Jump to content

இறுதி யுத்தமும் இரைக்காக காத்திருந்த தேசிய உணர்வு சார்ந்த கழுகுகளும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2009 ஆம் ஆண்டு இரண்டாம் மாத காலப்பகுதியில் நான் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் இடத்தை துப்பரவு செய்யும் தொழிலாளியாக வேலை செய்தேன்.
நோர்வேயில் துப்பரவு தொழில் நிறுவனங்களை வழிநடத்திய கோபால், மோகன், செல்வா, சிவா, அண்ணா இவர்களிடம்தான் நான் நோர்வேயில் வசித்த காலத்தில் வேலை செய்தேன்.கோபால் அண்ணா புற்று நோய் வந்து மரணித்து விட்டார்.இறுதியாக சிவா அண்ணாவிடம் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றினேன்.
பெயர் விபரங்களை தெரியப்படுத்துவதற்கு காரணம் என்னை அடையாளப்படுத்துவதற்கு எண்ணில் ஒரு பழக்கம் எந்த பதிவாக இருந்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது.
மாலை 4 மணிக்குப் விமான நிலையத்திற்கு வேலைக்கு சென்றால் அதிகாலை 4 மணிக்கு வேலை முடிந்து பின்னர் காலை ஏழு மணிக்கு 2 வியாபார நிலையங்களை துப்புரவு செய்வதற்காக செல்லவேண்டும் இது அந்தக் காலப்பகுதியில் எனது அன்றாட வேலை.
சரி நான் கூற வந்த பதிவுக்கு வருகிறேன்.2009 இரண்டாம் மாதம் சண்டை புதுக்குடியிருப்பை அண்மித்து விட்டது.தாயகத்தில் இருந்து வந்த அதைவிட புலம் பெயர்ந்த தேசங்களில் தமிழ் மண்ணுக்காக செயல்பட்ட நிதி சேகரிப்பாளர்கள்.நிதி சேகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார்கள்.நோர்வே சுவீடன் 2 நாடுகளையும் உள்ளடக்கி நிதி சேகரித்தவர் எனக்கு அறிமுகமான ஒருவர் நான் சமாதான காலத்தில் தாயகத்தில் அரசியல் போராளியாக கடமையாற்றும் பொழுதும் என்னை அறிந்தவர் முழுமையாக.
நோர்வேயில் ஸ்வீடனில் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்து செயல்பட்ட அதிகமானவர்கள் எனக்கு நண்பர்கள் அறிமுகமானவர்கள்.மிகவும் அவசரமாக
ராணுவத்திடம் பறிபோன நிலங்களை மீட்பதற்காக நிதி சேகரிப்பில் மிகவும் ஆர்வமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.ஒருவரிடம் குறைந்தது 5,000 KR தொடக்கம் 10 000KR(இலங்கை மதிப்பில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் தொடக்கம் 2 லட்சம் வரை)கண்டிப்பாக வழங்க வேண்டும் என்ற உத்தரவு ஆனால் சிலரை வற்புறுத்தி அதிக தொகையை பெற்றுக் கொண்டார்கள்.
கையில் காசு இல்லாதவர்கள் வங்கிக் கடன் அட்டைகள் மூலம் காசை வழங்கி வைத்தார்கள்.சிலருக்கு போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அதிகமான தொகை பெற்றுக் கொள்ளப்பட்டது.நோர்வே தலை நகரத்தில் இருக்கும் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதாவது மீண்டும் நாங்கள் ராணுவத்திடம் பறிபோன நிலங்கள் அனைத்து கைப்பற்றி விடுவோம் அதன்பின் நோர்வேயில் உங்களுக்கு மிகவும் தகுதியான ஒரு பதவியை தருவோம் என்று கூறி 5000KR நோர்வே காசுக்கு வழியில்லாத ஒருவரிடம் 50,000 KR பெற்றுக்கொண்டார்கள் இப்படி பல பேரிடம்.
இவர்கள் அவசரமாக நிதி சேகரிக்கும் பொழுது எனக்கு தெரிந்த நண்பர்கள் அறிமுகமானவர்கள் என்னை தொடர்பு கொண்டு.ஸ்ரீ காசு கேட்கிறார்கள் கொடுக்கலாமா என்று அதிகமானவர்கள் கேட்டார்கள் அவர்களுக்கு நான் கூறிய பதில் கொடுக்காதீர்கள் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் யுத்தம் முடிந்ததும் எமது மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கு என்று.
இந்தத் தகவல் நிதி சேகரித்தவர்களின் காதுகளுக்கு சென்றுவிட்டது என்னை துரோகியாக முத்திரை குத்த தொடங்கிவிட்டார்கள் இது எனக்கு பழகிப் போன ஒன்று.நான் தாயகத்தில் சமாதான காலத்தில் அரசியல் செய்த பொழுது மக்களுக்காக உண்மையாக செயல்பட்ட பொழுது இதேபோல் முத்திரை குத்தப்பட்டேன் சமாதான காலத்தில்.அதன் காரணமாகத்தான் தாயகத்தை விட்டு வெளியேறினேன் மிகுந்த சிரமத்தின் மத்தியில்.
நான் சொல்லிய கருத்தையும் மீறி அதிகமானவர்கள் நிதி வழங்கி வைத்தார்கள் நிச்சயம் எமது தாய்மண்ணை மீட்டெடுப்போம் என்று.
நான் யதார்த்தத்தை மிகவும் புரிந்துகொண்டு செயல்படுபவன் எப்பொழுதுமே.நிச்சயம் எனக்கான பதில் கிடைக்கும் என்று காத்திருந்தேன்.
அன்று நோர்வே சுவீடன் உள்ளடங்கலாக நிதி சேகரிப்பதற்கு நியமிக்கப்பட்ட முக்கிய ஒருவரிடம் 2650 விபரங்கள் இருந்தன நான் இறுதியாக அவரை சந்திக்கும் பொழுது 2000 பேருக்கு மேல் நிதியை வழங்கி அந்த பட்டியலில் முதன்மை வகித்தார்கள்.யுத்தம் முடிவுக்கு வரப்போகிறது இவர்கள் சேர்க்கும் நிதிகள் அங்கு சென்றடையாது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும் ஆனால் என்னை நம்புவதற்கு யாரும் இல்லை அன்று.
2009 ஐந்தாம் மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது.அதன் பின்னும் சில குறிப்பிட்ட மாதங்கள் சில பொய்யான வாக்குறுதிகளை வழங்கி கொண்டிருந்தார்கள் நிதி சேகரிப்பாளர்கள்.நிதியை வசூலிப்பதற்காக அவர்கள் கூறிய வார்த்தைகளை நான் இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை.
சில மாதங்கள் கடந்துவிட்டன.நான் அதிகமானவர்களுக்கு நிதியைக் கொடுக்க வேண்டாம் என்று கூறிய அத்தனை பேரும் என்னை தொடர்பு கொண்டு நிதியை சேகரித்தவரின் தொலைபேசி இலக்கத்தை கேட்கத் தொடங்கி விட்டார்கள் அவர் தலைமறைவாகி விட்டார்.அவர் மட்டுமல்ல அன்று முன்னின்று நிதியை சேகரித்த அத்தனை பேரும் ஒதுங்கிவிட்டார்கள் மறைந்து விட்டார்கள்.
உலகம் ஒரு உருண்டை எங்கு சுற்றினாலும் எங்கோ ஓரிடத்தில் சந்திப்புகள் உருவாக்கப்படும் தொடர்ந்து படியுங்கள்.
கடந்த வருடம் 2020 ஐந்தாம் மாதம் கொரோனா காரணமாக சுவீடன் நோர்வே டென்மார்க் பின்லாந்து நாடுகளில் கட்டுப்பாடுகளை நடைமுறைக்குக் கொண்டுவர தொடங்கிவிட்டார்கள் கொரோனாவை பார்த்து பயந்து.
நானும் எனது தாயாரும் 130 கிலோமீட்டர் தூரம் சென்றால் தான் எமது இலங்கையில் உற்பத்தியாகும் மரக்கறிகளை கொள்வனவு செய்ய முடியும்.
எனது காருக்காக எரிபொருள் நிரப்புவதற்காக ஒரு எரிபொருள் நிலையத்தில் காரை நிறுத்தினேன்.எனது காருக்கு முன்னுக்கு கோடைகாலத்தில் சொகுசு பேருந்தாக பயன்படுத்தப்படும் ஒரு வாகனம் எரிபொருள் நிரப்பிக் கொண்டு இருந்தது.அந்த வாகனத்தை பற்றி கூறுவதாக இருந்தால் சமைத்து சாப்பிடதற்கான வசதி முறைகள் உறங்குவதற்கு மற்றும் மலசலகூட வசதிகள் தொலைக்காட்சிப் பெட்டிகள் இப்படி அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வாகனம்.எனக்கு முன்னே எரிபொருள் நிரப்பிக் கொண்டு இருக்கிறது.அதன் பெறுமதி இலங்கை மதிப்பில் 4 கோடி தொடக்கம் ஏழு கோடி வரும்.மிகவும் புதிய ரக வாகனம்.
எரிபொருளை பூர்த்தி செய்பவரின் பின்பக்கம் தான் எனக்கு தெரிகிறது முதுகு முழுதும் பச்சை குத்தி இருக்கிறார்.பார்ப்பதற்கு அழகாக இருந்தது.திரும்பும் பொழுது அவரின் முகத்தை பார்த்து அதிர்ந்து விட்டேன்.
காரைவிட்டு இறங்கி சென்று பக்கத்தில் பார்த்து விட்டு உரையாட தொடங்கினேன்.
வேறு யாரும் இல்லை தாயகத்திலிருந்து உணர்வோடு தேசிய சிந்தனையோடும் புலம்பெயர்ந்த தேசத்திற்கு வந்து இறுதி யுத்தம் வரை சுவீடன் நோர்வேயில் நிதி சேகரித்த பிரதானமானவர்.
எப்படி அண்ணா இருக்கிறீர்கள்?..என்னை தெரிகிறதா தம்பி எப்படி இருக்கிறீர்கள்?..ஓம் அண்ணா நான் நலமாக இருக்கிறேன்.உங்களைப் பார்த்து 10 வருடங்கள் கடந்து விட்டன..ஓம் தம்பி.
எங்கே போகிறீர்கள்?கொரோனா தானே வீட்டில் இருப்பதை விட பாதுகாப்பான இடத்தில் பொழுதை போக்குவோம் என்று போகிறேன்..
அண்ணா எப்படி போகிறது உங்களது பழைய செயல்பாடுகள் எல்லாம்?..அதை எல்லாம் நான் 2009 உடன் விட்டுவிட்டேன் இப்பொழுது நானும் எனது குடும்பமும்..
என்ன தொழில் செய்கிறீர்கள்?சிங்கப்பூர் துபாய் நாடுகளுக்கு சென்று நகையை எடுத்து வந்து ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வது.நல்ல தொழில் அண்ணா
வாழ்த்துக்கள்
 
.
நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்? நான் ஒரு உணவகத்தில் சமைக்கிறேன் அண்ணா.
என்ன அண்ணா அடையாளம் மாறிவிட்டீர்கள் தேசியம் உணர்வு உண்மையாக செயல்பட்ட ஒருவர் என்று நம்பினேன்.இப்படி உடம்பெல்லாம் பச்சை குத்தி இருக்கிறீர்கள்?மிக சொகுசான வாழ்க்கை வாழ்கிறீர்கள். அது எல்லாம் கடந்த காலம் தம்பி.சரி அண்ணா.
ஒரு கேள்வி உங்களை சந்தித்த படியால்.
2009 ஆம் ஆண்டு நீங்கள் நிதி சேகரிக்கும் பொழுது என்னை குற்றவாளியாக துரோகியாக அடையாளம் காட்டினீர்கள்.என்னை துரோகியாக முத்திரை குத்தி நீங்கள் நிதியை சேகரித்து அந்த நிதியை தாயகத்திற்கு அனுப்பினீர்களா அண்ணா?
தொடர்ந்து வாருங்கள் எனது அடுத்த பதிவில் முடிவு செய்கிறேன் நிகழ்கால தேசியம் சார்ந்த போலிகளை.மக்களுக்காக இன்றைய இளைய சமுதாயத்திற்காக மிகுந்த எதிர்ப்புக்கு மத்தியில் பதிவு செய்கிறேன்.நிகழ்காலத்தை எதிர்காலத்தை சிறந்த முறையில் எமது இளைய சமுதாயம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.
தரன் ஸ்ரீ💐💐💐
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.சிலருக்கு போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அதிகமான தொகை பெற்றுக் கொள்ளப்பட்டது.நோர்வே தலை நகரத்தில் இருக்கும் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதாவது மீண்டும் நாங்கள் ராணுவத்திடம் பறிபோன நிலங்கள் அனைத்து கைப்பற்றி விடுவோம் 

நான் கூறிய பதில் கொடுக்காதீர்கள் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் யுத்தம் முடிந்ததும் எமது மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கு என்று.

இந்தத் தகவல் நிதி சேகரித்தவர்களின் காதுகளுக்கு சென்றுவிட்டது என்னை துரோகியாக முத்திரை குத்த தொடங்கிவிட்டார்கள்

நான் தாயகத்தில் சமாதான காலத்தில் அரசியல் செய்த பொழுது மக்களுக்காக உண்மையாக செயல்பட்ட பொழுது இதேபோல் முத்திரை குத்தப்பட்டேன் சமாதான காலத்தில்.அதன் காரணமாகத்தான் தாயகத்தை விட்டு வெளியேறினேன் மிகுந்த சிரமத்தின் மத்தியில்.

நான் யதார்த்தத்தை மிகவும் புரிந்துகொண்டு செயல்படுபவன்

இவர்கள் சேர்க்கும் நிதிகள் அங்கு சென்றடையாது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும் 

-------------------------------------------------------------------------------------------------------------

என்ன அண்ணா அடையாளம் மாறிவிட்டீர்கள் தேசியம் உணர்வு உண்மையாக செயல்பட்ட ஒருவர் என்று நம்பினேன்.இப்படி உடம்பெல்லாம் பச்சை குத்தி இருக்கிறீர்கள்?

என்னை துரோகியாக முத்திரை குத்தி நீங்கள் நிதியை சேகரித்து அந்த நிதியை தாயகத்திற்கு அனுப்பினீர்களா அண்ணா?

நிகழ்கால தேசியம் சார்ந்த போலிகளை.மக்களுக்காக இன்றைய இளைய சமுதாயத்திற்காக மிகுந்த எதிர்ப்புக்கு மத்தியில் பதிவு செய்கிறேன்.

 

சார அம்சம் இதுதான் ..
நிகழ்கால தேசியம் சார்ந்த ?????  
பதிவுகள் இன்னும் வருமாம். 

Link to comment
Share on other sites

தேசிய உணர்வு சார்ந்த கழுகுகளிற்கு மிக அதிகமான இரை கிடைத்தது சுவிற்சர்லாந்தில் தான். கிட்டத்தட்ட முள்ளிவாய்கால் பேரழிவு போல ஒன்றை ஏற்படுத்தி மக்களின் துன்பத்தில் இரை தேடின.  பாதிக்கப்பட்ட அனைவருமே முன்பு தேசியத்திற்காக விரும்பி பங்களிப்பு செய்தவர்களே. ஏற்கனவே தேசிய விருப்பில் இருந்த மக்கள் விசேடமாக குறிவைக்கப்பட்டு வாய்சவடால்கள் மூலம் உசுப்பேற்றப்பட்டு அவர்களின் சக்திக்கு மிஞ்சி பல்லாயிரம் பிராங்க் வங்கிகளில் கடனெடுக்க நிர்பந்திக்கப்பட்டனர். 

பல்வேறு தந்திரோபாயங்கள் பிரயோகிக்கப்பட்டன. நிதி சேகரிக்க சென்றவரே தனது பெயரில் மிக பெரிய தொகைக்கு கடன் எடுத்து கொடுத்ததாக போலிப்  பத்திரம் தயாரிக்கப்பட்டு அதை காட்டி உணர்வூட்டப்பட்டனர். சில இடங்களில் பேசப்பட்டதற்கு மேலதிகமாக தொகை மாற்றப்பட்டு பல ஆயிரம் பிராங் பெறப்பட்டது. அதற்காக போலி சம்பள பத்திரம் தயாரிக்கப்பட்டது. முதலாவது கட்டுத்தொகைக்கான கடிதம் வங்கியில் இருந்து வரும் போது தான் எவ்வளவு கடனெடுத்ததாக பாதிக்கப்பட்டவர் அறிந்து கொண்டார். அந்த நேரத்தில் நிதி சேர்த பலரின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டன. அழைத்து சென்ற உள்ளூர் பிரநிதிதியே வாங்கி கட்டினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியாது. 

முன்பு தேசிய நிகழ்வுகள் அனைத்துக்கும் ஆர்வத்தோடு வரந்து பங்களிக்கும் பலர் தேசியம் என்ற சொல்லை கேட்டாலே வெறுத்து ஓடி ஒதுங்கும் நிலையை ஏற்படுத்தினர். இங்கு நடந்த  சம்பவங்களை எழுத வெளிக்கிட்டால் பல பக்கங்கள் நீளும்.  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2021 at 15:50, tulpen said:

தேசிய உணர்வு சார்ந்த கழுகுகளிற்கு மிக அதிகமான இரை கிடைத்தது சுவிற்சர்லாந்தில் தான். கிட்டத்தட்ட முள்ளிவாய்கால் பேரழிவு போல ஒன்றை ஏற்படுத்தி மக்களின் துன்பத்தில் இரை தேடின.  பாதிக்கப்பட்ட அனைவருமே முன்பு தேசியத்திற்காக விரும்பி பங்களிப்பு செய்தவர்களே. ஏற்கனவே தேசிய விருப்பில் இருந்த மக்கள் விசேடமாக குறிவைக்கப்பட்டு வாய்சவடால்கள் மூலம் உசுப்பேற்றப்பட்டு அவர்களின் சக்திக்கு மிஞ்சி பல்லாயிரம் பிராங்க் வங்கிகளில் கடனெடுக்க நிர்பந்திக்கப்பட்டனர். 

பல்வேறு தந்திரோபாயங்கள் பிரயோகிக்கப்பட்டன. நிதி சேகரிக்க சென்றவரே தனது பெயரில் மிக பெரிய தொகைக்கு கடன் எடுத்து கொடுத்ததாக போலிப்  பத்திரம் தயாரிக்கப்பட்டு அதை காட்டி உணர்வூட்டப்பட்டனர். சில இடங்களில் பேசப்பட்டதற்கு மேலதிகமாக தொகை மாற்றப்பட்டு பல ஆயிரம் பிராங் பெறப்பட்டது. அதற்காக போலி சம்பள பத்திரம் தயாரிக்கப்பட்டது. முதலாவது கட்டுத்தொகைக்கான கடிதம் வங்கியில் இருந்து வரும் போது தான் எவ்வளவு கடனெடுத்ததாக பாதிக்கப்பட்டவர் அறிந்து கொண்டார். அந்த நேரத்தில் நிதி சேர்த பலரின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டன. அழைத்து சென்ற உள்ளூர் பிரநிதிதியே வாங்கி கட்டினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியாது. 

முன்பு தேசிய நிகழ்வுகள் அனைத்துக்கும் ஆர்வத்தோடு வரந்து பங்களிக்கும் பலர் தேசியம் என்ற சொல்லை கேட்டாலே வெறுத்து ஓடி ஒதுங்கும் நிலையை ஏற்படுத்தினர். இங்கு நடந்த  சம்பவங்களை எழுத வெளிக்கிட்டால் பல பக்கங்கள் நீளும்.  

 

 

உங்களுக்கு  இவை  மட்டுமே  நன்றாக வரும்  என்பது தெரிந்தது தான்

எழுதுங்கோவன்

ஆனால்  பெயர் சாட்சிகளுடன் எழுதுங்கள்

துரோகிகளும்  மக்களது  பணத்தை  ஏப்பம் விட்டவர்களும் இனம்  காட்டப்படணும் என்பது எவ்வளவு  முக்கியமோ

அதே அளவு ஒரு சுற்றவாளியோ அல்லது எல்லோரையும்  ஒரு மூட்டைக்குள் போட்டு அடிப்பதோ தவிர்க்கப்படணும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.