Jump to content

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

June 17, 2021
spacer.png

சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்று வந்த முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புனரமைக்கப்படும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இராணுவத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி  மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்ஸவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, குறித்த கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக, குருந்தூர் மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பண்டைய சிலை இல்லமும் விரைவில் தோண்டப்படவுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது. கடந்த ஒருமாத காலமாகப் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இறுக்கமான சுகாதார நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்த நிலையில் மீண்டும் மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளரம குறிப்பிடத்தக்கது

 

https://globaltamilnews.net/2021/162432/

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

புத்தன் அண்ணா,
அவன் விகாரை கட்டினால் உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்களுக்கு சோறு முக்கியம் அதுக்காக அவங்கடை *** கழுவவும் தயங்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாதவூரான் said:

புத்தன் அண்ணா,
அவன் விகாரை கட்டினால் உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்களுக்கு சோறு முக்கியம் அதுக்காக அவங்கடை *** கழுவவும் தயங்க கூடாது.

அதுதானே எனக்கு என்ன?ஆனால் ஒன்று சொல்ல தானே வேணும் "நாங்கள் மாறினாலும் அவங்கள் மாறமாட்டாங்கள்" என்பதை ஏனையோருக்கு அறிய தரவேண்டியது இருப்பது எமது கடமையல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

யார் அந்த கறுப்பாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

யார் அந்த கறுப்பாடு

நான் பெயர் சொல்ல மாட்ட்ன். பிறகு தெரியும் தானே. உள்ள வெடிகுண்டுகள் எல்லாம் இதுக்கை நிண்டு ஒரே டும் டும் தான்.💣 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

எவன் புலி என்று உச்சரிக்கிறானோ அவன் எங்களுக்கு விரோதி....
நான் நேசனல் ஜொகிரபி  சனலை பார்ப்பதில்லை காரணம் அவர்கள் அதிகம் புலி சிங்கத்தை வேட்டை ஆடுவது போல அடிக்கடி காட்டுகிறார்கள் ....பக்கசார்பான சனல் போல தெரிகின்றது புலம் பெயர்ந்த கோஸ்டிகள் அந்த சனலுக்கு காசு கொடுக்கினம் போல இருக்கு..... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

48க்கு முன்பே திட்டமிடப்பட்டு படிப்படியாக முன்னேறி வரும் திட்டம் இது.

70 களிலேயே கொக்காவிலில் ஒரு குடியேற்றத்தை நிறுவ யோசித்துள்ளார்கள்.

83-2009 வேகம் மட்டுப்பட்டிருந்தது. இப்போ மட்டற்று தொடக்கிறது.

இதை செய்தியாக படித்து ஆதங்கத்தை பகிர்வதை தவிர எதையும் செய்ய கூடிய நிலையில் யாரும் இல்லை.

 

 

53 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

ஆனால் நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது. 

சொந்த நாட்டில் நிகழும் நில அபகரிப்பை தடுக்க எதுவும் செய்ய வக்கற்ற நிலையில் - தமிழ் நாட்டில் ஒரு குறித்த அரசியல்வாதியை எதிர்த்தும், ஆதரித்தும் நாம் ஏதோ வரலாற்று கடமை செய்வதாக நம்மை நாமே ஏமாற்றுகிறோம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சட்டாம்பியார் நீதிமன்றத்துக்கு இதுகளை கொண்டுபோக மாட்டார். அரபிக்கல்லூரி, துமிந்த சில்வா போன்றோருக்காகத்தான் வாதாடுவார். பயணத்தடை அமுலில், கொரோனாத்தடை உள்ள நேரத்தில் இதுகள் செய்யலாமோ, கூடலாமோ? ஏழைத்தமிழர் வயிற்று பிழைப்புக்காக வெளியில் வந்தால் மட்டும் தண்டிப்பது என்ன நீதி? என்று நீதிமன்றத்தில் கேட்கக்கூடாதோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

83-2009 வேகம் மட்டுப்பட்டிருந்தது. இப்போ மட்டற்று தொடக்கிறது.

இதை செய்தியாக படித்து ஆதங்கத்தை பகிர்வதை தவிர எதையும் செய்ய கூடிய நிலையில் யாரும் இல்லை.

 

 

 

 

 

உண்மை புலம்பிக் கொண்டு மண்டையை போட வேண்டியது . தான்....வேறு என்னத்தை செய்ய ?கிட்ட தட்ட 30 வருடங்கள் உயிர் தியாகம் செய்து தடுத்த சகல போராளிகளுக்கும் 🙏🙏

Just now, satan said:

எங்கட சட்டாம்பியார் நீதிமன்றத்துக்கு இதுகளை கொண்டுபோக மாட்டார். அரபிக்கல்லூரி, துமிந்த சில்வா போன்றோருக்காகத்தான் வாதாடுவார். பயணத்தடை அமுலில், கொரோனாத்தடை உள்ள நேரத்தில் இதுகள் செய்யலாமோ, கூடலாமோ? ஏழைத்தமிழர் வயிற்று பிழைப்புக்காக வெளியில் வந்தால் மட்டும் தண்டிப்பது என்ன நீதி? என்று நீதிமன்றத்தில் கேட்கக்கூடாதோ? 

மீன் விற்றால் கைது விகாரை கட்டினால் விசிலடிக்கும் சிங்கள ஜனதாவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் எங்கட தலையள் விடுகிற பிழை. சிங்களவனுக்காக வாதாடுவினம். தன் மக்களுக்காக, உரிமைக்காக வாயே திறக்க மாட்டினம். பிறகு தாங்கள் தான்  தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று பல்லவி பாடுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

உதெல்லாம் எங்கட தலையள் விடுகிற பிழை. சிங்களவனுக்காக வாதாடுவினம். தன் மக்களுக்காக, உரிமைக்காக வாயே திறக்க மாட்டினம். பிறகு தாங்கள் தான்  தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று பல்லவி பாடுவினம்.

அதுகளும் கலைச்சு போட்டுதுகள் ....இவ்வளவு காலமும் குத்திமுறிந்து வெளிநாட்டு தூதுவர்களுடன் கதைத்தது தான் மிச்சம்... இருந்தும் அதில் சில நன்மைகள் உண்டு...இரத்தம் சிந்தியும்,உயிர் தியாகம் செய்தும் சரவதேசம் பார்க்காத நிலையில் இன்று சில காய் நகர்த்தல்கள் (சர்வதேசம் அவர்கள் நலன் சார்ந்து) நடை பெறுகிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது ஒரு இனம் ஆனாலும் சரி அடிபட்டு தோற்றுவிட்டால் அடிமாடாய் போய்விடுவோம் அடிமைப்பட்டுவிடுவோம்.

ஆயுதங்கள் கொண்டு ஒரு கொடூர எதிரியுடன் மோதியவர்கள் தோற்றுவிட்டால் ஊரைவிட்டு வெளியேறிவிடவேண்டும் அல்லது உயிரை விட்டுவிடவேண்டும் இல்லையேல் காலம் முழுவதும் எதிரியின் அவமானபடுத்தலை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் அதை பார்த்துக்கொண்டே  வாழ்ந்து முடிக்கவேண்டும்.

இதுதான் இன்றைய எம் இனத்தின் நிலை, இது இனிமேல் போக போக  இதைவிட மோசமாக  இருக்கபோகிறது என்பதை நினைத்தால் பல ஆயிரம் மைல்கள் கடந்து வாழ்ந்தாலும் சிங்களவன் கைகளுக்கு இடையே எம் கழுத்து நெரிக்கப்படுவதுபோல் மூச்சு திணறும் உணர்வு.

அந்த இரக்கமற்ற தேசத்திலிருந்து எஸ்கேப் ஆன எங்களுக்கே அப்படியென்றால் அங்கே  இருக்கும் எம்மவர்களின் நிலையை  நினைத்தால், என்னவாக போகிறார்களோ என்று தெரியவில்லை.

ஆயுதபோராட்டம் நடந்த காலத்தில் போர்க்கால இருளாகதான் இருந்தது ஆனால் பார்வை இருந்தது, என்றாவது ஒருநாள் வெளிச்சத்தை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

தற்போது இருளுக்குள் வாழும்போது பார்வையும் சேர்த்து பறி போய்விட்டது. என்னதான் ஆக போகுதோ எம்மினத்தின் எதிர்காலமும் இருப்பும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் பறிபோகும் தமிழர் நிலங்கள்: பயணத்தடையிலும் விகாரைக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

 
21-60c9fe922669d-696x522.jpeg
 48 Views
இலங்கையில்  கோவிட் 19 தீவிர பரவல்நிலை காரணமாகப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புனருஸ்தானம் செய்யப்பட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
 
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 13 .06.2021 (ஞாயிற்றுக்கிழமை ) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் பிரதானி மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்சவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
 
21-60c9fe9244fb8-1024x768.jpeg
 
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, 13.06.2021 அன்று இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக குருந்தூர் மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடந்த மே 18 அன்று குருந்தூர் மலையில் தொல்பொருள் துறை புராதன ஸ்தூபியின் அகழ்வாராய்ச்சியை முடித்த நிலையில், குருந்தாவசோக ரஜமாஹா விகாரைக்கான புனருஸ்தான பணிகள் பிரித்தோதும் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அத்தோடு பண்டைய சிலை இல்லமும் விரைவில் தோண்டப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
21-60c9fe9217012.jpeg
 
இந்த நிலையிலேயே மீண்டும் மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது.
 
ஒன்றுகூடுவதற்கு ஆலயங்களில் சமய நிகழ்வுகளை நடாத்துவதற்குத் தடைகள் விதிக்கப்பட்டு தமிழர் பரதேசங்களில் கைது நடவடிக்கையில் இடம்பெற்று வரும் நிலையில், அந்த நிலைமைகளுக்கு மாறாக குருந்தூர் மலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
21-60c9fe925fa6a.jpeg
 
ஏற்கனவே நில அளவை திணைக்களத்தால் 79 ஏக்கர் நிலங்கள் குருந்தூர் மலை தொல்லியல் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளன.
 
குருந்தூர் மலை புராதன விகாரையின் பிரதான தளம் தற்போது 420 ஏக்கர் என வரையறுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் பாரிய சிதைவுகளைக் கொண்ட நிலப்பரப்பைக் கொண்ட பௌத்த பூமி குருந்தூர் மலை எனவும் மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் குருந்தூர் மலை விகாரைக்கான புனித பூமி தொல்பொருள் தளத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தொல்பொருள் துறை குறிப்பிடுவதாகவும் குருந்தூர்மலை விகாரைக்கான உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
21-60c9fe92354e9.jpeg
 
குருந்தூர் மலையைச் சூழவும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான வயல் நிலங்கள், குடியிருப்பு விவசாய காணிகள் என்பன காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது ஒரு இனம் ஆனாலும் சரி அடிபட்டு தோற்றுவிட்டால் அடிமாடாய் போய்விடுவோம் அடிமைப்பட்டுவிடுவோம்.

ஆயுதங்கள் கொண்டு ஒரு கொடூர எதிரியுடன் மோதியவர்கள் தோற்றுவிட்டால் ஊரைவிட்டு வெளியேறிவிடவேண்டும் அல்லது உயிரை விட்டுவிடவேண்டும் இல்லையேல் காலம் முழுவதும் எதிரியின் அவமானபடுத்தலை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் அதை பார்த்துக்கொண்டே  வாழ்ந்து முடிக்கவேண்டும்.

இதுதான் இன்றைய எம் இனத்தின் நிலை, இது இனிமேல் போக போக  இதைவிட மோசமாக  இருக்கபோகிறது என்பதை நினைத்தால் பல ஆயிரம் மைல்கள் கடந்து வாழ்ந்தாலும் சிங்களவன் கைகளுக்கு இடையே எம் கழுத்து நெரிக்கப்படுவதுபோல் மூச்சு திணறும் உணர்வு.

அந்த இரக்கமற்ற தேசத்திலிருந்து எஸ்கேப் ஆன எங்களுக்கே அப்படியென்றால் அங்கே  இருக்கும் எம்மவர்களின் நிலையை  நினைத்தால், என்னவாக போகிறார்களோ என்று தெரியவில்லை.

ஆயுதபோராட்டம் நடந்த காலத்தில் போர்க்கால இருளாகதான் இருந்தது ஆனால் பார்வை இருந்தது, என்றாவது ஒருநாள் வெளிச்சத்தை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

தற்போது இருளுக்குள் வாழும்போது பார்வையும் சேர்த்து பறி போய்விட்டது. என்னதான் ஆக போகுதோ எம்மினத்தின் எதிர்காலமும் இருப்பும்?

நான் ஓர் நாட்டுக்கு செல்கிறேன் அது எனக்கு புதிது எனது கலை கலாச்சாரங்கள் முற்று முழுதாக களையப்பட்டு வாழப்பழகிக்கொள்கிறேன்  அது எனது இசைவாக்கமாகிறது 

தற்போது இலங்கையும் யுத்தம் முடிந்து புதிய நாடு அவர்கள் சட்டம் அதற்குள் நாங்களும் இதை எதிர்ப்பவர்கள் மேல் நான் சொன்ன வசனத்துக்குள் புதுந்துகொண்டவர்கள்  அவர்கள் அங்கே வாழப்பழகிக்கொண்டவர்கள். நாங்கள் பழகிக்கொள்ள பழக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் ,  இதை உங்களைப்போல் புரிந்து கொண்டவர்களிடம் மட்டுமே இப்படியான பதிலகளை எதிர்பார்க்கலாம் . 😍

 

அதாவது  கு*** டி கழுவுறம்  கிழக்கில் கு... சொல்ல மாட்டார்கள் வடக்கில்  சொல்வார்கள் என நினைக்கிறன் பழக்க தோசம் எந்த நாடு சென்றாலும் மாறாது எனவும் நினைக்கிறன் .🤐

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது நாட்டுக்குள் வாழப் போகிறவர்கள் அந்த நாட்டு பழக்க வழக்கங்களோடு தங்கள் வழக்கங்களையும் சேர்த்தே கொண்டுசெல்கிறார்கள். தங்களது வழக்கங்களை களைந்து சோரம் போய் வாழவில்லை என நினைக்கின்றேன். இங்கு நாம் பிறந்து, வளர்ந்தநாடு. எமது உரிமைகள் பலவந்தமாக பிடுங்கப்பட்டிருக்கிறது. தட்டிக்கேட்க முடியாவிட்டாலும் முண்டுகொடுக்காமலிருக்கலாம். அப்படி அடிமையாய் வாழுவதற்கு இது ஒன்றும் முடிக்குரிய நாடல்ல, ஜனநாயக நாட்டில் எமது உரிமைகளை பெற முடியாத  போது நமக்கு  தேர்தல்களும் தேவையில்லை, பிரதிநிதிகளும் தேவையில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஓர் நாட்டுக்கு செல்கிறேன் அது எனக்கு புதிது எனது கலை கலாச்சாரங்கள் முற்று முழுதாக களையப்பட்டு வாழப்பழகிக்கொள்கிறேன்  அது எனது இசைவாக்கமாகிறது 

தற்போது இலங்கையும் யுத்தம் முடிந்து புதிய நாடு அவர்கள் சட்டம் அதற்குள் நாங்களும் இதை எதிர்ப்பவர்கள் மேல் நான் சொன்ன வசனத்துக்குள் புதுந்துகொண்டவர்கள்  அவர்கள் அங்கே வாழப்பழகிக்கொண்டவர்கள். நாங்கள் பழகிக்கொள்ள பழக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் ,  இதை உங்களைப்போல் புரிந்து கொண்டவர்களிடம் மட்டுமே இப்படியான பதிலகளை எதிர்பார்க்கலாம் . 😍

 

அதாவது  கு*** டி கழுவுறம்  கிழக்கில் கு... சொல்ல மாட்டார்கள் வடக்கில்  சொல்வார்கள் என நினைக்கிறன் பழக்க தோசம் எந்த நாடு சென்றாலும் மாறாது எனவும் நினைக்கிறன் .🤐

 

தனி,
முக்கியமான விசயத்தை மறந்து கதைக்கிறியள். இங்கே யாரும் உங்களுடைய கலை கலாச்சாரங்களை மறந்து வாழுங்கோ என்று வற்புறுத்தவில்லை. ஆனால் இலங்கையில் அப்படியல்ல. ஒன்றைத்திணிக்கும் போது பெரும்பாலான மக்கள் எதிர்க்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் அடிமையாகிறார்கள்.நீங்கள் எல்லாத்தையும் மறந்து வாழப்போறன் எண்டால் வாழுங்கோ யாரும் உங்களைக் கேட்கமாட்டினம். ஆனால்நான் வாழுறன் ஆகவேநீயும் வாழு என்றோ,நீங்கள் வாழுவது தான் சரியானது ,மற்றவர்கள் செய்வது எல்லாம் பிழையானது என்று சொல்லமுடியாது. உங்கள் எசமானர்களுக்கு வெள்ளையடிப்பதற்காக அடிமையாக வாழக்கூட தீர்மானித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, வாதவூரான் said:

தனி,
முக்கியமான விசயத்தை மறந்து கதைக்கிறியள். இங்கே யாரும் உங்களுடைய கலை கலாச்சாரங்களை மறந்து வாழுங்கோ என்று வற்புறுத்தவில்லை. ஆனால் இலங்கையில் அப்படியல்ல. ஒன்றைத்திணிக்கும் போது பெரும்பாலான மக்கள் எதிர்க்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் அடிமையாகிறார்கள்.நீங்கள் எல்லாத்தையும் மறந்து வாழப்போறன் எண்டால் வாழுங்கோ யாரும் உங்களைக் கேட்கமாட்டினம். ஆனால்நான் வாழுறன் ஆகவேநீயும் வாழு என்றோ,நீங்கள் வாழுவது தான் சரியானது ,மற்றவர்கள் செய்வது எல்லாம் பிழையானது என்று சொல்லமுடியாது. உங்கள் எசமானர்களுக்கு வெள்ளையடிப்பதற்காக அடிமையாக வாழக்கூட தீர்மானித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த உலகு இலகுவானது. இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர்களுக்கு அது சவாலானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2021 at 14:26, வாதவூரான் said:

தனி,
முக்கியமான விசயத்தை மறந்து கதைக்கிறியள். இங்கே யாரும் உங்களுடைய கலை கலாச்சாரங்களை மறந்து வாழுங்கோ என்று வற்புறுத்தவில்லை. ஆனால் இலங்கையில் அப்படியல்ல. ஒன்றைத்திணிக்கும் போது பெரும்பாலான மக்கள் எதிர்க்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் அடிமையாகிறார்கள்.நீங்கள் எல்லாத்தையும் மறந்து வாழப்போறன் எண்டால் வாழுங்கோ யாரும் உங்களைக் கேட்கமாட்டினம். ஆனால்நான் வாழுறன் ஆகவேநீயும் வாழு என்றோ,நீங்கள் வாழுவது தான் சரியானது ,மற்றவர்கள் செய்வது எல்லாம் பிழையானது என்று சொல்லமுடியாது. உங்கள் எசமானர்களுக்கு வெள்ளையடிப்பதற்காக அடிமையாக வாழக்கூட தீர்மானித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

பல விளக்குகள் அணைந்து இருக்கிறது  ஒரு விளக்கு எரிந்து வெளிச்சம் காண்பிக்க போவதில்லை  

யுத்தம் முடிந்த பிறது  ஆர்ப்பாட்டகள் , கண்டனங்களால் , பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது  இதனால் சாதகமான சம்பவங்கள் ஏதேனும் நடந்திருக்கிறதா சொல்லுங்கள் , வடகிழக்கு பிரிக்கப்பட்டது நல்லாட்சி அரசாங்கத்துக்கு வெள்ளையடித்தார்கள் இணைக்கமுடிந்தததா அரசியல் வாதிகளாலே ஒன்றையும் அசைக்கமுடியவில்லை அடிமையாகி போனமக்களால என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்  நீங்கள் சொன்ன அடிமையான மக்கள்தான் இங்கே ஓரலவுக்கேனும்  கைது காணாமல் போதல் என்பவற்றில் இருந்து  நிம்மதியாக வாழ்கிறார்கள் .

அதை நீங்கள் அடிமைகள் என புரிந்துகொண்டால்  நான் ஒன்றும் செய்ய முடியாது நீங்கள் ஒன்றை மறந்து கதைக்கிறியள் நான் இலங்கையை  பற்றி கதைக்கிறன்   நான் இதுவரை எந்த எசமானிக்கும்  வெள்ளையடிப்பதில்லை என் மனதுக்கு பட்டதை எழுதுகிறேன் .

நான் அடிமையாக வாழவில்லை  அதை நீங்கள் இங்கிருந்து பார்த்தால் மட்டுமே உணர்ந்துகொள்ளமுடியும் பசியுள்ளவனுக்கே தெரியும் ஒரு பிடி சோற்றின் அருமை 
நன்றி 

On 18/6/2021 at 15:19, satan said:

எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த உலகு இலகுவானது. இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர்களுக்கு அது சவாலானது.

அப்படியானால் நித்தியானந்தா  போல தனித்தீவு வாங்கவேண்டும்  எப்படி வசதி சாட்டான் இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் முயற்சிக்க வேண்டும்  அப்படி தீவு வாங்கினால்  வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களை அங்கே குடியிருக்க வசதிகளை செய்யலாம் நாங்கள் இப்படித்தான் வாழ்வோம் என 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது, அங்கு போராடினாற்தான் வாழ முடியும். போராடாமல் தலையாட்டி வாழ்ந்தால் எப்போதுமே அடிமைகளாகவே இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இந்த வெறுப்பு ஏன்? வெளிநாட்டு மதங்கள் தமிழ் தாயகத்தில் எல்லா இடங்களிலும் தங்கள் பிரார்த்தனை வீடுகளை கட்டி வருகின்றன. நம் மக்களும் வெட்கமின்றி வெள்ளைக் கடவுள்களிடம் மண்டியிடுகிறார்கள். தமிழ் தாயகத்தில் பூர்வீக மதம் ஏன் தங்கள் வழிபாட்டுத் தலங்களை உருவாக்க முடியாது? புத்தர் தமிழர்களுக்கு அந்நியமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Buthan said:

இந்த வெறுப்பு ஏன்? வெளிநாட்டு மதங்கள் தமிழ் தாயகத்தில் எல்லா இடங்களிலும் தங்கள் பிரார்த்தனை வீடுகளை கட்டி வருகின்றன. நம் மக்களும் வெட்கமின்றி வெள்ளைக் கடவுள்களிடம் மண்டியிடுகிறார்கள். தமிழ் தாயகத்தில் பூர்வீக மதம் ஏன் தங்கள் வழிபாட்டுத் தலங்களை உருவாக்க முடியாது? புத்தர் தமிழர்களுக்கு அந்நியமல்ல.

இது வெறுப்பு இல்லை.  குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் புத்த மதத்தினராக இருந்தால் அவர்களே விகாரையைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் கட்டுவது யார்? எதற்காகக் கட்டுகின்றார்கள் என்று தெரியவில்லையா? 

சைவ மக்கள், கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள் தாங்கள் வாழும் இடங்களில் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக கோவில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் அமைப்பதை யாரும் எதிர்ப்பதில்லை.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாத இடங்களில், பூர்வீக தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்தி முழு நாடுமே சிங்களப் புத்தர்களுக்குச் சொந்தமானது என்று தம்மதீபக் கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடும், சிங்களப் பெளத்த மேலாதிக்கத்தை தமிழர்கள், மற்றைய இனங்கள் மீது ஏவும் வகையிலும் இராணுவ, அரச இயந்திரங்களை எல்லாம் பாவித்து, அடாத்தாக குருந்தூர் மலையில் விகாரையைக் கட்டும்போது அதனை எதிர்க்கத்தான் வேண்டும்.

அரசின் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு, தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டியடிப்பதையும் ஆதரிப்பவர்களால்தான் இப்படியான அடாத்தான அபகரிப்பை சரியென்று சொல்லமுடியும். 

புத்தர் தமிழர்களுக்கு அந்நியமில்லை என்பதால்தான் கந்தரோடையில் தமிழ் பெளத்த சின்னங்க்கள் உள்ளன. ஆனால் தமிழர்கள் இப்போது பெளத்தர்கள் இல்லை.

Link to comment
Share on other sites

17 hours ago, satan said:

வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது, அங்கு போராடினாற்தான் வாழ முடியும். போராடாமல் தலையாட்டி வாழ்ந்தால் எப்போதுமே அடிமைகளாகவே இருக்க வேண்டும்.

 

9 hours ago, கிருபன் said:

இது வெறுப்பு இல்லை.  குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் புத்த மதத்தினராக இருந்தால் அவர்களே விகாரையைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் கட்டுவது யார்? எதற்காகக் கட்டுகின்றார்கள் என்று தெரியவில்லையா? 

சைவ மக்கள், கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள் தாங்கள் வாழும் இடங்களில் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக கோவில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் அமைப்பதை யாரும் எதிர்ப்பதில்லை.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாத இடங்களில், பூர்வீக தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்தி முழு நாடுமே சிங்களப் புத்தர்களுக்குச் சொந்தமானது என்று தம்மதீபக் கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடும், சிங்களப் பெளத்த மேலாதிக்கத்தை தமிழர்கள், மற்றைய இனங்கள் மீது ஏவும் வகையிலும் இராணுவ, அரச இயந்திரங்களை எல்லாம் பாவித்து, அடாத்தாக குருந்தூர் மலையில் விகாரையைக் கட்டும்போது அதனை எதிர்க்கத்தான் வேண்டும்.

அரசின் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு, தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டியடிப்பதையும் ஆதரிப்பவர்களால்தான் இப்படியான அடாத்தான அபகரிப்பை சரியென்று சொல்லமுடியும். 

புத்தர் தமிழர்களுக்கு அந்நியமில்லை என்பதால்தான் கந்தரோடையில் தமிழ் பெளத்த சின்னங்க்கள் உள்ளன. ஆனால் தமிழர்கள் இப்போது பெளத்தர்கள் இல்லை.

வெளிநாட்டு மதம் காலனித்துவவாதிகள் நம்மீது திணிக்கப்பட்டது, இன்னும் சிலர் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கதவுகளைத் தட்டி, ஏழை மக்களை வற்புறுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் இல்லாத இடங்களில் தேவாலயங்களைக் கட்டினர், பின்னர் முயற்சித்து மதமாற்றம் செய்கிறார்கள். இதுதான் உண்மையான பிரச்சினை, புத்த கோவில்கள் அல்ல. மக்கள் வெளிநாட்டு மதத்திற்கு மாறுவது ஏன் ஏற்றுக்கொள்ளத்தக்கது? ஆனால் புத்த மதத்திற்கு அல்ல. எந்தவொரு வெளிநாட்டு மதமும் நம் நிலத்தில் புத்த மதத்தை விட மோசமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Buthan said:

 

வெளிநாட்டு மதம் காலனித்துவவாதிகள் நம்மீது திணிக்கப்பட்டது, இன்னும் சிலர் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கதவுகளைத் தட்டி, ஏழை மக்களை வற்புறுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் இல்லாத இடங்களில் தேவாலயங்களைக் கட்டினர், பின்னர் முயற்சித்து மதமாற்றம் செய்கிறார்கள். இதுதான் உண்மையான பிரச்சினை, புத்த கோவில்கள் அல்ல. மக்கள் வெளிநாட்டு மதத்திற்கு மாறுவது ஏன் ஏற்றுக்கொள்ளத்தக்கது? ஆனால் புத்த மதத்திற்கு அல்ல. எந்தவொரு வெளிநாட்டு மதமும் நம் நிலத்தில் புத்த மதத்தை விட மோசமானது.

ஆ, அப்படியா..😧

ஐயா.. 

இலங்கைத் தமிழர் சைவர்களா அல்லது இந்துக்களா என்பதற்கு ஆற அமர இருந்து தெளிவான பதிலைத் தாருங்கள். 

பின்னர் எந்தச் சமயம் ஆபத்தானது என்ற விவாதத்திற்கு வருவோம். 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.