றப்பட வேண்டும். அத்துடன் தீங்கு செய்யக்கூடிய உலோகங்களும் அகற்றப்பட்டு, துப்பரவு செய்யப்பட்டு, கடல் சார் உயிரியல் காரணிகள் கவனத்திற்கொள்ளப்பட்ட பின்னர், உலோகக் கூடாகவே கடலில் போடப்படவேண்டும்.

https://www.facebook.com/amritha.ayem/posts/4172333859501230

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்ஸஸ் அங்கிள் செய்த உருப்படியான ஒருவேலை இது. அது சரி இலங்கை தன்ட கடல் எல்லைக்குள்ள் பேருந்துகளை போட்டா ஏன் இந்திய மீனவர்கள் போராடுகினம்?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?
-ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை)
உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோடுகின்ற வாகனங்கள், ரயில் பெட்டிகள், கப்பல்கள், யுத்த தாங்கிகள், கடற் பகுதிக்கு கப்பல்களில் எடுத்துச் செல்லப்பட்டு, செயற்கையாக முருகைக் கற்பாறைகள் வளர்வதற்காகவும், மீன்களின் குடித்தொகையை அதிகரிப்பதற்காகவும் அமிழ்த்தப்படுகின்றன.
2007ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரை, நியுயோர்க்கில் பாவித்து ஒதுக்கப்பட்ட2500 க்கும் மேற்பட்ட நிலக்கீழ் ரயில்பெட்டிகள், அத்திலாந்திக் சமுத்திரப் பகுதிகளில் அமிழ்த்தப்பட்டிருக்கின்றன. இது உலகம் முழுவதும் நெடுங்காலமாக செய்யப்படும் ஒரு நடைமுறையாகும். இதன் மூலம் மீன்கள், சிலந்திரேற்றாக்கள், முருகைக் கற்பாறைகள், அதனை நம்பிய உயிரினங்கள், மற்றும் கடற்தாவரங்கள் வளர்ந்து, நிலைத்துநிற்கக்கூடிய ஒரு சூழற்றொகுதியை உருவாக்குகின்றன. 
நடத்தைச் சூழலியலின் (Behavioural Ecology), உணவு சூழலியலில் (Ecology of feeding) இந்த அமிழ்க்கப்பட்ட வாகனங்கள், முக்கியமான பங்கை வகிக்கின்றன. எப்படி ஒரு இரைகொல்லி விலங்கானது, இரைகளைக் கொல்வதற்கான திறன்களை அவைகளின் கூர்ப்புப் பொறிமுறைகளில் விருத்தி செய்துகொண்டிருக்கின்றனவோ அதே போன்று இரைகளும், இரைகொல்லிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ,அவைகளை அடையாளம் காண்பதில், பிடித்துக்கொள்வதில் கடினங்களை ஏற்படுத்தல் போன்ற திறன்களை சமாந்தரமாக விருத்திசெய்துகொண்டிருக்கின்றன. இதற்கு இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதி உதவுகின்றன. அவைகள் ஒழிந்து கொள்வதற்கும், தப்பித்துக்கொள்வதற்கும் பாரிய பங்காற்றுகின்றன. அதே வேளை, ஆழங்களைப் பொறுத்து சிறிய புற்கள், அல்காக்கள் பிளாந்தன்கள் சேரும்போது, தாவரவுண்ணி, ஊனுண்ணி, அனைத்துமுண்ணி போன்ற விலங்குகளின் உயிரியல் பன்மைத்துவம் அதிகரிக்கும்போது உணவுகளின் அளவும் அதிகரிக்கின்றன. ஒழிந்துகொண்டு மற்ற உயிரினங்களையும் வேட்டையாடுகின்றன. வேகமாக நீந்தி உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத, நீரோட்டத்தினால் இலகுவில் அடித்துச் செல்லப்படக்கூடிய உயிரினங்களுக்கும் இந்தச் சூழற்றொகுதி ஒரு வரப்பிரசாதமாகும். இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதியினால் வளர்ச்சி வீதம் அதிகரித்து மீன்களின் குடித்தொகையும், மற்ற விலங்குகளின் குடித்தொகையும் அதிகரிக்கும்.
அதேபோன்று நடத்தைச் சூழலியலின், இனப்பெருப்பெருக்கச் சூழலியலிலும் (Ecology of reproduction), இடவாதிக்க சூழலியலிலும் (Ecology of space) முக்கிய பங்காற்றக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. விலங்குகள் தங்களுக்கான ஆதிக்க இடங்களையும் (territories), வீட்டு வீச்சு இடங்களையும் (home range), அதிபாவனை இடங்களையும் (core area) உருவாக்கிக் கொள்ளுகின்றன. வளங்களுக்கான பங்கீடுகளில் (partitioning resources) ஆரோக்கியத்தன்மை ஏற்பட்டு போட்டியும் குறைக்கப்படுகின்றன. மேலும் பாதுகாப்பளிக்கக்கூடிய, உற்பத்திகூடிய மறைவிடங்களை உருவாக்குவதன் மூலம், இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதியானது, புணரும், இனப்பெருக்க, உணவு, பல்நோக்கு ஆதிக்க பரப்புக்களை ( mating, breeding, feeding, and multi-purpose territories) உருவாக்குகின்றன. அத்துடன் நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படாது, மீன்களின் முட்டைகளை ஒட்டிவைத்து, முட்டைகள் குஞ்சுகளாய் விருத்தியாவதற்கும் உதவுகின்றன. அத்துடன் இந்த குஞ்சுகளுக்கும்  எதிரிகளிடமிருந்து பாதுகாப்பளிக்கின்றன. இந்தச் சூழற்றொகுதியின் மறைவிடம் காரணமாக பெற்றார் கவனிப்புக்கு (parental care) சக்திச் செலவு குறைவாக செய்யப்படுகின்றன. மேலும் தங்களுடைய இணைகைளைத் தெரிவு (mate selection) செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இதனால் விலங்குகளின் தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்புகளும், இனப்பெருக்க வெற்றியும் (Reproductive success), வளர்ச்சி வேகமும் (growth rate) அதிகரிக்கின்றன.
மன்னார் கடலில் இருபது பாவித்து, கழிக்கப்பட்ட பஸ்களை இலங்கை அரசாங்கம் கடலில் அமிழ்த்திய நடவடிக்கைக்கு எதிராக இந்திய, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவ சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளன. அதற்கு அவர்கள் கூறும் காரணம், நிறைய மீன்வளங்களை அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகு கவர்ந்துவிடும். இதனால் இந்தியாவில் மீன்வளம் குறையும். இது சிறுபிள்ளைத்தனமான காரணமாக தெரிந்தாலும், அதற்குப் பின்னாலுள்ள காரணம் என்பது, இந்த பஸ்கள் அவர்களது கடல்அடித்தள இழுவை வலைகளை (bottom set trawler nets) சேதமாக்குவதுடன், இலங்கை மீன்வளங்களை கவர்ந்துகொள்வதிலும், அழிப்பதிலும் அந்தப் பிரதேசத்தில் அவர்களுக்கு பாரிய தடைகளாயிருக்கும் என்பது எல்லோராலும் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகும்.
பொதுவாக, கழிக்கப்பட்ட பொருட்களை கடலில் வீசுவது நல்லதல்ல. குறிப்பாக உலோகப் பொருட்கள், இவை கடலில் கரையக்கூடியன. பாரமான உலோகங்கள், அவற்றின் நியம அளவைிவட கடற்சூழற்றொகுதியில் அதிகரிக்கும்போது, உணவுச் சங்கிலிகளின் மூலம், மனிதர்களையும், மற்றைய விலங்குகளையும் அடைந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும். ஆனால் நன்மைகைளையும், தீமைகளையும் ஒப்பிடும்போது, இங்கே நன்மைகளின் அளவு அதிகரிக்க வேண்டுமானால், கடலில் வாகனங்கள் அமிழ்த்தப்படுவதற்கு முன், அந்த வாகனங்களிலுள்ள, பொலித்தீன், பிளாஸ்ரிக்கிலான சக்கரங்கள் (டயர்கள்), இருக்கைகள், மேலுறைகள், பட்டிகள் போன்றவை கவனமாக அகற்றப்பட வேண்டும். அத்துடன் தீங்கு செய்யக்கூடிய உலோகங்களும் அகற்றப்பட்டு, துப்பரவு செய்யப்பட்டு, கடல் சார் உயிரியல் காரணிகள் கவனத்திற்கொள்ளப்பட்ட பின்னர், உலோகக் கூடாகவே கடலில் போடப்படவேண்டும்.

https://www.facebook.com/amritha.ayem/posts/4172333859501230

நன்றி ஏராளன்.

நான் பார்த்தவரை உலோக கூடுகள் மட்டுமே இறக்கப்பட்டன. ஒன்றில் ஒரு டயர் இருந்த நினைவு. 

ஆனால் விரிவுரையாளர் உலோகங்களை பற்றி பட்டும் படாமலும் நழுவுவது போல தெரிகிறது. 

43 minutes ago, வாலி said:

ஏன் இந்திய மீனவர்கள் போராடுகினம்?😂

எமது கடல் வளத்தை ஆட்டைய போட விடுறம் இல்லையாம்🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நூற்றாண்டுகளின் பின்.....

சிறீலங்காவின் வாகனங்கள்  மீட்பு

கடலால்  ஆக்கிரமிக்கப்பட்ட சிறீலங்கா  புராதன  நகரம்  கண்டு  பிடிப்பு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

சில நூற்றாண்டுகளின் பின்.....

சிறீலங்காவின் வாகனங்கள்  மீட்பு

கடலால்  ஆக்கிரமிக்கப்பட்ட சிறீலங்கா  புராதன  நகரம்  கண்டு  பிடிப்பு???

ஒவ்வொரு பஸ்சுக்கயும் ஒரு புத்தர் சிலையை போட்டு இறக்கினால் இன்னும் விசேசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஒவ்வொரு பஸ்சுக்கயும் ஒரு புத்தர் சிலையை போட்டு இறக்கினால் இன்னும் விசேசம்.

அதை  டக்லசு  மாமா செய்திருப்பார்  என்று  சிங்களத்துக்கு நன்கு தெரியும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.