Jump to content

68 வயசு இந்திய பெண் செய்த செயல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

68 வயசு இந்திய பெண் செய்த செயல் - இந்தியா, மட்டுமல்ல, உலகமே மிரண்டு போனது.

லதா, வயது 68. சாதாரண ஏழ்மையான வாழ்வு. கணவருடன் கூலி வேலை செய்து பணத்தை சேமித்து மூன்று பெண் குழந்தைகளையும் திருமணம் செய்து வைத்து விட்டார்.

தீடீரென கணவருக்கு ஒரு சுகவீனம். அரச ஆஸ்பத்திரிக்கு போனால், அங்கே MRI ஸ்கேன் வெளியே எடுத்து வர சொல்கிறார்கள்.

வெளியே போனால் கேட்கும் 5000 ரூபா பணம் இல்லை. என்ன செய்வது.

கவலையுடன் வீடு திரும்பும் வழியில் தேனீர் குடிக்க ஒரு தெருவோர கடைக்கு போகிறார்கள்.

பத்திரிகைகள் தொங்குகின்றன. ஒன்று, 10,000 ரூபா பரிசுக்கு, மரதன் போட்டி நடக்கிறது என்று போட்டிருந்தார்கள்.

68 வயது பெண்.... அந்த வயது கார பெண்கள் என்ன செய்த்திருப்பார்கள்... சரிதான் என்று அடுத்த பக்கம் பார்த்திருப்பார்கள்.

ஆனால், இந்த பெண் அப்படி இல்லை.

அடுத்த ஆறுமாதம் கடும் பயிற்சி எடுத்துக்கொண்டார். அடுத்தவர்கள் தரமான காலனி அணிந்து இருந்தார்கள். இந்த பெண்மணியோ, வெறும் கால்கள்.

இவர் போய், தானும் போட்டியில் ஓடப்போகிறேன் என்றதும், யாரோ, பைத்தியம் போல என்று நிராகரிக்க பார்த்தார்கள். 

அவரது உறுதியை பார்த்ததும், சரி என்ன குறையப்போகுது, சேர்த்திடுவோமே என்று சேர்த்துக் கொண்டார்கள்.

ஓடினார் லதா, சேலையினை கட்டிய படி வெறும் காலுடன்.

கணவர் மேலிருந்த பேரன்பு ஓட வைத்தது.

அவர் இரண்டாவது ஆளை முந்திக்கொண்டு முதலாவதாக ஓட, பக்கவாட்டில் இருந்த பெண்களும், அவர் பின்னே ஓடினர்.

வென்றார், கணவனையும் மீட்டார்.

இன்று அவரது கதை படமாகிறது.

 
https://www.bbc.co.uk/news/av/world-asia-india-51413750

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று தேவையேற்படும் போதே அதன் அருமை புரியும் கணவன் மீது இருந்த பாசம் , அன்பு , காதல் அவளை ஓட வைத்திருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக கணவனால் ஓடிய பெண்கள்தான் அதிகம், இவர் கணவனுக்காக ஓடியிருக்கிறார். வாழ்த்துக்கள்.....!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது நாட்டை சேர்ந்த குடிமகனுக்கு ஒரு 90 டொலர் மருவத்துவத்திற்கு செலவு செய்ய விரும்பாத இந்தியா உலக வல்லரசாம் 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேட் மீ கிறை.. அதேவேளை இந்தியாவை எல்லாம் நினைக்கும்போது..😡😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விளங்க நினைப்பவன் said:

தனது நாட்டை சேர்ந்த குடிமகனுக்கு ஒரு 90 டொலர் மருவத்துவத்திற்கு செலவு செய்ய விரும்பாத இந்தியா உலக வல்லரசாம் 🤦‍♂️

அது, அப்படித்தான் இருக்கும்.பிரிட்டனில் 6.5கோடி, கனடாவில் அவுசில் 3.5 கோடி. ஒப்பிடவே முடியாது.  

1350 மில்லியன், 135 கோடி மக்கள் தொகை, தக்கன பிழைக்கும்.

இந்த பெண்மணி, 68 வயதில், தக்கனவாக இருந்ததால், கணவர் பிழைத்துக்கொண்டார்.

இது நடந்தது, 2014ல்.... படமாகிறது இப்போது.... ஆனாலும் பெண்ணில் முயல்வினால் மக்கள் பெரும் பணம் அனுப்பி இருந்தார்கள், ஆகவே தொடர் சிகிச்சை செய்யக்கூடியதாக இருந்தது.

மேலும், தக்கன பிழைக்காமல் போவதும் இயற்கை நியதி தானே.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.