Jump to content

இலங்கை – மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங் நியமனம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை – மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங் நியமனம்!

June 16, 2021

spacer.png

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான புதிய உவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் இவர் கம்போடியா, தாய்லாந்து, ஈராக், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனாவிற்கான அமெரிக்க தூதுவராலயங்களில் பல்வேறு பொறுப்புகளில் கடமையாற்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2021/162345/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சுழிச்சியாம் என்று கதை அடிபடுகிறது....ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் மையத்தின் பிரதிநிதியாம் என்று கதை அடிபடுது உண்மையே ...இருந்து பார்ப்போம் ராஜபகசா கோஸ்டி தாக்கு பிடிக்குமோ .....சீனாவா?அமெரிக்கா? (கொரியா)வா வெற்றிய்டையுது என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில், அரசியல் வாதிகள் காட்டில், பணமழை கொட்டொ, கொட்டு என்று கொட்டுகிறது என்கிறார்கள்.

விசயம் என்னவென்றால், சீனா பணத்தினை கொட்டி கொடுத்து, ராஜபக்சேக்களை வெல்ல வைத்துள்ளதை தாமதமாக புரிந்து கொண்டன, இந்தியாவும், மேற்கும்.

இப்போது, சாம, பேத, தான, தண்ட விசயங்களில், தான விசயமாக அலுவல் நடக்கிறது.

இது சரிவராவிடில், தண்டம் நடக்கலாம்.

இதில், வளர்த்த பாம்பு, சவேந்திர டீ சில்வா மார்பில் பாயக்கூடும். சீனா, பர்மாவில் நடத்தியதை, சீனாவுக்கு எதிரானவர்கள், இங்கே நடத்தக்கூடும். யுத்த விசாரணை கத்தி மேலே தொங்குவதால், ராணுவம் சொன்னதை செய்யவும் கூடும்.

ரணிலும், உள்ளே வருவதும், நாடகத்தில் ஒரு பாகம் தான்.

ஆனாலும், பறவை பறந்த பின் வலை விரிக்க முனைகிறார்கள்.

லெனின் சொன்னான், வரலாறில் வெல்ல முடியாத ஒரு படை என்று எதுவுமே இல்லை.

ராஜ பக்சேக்களும் விரைவில் புரிந்து கொள்ள கூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பதை பார்த்தால் கோத்தா இராணுவ ஆட்சியை தானாகவே உருவாக்குவது போல் தெரிகிறது. ஆனால் காதாபாத்திரம் மாறலாம்.  கோத்தா கைதும் செய்யப்படலாம். யார் கண்டார் காட்சிகளும் மாறலாம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

 

லெனின் சொன்னான், வரலாறில் வெல்ல முடியாத ஒரு படை என்று எதுவுமே இல்லை.

ராஜ பக்சேக்களும் விரைவில் புரிந்து கொள்ள கூடும். 

எதாவது நடந்தால் நாங்கள் சிரிப்போமல்ல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.