Jump to content

பிரெஞ்சு மண்ணில் ஆழக் கால் பதிக்கும் தமிழீழ அரசியல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நீங்கள் எழுதும் பாணி அப்படியே நாதமுனியை நினைவுக்கு கொண்டு வருகிறது. 

அவரை போலவே நீங்களும் பலராலும் விரும்பபடும் கருத்தாளராக வர வாழ்துக்கள் 💐.

நீங்கள் எழுதுறதும் எனக்கு ஒரு ஆளை நினைவுபடுத்துது.எல்லாத்தையும் வெளியிலை சொல்லிக்கொண்டே திரியிறம் 😂 கருத்தை கருத்துக்களாலை வெல்லோணும் கண்டியளோ😆

Link to comment
Share on other sites

  • Replies 109
  • Created
  • Last Reply
3 hours ago, விசுகு said:

 

நான் எழுதியதில்  ஒரு  மண்ணாங்கட்டியும்  உங்களுக்கு  புரியவில்லை  இதுக்க  எனக்கு  வகுப்பு????

வீட்டில  இருந்து  தான்  எல்லாமே  தொடங்குது

 

நீங்கள் சொல்ல வரும் விடயங்களில் நேர்மை இருந்தால் தெளிவாக சொல்லலாம். அது இல்லாவிட்டால் இப்படி ஒளித்து மறைத்து சொல்ல வேண்டிய நிலை உங்களுக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, tulpen said:

நீங்கள் சொல்ல வரும் விடயங்களில் நேர்மை இருந்தால் தெளிவாக சொல்லலாம். அது இல்லாவிட்டால் இப்படி ஒளித்து மறைத்து சொல்ல வேண்டிய நிலை உங்களுக்கு. 

வீட்டில இருந்து தான்  எல்லாம் தொடங்குது என்பதில் என்ன  ஒழிவு  மறைவு???

நித்திரை மாதிரி நடிக்கும் கூட்டத்தை எழுப்ப முடியாது என்று தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

பிரெஞ்சு குடியுரிமை பெற்று   பிரெஞ்சு குடிமக்களாக வாழும் அவர்கள் பிரான்சு நகர  நிர்வாக தேர்தல்களில் நின்றால் அது எப்படி ஆழ கால் பதிக்கும் தமிழீழ அரசியல் ஆகும்?

தேர்தல்களில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் கவனிக்கபோவது பிரான்சின் நகரங்களின் நிர்வாக நடவடிக்கைகளையா அல்லது தமிழீழ நிர்வாக நடவடிக்கைகளையா? 

குடியுரிமை பெற்ற அனைத்து இனங்களை சேர்ந்தவர்களையும் ஐரோப்பியநாடுகள் தேர்தலில் நிற்க உரிமைகளை வழங்கியிருக்கு அப்போ தேர்தலில் பங்குபற்றும் வேற்றுநாடுகளிலிருந்து பிரெஞ்சு பிரஜை ஏனைய நாட்டவர்கள்  அவர்களது பிறந்த தேசத்து அரசியல் பிரான்சில் ஆழ கால்பதிக்கிறார்கள் என்று அர்த்தமா?

பிரான்சு சட்டங்கள் பிரான்சில் ஆழகால்பதிக்கும் எல்லை கடந்த நாடுகளின் அரசியலை அனுமதிக்குமா?

அளவுக்கதிகமான அரிதாரம் பூசப்பட்ட தலைப்புகள் என்று நினைக்கிறேன்.

 

17 hours ago, goshan_che said:

இவை எல்லாமே குழுவாத அரசியல் மருதர். நாமெல்லோரும் ஏதோ ஒரு வகையில் இந்த சுழலில்தான் இருக்கிறோம். 

நான் ஏன் 1% பணக்காரருக்கு வரி விலக்கு கொடுப்போம் என சொல்லும் கட்சிக்கு வாக்களிப்பதில்லை? ஏனென்றால் நான் அந்த 1% பணக்காரர் குழுவில் இல்லை.

அரசியல் என்பதே குழுவாதம்தான்.

அது ஏழை, பணக்காரன், வேலை உள்ளவன், வேலை இல்லாதவன், சோசல் காசில் இருப்பவன், சோசல் காசுக்கு வரி கொடுப்பவன் என்று எப்போதும் குழுக்களின் நலன் சார்ந்தே ஓடும்.

ஆனால் இவற்றில் எல்லாம் ஒரு குழுவில் இருந்து இன்னோர் குழுவுக்கு போகலாம். யார் கண்டது நாளைக்கு நான் 1% பணக்காரர் குழுவில் சேர்ந்து விடலாம்.

ஆனால் இனத்தூய்மைவாதம் அப்படி அல்ல. அது ஒரு மாற்ற முடியாத லேபல். ஆகவேதான் குழுவாத அரசியல்கள் எல்லாவற்றிலும் மிக ஆபத்தான குழுவாத அரசியலாக இனத்தூய்மைவாதம் இருக்கிறது.

திருவாளர் கோசான்!

மேலே வளவன் எழுதிய கருத்தை நான் இங்கு போடுகிறேன் 
அந்த கருத்தில் ஒன்றும் இல்லை.

அதுக்கு 5 பேர் பச்சை குத்தி வரவேற்று இருக்கிறார்கள் ஒருவர் சுவிஅவர்கள் அவருக்கு அந்த கருத்து 
பிடித்து இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

மற்ற நாலு போரையும் நினைத்து உருண்டு உருண்டு சிரிக்கிறேன் 

இந்த பாம்பாம்த்து சிர்த்தத்தங்களில் தொங்கும் கீழ்நிலையைத்தான் நான் மேலே 
எழுதினேன். அதைத்தான் திரும்ப திரும்ப நான் மேலே எழுதி இருக்கிறேன் 
வலவன் வடிவில் நான் வைத்த மிதிவெடியில் வந்து இப்படி மிதித்து நிக்கிறார்களே?
இவ்வாறான ஒரு கேவலம் எதற்கு?

இதுக்கு அடித்தளமே முதலில் குழுவாதம் 
மற்றது தாங்கள்தான் பெருந்தகைகள் எனும் கர்வம் 
மற்றது இன்னொருவனை மிதிக்கும் ஒரு அதிகார ஆணவம் 
மற்றதை சீமானின் வாலில் புலிவாலில் தொங்குவது 

இவற்றை கட்டிப்பிடித்து தொங்கிக்கொண்டு 
அடுத்தவனுக்கு பாடம் எடுப்பு. 

அரசியல் என்பதே முதலில் ஆளுமை சார்ந்தது 
ஆளுமையை கைவிட்டால் அரசியல் இல்லை ஆளுமையை பற்றிக்கொள்ள 
பலம் வேண்டும் அது இப்போது பண (பொருளாதார) பலமாகவே இருக்கிறது 
எந்த அரசுகள் என்றாலும் அதற்கு உட்பட்டுதான் ஆட்ச்சி 
என்னைப் பொறுத்தவரை இதில் சிலாகிக்கவே ஏதும் இல்லை. 

உண்மையில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை .....
விழுந்து விழுந்து சிரிக்கிறேன் 

ஓநாய் ஓநாய் என்பவன் ஒரு நாள் உண்மையிலேயே ஓநாய் வரும்போது ஆடுகளை 
இழப்பதுபோல. குழுவாதம் மூலம் அடுத்தவர்களை சாதி வெறியில் இருந்துகொண்டு 
நலிந்தவனை மிதிப்பதுபோல இங்கிருக்கும் சக கருத்தாளர்களை வீம்புக்கு வம்புழுத்து 
வன்மம் வளர்க்கும் இவர்கள் ஒருநாள் தங்கள் முகத்தில் கரிப்பூசிக்கொண்டு நிற்பார்கள் 
என்பது நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். 


இருந்தாலும் எனக்கு ஒரு கவலை உண்டு இப்போது ஈழத்தமிழரிடம் 
பெரும் சக்தி உண்டு ஏன் வீணாக எந்த அரசியல் பலமும் இல்லாத சீமானை 
ஆதரவாகமும் எதிராளியாகவும் காவிக்கொண்டு திரிகிறோம் என்பதே 
(ஸ்டாலின் கனிமொழியையே வழிக்கு கொண்டுவரும் பொருளாதார பலம் உண்டு)  

அதுக்கு விடை எனக்கு 90லேயே தெரியும் 
தெளிவாக அது தெரிந்தபின்தான் நான் போர் உச்சத்தில் இருந்தபோதும் 
சுயலநலத்துடன் உயிருக்காக தேசத்தை விட்டு ஓடினேன். 

சிங்களவன் போட்டு கும்பு கும்பு என்று கும்மினால் 
யாழ்ப்பாண ஆணவ தலைகளுக்குள் கொஞ்சம் புத்தி வரலாம் என்று எதிர்பார்த்தேன் 
அது இன்னும் ஒரு ஆயிரம் வருசத்துக்கு வாராது என்றே மேலே இருக்கும் சில ஆணவ கருத்துக்கள் 
அடித்து சொல்கின்றன.

நான் எந்த வலதுசாரிகளுக்கும் ஆதரவாளன் இல்லை 
அதுக்காக போலி இடதுசாரிகளின் வேஷம் தெரியாதவனும் இல்லை 
இந்த வேஷங்கள் ஒருநாள் கலையும் என்று எனக்கு தெரியும் 

இவ்வளவு சீக்கிரமாக.......... என்பதுதான் எதிர்பாராதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

 

திருவாளர் கோசான்!

மேலே வளவன் எழுதிய கருத்தை நான் இங்கு போடுகிறேன் 
அந்த கருத்தில் ஒன்றும் இல்லை.

அதுக்கு 5 பேர் பச்சை குத்தி வரவேற்று இருக்கிறார்கள் ஒருவர் சுவிஅவர்கள் அவருக்கு அந்த கருத்து 
பிடித்து இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

மற்ற நாலு போரையும் நினைத்து உருண்டு உருண்டு சிரிக்கிறேன் 

இந்த பாம்பாம்த்து சிர்த்தத்தங்களில் தொங்கும் கீழ்நிலையைத்தான் நான் மேலே 
எழுதினேன். அதைத்தான் திரும்ப திரும்ப நான் மேலே எழுதி இருக்கிறேன் 
வலவன் வடிவில் நான் வைத்த மிதிவெடியில் வந்து இப்படி மிதித்து நிக்கிறார்களே?
இவ்வாறான ஒரு கேவலம் எதற்கு?

இதுக்கு அடித்தளமே முதலில் குழுவாதம் 
மற்றது தாங்கள்தான் பெருந்தகைகள் எனும் கர்வம் 
மற்றது இன்னொருவனை மிதிக்கும் ஒரு அதிகார ஆணவம் 
மற்றதை சீமானின் வாலில் புலிவாலில் தொங்குவது 

இவற்றை கட்டிப்பிடித்து தொங்கிக்கொண்டு 
அடுத்தவனுக்கு பாடம் எடுப்பு. 

அரசியல் என்பதே முதலில் ஆளுமை சார்ந்தது 
ஆளுமையை கைவிட்டால் அரசியல் இல்லை ஆளுமையை பற்றிக்கொள்ள 
பலம் வேண்டும் அது இப்போது பண (பொருளாதார) பலமாகவே இருக்கிறது 
எந்த அரசுகள் என்றாலும் அதற்கு உட்பட்டுதான் ஆட்ச்சி 
என்னைப் பொறுத்தவரை இதில் சிலாகிக்கவே ஏதும் இல்லை. 

உண்மையில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை .....
விழுந்து விழுந்து சிரிக்கிறேன் 

ஓநாய் ஓநாய் என்பவன் ஒரு நாள் உண்மையிலேயே ஓநாய் வரும்போது ஆடுகளை 
இழப்பதுபோல. குழுவாதம் மூலம் அடுத்தவர்களை சாதி வெறியில் இருந்துகொண்டு 
நலிந்தவனை மிதிப்பதுபோல இங்கிருக்கும் சக கருத்தாளர்களை வீம்புக்கு வம்புழுத்து 
வன்மம் வளர்க்கும் இவர்கள் ஒருநாள் தங்கள் முகத்தில் கரிப்பூசிக்கொண்டு நிற்பார்கள் 
என்பது நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். 


இருந்தாலும் எனக்கு ஒரு கவலை உண்டு இப்போது ஈழத்தமிழரிடம் 
பெரும் சக்தி உண்டு ஏன் வீணாக எந்த அரசியல் பலமும் இல்லாத சீமானை 
ஆதரவாகமும் எதிராளியாகவும் காவிக்கொண்டு திரிகிறோம் என்பதே 
(ஸ்டாலின் கனிமொழியையே வழிக்கு கொண்டுவரும் பொருளாதார பலம் உண்டு)  

அதுக்கு விடை எனக்கு 90லேயே தெரியும் 
தெளிவாக அது தெரிந்தபின்தான் நான் போர் உச்சத்தில் இருந்தபோதும் 
சுயலநலத்துடன் உயிருக்காக தேசத்தை விட்டு ஓடினேன். 

சிங்களவன் போட்டு கும்பு கும்பு என்று கும்மினால் 
யாழ்ப்பாண ஆணவ தலைகளுக்குள் கொஞ்சம் புத்தி வரலாம் என்று எதிர்பார்த்தேன் 
அது இன்னும் ஒரு ஆயிரம் வருசத்துக்கு வாராது என்றே மேலே இருக்கும் சில ஆணவ கருத்துக்கள் 
அடித்து சொல்கின்றன.

நான் எந்த வலதுசாரிகளுக்கும் ஆதரவாளன் இல்லை 
அதுக்காக போலி இடதுசாரிகளின் வேஷம் தெரியாதவனும் இல்லை 
இந்த வேஷங்கள் ஒருநாள் கலையும் என்று எனக்கு தெரியும் 

இவ்வளவு சீக்கிரமாக.......... என்பதுதான் எதிர்பாராதது. 

நீங்கள் இதில் எனக்காக கனக்க எழுதவில்லை என நினைக்கிறேன்.

ஆனால் எனது நிலைப்பாட்டுக்கும் வளவன் எழுதியதற்கும் தூரம் அதிகமில்லை. இவர்கள் நகரசபை தேர்தலில் போட்டியிட்டு காத்திரமாக எதையும் செய்யமுடியாது அந்தவகையில் இந்த தலையங்கமும், இந்த செய்தியின் சாராம்சமும் ஓவர் பில்டப்தான்.

ஆனால் இப்போ யூகே பாராளுமன்றில் இருப்பவர்களில் 1/3 பேராவது ஒரு காலத்தில் நகரசபை உறுப்பினராக இருந்தோர்தான் என்பது என் கணிப்பு.

ராதிகா, கரி ஆகியோர் எம்பி ஆகி சாதிக்க முடியாததை இந்த நகரசபை உறுபினர்கள் (ஆகினால்) செய்வார்கள் என்ற கற்பனையில் யாரும் இருக்க முடியாது.

ஆனால் புலம்பெயர் தேசத்தின் அத்தனை தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும். எம்பிகள் முதல் - நகரசபை உறுப்பினர் வரை.

இவர்கள் எல்லாருக்கும் அவரவர் நாட்டின், நகரத்தின் அரசியல்தான் முதல் கடமை. ஆனால் இரெண்டாவது கடமையாக நாட்டில் வாழும் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு என்பதும் இருக்க வேண்டும்.

இவர்கள் அமர்வுகள் செய்ய வேண்டும். தூதுகுழுக்களை அமைக்க வேண்டும். அத்தனை உலக அதிகார மையங்களையும் லாபி பண்ண வேண்டும்.

தமிழகத்தில் - எல்லாருடனும் நட்புறவை பேண வேண்டும்.

நாட்டில் தமிழ் தேசிய சக்திகளுடன் அணைய வேண்டும்.

இப்படிபட்ட உலகளாவிய, ஜனநாயக மதிப்பு உள்ள ஒரு அமைப்பு எமக்கு உருவாகும் போது - அது பலதை சாதிக்க முடியும். 

இதன் முதல் படியாகவே இந்த செய்தியை நான் பார்கிறேன்.

ஆகவே நகரசபை உறுப்பினர்கள் எமக்கு எதையும் சாதிக்க முடியது என்ற வளவனின் கருத்தை ஏற்றாலும், என்னால் அதற்கு அப்பாலும் பார்க்க இல்லை கற்பனை செய்யவாவது முடிகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Sasi_varnam said:

பிரபா... நீங்கள் இப்படி வாழ்த்துகிறீர்கள், அதைத்தான் கொழும்பான் கொழும்பு பாணியில் இப்படி சொல்கிறார். 👇

காலவதியான சித்தந்தங்களையும் / கறள் பிடித்த உறைந்த் எண்ணங்களையும் பற்றி படித்து தொங்கிக்கொண்டிருக்கும்   வயோதிப / போலி தேசிய நேசர்களை இளைய பிரான்ஸ் தலைமுறை புறக்கணிக்க வேண்டும்.   

நான் அப்படி எழுதியதில் ஏதும் பிழை இருப்பதாக தெரியவில்லை. 
என்னைப்பொறுத்தவரையில் எங்களது இரண்டாம் தலைமுறை பிள்ளைகள், அரசியலில் ஈடுபடும் போது, அவர்கள் தங்களை தெரிவு செய்த மக்களுக்கு, தங்களுடைய நாட்டுக்கு சேவை செய்தாலும் எங்கள் மக்களை மறக்ககூடாது, விஜய் தணிகாசலம் அளவு முடியாவிட்டாலும் கூட எங்களது மக்களுக்கு நடந்தவற்றை மறக்காமல் அவர்கள் தங்களான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என எதிர்பார்ப்பது இயற்கைதானே!!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு ஒற்றுமையான அமைப்பை 2ம் தலைமுறை பிள்ளைகள் எம்மை விட இலகுவாக செய்வார்கள்.

1. என்னதான் வீட்டில் சொல்லி கொடுத்தாலும் சாதி, சமய, அரசியலில் அவர்கள் தமது அறிவை கொண்டே செயல்படுவதை கண்டுளேன்.

2. அவர்களிடம் எமது பழைய குரோதங்கள் இல்லை. 

3. அவர்களிடம் எம்மை போல் தனிமனித வழிபாடும் இல்லை. 

4. எம்மை விட நியாத்தின் பால் பிடிப்பு உள்ளவர்களாக, மேலைதேய ஜனநாயக விழுமியங்களை ஏற்றவர்களாக அவர்கள் உள்ளார்கள். தமிழன் என்பதால் அல்லாமல் - இது அநியாயம் என்பதால் அவர்கள் எம் பக்கம் நிலை எடுப்பார்கள்.

5. அவர்களுக்கு இலங்கையில் நடந்ததை சரியாக சொன்னாலே, எமது பக்கம்தான் நியாயம் என்பது புரியும்.

ஆங்கிலத்தில் சொன்னால் எனதும், எனக்கு முந்திய தலைமுறைகளும் we have a lot of baggage. இந்த சுமை இல்லாத அடுத்த புலம் பெயர் தலைமுறை - தத்தம் நாட்டு அரசியலில் இருந்தபடியே, இதை தூர நகர்த்தி செல்லலாம்.

இப்படி நடக்கும் என்பதில்லை. இதற்கு எதிர்மாறாய் அவர்கள் தத்தம் நாட்டு அரசியலோடு சுருங்கியும் போகலாம்.

ஆனால் தமிழ், தமிழ் அடையாளம், கல்தோன்றா மண்தோன்றா தமிழன் என்ற பொய் ஜம்பங்களை புகுத்துவதை விட, இலங்கையில் எமக்கு நடந்தது ஒரு அநியாயம் என்பதை அவர்களுக்கு எடுத்து சொன்னால் போதுமானது - மிகுதியை அவர்கள் வளரும் நாடு அவர்களில் விதைக்கும் விழுமியங்கள் பார்த்துகொள்ளும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

*********************************************************************
*********************************************************************
*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************

*********************************************************************
*********************************************************************

இந்த திரியின் தலைப்பு என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு விட்டுச் சென்ற பாதையை தொடருங்கள் .எங்கள் அடையாளம் தொலையாமல் உரிமையை வென்றெடுங்கள் .வாழ்த்துகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

 

ஆனால் தமிழ், தமிழ் அடையாளம், கல்தோன்றா மண்தோன்றா தமிழன் என்ற பொய் ஜம்பங்களை புகுத்துவதை விட, இலங்கையில் எமக்கு நடந்தது ஒரு அநியாயம் என்பதை அவர்களுக்கு எடுத்து சொன்னால் போதுமானது - மிகுதியை அவர்கள் வளரும் நாடு அவர்களில் விதைக்கும் விழுமியங்கள் பார்த்துகொள்ளும்.

 

இதைத்தான் நான் செய்துள்ளேன்

உங்கள் அலசலில் 6 வதாக இதையும்  சேர்த்துக்கொள்ளுங்கள்

6 - அவர்களது  மனச்சாட்சிக்கு சரியென  படுவதை  செய்வார்கள். அல்லது  மிக சுலபமாக ஒதுங்கி  விடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்படி ஒரு ஒற்றுமையான அமைப்பை 2ம் தலைமுறை பிள்ளைகள் எம்மை விட இலகுவாக செய்வார்கள்.

1. என்னதான் வீட்டில் சொல்லி கொடுத்தாலும் சாதி, சமய, அரசியலில் அவர்கள் தமது அறிவை கொண்டே செயல்படுவதை கண்டுளேன்.

2. அவர்களிடம் எமது பழைய குரோதங்கள் இல்லை. 

3. அவர்களிடம் எம்மை போல் தனிமனித வழிபாடும் இல்லை. 

4. எம்மை விட நியாத்தின் பால் பிடிப்பு உள்ளவர்களாக, மேலைதேய ஜனநாயக விழுமியங்களை ஏற்றவர்களாக அவர்கள் உள்ளார்கள். தமிழன் என்பதால் அல்லாமல் - இது அநியாயம் என்பதால் அவர்கள் எம் பக்கம் நிலை எடுப்பார்கள்.

5. அவர்களுக்கு இலங்கையில் நடந்ததை சரியாக சொன்னாலே, எமது பக்கம்தான் நியாயம் என்பது புரியும்.

ஆங்கிலத்தில் சொன்னால் எனதும், எனக்கு முந்திய தலைமுறைகளும் we have a lot of baggage. இந்த சுமை இல்லாத அடுத்த புலம் பெயர் தலைமுறை - தத்தம் நாட்டு அரசியலில் இருந்தபடியே, இதை தூர நகர்த்தி செல்லலாம்.

இப்படி நடக்கும் என்பதில்லை. இதற்கு எதிர்மாறாய் அவர்கள் தத்தம் நாட்டு அரசியலோடு சுருங்கியும் போகலாம்.

ஆனால் தமிழ், தமிழ் அடையாளம், கல்தோன்றா மண்தோன்றா தமிழன் என்ற பொய் ஜம்பங்களை புகுத்துவதை விட, இலங்கையில் எமக்கு நடந்தது ஒரு அநியாயம் என்பதை அவர்களுக்கு எடுத்து சொன்னால் போதுமானது - மிகுதியை அவர்கள் வளரும் நாடு அவர்களில் விதைக்கும் விழுமியங்கள் பார்த்துகொள்ளும்.

 

நீங்கள் சொல்லவருவதை புரிந்துகொள்கிறேன் 

நீங்கள் ஏற்கிறீர்களோ இல்லையோ 
இதில் எனக்கு நிறைய மாற்றுக்கருத்து உண்டு 

காற்றில் பறக்கும் பஞ்சு எங்கு போய் வீழும் என்பது யாருக்கும் தெரியாது 
அது சகதியாக கூட இருக்கலாம் 

ஒரு கொள்கை இலக்கு இல்டசியம் இல்லாத எந்த மனிதனும் 
சமூகமும் முன்னேறவே முடியாது. அவர்களிடம் பணம் பொருள் 
இருப்பின் சிலர் அதை முன்னேற்றம் என்று கொள்ளலாம் 
முன்னேற்றம் பற்றி பேசும்போது ... முதலில் முன்னேற்றம் என்றால் என்ன?
என்பதில் தெளிவு வேண்டும்.

"தனி மரம் தோப்பு ஆகாது" 
ஒரு சமூகம் சாராதவன் தான் யார் என்றே அறியாதவன் 
ஒரு ஆக்கபூர்வ அரசியல் செய்வான் என்று எதிர்பார்ப்பது வெறும் கனவே 
அரசியல் என்பதே ஒரு அதிகார ஆதிக்கம்தான் அதில் தெளிவு இல்லை என்றால் 
அழிவுதான் அதிகமாக இருக்கும். மிருகநலன் பேசுபவனுக்கு முதலில் ஆடு வேறு 
ஓநாய் வேறு என்ற தெளிவு இருக்கவேண்டும் இல்லையேல் அவர்களுக்கு நல்லது செய்கிறேன் 
என்று எண்ணி தன்னை அறியாமலேயே ஆட்டையும் ஓநாய்யையும் ஒரே பட்டியில் போடும் 
ஆபத்தை செய்துவிடுவான். வேண்டும் என்று  செய்யாவிடினும் தவறுகளுக்கு நிறைய வாய்ப்பு உண்டு.

"சிறுபிள்ளை வேளாண்மை விளையும் வீடு வந்து சேராது" 
என்னதான் உரிமை எல்லாம் எனது பிள்ளைக்கு அமெரிக்காவில் கிடைத்தாலும் 
தனது சமூகம் தமிழ் என்பதை மறப்பின் அவரால் அமெரிக்காவுக்கும் நன்மை இல்லை 
தமிழருக்கும் நண்மை இல்லை. அதுக்கான அடிப்படை என்ன எனில் எங்கிருந்து வருகிறேன் 
என்ற தெளிவு இருக்கிறவனுக்கே எங்கு போக வேண்டும் என்று ஒரு இல்டசியம் இருக்கும். 
அதில் தெளிவு இருக்கும் .......... மனித வரலாறு பூராகவும் அழிவும் கசப்பும் தான் கிடக்கிறது 
அதை தெளிவாக தெரிந்து கொள்பவன்தான் அவற்றை நீக்கி பயணிக்க வேண்டும் எனும் 
சிந்தனையை பெறுவான். 

குறள் 633:
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.

அரசியல் என்பது சூழலை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும் .. உதாரணத்துக்கு 
இரண்டு வருடம் முன்பு ட்ரம் இங்கு அதிபராக இருந்தபோது ஒரு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு 
அலை இருந்தது. அதுக்கு காரணம் பிரித்தானிய பிரிப்பு அதன் சூத்திரதாரியே அமேரிக்கா என்பது 
ஐரோப்பிய யூனியனுக்கு நன்கு தெரியும் என்பதால் பிரான்சும் ஜெர்மனும் அதை பொறுமையாக கையாண்டார்கள். இதை ஏன் குறிப்பிட்டு எழுதுகிறேன் என்றால் பிரிப்பு அழிப்பு சேர்ப்பு என்பது எல்லாம் 
மாறி மாறி நடந்துகொண்டே இருக்கும். சிலர் "மேலைநாட்டு ஜனநாயகம்" என்று வாய் கூசாமல் சொல்லுகிறார்கள் ஜனநாயகத்தை மேற்குக்கு அறிமுகப்படுத்தியதே கீழை நாடுகள் என்ற தெளிவு அவர்களுக்கு இல்லை.இப்போதும் கூட மேலை நாட்டு ஜனநாயகம் என்பது பணநாயகம் மட்டுமே. அதனால்தான் பல நாடுகளில் பிணநாயகமாக வாழ்க்கை நடக்கிறது. இனி பைடன் காலம் ஐரோப்பிய யூனியனுடன் கட்டி புரளும் காலம் நாம் கட்டி புரளுவது அமெரிக்காவுடன் என்ற தெளிவு அற்ற ஒரு ஐரோப்பிய அரசியல்வாதியால் ... இந்த கட்டிப்புடி விளையாட்டில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு எந்த நன்மையும் விளையாது.
   

 உங்களுடைய தற்போதைய ஹோம் செகிரேட்டரி பிரீத்தி பட்டேல் 
இப்படி எமது இளையவர்கள் ஆக கூடாது என்பதுக்கு நல்ல உதாரணம் 
ஆளுமை கிடைத்தால் போதும் அதுதான் முன்னேற்றம் என்று சிலர் எண்ணலாம் 
இவரை இடம் மாற்றி வலதுசாரி அரசியலில் புகுத்தியதே இஸ்திரேல் மொஸாட்தான் இவரால் 
இந்தியர்களுக்கும் நன்மை இல்லை ....... பிரிடிஷ் மக்களுக்கும் நன்மை இல்லை. 
இவர்களின் ஆட்ச்சி காலம் முடியும்போது சாதாரண மனித அறிவு உள்ளவர்களால் வெறுக்க படுவார்கள். 

இவர்களுக்கு ஓரளவு அறிவு இருக்கிறது ஆனால் இங்கிருந்து வந்தோம் .. என்பதோ 
அதனால் எங்கு போகவேண்டும் என்றோ இலக்கு ஏதும் இல்லை. அதிகாரம் நோக்கி நகர்ந்தால் போதும் 
என்ற எண்ணம் மட்டுமே இருக்கும் ...அது கிடைக்கும்போது மக்களால் அறியப்படுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் அப்படி எழுதியதில் ஏதும் பிழை இருப்பதாக தெரியவில்லை. 
என்னைப்பொறுத்தவரையில் எங்களது இரண்டாம் தலைமுறை பிள்ளைகள், அரசியலில் ஈடுபடும் போது, அவர்கள் தங்களை தெரிவு செய்த மக்களுக்கு, தங்களுடைய நாட்டுக்கு சேவை செய்தாலும் எங்கள் மக்களை மறக்ககூடாது, விஜய் தணிகாசலம் அளவு முடியாவிட்டாலும் கூட எங்களது மக்களுக்கு நடந்தவற்றை மறக்காமல் அவர்கள் தங்களான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என எதிர்பார்ப்பது இயற்கைதானே!!
 

பிரபா நான் உங்கள் வாழ்த்தில் பிழை கூறவில்லை... உங்கள் நேர்மையான வாழ்த்தையும் கொழும்பானின் எதிர்மறை கருத்தையும் பதிந்தேன். என்னுடைய வாழ்த்தும் உங்களைப்போலவே.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

 

 

 

அதுக்கு 5 பேர் பச்சை குத்தி வரவேற்று இருக்கிறார்கள் ஒருவர் சுவிஅவர்கள் அவருக்கு அந்த கருத்து 
பிடித்து இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

மற்ற நாலு போரையும் நினைத்து உருண்டு உருண்டு சிரிக்கிறேன்

இதில் நானும் பச்சை குத்தி உள்ளேன்.ஆனால்சுவியரை கான வில்லை.நான் குழு சார்ந்தவன் என்றால் ரொம்ப சொக் ஆகிடுவன்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, சுவைப்பிரியன் said:

இதில் நானும் பச்சை குத்தி உள்ளேன்.ஆனால்சுவியரை கான வில்லை.நான் குழு சார்ந்தவன் என்றால் ரொம்ப சொக் ஆகிடுவன்.😂

சுவையை தான் சுவி என்று எழுதிவிட்டேன்

(உங்களை போய் அப்படி எண்ணுவேனா? தவிர அந்த கருத்துதான் உண்மையான கருத்து அதைத்தான் நானும் எழுதிவருகிறேன் சீமானும் பேசிவருகிறார். அதில் புடுங்குபடுபவர்கள்தான் பல்டி அடிக்கிறார்கள்) 

 

நான் ஒருவரை பற்றி எழுந்தமானாக எண்ணுவதில்லை 
அவர்களை பல காலம் அவதானித்து அவர்கள் கருத்துக்களை வாசித்தாலும் ... 
தாம் யார் என்று அவர்கள் வாக்குமூலம் தந்த பின்புதான் ஏற்றுக்கொள்ளுவேன் தங்களை அறியாமலே அவர்கள் வாக்குமூலம் தரும்போது வாங்கி வைத்துக்கொள்வேன்.

 

Link to comment
Share on other sites

6 hours ago, tulpen said:

அதை தான் தமிழ் நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் தீர்மானித்தார்கள். இனி அடுத்த தேர்தலில் மீண்டும் தீர்மானிப்பார்கள். 

தமிழநாட்டு மக்கள் தீர்மானிக்கவில்லை...

தமிழகத்தை சுரண்டி தமிழர்களை தேர்தலின் போது பிச்சை எடுக்க வைத்து தமிழர்களை அறியாமையில் மிதக்கவிட்டு தீர்மானிக்க வைத்துள்ளனர்... தமிழகத்தில் சன நாயகமா இருக்கிறது...

ஆங்கலேயனுக்கு பிறகு திராவிடம் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து கொண்டது... தமிழ்நாட்டிற்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்ல... திராவிடத்தின் பண பலத்தில் அடிமைபட்டு கிடக்கிறோம்... எங்களுக்கான சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக திராவிடத்திடம் இழந்து கொண்டிருக்கிறோம்...

இதே நிலை தொடர்ந்தால் ராமசாமியும் கருணநிதியும் மட்டுமே (மட்டுமே) தமிழ்நாட்டின் அடையாளமாக இருப்பார்கள்... நாங்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக்கபடுவோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

அதை தான் தமிழ் நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் தீர்மானித்தார்கள். இனி அடுத்த தேர்தலில் மீண்டும் தீர்மானிப்பார்கள். 

உண்மை தான்.

தமிழ் நாட்டு மக்கள் தீர்மானித்தார்கள் ஆனால் வெளிநாடுகளில் உள்ள ஈழ தமிழர்களுக்கு பலத்த அதிர்ச்சி தானே. ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிட்டால் ஸ்டாலினுக்கு கட்டுகாசும் கிடையாது என்றே நம்பியிருந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, மியாவ் said:

இதே நிலை தொடர்ந்தால் ராமசாமியும் கருணநிதியும் மட்டுமே (மட்டுமே) தமிழ்நாட்டின் அடையாளமாக இருப்பார்கள்... நாங்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக்கபடுவோம்...

நீங்கள் இந்திய தமிழரா. நான் உங்கள் பேச்சு வழக்கில் இருந்து இலங்கை தமிழர் என நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

அதை தான் தமிழ் நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் தீர்மானித்தார்கள். இனி அடுத்த தேர்தலில் மீண்டும் தீர்மானிப்பார்கள். 

சார்! ஏனைய கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக ஊடகங்களில் பகிரங்கமாக செய்திகள் வந்தது. அதை மறுத்தோ அல்லது எதிர்ப்பு அறிக்கைகள் விடுத்தோ எந்த கட்சியும் மறுப்பறிக்கைகள் விடவில்லை.
இப்படியிருக்கும் போது  தங்களின் புளகாங்கிதம் ஒருவித வக்கிரமமாகவே தெரிகின்றது.
கோழி குருடாய் இருந்தாலும் நமக்கு குழம்பு முக்கியம் பீலிங் ....

வாக்குக்கு பணம் கொடுக்கப்படவில்லை என உங்களால் நிரூபிக்க முடியுமா?
 

Link to comment
Share on other sites

11 hours ago, மியாவ் said:

தமிழநாட்டு மக்கள் தீர்மானிக்கவில்லை...

தமிழகத்தை சுரண்டி தமிழர்களை தேர்தலின் போது பிச்சை எடுக்க வைத்து தமிழர்களை அறியாமையில் மிதக்கவிட்டு தீர்மானிக்க வைத்துள்ளனர்... தமிழகத்தில் சன நாயகமா இருக்கிறது...

ஆங்கலேயனுக்கு பிறகு திராவிடம் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து கொண்டது... தமிழ்நாட்டிற்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்ல... திராவிடத்தின் பண பலத்தில் அடிமைபட்டு கிடக்கிறோம்... எங்களுக்கான சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக திராவிடத்திடம் இழந்து கொண்டிருக்கிறோம்...

இதே நிலை தொடர்ந்தால் ராமசாமியும் கருணநிதியும் மட்டுமே (மட்டுமே) தமிழ்நாட்டின் அடையாளமாக இருப்பார்கள்... நாங்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக்கபடுவோம்...

ஓ அப்படியா!  அப்ப ஒண்டும் செய்யேலாது தான். அது தான் பிரான்ஸில் தமிழ் பிள்ளைகள் அரசியலில் ஈடுபட்ட தலையங்கத்தின் கீழ்  வந்து முறையிடுறீங்களோ. அங்க கஷரம் எண்டால்  பேசாமல்  புலத்திற்கே புகலிடம் தேடி வரலாமே. வந்தால் இங்கே பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு சொகுசாக இருந்து அதி தீவிர தமிழ் தேசியம் பேசலாம் தானே. சும்மா ஒரு ஐடியா தான்.  

(அட நான் ஏற்கனவே அதை தானே செய்து கொண்டிருக்கிறேன் இவர் என்ன ஐடியா கொடுக்க என்று என்னில் பாய்ந்து விழாதீங்க😂

Link to comment
Share on other sites

11 hours ago, goshan_che said:

நீங்கள் இந்திய தமிழரா. நான் உங்கள் பேச்சு வழக்கில் இருந்து இலங்கை தமிழர் என நினைத்தேன்.

ப்ரொஃபைலில் உடனடியாக இடத்தை அப்டேட் செய்து விடுகிறேன்...

எனது தமிழ் அவ்வளவு அழகாகவா இருக்கிறது... மகிழ்ச்சி... 😀

Link to comment
Share on other sites

50 minutes ago, tulpen said:

ஓ அப்படியா!  அப்ப ஒண்டும் செய்யேலாது தான். அது தான் பிரான்ஸில் தமிழ் பிள்ளைகள் அரசியலில் ஈடுபட்ட தலையங்கத்தின் கீழ்  வந்து முறையிடுறீங்களோ. அங்க கஷரம் எண்டால்  பேசாமல்  புலத்திற்கே புகலிடம் தேடி வரலாமே. வந்தால் இங்கே பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு சொகுசாக இருந்து அதி தீவிர தமிழ் தேசியம் பேசலாம் தானே. சும்மா ஒரு ஐடியா தான்.  

(அட நான் ஏற்கனவே அதை தானே செய்து கொண்டிருக்கிறேன் இவர் என்ன ஐடியா கொடுக்க என்று என்னில் பாய்ந்து விழாதீங்க😂

ஒவ்வொரு கருத்திற்கு எதிரான உங்கள் கருத்து சுத்தமாக சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மியாவ் said:

ப்ரொஃபைலில் உடனடியாக இடத்தை அப்டேட் செய்து விடுகிறேன்...

எனது தமிழ் அவ்வளவு அழகாகவா இருக்கிறது... மகிழ்ச்சி... 😀

நிச்சயமாக. உங்களை போல் ஈழத்தமிழர்கள் கூட இப்போ எழுதுவதில்லை. அந்தளவுக்கு எங்களின் தமிழ் மேல் சினிமா பாதிப்பு.

ஆனால் உங்கள் எழுத்தில் தமிழகவாடையே இல்லை. 

அச்சு அசல் ஈழத்தமிழ் எழுத்து. 

பாராட்டுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மியாவ் said:

தமிழநாட்டு மக்கள் தீர்மானிக்கவில்லை...

தமிழகத்தை சுரண்டி தமிழர்களை தேர்தலின் போது பிச்சை எடுக்க வைத்து தமிழர்களை அறியாமையில் மிதக்கவிட்டு தீர்மானிக்க வைத்துள்ளனர்... தமிழகத்தில் சன நாயகமா இருக்கிறது...

ஆங்கலேயனுக்கு பிறகு திராவிடம் தமிழ்நாட்டை ஆக்கிரமித்து கொண்டது... தமிழ்நாட்டிற்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்ல... திராவிடத்தின் பண பலத்தில் அடிமைபட்டு கிடக்கிறோம்... எங்களுக்கான சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக திராவிடத்திடம் இழந்து கொண்டிருக்கிறோம்...

இதே நிலை தொடர்ந்தால் ராமசாமியும் கருணநிதியும் மட்டுமே (மட்டுமே) தமிழ்நாட்டின் அடையாளமாக இருப்பார்கள்... நாங்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக்கபடுவோம்...

எம்.ஜி.ஆர்.    யை. மீண்டும்...மீண்டும்.  ஆட்சியமைக்க தெரிவு செய்த  ....உலக நாடுகளிலெல்லாம்.  வேலை விசாவைப்பெற்று.  பெரிய பதவிகளில். இருக்கின்ற  தமிழகத்தமிழரைப். பார்த்து.  ...நான். தமிழகத் தமிழன். என்று. சொல்லிக்கொண்டு தமிழக்த்தமிழரே.. உங்களைத்.  சுரண்ட முடியும்....உங்களைப்பிச்சையெடுக்க  வைக்கமுடியம்....உங்களை. அறியாமையில். மிதக்க வைக்க முடியம்...என்ற. உங்கள. கருத்தை. நான். எற்றுக்கொள்ளவில்லை ..எனெனில்.  இந்தக்கருத்து. சீமான். வெல்லுதல்....தோற்றல்.  என்பதை. அடிப்படையாக. வைத்து. எழுதப்பட்டது. இந்த 21 ஆம் நூற்றுயாண்டில்.  92%தமிழ்நாட்டு. தமிழ்மக்கள் பற்றி. இப்படி எழுதுவது. கவலையளிக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மியாவ் said:

ஒவ்வொரு கருத்திற்கு எதிரான உங்கள் கருத்து சுத்தமாக சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது...

அதுதான் அவரின் ஸ்டைல். விளங்கும் ஆனால் விளங்காது. பதில் மாதிரி தெரியும் ஆனால் பதிலில்லை.

Link to comment
Share on other sites

40 minutes ago, Kandiah57 said:

எம்.ஜி.ஆர்.    யை. மீண்டும்...மீண்டும்.  ஆட்சியமைக்க தெரிவு செய்த  ....உலக நாடுகளிலெல்லாம்.  வேலை விசாவைப்பெற்று.  பெரிய பதவிகளில். இருக்கின்ற  தமிழகத்தமிழரைப். பார்த்து.  ...நான். தமிழகத் தமிழன். என்று. சொல்லிக்கொண்டு தமிழக்த்தமிழரே.. உங்களைத்.  சுரண்ட முடியும்....உங்களைப்பிச்சையெடுக்க  வைக்கமுடியம்....உங்களை. அறியாமையில். மிதக்க வைக்க முடியம்...என்ற. உங்கள. கருத்தை. நான். எற்றுக்கொள்ளவில்லை ..எனெனில்.  இந்தக்கருத்து. சீமான். வெல்லுதல்....தோற்றல்.  என்பதை. அடிப்படையாக. வைத்து. எழுதப்பட்டது. இந்த 21 ஆம் நூற்றுயாண்டில்.  92%தமிழ்நாட்டு. தமிழ்மக்கள் பற்றி. இப்படி எழுதுவது. கவலையளிக்கிறது. 

தமிழ்நாட்டில் வாக்கு செலுத்தும் உரிமை உள்ள நூறு சதவிகிக மக்களில் 65 முதல் 70% மக்கள் மட்டுமே வாக்கு செலுத்துகின்றனர்... ஓரளவு வாக்குரிமையை புரிந்தவர்களிடம் பாஜக உள்ளே புகுந்து இந்துத்துவத்தை புகுத்திவிடும் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறது திராவிடம்... இது வாக்கு செலுத்துபவர்களில் குறைந்த அளவே உள்ளது... நடுத்தர வர்க்கத்தினரும் வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களிடம் பணத்தை வைத்து விளையாடுகிறது திராவிடம்... இதை தான் மக்களின் அறியாமை என்றேன்...

டல்பன் மக்கள் தான் தேர்வு செய்து விட்டனரே என்ற கருத்திற்கு அடிப்படையாக வைத்து எழுதிய கருத்தாகும்...

நான் சீமானை தவிர்த்து யாரை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டில் இயங்க வேண்டும் என்பதற்கு சம்பந்தமே இல்லாமல் பதிலளித்தார்... சரி அதற்கு பதிலளிப்போம் என்றால் மறுபடியும் சம்பந்தமே இல்லாமல் வேறு பதிலளிக்கிறார்...

இப்பொழுது விவாதம் எதை நோக்கி போகிறது என்றே எனக்கு தெரியவில்லை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.