Jump to content

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

June 17, 2021
spacer.png

சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்று வந்த முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புனரமைக்கப்படும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இராணுவத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி  மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்ஸவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, குறித்த கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக, குருந்தூர் மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பண்டைய சிலை இல்லமும் விரைவில் தோண்டப்படவுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது. கடந்த ஒருமாத காலமாகப் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இறுக்கமான சுகாதார நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்த நிலையில் மீண்டும் மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளரம குறிப்பிடத்தக்கது

 

https://globaltamilnews.net/2021/162432/

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

புத்தன் அண்ணா,
அவன் விகாரை கட்டினால் உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்களுக்கு சோறு முக்கியம் அதுக்காக அவங்கடை *** கழுவவும் தயங்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாதவூரான் said:

புத்தன் அண்ணா,
அவன் விகாரை கட்டினால் உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்களுக்கு சோறு முக்கியம் அதுக்காக அவங்கடை *** கழுவவும் தயங்க கூடாது.

அதுதானே எனக்கு என்ன?ஆனால் ஒன்று சொல்ல தானே வேணும் "நாங்கள் மாறினாலும் அவங்கள் மாறமாட்டாங்கள்" என்பதை ஏனையோருக்கு அறிய தரவேண்டியது இருப்பது எமது கடமையல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

யார் அந்த கறுப்பாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

யார் அந்த கறுப்பாடு

நான் பெயர் சொல்ல மாட்ட்ன். பிறகு தெரியும் தானே. உள்ள வெடிகுண்டுகள் எல்லாம் இதுக்கை நிண்டு ஒரே டும் டும் தான்.💣 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

எவன் புலி என்று உச்சரிக்கிறானோ அவன் எங்களுக்கு விரோதி....
நான் நேசனல் ஜொகிரபி  சனலை பார்ப்பதில்லை காரணம் அவர்கள் அதிகம் புலி சிங்கத்தை வேட்டை ஆடுவது போல அடிக்கடி காட்டுகிறார்கள் ....பக்கசார்பான சனல் போல தெரிகின்றது புலம் பெயர்ந்த கோஸ்டிகள் அந்த சனலுக்கு காசு கொடுக்கினம் போல இருக்கு..... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

48க்கு முன்பே திட்டமிடப்பட்டு படிப்படியாக முன்னேறி வரும் திட்டம் இது.

70 களிலேயே கொக்காவிலில் ஒரு குடியேற்றத்தை நிறுவ யோசித்துள்ளார்கள்.

83-2009 வேகம் மட்டுப்பட்டிருந்தது. இப்போ மட்டற்று தொடக்கிறது.

இதை செய்தியாக படித்து ஆதங்கத்தை பகிர்வதை தவிர எதையும் செய்ய கூடிய நிலையில் யாரும் இல்லை.

 

 

53 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

ஆனால் நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது. 

சொந்த நாட்டில் நிகழும் நில அபகரிப்பை தடுக்க எதுவும் செய்ய வக்கற்ற நிலையில் - தமிழ் நாட்டில் ஒரு குறித்த அரசியல்வாதியை எதிர்த்தும், ஆதரித்தும் நாம் ஏதோ வரலாற்று கடமை செய்வதாக நம்மை நாமே ஏமாற்றுகிறோம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சட்டாம்பியார் நீதிமன்றத்துக்கு இதுகளை கொண்டுபோக மாட்டார். அரபிக்கல்லூரி, துமிந்த சில்வா போன்றோருக்காகத்தான் வாதாடுவார். பயணத்தடை அமுலில், கொரோனாத்தடை உள்ள நேரத்தில் இதுகள் செய்யலாமோ, கூடலாமோ? ஏழைத்தமிழர் வயிற்று பிழைப்புக்காக வெளியில் வந்தால் மட்டும் தண்டிப்பது என்ன நீதி? என்று நீதிமன்றத்தில் கேட்கக்கூடாதோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

83-2009 வேகம் மட்டுப்பட்டிருந்தது. இப்போ மட்டற்று தொடக்கிறது.

இதை செய்தியாக படித்து ஆதங்கத்தை பகிர்வதை தவிர எதையும் செய்ய கூடிய நிலையில் யாரும் இல்லை.

 

 

 

 

 

உண்மை புலம்பிக் கொண்டு மண்டையை போட வேண்டியது . தான்....வேறு என்னத்தை செய்ய ?கிட்ட தட்ட 30 வருடங்கள் உயிர் தியாகம் செய்து தடுத்த சகல போராளிகளுக்கும் 🙏🙏

Just now, satan said:

எங்கட சட்டாம்பியார் நீதிமன்றத்துக்கு இதுகளை கொண்டுபோக மாட்டார். அரபிக்கல்லூரி, துமிந்த சில்வா போன்றோருக்காகத்தான் வாதாடுவார். பயணத்தடை அமுலில், கொரோனாத்தடை உள்ள நேரத்தில் இதுகள் செய்யலாமோ, கூடலாமோ? ஏழைத்தமிழர் வயிற்று பிழைப்புக்காக வெளியில் வந்தால் மட்டும் தண்டிப்பது என்ன நீதி? என்று நீதிமன்றத்தில் கேட்கக்கூடாதோ? 

மீன் விற்றால் கைது விகாரை கட்டினால் விசிலடிக்கும் சிங்கள ஜனதாவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் எங்கட தலையள் விடுகிற பிழை. சிங்களவனுக்காக வாதாடுவினம். தன் மக்களுக்காக, உரிமைக்காக வாயே திறக்க மாட்டினம். பிறகு தாங்கள் தான்  தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று பல்லவி பாடுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

உதெல்லாம் எங்கட தலையள் விடுகிற பிழை. சிங்களவனுக்காக வாதாடுவினம். தன் மக்களுக்காக, உரிமைக்காக வாயே திறக்க மாட்டினம். பிறகு தாங்கள் தான்  தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று பல்லவி பாடுவினம்.

அதுகளும் கலைச்சு போட்டுதுகள் ....இவ்வளவு காலமும் குத்திமுறிந்து வெளிநாட்டு தூதுவர்களுடன் கதைத்தது தான் மிச்சம்... இருந்தும் அதில் சில நன்மைகள் உண்டு...இரத்தம் சிந்தியும்,உயிர் தியாகம் செய்தும் சரவதேசம் பார்க்காத நிலையில் இன்று சில காய் நகர்த்தல்கள் (சர்வதேசம் அவர்கள் நலன் சார்ந்து) நடை பெறுகிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது ஒரு இனம் ஆனாலும் சரி அடிபட்டு தோற்றுவிட்டால் அடிமாடாய் போய்விடுவோம் அடிமைப்பட்டுவிடுவோம்.

ஆயுதங்கள் கொண்டு ஒரு கொடூர எதிரியுடன் மோதியவர்கள் தோற்றுவிட்டால் ஊரைவிட்டு வெளியேறிவிடவேண்டும் அல்லது உயிரை விட்டுவிடவேண்டும் இல்லையேல் காலம் முழுவதும் எதிரியின் அவமானபடுத்தலை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் அதை பார்த்துக்கொண்டே  வாழ்ந்து முடிக்கவேண்டும்.

இதுதான் இன்றைய எம் இனத்தின் நிலை, இது இனிமேல் போக போக  இதைவிட மோசமாக  இருக்கபோகிறது என்பதை நினைத்தால் பல ஆயிரம் மைல்கள் கடந்து வாழ்ந்தாலும் சிங்களவன் கைகளுக்கு இடையே எம் கழுத்து நெரிக்கப்படுவதுபோல் மூச்சு திணறும் உணர்வு.

அந்த இரக்கமற்ற தேசத்திலிருந்து எஸ்கேப் ஆன எங்களுக்கே அப்படியென்றால் அங்கே  இருக்கும் எம்மவர்களின் நிலையை  நினைத்தால், என்னவாக போகிறார்களோ என்று தெரியவில்லை.

ஆயுதபோராட்டம் நடந்த காலத்தில் போர்க்கால இருளாகதான் இருந்தது ஆனால் பார்வை இருந்தது, என்றாவது ஒருநாள் வெளிச்சத்தை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

தற்போது இருளுக்குள் வாழும்போது பார்வையும் சேர்த்து பறி போய்விட்டது. என்னதான் ஆக போகுதோ எம்மினத்தின் எதிர்காலமும் இருப்பும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் பறிபோகும் தமிழர் நிலங்கள்: பயணத்தடையிலும் விகாரைக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

 
21-60c9fe922669d-696x522.jpeg
 48 Views
இலங்கையில்  கோவிட் 19 தீவிர பரவல்நிலை காரணமாகப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புனருஸ்தானம் செய்யப்பட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
 
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 13 .06.2021 (ஞாயிற்றுக்கிழமை ) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் பிரதானி மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்சவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
 
21-60c9fe9244fb8-1024x768.jpeg
 
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, 13.06.2021 அன்று இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக குருந்தூர் மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடந்த மே 18 அன்று குருந்தூர் மலையில் தொல்பொருள் துறை புராதன ஸ்தூபியின் அகழ்வாராய்ச்சியை முடித்த நிலையில், குருந்தாவசோக ரஜமாஹா விகாரைக்கான புனருஸ்தான பணிகள் பிரித்தோதும் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அத்தோடு பண்டைய சிலை இல்லமும் விரைவில் தோண்டப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
21-60c9fe9217012.jpeg
 
இந்த நிலையிலேயே மீண்டும் மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது.
 
ஒன்றுகூடுவதற்கு ஆலயங்களில் சமய நிகழ்வுகளை நடாத்துவதற்குத் தடைகள் விதிக்கப்பட்டு தமிழர் பரதேசங்களில் கைது நடவடிக்கையில் இடம்பெற்று வரும் நிலையில், அந்த நிலைமைகளுக்கு மாறாக குருந்தூர் மலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
21-60c9fe925fa6a.jpeg
 
ஏற்கனவே நில அளவை திணைக்களத்தால் 79 ஏக்கர் நிலங்கள் குருந்தூர் மலை தொல்லியல் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளன.
 
குருந்தூர் மலை புராதன விகாரையின் பிரதான தளம் தற்போது 420 ஏக்கர் என வரையறுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் பாரிய சிதைவுகளைக் கொண்ட நிலப்பரப்பைக் கொண்ட பௌத்த பூமி குருந்தூர் மலை எனவும் மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் குருந்தூர் மலை விகாரைக்கான புனித பூமி தொல்பொருள் தளத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தொல்பொருள் துறை குறிப்பிடுவதாகவும் குருந்தூர்மலை விகாரைக்கான உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
21-60c9fe92354e9.jpeg
 
குருந்தூர் மலையைச் சூழவும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான வயல் நிலங்கள், குடியிருப்பு விவசாய காணிகள் என்பன காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது ஒரு இனம் ஆனாலும் சரி அடிபட்டு தோற்றுவிட்டால் அடிமாடாய் போய்விடுவோம் அடிமைப்பட்டுவிடுவோம்.

ஆயுதங்கள் கொண்டு ஒரு கொடூர எதிரியுடன் மோதியவர்கள் தோற்றுவிட்டால் ஊரைவிட்டு வெளியேறிவிடவேண்டும் அல்லது உயிரை விட்டுவிடவேண்டும் இல்லையேல் காலம் முழுவதும் எதிரியின் அவமானபடுத்தலை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் அதை பார்த்துக்கொண்டே  வாழ்ந்து முடிக்கவேண்டும்.

இதுதான் இன்றைய எம் இனத்தின் நிலை, இது இனிமேல் போக போக  இதைவிட மோசமாக  இருக்கபோகிறது என்பதை நினைத்தால் பல ஆயிரம் மைல்கள் கடந்து வாழ்ந்தாலும் சிங்களவன் கைகளுக்கு இடையே எம் கழுத்து நெரிக்கப்படுவதுபோல் மூச்சு திணறும் உணர்வு.

அந்த இரக்கமற்ற தேசத்திலிருந்து எஸ்கேப் ஆன எங்களுக்கே அப்படியென்றால் அங்கே  இருக்கும் எம்மவர்களின் நிலையை  நினைத்தால், என்னவாக போகிறார்களோ என்று தெரியவில்லை.

ஆயுதபோராட்டம் நடந்த காலத்தில் போர்க்கால இருளாகதான் இருந்தது ஆனால் பார்வை இருந்தது, என்றாவது ஒருநாள் வெளிச்சத்தை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

தற்போது இருளுக்குள் வாழும்போது பார்வையும் சேர்த்து பறி போய்விட்டது. என்னதான் ஆக போகுதோ எம்மினத்தின் எதிர்காலமும் இருப்பும்?

நான் ஓர் நாட்டுக்கு செல்கிறேன் அது எனக்கு புதிது எனது கலை கலாச்சாரங்கள் முற்று முழுதாக களையப்பட்டு வாழப்பழகிக்கொள்கிறேன்  அது எனது இசைவாக்கமாகிறது 

தற்போது இலங்கையும் யுத்தம் முடிந்து புதிய நாடு அவர்கள் சட்டம் அதற்குள் நாங்களும் இதை எதிர்ப்பவர்கள் மேல் நான் சொன்ன வசனத்துக்குள் புதுந்துகொண்டவர்கள்  அவர்கள் அங்கே வாழப்பழகிக்கொண்டவர்கள். நாங்கள் பழகிக்கொள்ள பழக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் ,  இதை உங்களைப்போல் புரிந்து கொண்டவர்களிடம் மட்டுமே இப்படியான பதிலகளை எதிர்பார்க்கலாம் . 😍

 

அதாவது  கு*** டி கழுவுறம்  கிழக்கில் கு... சொல்ல மாட்டார்கள் வடக்கில்  சொல்வார்கள் என நினைக்கிறன் பழக்க தோசம் எந்த நாடு சென்றாலும் மாறாது எனவும் நினைக்கிறன் .🤐

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது நாட்டுக்குள் வாழப் போகிறவர்கள் அந்த நாட்டு பழக்க வழக்கங்களோடு தங்கள் வழக்கங்களையும் சேர்த்தே கொண்டுசெல்கிறார்கள். தங்களது வழக்கங்களை களைந்து சோரம் போய் வாழவில்லை என நினைக்கின்றேன். இங்கு நாம் பிறந்து, வளர்ந்தநாடு. எமது உரிமைகள் பலவந்தமாக பிடுங்கப்பட்டிருக்கிறது. தட்டிக்கேட்க முடியாவிட்டாலும் முண்டுகொடுக்காமலிருக்கலாம். அப்படி அடிமையாய் வாழுவதற்கு இது ஒன்றும் முடிக்குரிய நாடல்ல, ஜனநாயக நாட்டில் எமது உரிமைகளை பெற முடியாத  போது நமக்கு  தேர்தல்களும் தேவையில்லை, பிரதிநிதிகளும் தேவையில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஓர் நாட்டுக்கு செல்கிறேன் அது எனக்கு புதிது எனது கலை கலாச்சாரங்கள் முற்று முழுதாக களையப்பட்டு வாழப்பழகிக்கொள்கிறேன்  அது எனது இசைவாக்கமாகிறது 

தற்போது இலங்கையும் யுத்தம் முடிந்து புதிய நாடு அவர்கள் சட்டம் அதற்குள் நாங்களும் இதை எதிர்ப்பவர்கள் மேல் நான் சொன்ன வசனத்துக்குள் புதுந்துகொண்டவர்கள்  அவர்கள் அங்கே வாழப்பழகிக்கொண்டவர்கள். நாங்கள் பழகிக்கொள்ள பழக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் ,  இதை உங்களைப்போல் புரிந்து கொண்டவர்களிடம் மட்டுமே இப்படியான பதிலகளை எதிர்பார்க்கலாம் . 😍

 

அதாவது  கு*** டி கழுவுறம்  கிழக்கில் கு... சொல்ல மாட்டார்கள் வடக்கில்  சொல்வார்கள் என நினைக்கிறன் பழக்க தோசம் எந்த நாடு சென்றாலும் மாறாது எனவும் நினைக்கிறன் .🤐

 

தனி,
முக்கியமான விசயத்தை மறந்து கதைக்கிறியள். இங்கே யாரும் உங்களுடைய கலை கலாச்சாரங்களை மறந்து வாழுங்கோ என்று வற்புறுத்தவில்லை. ஆனால் இலங்கையில் அப்படியல்ல. ஒன்றைத்திணிக்கும் போது பெரும்பாலான மக்கள் எதிர்க்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் அடிமையாகிறார்கள்.நீங்கள் எல்லாத்தையும் மறந்து வாழப்போறன் எண்டால் வாழுங்கோ யாரும் உங்களைக் கேட்கமாட்டினம். ஆனால்நான் வாழுறன் ஆகவேநீயும் வாழு என்றோ,நீங்கள் வாழுவது தான் சரியானது ,மற்றவர்கள் செய்வது எல்லாம் பிழையானது என்று சொல்லமுடியாது. உங்கள் எசமானர்களுக்கு வெள்ளையடிப்பதற்காக அடிமையாக வாழக்கூட தீர்மானித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, வாதவூரான் said:

தனி,
முக்கியமான விசயத்தை மறந்து கதைக்கிறியள். இங்கே யாரும் உங்களுடைய கலை கலாச்சாரங்களை மறந்து வாழுங்கோ என்று வற்புறுத்தவில்லை. ஆனால் இலங்கையில் அப்படியல்ல. ஒன்றைத்திணிக்கும் போது பெரும்பாலான மக்கள் எதிர்க்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் அடிமையாகிறார்கள்.நீங்கள் எல்லாத்தையும் மறந்து வாழப்போறன் எண்டால் வாழுங்கோ யாரும் உங்களைக் கேட்கமாட்டினம். ஆனால்நான் வாழுறன் ஆகவேநீயும் வாழு என்றோ,நீங்கள் வாழுவது தான் சரியானது ,மற்றவர்கள் செய்வது எல்லாம் பிழையானது என்று சொல்லமுடியாது. உங்கள் எசமானர்களுக்கு வெள்ளையடிப்பதற்காக அடிமையாக வாழக்கூட தீர்மானித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த உலகு இலகுவானது. இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர்களுக்கு அது சவாலானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2021 at 14:26, வாதவூரான் said:

தனி,
முக்கியமான விசயத்தை மறந்து கதைக்கிறியள். இங்கே யாரும் உங்களுடைய கலை கலாச்சாரங்களை மறந்து வாழுங்கோ என்று வற்புறுத்தவில்லை. ஆனால் இலங்கையில் அப்படியல்ல. ஒன்றைத்திணிக்கும் போது பெரும்பாலான மக்கள் எதிர்க்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் அடிமையாகிறார்கள்.நீங்கள் எல்லாத்தையும் மறந்து வாழப்போறன் எண்டால் வாழுங்கோ யாரும் உங்களைக் கேட்கமாட்டினம். ஆனால்நான் வாழுறன் ஆகவேநீயும் வாழு என்றோ,நீங்கள் வாழுவது தான் சரியானது ,மற்றவர்கள் செய்வது எல்லாம் பிழையானது என்று சொல்லமுடியாது. உங்கள் எசமானர்களுக்கு வெள்ளையடிப்பதற்காக அடிமையாக வாழக்கூட தீர்மானித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

பல விளக்குகள் அணைந்து இருக்கிறது  ஒரு விளக்கு எரிந்து வெளிச்சம் காண்பிக்க போவதில்லை  

யுத்தம் முடிந்த பிறது  ஆர்ப்பாட்டகள் , கண்டனங்களால் , பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது  இதனால் சாதகமான சம்பவங்கள் ஏதேனும் நடந்திருக்கிறதா சொல்லுங்கள் , வடகிழக்கு பிரிக்கப்பட்டது நல்லாட்சி அரசாங்கத்துக்கு வெள்ளையடித்தார்கள் இணைக்கமுடிந்தததா அரசியல் வாதிகளாலே ஒன்றையும் அசைக்கமுடியவில்லை அடிமையாகி போனமக்களால என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்  நீங்கள் சொன்ன அடிமையான மக்கள்தான் இங்கே ஓரலவுக்கேனும்  கைது காணாமல் போதல் என்பவற்றில் இருந்து  நிம்மதியாக வாழ்கிறார்கள் .

அதை நீங்கள் அடிமைகள் என புரிந்துகொண்டால்  நான் ஒன்றும் செய்ய முடியாது நீங்கள் ஒன்றை மறந்து கதைக்கிறியள் நான் இலங்கையை  பற்றி கதைக்கிறன்   நான் இதுவரை எந்த எசமானிக்கும்  வெள்ளையடிப்பதில்லை என் மனதுக்கு பட்டதை எழுதுகிறேன் .

நான் அடிமையாக வாழவில்லை  அதை நீங்கள் இங்கிருந்து பார்த்தால் மட்டுமே உணர்ந்துகொள்ளமுடியும் பசியுள்ளவனுக்கே தெரியும் ஒரு பிடி சோற்றின் அருமை 
நன்றி 

On 18/6/2021 at 15:19, satan said:

எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த உலகு இலகுவானது. இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர்களுக்கு அது சவாலானது.

அப்படியானால் நித்தியானந்தா  போல தனித்தீவு வாங்கவேண்டும்  எப்படி வசதி சாட்டான் இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் முயற்சிக்க வேண்டும்  அப்படி தீவு வாங்கினால்  வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களை அங்கே குடியிருக்க வசதிகளை செய்யலாம் நாங்கள் இப்படித்தான் வாழ்வோம் என 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது, அங்கு போராடினாற்தான் வாழ முடியும். போராடாமல் தலையாட்டி வாழ்ந்தால் எப்போதுமே அடிமைகளாகவே இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இந்த வெறுப்பு ஏன்? வெளிநாட்டு மதங்கள் தமிழ் தாயகத்தில் எல்லா இடங்களிலும் தங்கள் பிரார்த்தனை வீடுகளை கட்டி வருகின்றன. நம் மக்களும் வெட்கமின்றி வெள்ளைக் கடவுள்களிடம் மண்டியிடுகிறார்கள். தமிழ் தாயகத்தில் பூர்வீக மதம் ஏன் தங்கள் வழிபாட்டுத் தலங்களை உருவாக்க முடியாது? புத்தர் தமிழர்களுக்கு அந்நியமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Buthan said:

இந்த வெறுப்பு ஏன்? வெளிநாட்டு மதங்கள் தமிழ் தாயகத்தில் எல்லா இடங்களிலும் தங்கள் பிரார்த்தனை வீடுகளை கட்டி வருகின்றன. நம் மக்களும் வெட்கமின்றி வெள்ளைக் கடவுள்களிடம் மண்டியிடுகிறார்கள். தமிழ் தாயகத்தில் பூர்வீக மதம் ஏன் தங்கள் வழிபாட்டுத் தலங்களை உருவாக்க முடியாது? புத்தர் தமிழர்களுக்கு அந்நியமல்ல.

இது வெறுப்பு இல்லை.  குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் புத்த மதத்தினராக இருந்தால் அவர்களே விகாரையைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் கட்டுவது யார்? எதற்காகக் கட்டுகின்றார்கள் என்று தெரியவில்லையா? 

சைவ மக்கள், கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள் தாங்கள் வாழும் இடங்களில் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக கோவில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் அமைப்பதை யாரும் எதிர்ப்பதில்லை.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாத இடங்களில், பூர்வீக தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்தி முழு நாடுமே சிங்களப் புத்தர்களுக்குச் சொந்தமானது என்று தம்மதீபக் கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடும், சிங்களப் பெளத்த மேலாதிக்கத்தை தமிழர்கள், மற்றைய இனங்கள் மீது ஏவும் வகையிலும் இராணுவ, அரச இயந்திரங்களை எல்லாம் பாவித்து, அடாத்தாக குருந்தூர் மலையில் விகாரையைக் கட்டும்போது அதனை எதிர்க்கத்தான் வேண்டும்.

அரசின் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு, தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டியடிப்பதையும் ஆதரிப்பவர்களால்தான் இப்படியான அடாத்தான அபகரிப்பை சரியென்று சொல்லமுடியும். 

புத்தர் தமிழர்களுக்கு அந்நியமில்லை என்பதால்தான் கந்தரோடையில் தமிழ் பெளத்த சின்னங்க்கள் உள்ளன. ஆனால் தமிழர்கள் இப்போது பெளத்தர்கள் இல்லை.

Link to comment
Share on other sites

17 hours ago, satan said:

வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது, அங்கு போராடினாற்தான் வாழ முடியும். போராடாமல் தலையாட்டி வாழ்ந்தால் எப்போதுமே அடிமைகளாகவே இருக்க வேண்டும்.

 

9 hours ago, கிருபன் said:

இது வெறுப்பு இல்லை.  குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் புத்த மதத்தினராக இருந்தால் அவர்களே விகாரையைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் கட்டுவது யார்? எதற்காகக் கட்டுகின்றார்கள் என்று தெரியவில்லையா? 

சைவ மக்கள், கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள் தாங்கள் வாழும் இடங்களில் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக கோவில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் அமைப்பதை யாரும் எதிர்ப்பதில்லை.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாத இடங்களில், பூர்வீக தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்தி முழு நாடுமே சிங்களப் புத்தர்களுக்குச் சொந்தமானது என்று தம்மதீபக் கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடும், சிங்களப் பெளத்த மேலாதிக்கத்தை தமிழர்கள், மற்றைய இனங்கள் மீது ஏவும் வகையிலும் இராணுவ, அரச இயந்திரங்களை எல்லாம் பாவித்து, அடாத்தாக குருந்தூர் மலையில் விகாரையைக் கட்டும்போது அதனை எதிர்க்கத்தான் வேண்டும்.

அரசின் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு, தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டியடிப்பதையும் ஆதரிப்பவர்களால்தான் இப்படியான அடாத்தான அபகரிப்பை சரியென்று சொல்லமுடியும். 

புத்தர் தமிழர்களுக்கு அந்நியமில்லை என்பதால்தான் கந்தரோடையில் தமிழ் பெளத்த சின்னங்க்கள் உள்ளன. ஆனால் தமிழர்கள் இப்போது பெளத்தர்கள் இல்லை.

வெளிநாட்டு மதம் காலனித்துவவாதிகள் நம்மீது திணிக்கப்பட்டது, இன்னும் சிலர் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கதவுகளைத் தட்டி, ஏழை மக்களை வற்புறுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் இல்லாத இடங்களில் தேவாலயங்களைக் கட்டினர், பின்னர் முயற்சித்து மதமாற்றம் செய்கிறார்கள். இதுதான் உண்மையான பிரச்சினை, புத்த கோவில்கள் அல்ல. மக்கள் வெளிநாட்டு மதத்திற்கு மாறுவது ஏன் ஏற்றுக்கொள்ளத்தக்கது? ஆனால் புத்த மதத்திற்கு அல்ல. எந்தவொரு வெளிநாட்டு மதமும் நம் நிலத்தில் புத்த மதத்தை விட மோசமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Buthan said:

 

வெளிநாட்டு மதம் காலனித்துவவாதிகள் நம்மீது திணிக்கப்பட்டது, இன்னும் சிலர் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கதவுகளைத் தட்டி, ஏழை மக்களை வற்புறுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் இல்லாத இடங்களில் தேவாலயங்களைக் கட்டினர், பின்னர் முயற்சித்து மதமாற்றம் செய்கிறார்கள். இதுதான் உண்மையான பிரச்சினை, புத்த கோவில்கள் அல்ல. மக்கள் வெளிநாட்டு மதத்திற்கு மாறுவது ஏன் ஏற்றுக்கொள்ளத்தக்கது? ஆனால் புத்த மதத்திற்கு அல்ல. எந்தவொரு வெளிநாட்டு மதமும் நம் நிலத்தில் புத்த மதத்தை விட மோசமானது.

ஆ, அப்படியா..😧

ஐயா.. 

இலங்கைத் தமிழர் சைவர்களா அல்லது இந்துக்களா என்பதற்கு ஆற அமர இருந்து தெளிவான பதிலைத் தாருங்கள். 

பின்னர் எந்தச் சமயம் ஆபத்தானது என்ற விவாதத்திற்கு வருவோம். 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.