Jump to content

கொழும்பு அரசியல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: சுதந்திர கட்சி

(எம்.மனோசித்ரா)
ஆளுங்கட்சியின்  கூட்டணிக்குள்  இருந்தாலும் பாரபட்சமான முறையிலேயே  பங்காளி கட்சிகள் வழிநடத்தப்படுகின்றனர். எவ்வித கலந்துரையாடல்களுக்கோ தீர்மானங்களை எடுக்கும் சந்தர்ப்பங்களிலோ ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்த நிலையிலேயே  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

அரசாங்கத்திற்குள் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து வினவிய போதே பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச வீரகேசரிக்கு இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசாங்கத்தின் பிரச்சினையாகும். எரிபொருள் விலை அதிகரிப்பிற்காக  விடயத்திற்கு  பொறுப்பான  உதயகம்மன்பில  பதவி விலக வேண்டுமெனில் உரம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று அதனுடன் தொடர்புடைய அமைச்சர் பதவி விலக வேண்டும். அதே போன்று பேர்ள் கப்பல் விவகாரத்தில் துறைமுக அமைச்சரும், கொவிட் தொற்றால் கல்வித்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் என சகலரும் பதவி விலக வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகிறது.

நாட்டில் இன்று பிரச்சினை அற்ற துறை எது? எனவே ஒவ்வொருவர் மீது பொறுப்பினை சுமத்தி நாட்டை நிர்வகிக்க முடியாது. அமைச்சரவை ஒத்துழைப்புகள் இங்கு முக்கியத்துவமுடையவையாகவுள்ளன. எரிபொருள் விலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள சாகர காரியவசம் ஏன் விவசாயிகளின் உரப்பிரச்சினை தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை? எனவே அரசாங்கம் தற்போது பொதுவானதொரு தீர்மானத்திற்கு வர வேண்டும்.

எவ்வாறிருப்பினும் அரசாங்கத்திலுள்ள கூட்டணியில் காணப்படுகின்ற பிரச்சினைகளே இன்று வெளிப்பட்டுள்ளன. காரணம் அரசாங்கத்தின் பங்காளி கட்சியொன்றின் தலைவர் மீதே இவ்வாறு குற்றஞ்சுமத்தப்படுகிறது. எனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற ரீதியில் இந்த செயற்பாட்டை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். எரிபொருள் கொள்வனவு செய்ய நிதியில்லை என்று கூறுபவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகவே பேச வேண்டும்.

மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல் இவ்வாறு செயற்படுவது பொறுத்தமற்றது. 5000 ரூபா கொடுப்பனவில் ஒரு மாதம் முழுவதுமான தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியுமா ? இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக அரசியல் விளையாட்டொன்றிற்கு இவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் அரசியல் முரண்பாடுகளே தற்போது வெளிப்பட்டுள்ளன. பொருளாதார பிரச்சினைகளே அரசியல் முரண்பாடுகளாகியுள்ளன. இந்த அரசியல் முரண்பாடுகள் எதிர்காலத்தில் எவ்வாறு தொடரும் என்று தெரியாது. கொவிட் தொற்றின் காரணமாக மாத்திரமே மக்கள் வீதிகளில் இறங்காமலுள்ளனர். எதிர்வரும் காலங்களில் எவ்வாறான நிலைமை ஏற்படும் கூறுவது கடினம்.

உதக கம்மன்பில கூறியதைப் போன்று அரசாங்கத்திற்குள்ளேயே அதனை சீரழிப்பதற்கான எதிரிகள் உள்ளனர் என்பது உண்மை. ஆனால் இதன்  ஊடாக அவர் சுதந்திர கட்சியை சாடவில்லை. காரணம் எமக்கும் அரசாங்கத்துடன் அதிருப்தியே காணப்படுகிறது. கூட்டணி ரீதியாக எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை. சுதந்திர கட்சிக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. நாம் கூறும் விடயங்களை  அவர்கள் கேட்பதும் இல்லை. எனவே தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மேலும் தீவிரமடையக் கூடும் என்றார்.

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: சுதந்திர கட்சி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - எதிர்க்கட்சி

எம்.மனோசித்ரா)

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பொருளாதார ரீதியில் மக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை , அமைச்சரவை அனுமதியின்றி எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்தை உள்ளிட்ட 10 காரணிகளை முன்வைத்து வலிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கையெழுத்திட்டுள்ளனர்.

IMG-20210616-WA0026.jpg

அதற்கமைய அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளாவன,

அரசியலமைப்பின் 43(1) உறுப்புரைக்கமைய அமைச்சரவையானது பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற போதிலும் , அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் அமைச்சரவையின் அனுமதியின்றி அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக எழுத்து மூலம் அறிவித்துள்ளமை,  

IMG-20210616-WA0029.jpg

அரசியலமைப்பின் 27(1) உறுப்புரைக்கமைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கமையவான கோட்பாடுகளை மீறியுள்ளதோடு , அரசியலமைப்பின் 28 ஆவது உறுப்புரைக்கமைய பிரதான பொறுப்புக்களை புறந்தள்ளியுள்ளமை மற்றும் அரசியலமைப்பின் 53 ஆவது உறுப்புரைக்கமைய செய்து கொண்ட சத்தியப்பிரமாணத்தையும் மீறியுள்ளமை,

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பானது 2020 ஆம் ஆண்டு பாரியளவில் வீழ்ச்சியடைந்த போதிலும் இலங்கையில் எரிபொருள் விலையைக் குறைக்காமல் உயர் விலையை பேணி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் அரசாங்கம் பெற்றுக் கொண்ட இலாபம் தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் மற்றும் மக்களுக்கும் தெரிவிக்காமை,

IMG-20210616-WA0028.jpg

அத்தோடு உலக சந்தையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டமைக்கான பயனை மக்களுக்கான அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பின் மூலம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமை ,

இவ்வாறு கிடைத்த இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இரு வருடங்களுக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை ,

IMG-20210616-WA0035.jpg

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த போது கிடைக்கப் பெற்ற இலாபத்தை , மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படும் போது பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தால் ஸ்தாபிப்பதாக கூறப்பட்ட எரிபொருள் விலையை முறையாக பேணுவதற்கான நிதியத்திற்கு என்ன ஆயிற்று என்பது தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்தாமை ,

விலை குறைவின் போது அரசாங்கம் பெற்றுக் கொண்ட இலாபத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கை வங்கியிடமிருந்து பெற்றுக் கொண்ட கடனை மீள செலுத்துவதற்கு உபயோகிப்பதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை ,

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு , இதன் காரணமாக கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பொருளாதார ரீதியில் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளமை,

IMG-20210616-WA0024.jpg

உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால் ஏற்றுமதியுடன் தொடர்புடைய சகல பொருளாதாரத்தினையும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளமை ,

அரசாங்கத்தை நியமித்த போது மக்கள் வழங்கிய நிகழ்ச்சி நிரல், அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அரசியலமைப்பை மீறியுள்ளமை , மீண்டும் மீண்டும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டுள்ளமை என்பவற்றின் காரணமாக அமைச்சர் உதய கம்மன்பில தொடர்ந்தும் அந்த பதவியை வகிக்க முடியாது என்ற யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - எதிர்க்கட்சி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி தலைவர் கூட்டம் திட்டமிட்ட வகையில் நிறுத்தப்பட்டுள்ளது: விரைவில் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளோம்..!

இராஜதுரை ஹஷான்)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின்  பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான தொடர்பு இல்லாமல் போயுள்ளது. பிரதமருக்கும், பங்காளி கட்சி தலைவர்களுக்கும் இடையில் ஒவ்வொரு வாரமும் இடம்பெறும் கட்சி தலைவர் கூட்டம் திட்டமிட்ட வகையில்  நிறுத்தப்பட்டுள்ளது.  கூட்டணிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன தெரிவித்தார்.

thisa.jpg

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 எரிபொருள் விலையேற்றம் குறித்து அமைச்சரவை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை  பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விமர்சனத்திற்குள்ளாக்கி தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தயுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்திற்கு கூட்டணியின் பங்காளி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த வேளையிலும் இவர் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில்  ஊடகங்களுக்கு மத்தியில் கருத்துரைத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல்களில் கூட்டணியாக ஒன்றிணைந்து போட்டியிட்டோம். பொதுத்தேர்தலுக்கு பின்னர் கூட்டணியினை பலப்படுத்தும்  கொள்கை திட்டங்கள் வகுக்கப்படவில்லை. மாறாக கூட்டணியை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெற்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும்,  ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் இடையிலான தொடர்பு அண்மை காலமாக முறையாக பேணப்படவில்லை. பிரதமர் தலைமையில் ஒவ்வொரு வாரமும் இடம்பெற்ற கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களின் கூட்டம் திட்டமிட்ட வகையில் நிறுத்தப்பட்டுள்ளது..

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் சிரேஷ்ட அரசியல் தலைவர்களை உள்ளிடக்கி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியம் என்ற கோரிக்கையை  ஒன்றினைந்து முன்வைத்துள்ளோம். கூட்டணிக்குள் காணப்படும் பிரச்சினைகள் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என்றார்

கட்சி தலைவர் கூட்டம் திட்டமிட்ட வகையில் நிறுத்தப்பட்டுள்ளது: விரைவில் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளோம்..! | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் வினைத்திறனற்ற அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வெளிகிட்டிட்டானுகள் போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்மன் பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ஜே.வி.பி. யின் தீர்மானம் விரைவில்...

(எம்.மனோசித்ரா)
பசில் ராஜபக்ஷ நாட்டில் இருந்திருந்தால்  எரிபொருள் விலை அதிகரித்திருக்காது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையின் பின்னணியில் பசிலே காணப்படுகிறார். அவரின் நோக்கத்தை இலகுவாக நிறைவேற்றும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அமையக் கூடும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஜே.வி.பி. கட்சி மட்டத்தில் கலந்தாலோசித்து உரிய தீர்மானத்தை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

download__4_.jpg

அவர் மேலும் கூறுகையில்,

எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்புக்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே உதய கம்மன்பில, சாகர காரியவசம் நாடகம் அரங்கேற்றப்படுகிறது. பசில் நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள் விலை அதிகரித்திருக்காது என்று கூறுகின்றனர். அவ்வாறெனில் அவர் ஜனாதிபதியையும் பிரதமரையும் விட அதிகாரம் மிக்கவரா?

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் ,  சாகர காரியவசம் உதய கம்மன்பிலவிற்கு எதிராக வெளியிட்டுள்ள அறிக்கையின் பின்னணியில் பசில் ராஜபக்ஷவே இருக்கிறார். எனவே தற்போது ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அவரது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இலகுவானதாக அமையலாம்.

எனவே வாழக்கை செலவு குறித்த அமைச்சரவை உப குழுவில் இந்த தீர்மானத்தை எடுத்த சகலருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி இதுவரையில் எமக்கு கிடைக்கப் பெறவில்லை. கிடைத்ததன் பின்னர் அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் கட்சி மட்டத்தில் ஆராய்ந்து ஜே.வி.பி. தீர்மானத்தை அறிவிக்கும் என்றார்.

கம்மன் பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ஜே.வி.பி. யின் தீர்மானம் விரைவில்... | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பிரச்சனைகள் வரும் என்று தான் அடுத்த தேர்தலில் தனி மொட்டுகட்சியில் தேர்தலில் நிற்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுக்கின்றனர் ராஜாபக்சா குடும்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் போட்ட தகிடு தத்தம் கனநாளைக்கு தாக்குபிடிக்காது என்பது அவர்கள் தெரிந்தே வைத்திருந்தார்கள். தங்கள் அலுவல் முடியுமட்டும் எல்லோரும் சமம் என்று ஏற்றியே வேலை வாங்குவார்கள். காரியம் முடிந்ததும் ஏற்றிவிட்டவர்களை உதைத்து தள்ளி விட்டு இவர்கள் ஏறி நின்று கோசம் போடுவார்கள். தெரிந்தும் அதே பிழையை தொடந்து செய்து கையை சுட்டுக்கொள்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரண்பாடுகளுக்கு ஆளும் கட்சி தீர்வைக் காணாவிடில் கூட்டணி பலவீனமடையும்  -  வாசு எச்சரிக்கை

இராஜதுரை ஹஷான்

 

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான  ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடு காணப்படுகிறது. முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். இல்லாவிடின்  கூட்டணி பலவீனமடையும் என  நீர் வழங்கல் துறை அமைச்சர்  வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 

 

 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

 

 எரிபொருள் விலையினை அதிகரிக்கும் தீர்மானத்தை வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில  தன்னிச்சையாக எடுக்கவில்லை அதற்கான அதிகாரமும் அவருக்கு கிடையாது.  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான அமைச்சரவை உப குழுவின் அனுமதியுடன் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

 

vaasudeva.JPG

 

 எரிபொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை  வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என   பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்ட கருத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின்  8 பிரதான பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.

இவ்வாறான நிலையில்  வலு சக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவிற்கு எதிராக   ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர உள்ளார்கள்.இந்த நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெறாது என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிவார்கள்.

பொதுஜன பெரமுன தலைமையிலான  ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிக்கும்,  பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. இதற்கு விரைவில் ஒரு தீர்வு பெற வேண்டும். இல்லாவிடின் கூட்டணி பலவீனமடையும் என்றார்.

முரண்பாடுகளுக்கு ஆளும் கட்சி தீர்வைக் காணாவிடில் கூட்டணி பலவீனமடையும்  -  வாசு எச்சரிக்கை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமலிடமிருந்து முக்கிய அதிகாரங்கள் பறிப்பு

அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கீழிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமுக் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அமுலுக்கு வரும் வகையில், தொழிற்துறை அமைச்சு, விவசாய அமைச்சின் கீழிருந்த இயக்கங்கள், பொறுப்புகள், நிறுவகங்களைத் திருத்தும் புதிய அரசிதழ் அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்துள்ளார்.

Tamilmirror Online || விமலிடமிருந்து முக்கிய அதிகாரங்கள் பறிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

நேற்று முன்தினம் அமுலுக்கு வரும் வகையில், தொழிற்துறை அமைச்சு, விவசாய அமைச்சின் கீழிருந்த இயக்கங்கள், பொறுப்புகள், நிறுவகங்களைத் திருத்தும் புதிய அரசிதழ் அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்துள்ளார்

கோட்டாபய ராஜபக்‌ஷ தொடங்கிற்றார் ஆட்டத்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரவன்சவின் அமைச்சில் மாற்றம் ; ஆளுந்தரப்பின் பங்காளிக் கட்சிகள் மீதான மற்றொரு தாக்குதல் - அமைச்சர் வாசு

(எம்.மனோசித்ரா)

ஆளுந்தரப்பின் கூட்டணிக்குள் காணப்படும் பங்காளி கட்சிகள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. அமைச்சர் உதய கம்மன்பிலவை அடுத்து, தற்போது அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சுடன் தொடர்புடைய விடயதானங்களில் மாற்றங்களை செய்திருப்பது பங்காளிகட்சிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பிரிதொரு தாக்குதலாகும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்தார்.

291.jpg

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நாம் ஒன்றிணைந்து ஸ்தாபித்த இந்த அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். இவ்வாறு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற போதிலும் , ஆளுந்தரப்பின் கூட்டணிக்குள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

அவற்றில் ஒன்று அமைச்சர் உதய கம்மன்பில மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். தற்போது அமைச்சர் விமல் வீரவன்சவின் நிர்வாகத்தின் கீழ் இருந்த லங்கா பாஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாரிய நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த இந்த நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக அமைச்சர் விமல் வீரவன்சவே மாற்றியிருந்தார். இது மீண்டும் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான எமக்கு ஏற்படுள்ள தாக்கமாகும். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்றார்.

வீரவன்சவின் அமைச்சில் மாற்றம் ; ஆளுந்தரப்பின் பங்காளிக் கட்சிகள் மீதான மற்றொரு தாக்குதல் - அமைச்சர் வாசு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்கிறார் பசில் ?

(லியோ நிரோஷ தர்ஷன்)

 

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். ஆளும் கட்சிக்குள் பல்வேறுப்பட்ட முரண்பாடுகள் மேலோங்கியுள்ள நிலையில் இவரது வருகை குறித்து பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் அறுதல் அடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 6 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பெசில் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளதாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

 

basil.JPG

 

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் இவர் பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவித்த அவர் எரிப்பொருள் விலையை மீண்டும் குறைத்து  அரசாங்கம் தொடர்பில் சிறந்த பிம்பத்தை உருவாக்குவது இவரது தற்போதைய நோக்கமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எரிப்பொருள் விலையேற்றத்தின் நியாய தன்மையை ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதனை மீண்டும் குறைப்பது என்பது அரசாங்கத்திற்குள் காணப்படும் நெருக்கடிகளை வெளிப்படுத்துவதாக அமைவதுடன் நம்பக தன்மைக்கும் சவாலாகி விடும் எனவும் தெரிவித்தார்.

 

எனவே பசில் ராஜபக்ஷ  பாராளுமன்ற உறுப்பினராகி அமைச்சராவது என்பது ஆளும் கட்சிக்குள் எரியும் தீயில் பெட்ரோலை ஊத்துவதாகவும் அமையலாம் அல்லது சிதறியுள்ள கட்சியை ஒன்றிணைப்பதாகவும் அமையலாம் என்பதே  பலரினதும் கணிப்பாகின்றது.

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்கிறார் பசில் ? | Virakesari.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.