Jump to content

டாஸ்மாக் திறப்பு விவகாரம்: தி.மு.க-வின் முதல் சறுக்கலா? - ஒரு பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது டாஸ்மாக் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன...

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவரும் சூழலில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் டாஸ்மாக்கைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக்கைத் திறக்க அறிவுறுத்தியிருந்தாலும் அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க மற்றும் பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டாஸ்மாக்கைத் திறக்கும் அரசின் முடிவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதுமட்டுமல்ல பா.ஜ.க தலைவர்கள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் திறப்பிற்கு எதிராகப் போராட்டங்களையும் நடத்தியுள்ளன. "பல்வேறு விமர்சனங்கள் வரும் என்கிற நிலையிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக்கூடாது என்பதில் இந்த அரசு கவனமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங்கும்.

 
மு.க.ஸ்டாலின்
 
மு.க.ஸ்டாலின்

கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும் இந்தத் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்கிறேன். கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும். காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாட்டோடு நடந்துகொள்கிற மக்களாக நம் தமிழக மக்கள் மாறவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்” எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் மதுக்கடை திறப்பு குறித்து பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம் “சென்ற ஆண்டு இதே சூழலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் டாஸ்மாக் திறப்பு குறித்து ‘குடியைக் கெடுக்கும் அ.தி.மு.க, எடப்பாடி’ என்று விமர்சனங்களை முன்வைத்தார்கள். ஆனால், இன்று டாஸ்மாக் திறப்பு குறித்து ஆதரவாகப் பேசி வருகிறார்கள். அ.தி.மு.க செய்தது தவறு என விமர்சித்துவிட்டு இன்று தாங்களும் அதையே செய்துவிட்டு நியாயம் பேசுவதற்கு தி.மு.க-வினர் மன்னிப்பு கேட்க வேண்டும். டாஸ்மாக் திறந்தது அமைச்சர்கள் வருமானம் பார்ப்பதற்காக என்று சொன்ன தி.மு.க-வினர் இன்று திறந்திருப்பது யாருடைய வருமானத்திற்காக எனச் சொல்ல வேண்டும். இன்று தொற்று அதிகரிக்கும் நிலையில் நூலகங்கள், கோவில்களைத் திறப்பதில் கவனம் செலுத்தாமல் டாஸ்மாக் திறப்பிற்கு உரிய நெறிமுறைகள், பாதுகாப்பிற்கு ஆயிரம் போலீசார் என ஆயிரக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் கூடச் செய்வது மனிதாபிமானமற்ற செயல். டாஸ்மாக் கடைகளைத் திறந்து, கடந்த இரண்டு மாதங்களாக எந்தத் தொழிலும் செய்யாமல் வருமானமின்றி தவிக்கும் சுமார் 60 முதல் 70 சதவிகித உழைக்கும் மக்களிடமிருந்து வருமானத்தைப் பார்க்கும் அரசின் செயல் கண்டனத்திற்குரியது. காலமும், மக்களும் தி.மு.க-வின் செயலை எப்போதும் மன்னிக்கமாட்டார்கள்.

 
நாராயணன் திருப்பதி
 
நாராயணன் திருப்பதி

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மது ஆலைகள் திறந்திருக்கிறது. அது குறித்து கேள்வி எழுப்புவதில்லை என்று கூறுகிறார்கள். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்திருக்கிறார்கள் என்று பேசுவதே தேவையற்றது. ஏனெனில் இந்தியாவிலேயே மதுவால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுவது தமிழகத்தில்தான். அதுமட்டுமல்ல பீகாரிலோ, கர்நாடகாவிலோ, புதுச்சேரியிலோ குடி நோயாளிகள் யாரையும் பார்க்க முடியாது. ஆனால், திராவிட கட்சிகளின் அதிகபட்ச சாதனையே தமிழர்களை பெரும் குடி நோயாளிகளாக மாற்றி வைத்திருப்பதுதான். மது ஆலை அதிபர்களின் நலன், அதிகாரிகளின் வருமானத்திற்காகவே இங்கே மதுக்கடைகள் திறந்திருக்கிறார்கள்.

 

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து தி.மு.க செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டோம் “புதுச்சேரி, கர்நாடகா போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து வைத்திருக்கிறார்களோ அதே நோக்கம்தான் எங்களுக்கும். சரி, உண்மையில் பா.ஜ.க-வுக்கு மக்கள் மீது அக்கறை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். 1969-இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மதுவிலக்கைக் கொண்டு வந்தபோது அதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஒன்றிய அரசு ஈடு செய்யும் என்று அறிவித்தார். எங்கே, தமிழக பா.ஜ.க தலைவர்கள் எல்.முருகன், வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி மக்கள் மீது அவ்வளவு நலனில் அக்கறை வைத்திருக்கிறார்கள், யோக்கியமானவர்கள் என்றால் மதுக்கடைகளைத் தமிழ்நாடு அரசு மூடட்டும். அதனால் வரும் வருவாய் இழப்பை ஒன்றிய பா.ஜ.க அரசிடம் வாங்கித் தருகிறோம் என்று சொல்லட்டுமே.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
 
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
 

பெட்ரோலில் இன்றைக்கு 32 ரூபாய் வரியாகப் பிடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதில் வெறும் 1.50 காசுகள் மட்டும்தான் மாநில அரசுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோலுக்கான வரி வசூலில் ஒன்றிய அரசுக்கு 60சதவிகிதம் என்றும் மாநில அரசுக்கு 40 சதவிகிதம் என்றும் இருந்தது. தமிழ்நாட்டிற்கு முறையாக ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைகளைக் கேட்டு வாங்கித் தருவதற்கு இங்கிருக்கும் பா.ஜ.க-வினருக்கு வக்கு இருக்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள்.

அ.தி.மு.க-வுக்கு எல்லாம் இதைப் பற்றிப் பேசத் தகுதியே இல்லை. தி.மு.க அரசு தொற்று குறைந்ததும் வல்லுநர்களுடன் ஆலோசித்துத்தான் மதுக்கடைகளையே திறக்க அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் மதுக்கடைகள் மூடப்படவே இல்லையே. அவர்களுக்கெல்லாம் தி.மு.க-வை விமர்சனம் செய்ய என்ன தகுதியிருக்கிறது? உண்மையில் எதிர்க்கட்சியினருக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். பாண்டிச்சேரியில் இருக்கும் தமிழ் மக்களுக்காக மதுக்கடைகளைத் திறந்து தமிழ்நாட்டு மக்களுக்கும் விற்பனை பார்த்தவர்கள் தானே பா.ஜ.க-வினர். அப்போது எங்கே சென்றது தமிழ்நாட்டு மக்கள் மீதான அக்கறை. மதுக்கடைகள் திறப்பு குறித்து பா.ஜ.க, அ.தி.மு.க., பா.ம.க-வுக்கே தகுதி இல்லை. மக்களுக்கு எங்கள் மீது விமர்சனம் இருக்கலாம். அதற்கு நாங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.மூத்த அரசியல்வாதி என்று சொல்லிக் கொண்டிருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்-க்கு தெரியாதா மதுக்கடைகளைத் திறந்ததன் நோக்கம். வருமானம்தான் நோக்கம் என்றால் அதை ஒன்றிய அரசிடம் கேட்டுப் பெறும் வழிகளை அவர் அரசுக்குச் சொல்லலாமே. அதற்கு யாரும் தடை போடுகிறார்களா? எதிர்ப்பு அறிக்கை எழுதப் பயன்படுத்தும் அறிவை நல்லதுக்கும் பயன்படுத்தலாமே. இருக்கும் சுகாதார நெருக்கடியைச் சமாளிக்க வருமானம் தேவை என்பது மருத்துவர் ராமதாஸூக்குத் தெரியாதா? ஓரளவுக்கு நாடகமாடலாம். ஆனால், இப்படி கோமாளித்தனமான நாடகங்கள் ஆடக்கூடாது. அது நல்ல அரசியல் அல்ல” என விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.

டாஸ்மாக் திறப்பு விவகாரம்: தி.மு.க-வின் முதல் சறுக்கலா? - ஒரு பார்வை / Dmk's Decision on Tasmac opening in tamilnadu creates controversy - Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் செம்மையாய் அடிவாங்கினம் திமுக இங்கு தீ கோழிதானே எல்லாம் முடியவிட்டு விவாதிப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

இந்த விடயத்தில் செம்மையாய் அடிவாங்கினம் திமுக இங்கு தீ கோழிதானே எல்லாம் முடியவிட்டு விவாதிப்பம் .

லாட்டரி மார்டினோடு நேற்று பிடிஆர் சந்திச்சாராம். அதையும் திரும்பி கொண்டு வருவார்கள்.

இன்னொரு பக்கம் நிவாரணம், 2000 ரூபா பணம் என்று இலவசம்.

கள்ளத்தனத்தில்  தந்தையை மிஞ்சும் தனயன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாராயம் தயாரிப்பவனுக்கே ஓட்டு போட்டு சாராயக் கடையை மூடுவான் என்று நம்பும் முட்டாள்கள் நிறைந்த மாநிலம் தமிழ் நாடு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.