Jump to content

'சாட்டை துரைமுருகன் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியா?' - குற்றச்சாட்டும் விளக்கமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மணல் கடத்தல் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாக அவரை கடுமையாகச் சாடி ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார் சாட்டை துரைமுருகன்.

மிரட்டல் வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்ற யூ-டியூபர் சாட்டை துரைமுருகன். மீண்டும் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும் கட்சியினர் செயல்படுவதாகப் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது
 
சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது

கடந்த சில தினங்களுக்கு முன், சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் அதன் உரிமையாளர் வினோத் என்பவர், தமிழ் ஈழத்துக்காகப் போராடிய பிரபாகரனையும், அவருடைய கொள்கையையும், சீமானையும் கடுமையாக விமர்சனம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

 

இந்தநிலையில் ட்விட்டர் கருத்து மோதல்கள் முற்றிய நிலையில், சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் உள்ளிட்ட நான்கு பேர் சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்துக்குச் சென்று பிரபாகரனை விமர்சித்த வினோத்தை நேரில் சந்தித்துப் பேசியதோடு,

சாட்டை துரைமுருகன்
 
சாட்டை துரைமுருகன்

காவல்துறையினர் முன்னிலையில் வினோத்தை மறுப்பு தெரிவித்து, மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட வேண்டும் என்று எச்சரித்து வீடியோவும் வெளியிடச் செய்துள்ளனர். அவர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்துபோய் வினோத் கே.கே.நகர் காவல்துறையினருக்குப் புகார் கொடுத்திருக்கிறார். அதன் பெயரில் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நால்வரும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதே நேரத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மணல் கடத்தலுடன் தொடர்புப்படுத்திப் பேசியதாகக் கரூர் மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி கொடுத்த புகாரில் கரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்த வழக்கில் தற்போது மீண்டும் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு லால்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம். ”விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான எங்கள் அண்ணன் சீமானை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிடுகிறார். அவரை எங்களது தம்பிகள் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுத் தவறு என்றும் அடிப்படை முகாந்திரம் இல்லாத கருத்துக்களைச் சொல்வதாகவும், அதனை மறுத்து வருத்தம் தெரிவித்து இன்னொரு வீடியோ பதிவிடும்படி சொல்லியிருக்கிறார்கள். அதனைப் பொருட்படுத்தாமல் வினோத்

அதே தவறையே செய்கிறார் என்றால் என்ன அர்த்தம். இந்நிலையில் தான் எங்கள் அண்ணன்கள் நான்கு பேர் வினோத்திடம் நேரடியாகச் சந்தித்துப் பேசுகிறார்கள்.அதற்கு அவர் மிரட்டியதாக கே.கே நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார், அதன் பேரில் போலீஸாரும் கைது செய்கிறார்கள். வழக்கை விட்டுத்தள்ளுங்கள் அதனை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். கடந்த ஆண்டு, மணல் கடத்தல் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாக அவரை கடுமையாகச் சாடி தனது யூ-டியூப் சேனலில் ஒரு வீடியோவைப் பதிவுசெய்தார் சாட்டை துரைமுருகன்.

நாம் தமிழர் நிர்வாகிகளைக் கைது செய்த போலீஸார்
 
நாம் தமிழர் நிர்வாகிகளைக் கைது செய்த போலீஸார்

அப்போது எல்லாம் விட்டுவிட்டு இப்போது வழக்குப் போட்டு கைது செய்கிறது என்றால் என்ன அர்த்தம். அடுத்ததாக கலைஞரை விமர்சனம் செய்த வழக்கில் மீண்டும் கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரியவருகிறது. இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும் கட்சி செய்யும் செயல் " என ஆவேசமாகக் கூறினார்.

 

இது தொடர்பாக திருச்சி தி.மு.க பிரமுகர் சூர்யா சிவாவிடம் பேசினோம்.”கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான கட்சி தி.மு.க என்கிற தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். அரசியல் தலையீடு, அரசியல் காழ்ப்புணர்ச்சி இதில் எதுவுமே கிடையாது. தி.மு.க-வை பெருத்தவரைக் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் கட்சி. அண்ணா,கலைஞர் ஆட்சிக்காலத்திலிருந்து பார்த்தால் நன்கு புரியும். வாய் இருந்தால் போதும், யார்? யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், ஊழல் புகார் குற்றச்சாட்டுகளை அடுக்கலாம். என்பதற்குச் சாட்டை துரைமுருகன் ஒரு எடுத்துக்காட்டு. கடந்த ஆண்டுகளில் தி.மு.க-அ.தி.மு.க உள்ள முக்கிய தலைவர்களைக் காது கொடுத்துக்கூடக் கேட்க முடியாத அளவிற்குக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி சாட்டை துரைமுருகன் பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

 

இது சரியா? உங்கள் தலைவரை ஒருவர் தவறாகப் பேசுகிறார் என்றதும் எல்லோரும் வரிந்துகட்டிக்கொண்டு நேரில் சென்று மன்னிப்பு கேட்டு, வீடியோ பதிவிடும்படி வற்புறுத்துகிறீர்களே அது தவறு இல்லையா? உங்களுக்கு இருக்கும் கருத்துச் சுதந்திரம் வினோத்துக்கும் தானே இருக்கிறது. எதற்காக அவரை சாட்டை துரைமுருகன் மிரட்டவேண்டும். ஒருவர் மீது ஊழல் புகார் குற்றச்சாட்டுகளைச் சொல்வதற்கு முன் ஆதாரங்களை வைத்துக்கொண்டு தானே பேசவேண்டும். ஆதாரம் இல்லாமல் பேசியதால் அவர் மீது கட்சி நிர்வாகிகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதன் பெயரில் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் எங்கிருந்து வருகிறது அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது”என்றார் காட்டமாக.

'சாட்டை துரைமுருகன் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியா?' - குற்றச்சாட்டும் விளக்கமும்| YouTuber Duraimurugan arrested by karur police (vikatan.com)

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்..போன எல்லாரும் பட்டதாரிகள் என்கிறார்! அந்தக் கட்சி வழக்கறிஞருக்கு ஒரு போன் போட்டு "இப்படி செய்தால் பிரச்சினை வருமா?" என்று ஒரு கேள்வி கேட்டு விட்டுப் போயிருக்கலாம்!

நிச்சயமாக லோயர் போகாதீங்கடா என்று தான் சொல்லியிருப்பார்!

விளக்கத்திற்கு நன்றி இசை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சு இருக்கிறோம் என்கிறாங்கள் 
பட்டம் பெற்று இருக்கிறோம் என்கிறாங்கள் 

கொம்பு முளைத்து சொந்த இனத்துக்கு எதிராக 
பேசிக்கொண்டு தெரியாமல் 
போலீசு சிறை என்று திரிகிறார்கள் 

என்ன மனுஷங்களோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

படிச்சு இருக்கிறோம் என்கிறாங்கள் 
பட்டம் பெற்று இருக்கிறோம் என்கிறாங்கள் 

கொம்பு முளைத்து சொந்த இனத்துக்கு எதிராக 
பேசிக்கொண்டு தெரியாமல் 
போலீசு சிறை என்று திரிகிறார்கள் 

என்ன மனுஷங்களோ? 

மனுசனுக்கு.... 
கொம்பு, முளைத்தால்....
குதிரை மாதிரி.... குத்தும்.  🙃 :grin:

குதிரை எப்படி, குத்தும்... என்று கேட்காதீங்க.
கருத்துக்களை ஆரம்பத்தில் இருந்து, வாசித்துப் பாருங்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.