Jump to content

இன்று எனது  பெரியக்காவின் அதாவது  எனது  இரண்டாவது அம்மாவின் 75 வது  பிறந்தநாள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

இன்று எனது பெரியக்காவின் அதாவது எனது இரண்டாவது அம்மாவின் 75 வது பிறந்தநாள்.
 
அவர் கர்ணனைப்போன்றவர்
 
எவர் இரங்கி எதைக்கேட்டாலும் கொடுத்து உதவும் மனம் கொண்டவர்.
 
இப்படியான மனம் கொண்டவர்களை இன்று பார்ப்பதே அருகிவரும் நிலையில்.....
 
எமது அம்மாவின் துவசத்தன்று நாம் கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி கொடுத்தவரின் மகன் தனது மனைவியை இழந்து தாயாரில்லாத 6 பிள்ளைகளுடன் (4 பெண் பிள்ளைகள் 2 ஆண்பிள்ளைகள்) வாழ்வாதாரத்துக்கு சிரமப்படுவதாக கூறி அவர்களது வீட்டிலேயே கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி தாருங்கள் என்று ஒருமித்த குரலில் உதவி கேட்டதை அக்காவுடன் நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது தம்பி எனது 75வது பிறந்தநாள் வருகின்ற ஆனி 16இல் வருகிறது.
 
அதனை நாம் கொண்டாட வேண்டாம். இந்த குடும்பத்துக்கு உதவுவோம் என்றவர் உடனேயே அதற்கு தேவையான பணத்துக்கும் ஏற்பாடு செய்தார்
 
தனது பிறந்தநாளை எளிமையாக்கி தனது பிறந்தநாளன்று ஒரு குடும்பத்துக்கு வழி காட்டணும் என்ற அவரது விருப்பப்படி அவருக்கு வரும் மிகச்சிறிய பென்சன் பணத்தில் சிறுக சிறுக சேமித்து...............
 
பெரியக்காவின் 75வது பிறந்தநாளான இன்று ....
 
கோழிக்கோடு.
 
கோழிகள் (110)
 
குழாய்கிணறு
 
என மொத்தம் = ‪350 000‬ ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டு ஒரு கோழிப்பண்ணையாக அவரது பிறந்த நாளான இன்று அவர்களுக்கு உடனடியாகவே வருமானம் தரும் வகையில் உருவாக்கி கொடுக்கப்பட்டள்ளது
 
அத்துடன் 3 மாதத்துக்கு தேவையான கோழிகளுக்கான உணவு, மருந்துகள் மற்றும் உணவு, தண்ணீர் கொடுக்க தேவையான பாத்திரங்களும் வாங்கி கொடுக்கப் பட்டுள்ளது.
 
பெரியக்காவின் 75வது பிறந்தநாளான இன்று அவர் செய்த இது போன்ற ஒரு குடும்பத்துக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி தந்து மகிழ்வாக வாழவும் அந்த 6 பிள்ளைகளும் தமது படிப்பு மற்றும் இதர தேவைகளுக்காக எவரிடமும் கையேந்தாது தாமே உழைத்து வாழ உதவியதை இங்கு பதிவிடுவதுடன்
 
அக்கா இன்னும் பலகாலம் நோய் நொடியின்றி வாழ அவரது கிராஞ்சியம்பதி முருகனை வேண்டுகின்றோம்

https://i.postimg.cc/T11nHyZV/IMG-20210413-WA0010.jpg

https://i.postimg.cc/90ky3mhv/IMG-20210413-WA0000.jpg

https://i.postimg.cc/MGYR6bw0/IMG-20210413-WA0008.jpg

https://i.postimg.cc/MGYR6bw0/IMG-20210413-WA0008.jpg

https://i.postimg.cc/bvLDcy03/IMG-20210413-WA0017.jpg

https://i.postimg.cc/DfRcY6wm/IMG-20210413-WA0013.jpg

 

spacer.png

https://i.postimg.cc/d1kNSSGm/IMG-20210615-123618.jpg

spacer.png

spacer.png

 

 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அக்கா இன்னும் பலகாலம் நோய் நொடியின்றி வாழ அவரது கிராஞ்சியம்பதி  முருகனை  வேண்டுகின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அம்மா, வாழ்க வளத்துடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@விசுகு அண்ணாவின் பெரியக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்து.

செய்த நற்காரியத்துக்கு நன்றியும் பாராட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@விசுகு அண்ணாவின் பெரியக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் அம்மாவிற்கு, பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்,

அக்காமார் எல்லோரும் இன்னமொரு அம்மாதான் ஒவ்வொரு வீட்டிலும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயாவின் பெரியக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐💐

நீண்டகாலம் நீடுழி வாழ்ந்து மேலும் நற்காரியங்களைப் புரிய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

விசுகு அண்ணாவின் பெரிய அக்காவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். 

இவ்வாறான முயற்சிகளும் அதை பொது வெளியில் தெரிவிப்பதும் மேலும் சிலரை இதைப் போன்று செய்யத் தூண்டும். யாழில் இதனை பகிர்ந்தமைக்கு நன்றி விசுகு அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு வின் பெரியக்காவுக்கு என் வாழ்த்துக்களும் , அவரது உதவும் மனப்பாங்குக்கு என் நன்றிகளும்  உரித்தாகுக 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள்  பெரியக்கா பல்லாண்டு. நோய் நெடியின்றியும்.  வலுவான. தேக ஆரோக்கியத்துடனும்  வாழ  வாழ்த்துகிறேன். மேலும் இனிய பிறந்தநாள்  வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

விசுகு அண்ணாவின் அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!💐
இன்னும் பல வருடங்கள் சுகமாக வாழ இறைவனை வேண்டுகின்றேன்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவின் அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சங்கவி Images தர்ஷினி❤️அருண் - ShareChat -  இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்

விசுகரின்... பெரியக்காவுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.