Jump to content

நாம் இஸ்­லா­மி­யர்­களைப் பாது­காக்க முயற்­சித்­தோமே தவிர அவர்­க­ளுக்கு எதி­ராக ஒரு போதும் செயற்­ப­ட­வில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

196469205_4155331747886459_6480635750699649803_n.jpg?_nc_cat=100&ccb=1-3&_nc_sid=110474&efg=eyJpIjoidCJ9&_nc_ohc=uv42_BI3QAAAX-Of3gj&_nc_ht=scontent.fcmb4-1.fna&tp=14&oh=9b4918451e2418f98ee19722cb91b682&oe=60CCDD26

 

ஏ.ஆர்.ஏ.பரீல்

கடந்த வாரம் கொழும்பில் நடை­பெற்ற ஊடக மாநா­டொன்றில் கலந்து கொண்டு 

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணைகள் குறித்து கத்­தோ­லிக்க பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் தெரி­வித்த முக்­கிய கருத்­து­களை தொகுத்து தரு­கிறோம்.

 

நமது நாட்டின் இன்­றைய நிலை தொடர்பில் நாம் மிகவும் கவ­லைப்­ப­டு­கிறோம். அதற்குப் பல கார­ணங்கள் உள்­ளன. எமது கடல் எல்­லையில் தீப்­பற்­றிய கப்பல் மாத்­திரம் பிரச்­சி­னை­யல்ல. இந்­நாட்டில் ஆட்­சி­யொன்று இருக்­கி­றதா? என்ற சந்­தேகம் எழு­கின்­றது. இலங்கை முக்­கிய கேந்­திர நிலை­யத்­தி­லுள்ள ஒரு நாடு. இந்­நாட்டை பாது­காப்­ப­தாக அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொண்­ட­வர்கள் நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் சென்­றுள்­ளார்கள். இது மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

 

எமது எதிர்ப்­பார்ப்­புகள் அனைத்தும் சிதைந்து போயுள்­ளன. நாடு எங்கு செல்­கி­றது? நாட்டை யார் ஆட்சி செய்­கி­றார்கள். யார் தீர்­மானம் மேற்­கொள்­கி­றார்கள்? என்று எமக்குத் தெரி­ய­வில்லை . நாட்டில் நிச்­ச­ய­மற்ற சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. அதனால் நாம் அனைத்து மக்­களும் தயவு செய்து இந்தப் பய­ணத்தை நிறுத்திக் கொள்­ளுங்கள் என்று ஆட்­சி­யா­ளர்­களைக் கேட்க வேண்­டி­யுள்­ளது.

 

இருக்கும் வளங்­களை விற்­பனை செய்­வது அபி­வி­ருத்­தி­யல்ல. இருக்கும் வளங்­களை விற்­பனை செய்­வது இல­கு­வாகும். எமக்கு ஆத்ம திருப்தி என்று ஒன்று உள்­ளது. இதனைப் பாது­காப்­பது அர­சி­யல்­வா­தி­களின் கட­மை­யாகும். இந்­நி­லையில் பல நாடு­க­ளுக்கு எமது பூமியை பூஜை செய்ய வேண்டாம் என்று நாம் வேண்டிக் கொள்­கிறோம். எமது ஆத்ம கௌர­வத்தைப் பாது­காத்துக் கொள்­ளுங்கள். நாட்டின் வளங்கள் அனைத்­தையும் விற்­பது நாட்டின் நன்­ம­திப்­புக்கு எதி­ரா­ன­தாகும்.

 

எம்.சி.சி. உடன்­ப­டிக்­கையை நாம் எதிர்த்த போது அதற்கு ஆத­ர­வ­ளித்த இந்­நாட்டின் அர­சி­யல்­வா­திகள் இன்று அதனை விட மோச­மான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வது எமக்குத் தெரி­கி­றது. இது குறித்து நாம் கவ­லைப்­ப­டு­கிறோம். இந்­நாட்டில் பாரிய சதித்­திட்­ட­மொன்று மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக முன்னாள் சட்­டமா அதிபர் தெரி­வித்­துள்ளார். அதா­வது உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் பின்­ன­ணியில் சதித்­திட்டம் இருந்­துள்­ள­தாக முன்னாள் சட்­டமா அதிபர் தெரி­வித்­துள்ளார். அந்த சதித்­திட்டம் என்ன என்­பதை நாம் அறிய வேண்டும். அவர் அப்­படிக் கூறினால் அதன் பின்­ன­ணியை அவர் தேடிப் பார்க்க வேண்டும். இல்­லையேல் அந்தப் பத­வியை தற்­போது ஏற்­றுள்ள புதிய சட்­டமா அதிபர் இது தொடர்பில் ஆராய வேண்டும். இந்­நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அவர் கட­மைப்­பட்­டுள்ளார்.

 

தாக்­கு­தலில் தொடர்­பு­பட்­ட­வர்கள் சில­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­ம­லி­ருக்கும் சூழ்­நி­லையை அர­சாங்கம் உரு­வாக்­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­களில் எதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும், எதனை நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடாது என்­பதைப் பரிந்­து­ரைப்­ப­தற்­காக ஜனா­தி­பதி 6 அமைச்­சர்கள் கொண்ட குழு­வொன்­றினை நிய­மித்தார். இது உங்­க­ளுக்கு ஒரு சட்டம், எங்­க­ளுக்கு ஒரு சட்டம் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. ஒரு நாடு ஒரு சட்டம் என்றே அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொண்­டார்கள். ஆனால் இன்று அந் நிலை­மை­யில்லை. அதி­கார பல­முள்­ள­வர்­க­ளுக்கு ஒரு சட்டம், சாதா­ரண மக்­க­ளுக்கு ஒரு சட்டம். இத­னாலே குறிப்­பிட்ட அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு பாது­காப்­புக்கு பொறுப்­பாக இருந்த அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென விசா­ரணை குழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்தும் அவர்கள் பாது­காக்­கப்­ப­டு­கி­றார்கள்.

 

முன்னாள் ஜனா­தி­பதி மற்றும் உளவுச் சேவையின் முன்னாள் முக்­கிய அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்தும் இது­வரை எது­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஒரு சாரா­ருக்கு ஒரு­விதம், மறு­சா­ரா­ருக்கு வேறொரு வித­மாக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அரசு ஊடக சந்­திப்­பு­களை நடத்­து­கி­றது. ஒரு­வரை கைது செய்­கி­றார்கள். மறு­தினம் விடு­தலை செய்­கி­றார்கள். இதுவே இன்று நடை­பெ­று­கி­றது. 20 ஆவது திருத்த சட்­டத்தை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வினைப் பெற நடத்­திய வித்­தையை நாம் கண்டோம். இது­வொரு டீல் ஆகும். இன்று ஊழல் நிறைந்த ஆட்­சியே உள்­ளது.

 

நாம் 225 பிர­தி­நி­தி­களை இதற்­கா­கவா நிய­மித்தோம். வாக்­க­ளித்தோம். எமது கடல் எல்­லையில் கப்பல் தீப்­பற்றி அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ளது. மீன­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். கடல் வளம், மீன் உள்­ளிட்ட உயி­ரி­னங்கள் அழி­வுக்­குள்­ளான பின்பு ஆட்­சி­யா­ளர்கள் கதை கூறு­கி­றார்கள். கப்­பலில் தீ பர­விய உடனே அதனை ஆழ்­க­ட­லுக்கு இழுத்துச் செல்­ல­வில்லை. அமைச்சர் சரி­யான பதி­லொன்று கூற­வில்லை.

 

எண்ணெய் கசிவு ஏற்­பட்டால் எமது மீனவ சமூ­கமும் நாடுமே பாதிக்­கப்­படும். மீனவ சமூ­கங்கள் ஒன்­றி­ணைந்து குறிப்­பிட்ட கப்பல் நிறு­வ­னத்­துக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யுங்கள். நான் அதற்குத் தலைமை தாங்­கு­கிறேன். மக்­களின் வாழ்க்­கை­யுடன் விளை­யாட வேண்­டா­மென ஆட்­சி­யா­ளர்­களை வேண்டிக் கொள்­கிறேன். இந்­நாட்டில் பௌத்­தர்­க­ளுடன் இந்து, முஸ்லிம், கிறிஸ்­தவ சமூக மக்கள் வாழ்­கி­றார்கள். எனவே ஏகா­தி­பத்­திய ஆட்சி வேண்டாம். அதற்கு இட­ம­ளிக்க முடி­யாது. எமது வளங்­களை எமது காணி­களை வெளி­நா­டு­க­ளுக்கு தாரை வார்ப்­பது நிறுத்­தப்­பட வேண்டும்.

 

இன்று விவ­சா­யி­க­ளுக்கு உரம் இல்லை. சாப்­பாடு இல்லை. தொழில் இல்லை. வரு­மானம் இல்லை. தேவை­யான தடுப்­பூ­சி­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு கூட அர­சாங்­கத்­திடம் போதிய நிதி­யில்லை. இது ஆட்­சி­யா­ளர்கள் மீதான சாபமா என்று நினைக்கத் தோன்­று­கி­றது. இந்தப் பய­ணத்­துக்கு தீர்­வொன்று தேவை. இலங்­கையின் காணிகள், வளங்கள் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு விற்­கப்­ப­டு­கின்­றன. இவற்றை விற்­ப­தற்கு நாம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு ஆணை வழங்­க­வில்லை. நாம் நாட்டை ஆட்சி செய்­வ­தற்கு தலைவர் ஒரு­வ­ரையே தேர்தல் மூலம் நிய­மித்தோம். அந்தத் தலைவர் மீது இன்று நம்­பிக்கை இழக்­கப்­பட்­டுள்­ளது. ஏனென்றால் அவர் மக்­களின் அபி­லா­சை­களை நிறை­வேற்­ற­வில்லை. எனவே நான் மக்­க­ளிடம் கோரிக்கை விடுக்­கிறேன். இதனை அங்­கீ­க­ரிக்க வேண்டாம்.

 

எமது கலா­சாரம், மதங்கள் மற்றும் சூழ்­நிலை, வளங்­களைப் பாது­காப்­ப­வர்­க­ளாக ஆட்­சி­யா­ளர்கள் இருக்க வேண்டும். மக்கள் மகிழ்­வாக குடும்­பத்­துடன் வாழும் சூழ்­நிலை உரு­வாக்­கப்­பட வேண்டும். நல்­லாட்சி நிலை நிறுத்­தப்­பட வேண்டும். பத­விக்கு வந்த ஒவ்­வொரு அர­சாங்­கங்­களும் நாட்டைக் காட்டிக் கொடுத்­த­தையே செய்­துள்­ளன. இவ்­வா­றான ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு மக்கள் ஒத்­து­ழைப்பு வழங்­கா­தீர்கள். ஆட்­சி­யா­ளர்கள் தமது மோச­மான பய­ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நாடு கொள்கை, கலா­சார, சமய, பொரு­ளா­தார துறையில் பின் நோக்கிச் செல்­கி­றது. மக்கள் பக்கம் இருந்து தீர்­மானம் மேற்­கொள்ளும் தலை­வர்­களே நாட்­டுக்குத் தேவை. நாடு இன்று பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. ஆட்­சி­யா­ளர்கள் தமது தற்­போ­தைய போக்­கினை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஆராய ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை ஆராய்ந்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மனம் பெற்ற 6 பேர் கொண்ட அமைச்­ச­ரவை குழு­வினால் எதுவும் நடை­பெ­ற­வில்லை. இந்த அமைச்­ச­ரவை குழு யாருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும், யாருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கக் கூடாது என்­பதை தீர்­மா­னிப்­ப­தற்­காக மாத்­தி­ரமே நிய­மிக்­கப்­பட்­டது.

 

இதனால் இந்­நாட்டில் இரு சட்­டங்கள் இருக்­கின்­றன என்­பது தெளி­வா­கி­றது. அதி­கார பலம், செல்­வாக்கு உள்­ள­வர்­க­ளுக்கு ஒரு சட்­டமும் மற்றும் சாதா­ரண மக்­க­ளுக்கு ஒரு சட்­டமும் என இரு வேறு சட்­டங்கள் நடை­மு­றை­யி­லுள்­ளன. எனவே நாட்டில் சட்டம் முறை­யற்ற விதத்தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இந்த தற்­போ­தைய நிலைமை குறித்து நாம் கவ­லை­ய­டை­கிறோம். இந்­நி­லையில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்த விசா­ர­ணைகள் உரிய முறையில் நடத்­தப்­ப­டாமை குறித்து நாம் இந்த அர­சுக்கு எதி­ராக செயற்­ப­டுவோம்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் உண்­மை­யான பொறுப்­பு­தா­ரி­களை இனங்­கா­ணு­வ­தற்­கான விசா­ர­ணைகள் எவ்­வித அக்­க­றை­யு­மின்றி நடை­பெ­று­கி­றது. இது தொடர்பில் எமக்குத் தெளி­வில்லை. எனவே இவ்­வி­வ­காரம் தொடர்பில் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு அமைச்சர் சரத் வீர­சே­க­ர­வுக்கு கடி­த­மொன்று அனுப்பி வைத்­துள்ளேன்.

 

முன்னாள் சட்­டமா அதிபர் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யொ­ருவர் இருப்­ப­தாக தெரி­வித்­துள்ளார். அந்த நபர் யாரென அவர் தெளி­வாகக் குறிப்­பி­ட­வில்லை. இத்­தாக்­குதல் தொடர்­பான சில விட­யங்கள் இது­வரை விசா­ரணை செய்­யப்­ப­ட­வில்லை என்­பது தெரி­கி­றது. முழு­மை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இத­னுடன் தொடர்­பு­டைய சில இஸ்­லா­மிய நட­வ­டிக்­கைகள் மற்றும் தொடர்­பு­டை­ய­வர்கள் என பெயர் குறிப்­பி­டப்­பட்ட அர­சி­யல்­வா­திகள் தொடர்பில் இன்னும் முறை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனத் தெரி­கி­றது. அத்­தோடு விசா­ரணை மேற்­கொண்டு ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­குழு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சில விட­யங்கள் இன்னும் முறை­யாக விசா­ரணை செய்­யப்­ப­ட­வில்லை.

 

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட காலத்தில் இறு­தி­யாக குண்­டினை வெடிக்கச் செய்து கொண்ட ஜெமீல் என்­பவர் இரா­ணுவ அதி­கா­ரி­யொ­ரு­வரை சந்­தித்­துள்­ள­தாக சாட்­சி­யங்­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவர் யார்? இந்த தாக்­கு­தலில் அவர் ஜெமீ­லுடன் தொடர்­பு­பட வேண்­டி­யது ஏன்? என்­பது தொடர்பில் விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் கூட முறை­யாக விசா­ரணை செய்­யப்­ப­ட­வில்லை? இந்த இரா­ணுவ அதி­காரி யார்.? இது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்­திலும் பேசப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீன் பர்­னாந்து பாரா­ளு­மன்­றத்தில் இந்தக் கேள்­வியை எழுப்­பினார். இந்தக் கார­ணிகள் விசா­ரணை செய்­யப்­பட வேண்­டு­மென்­றாலும் அது நடை­பெ­ற­வில்லை.

 

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு பயங்­க­ர­வா­திகள் மட்­டக்­க­ளப்பில் குண்­டு­களை வெடிக்கச் செய்து கொண்­டனர். அங்கு பலி­யா­ன­வர்­களின் உடற்­பா­கங்கள் டி.என்.ஏ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. டி.என்.ஏ. பரி­சோ­தனை அறிக்­கையின் படி சாரா ஜெஸ்­மினின் உடற்­பா­கங்கள் அங்கு இருக்­க­வில்லை. அறிக்­கையின் படி சம்­ப­வத்தின் போது சாரா அங்கு இருக்­க­வில்லை. அப்­ப­டி­யென்றால் அவர் எங்கே? இது தொடர்­பிலும் தெளி­வாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. என்­றாலும் உடற்­பா­கங்கள் தோண்­டப்­பட்டு மீண்டும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு அவரும் சம்­பவம் நடந்த இடத்தில் இருந்தார் என்ற பொய்யை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு விசா­ர­ணை­யா­ளர்கள் முயற்­சித்து வரு­கி­றார்கள். உடற்­பா­கங்­களை தோண்டி எடுத்தோம். சாரா அங்­கி­ருந்­துள்ளார் என்று கூற முயற்­சிக்­கி­றார்கள்.

 

சி.ஐ.டி.யும் இது தொடர்பில் முறை­யாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­வ­தில்லை. தாக்­குதல் தொடர்பில் முறை­யாக விசா­ரணை நடத்­து­மாறு கோரி நான் நீதி­மன்றம் சென்றேன். இது­பற்றி ஆராய இரு சி.ஐ.டி. குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் நீதி­மன்­றுக்கு அறி­வித்தார். என்­றாலும் அந்த இரண்டு குழுக்­க­ளுக்கும் என்ன நடந்­தது என்­பது கூட எமக்குத் தெரி­ய­வில்லை. இதற்குக் காரணம் அவர்­களும் அர­சியல் நிகழ்ச்சி நிர­லின்­படி பணி­யாற்­று­வ­தே­யாகும். அதனால் குறிப்பிட் சி.ஐ.டி குழுக்கள் மீது எமக்கு நம்­பிக்­கை­யில்லை. அத்­தோடு பொலிஸ் மாஅ­திபர் மீதும் எமக்கு நம்­பிக்­கை­யில்லை.

 

விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பிட்ட சில விட­யங்கள் தொடர்பில் கவனம் செலுத்­து­மாறு பொலிஸ் மா அதிபர் கேட்டுக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தாலும் அவர் இது தொடர்பில் எந்தக் கவ­னமும் செலுத்­த­வில்லை. அத்­தோடு தாக்­கு­தலை தடுக்க முடி­யாமற் போனமை தொடர்­பாக சட்­டமா அதிபர் அப்­போ­தைய ஜனா­தி­பதி மற்றும் பாது­காப்­புக்கு பொறுப்­பான சில முக்­கிய அதி­கா­ரிகள் மீது விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென கோரி­யி­ருந்தார். இவர்­களால் இத்­தாக்­கு­தலைத் தடுத்­தி­ருக்க முடியும். என்­றாலும் இது தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதி நிய­மித்த 6 அமைச்­சர்கள் கொண்ட குழு வெறும் கண்­து­டைப்­பாகும்.

 

இரண்­டா­வது நட­வ­டிக்­கை­யாக நாம், முன்னாள் சட்­ட­மா­அ­திபர் குறிப்­பிட்­ட­வாறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரியை கண்­டு­பி­டிப்­ப­தற்­காக, இனங்­கா­ணு­வ­தற்­காக சர்­வ­தேச நீதி­மன்றின் உத­வியை நாட வேண்­டி­யுள்­ளது. பிர­தான சூத்­தி­ர­தா­ரியை அறிய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். கத்­தோ­லிக்க ஆல­யங்கள் சபைக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் இடையில் தொடர்­புகள் உள்­ள­மை­யினால் எங்­களால் சர்­வ­தேச ரீதியில் நட­வ­டிக்கை மேற்­கொள்­வது இல­கு­வாக உள்­ளது.

 

எங்­க­ளுக்கு சர்­வ­தேச நாடு­க­ளுடன் தொடர்­புகள் உள்­ளன. மற்றும் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் நிறு­வ­னங்­களை நேர­டி­யாக தொடர்பு ு கொள்ளும் சக்தியும் எம்மிடம் உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கவுள்ளோம். ஏனென்றால் எந்­த­வொரு கத்­தோ­லிக்­கரும் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ராக ஒரு போதும் செயற்­ப­ட­வில்லை. நாங்கள் இஸ்­லா­மி­யர்­களைப் பாது­காக்க முயற்­சித்­தோமே அவர்­க­ளுக்கு எதி­ராக ஒரு போதும் செயற்­ப­ட­வில்லை. கத்­தோ­லிக்கர் என்ற வகையில் நாம் அவர்­களைப் பாது­காப்­ப­தற்கே முயற்­சித்தோம். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேலும் தாக்­கு­தல்கள் இடம்­பெறா வண்ணம் நாம் பாது­காத்தோம். நாம் தொடர்ந்தும் அவர்­களைப் பாது­காப்போம். நாம் தொடர்ந்தும் முஸ்­லிம்­களை மதிக்­கிறோம். அதனால் எமது மக்­களை இவ்­வாறு பலி­யெ­டுத்­த­தற்­கான காரணம் என்ன என்­பதை அறிந்து கொள்­வ­தற்­காக பக்­க­சார்­பற்ற நேர்­மை­யான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வது அவ­சி­ய­மாக உள்­ளது. இது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­க­வல்ல பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரா­ன­தாகும்.

 

எனவே நாம் வெளிப்­ப­டை­யான விசா­ர­ணை­களைக் கோரு­கிறோம். உண்­மையில் என்ன நடந்­தது? இந்த மக்கள் ஏன் கொலை செய்­யப்­பட்­டார்கள்? ஏன் அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்­டார்கள்? இதற்குக் காரணம் என்ன? அமைச்­ச­ருக்கு எழு­திய கடி­தத்தில் நான் இங்கு தெரி­வித்­த­வைகள் அனைத்­தையும் குறிப்­பி­ட­வில்லை. என்­றாலும் குறிப்­பாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கையின் சிபாரிசுகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli

https://www.madawalaenews.com/2021/06/blog-post_947.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
    • #பக்கத்து இலைக்கு பாயாசம் 🤣.
    • அமெரிக்க‌னுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் அவ‌ங்க‌ட‌  கால் தூசுக்கு ச‌ம‌ம்.................... உக்கிரேனுக்கே உத்த‌ன‌ பில்லிய‌ன் டொல‌ர‌ அமெரிக்க‌ன் அள்ளி அள்ளி கொடுத்த‌து அமெரிக்காவோடு ஒப்பிடும் போது  ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.