Jump to content

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் முயற்சிக்கு இந்தியா ஆதரவு வழங்கும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் முயற்சிக்கு இந்தியா ஆதரவு வழங்கும்

 
WhatsApp-Image-2021-06-17-at-3.30.01-PM-
 6 Views

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு இருக்கும்.” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சந்திப்பு நடத்த இருந்த போதும் குறித்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தியத் தூதுவருடனான  சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, புதிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழ் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் இதன்போது பேசப்பட்டன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் இந்தத் திடீர் சந்திப்பு  முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகின்றது.

 

 

https://www.ilakku.org/?p=52625

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும்  இலங்கையின் நல்லிணக்கத்துக்கு முழு ஆதரவு: இந்திய உயரஸ்தானிகர்

(எம்.மனோசித்ரா)


13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். 

195194112_473532920407318_76097103492404

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐந்து பேரடங்கிய குழுவினர் இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்து கலந்துயையாடியுள்ளனர். இந்த சந்திப்பு இன்று முற்பகல்  இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. 

இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. 13ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை உயர் ஸ்தானிகர் இச்சந்திப்பில் எடுத்துரைத்துள்ளார்.

 

 

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான  சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று இந்திய உயர்ஸ்தானிகரத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவு தெரிவித்துள்ளது. 

வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி,அதிகாரப் பகிர்வு குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் கட்சித்தலைவர்களான மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன்  மற்றும் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய ஐந்துபேரடங்கிய குழுவினர் பங்கேற்றனர். 

இதேவேளை, இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் இந்தியாவின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் பொருளாதார,உட்கட்டமைப்பு அபிவிருத்திட்டங்கள் மீளவும் உத்வேகத்துடன் முன்னேடுக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். அண்மைய கொரோனா காலநெருக்கடிகளால் டெல்லியில் அதுபற்றி விடயங்கள் சற்று மந்த கதியில் இருந்ததாகவும் எதிர்காலத்தில் அவை மிகவும் துரித கதியில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். 

மேலும், தொழில்நுட்பம், நிதி மற்றும் மூலதனம் ஆகிய துறைகளில் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்வதற்காகவும் சூரியகல மின்சக்தி துறையில் பாரிய அபிவிருத்தியினை முன்னெடுப்பதற்காகவும் இலங்கை அரசாங்கத்திற்கு 100மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியமையை சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், வடக்குகிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய பொருளாதார விடயங்களில் அதீத கரிசனை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அத்துடன், பலாலி விமான நிலையத்தினை மீள இயக்குவதன் அவசியத்தினை நாம் வெளிப்படுத்தியபோது, அவ்விமான நிலையத்தின் விஸ்தரிப்பிற்கான மேலும் நிதி உதவிகளைவழங்கவுள்ளதாகவும் சென்னை-பலாலி விமான சேவையை மீள ஆரம்பிபதற்கான நடவடிக்கைளை எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் பயணிகள் தனிமைப்படுத்தல் விடயத்தில் காணப்படுகின்ற சில விடயங்களால் தாமதங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார். 

அதேநேரம், காங்கேசன்துறை, மன்னார் ஆகியபகுதிகளிலிருந்து தமிழகத்திற்கான படகுசேவையை மீள ஆரம்பிக்குமாறும் நாம் வலியுறுத்தினோம். அதேநேரம், காங்கசேன் துறைமுக மீள் நிர்மாணப்பகிளும் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். அதற்கு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். 

இதேவேளை, தமிழகத்திலிருந்து நாடு திரும்புவதற்கு தயாராகவுள்ள மூவாயிரம் குடும்பங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதோடு அவர்கள் தாயகம் திரும்புவதற்கும் அவர்களுக்கான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசிகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் உயர்ஸ்தானிகர் கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் என்று சுமந்திரன் மேலும் கூறினார்.

தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும்  இலங்கையின் நல்லிணக்கத்துக்கு முழு ஆதரவு: இந்திய உயரஸ்தானிகர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும்

70 வருசமாய் பூர்த்தி செய்யுது.இன்னும் முடியேல்லை.
தானும் படுக்காதுகள் தள்ளியும் படுக்காதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கே ஒரு  கேள்வி  வரும்

நாம  எத்தைன பேர் மாறிட்டம்

இது கள்  எப்பவும் ஒரே ஆட்கள் தானே  என்று???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம்....
கோட்டாபய ராஜபக்சவுடனான   சந்திப்பு ரத்தானதால்,
இந்தியத் தூதுவரின் சந்திப்பு, திடீரென ஒழுங்கு படுத்தப் பட்டதா?
அல்லது... ஒரே நாளில், இரண்டு சந்திப்புக்களுக்கும் முன்பே  தீர்மானிக்கப் பட்டதா?

ஏதோ... அவசரமாக காய் நகர்த்துகின்றார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு ஒரு சந்தேகம்....
கோட்டாபய ராஜபக்சவுடனான   சந்திப்பு ரத்தானதால்,
இந்தியத் தூதுவரின் சந்திப்பு, திடீரென ஒழுங்கு படுத்தப் பட்டதா?
அல்லது... ஒரே நாளில், இரண்டு சந்திப்புக்களுக்கும் முன்பே  தீர்மானிக்கப் பட்டதா?

ஏதோ... அவசரமாக காய் நகர்த்துகின்றார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.

சில நேரம் நல்ல கொத்து கடையா பார்த்து ஒரு வெட்டு வெட்டலாம் எண்டு டவுணுக்கு போவம்…அங்க பாய் கடைய பூட்டீட்டு பள்ளிக்கு போய் இருப்பார்….சரி வந்ததுதான் வந்திட்டம் எண்டு பக்கத்தில இருக்கிற சைவ கடையில் ஒரு பிளேண்டியும் கோல்ட்லீபும் அடிப்பம்தானே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

சில நேரம் நல்ல கொத்து கடையா பார்த்து ஒரு வெட்டு வெட்டலாம் எண்டு டவுணுக்கு போவம்…அங்க பாய் கடைய பூட்டீட்டு பள்ளிக்கு போய் இருப்பார்….சரி வந்ததுதான் வந்திட்டம் எண்டு பக்கத்தில இருக்கிற சைவ கடையில் ஒரு பிளேண்டியும் கோல்ட்லீபும் அடிப்பம்தானே🤣

ஊரிலை நிண்ட... மாவையரும், 
லீவிலை நிண்ட சம்பந்தரும்...
மினக்கெட்டு கொழும்புக்கு வந்த பின்,
வெறுங்கையோடை, ஊருக்கு  திரும்பிப் போறது சரியில்லை எண்டு...
  
இந்தியன் எம்பசிக்கு.... போன்  அடித்து, அப்பாயின்மென்ட் கேட்டிருப்பார்களோ...
அல்லது, கோத்தா காய் வெட்டியதை... கேள்விப் பட்ட எம்பசி,
இவர்களை வலிய  அழைத்து... கோத்தாவுக்கு கடுப்பு ஏத்தியிருக்கிறார்கள் போலுள்ளது. :grin:

இதன் பலன்.... இன்னும் இரண்டு, மூன்று நாளில் தெரியும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

இதன் பலன்.... இன்னும் இரண்டு, மூன்று நாளில் தெரியும். :)

சே.. வயித்துகுழப்பம் வாற மாரி எதையும் கொடுத்திருக்க மாட்டார்கள்🤣.

ஆனால் இவர்களை கூப்பிட்டு கோத்த வுக்கு கடுக்காய் கொடுக்கமுடியும் என நான் நினைக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சே.. வயித்துகுழப்பம் வாற மாரி எதையும் கொடுத்திருக்க மாட்டார்கள்🤣.

ஆனால் இவர்களை கூப்பிட்டு கோத்த வுக்கு கடுக்காய் கொடுக்கமுடியும் என நான் நினைக்கவில்லை.

கோத்தாவுக்கு... கடுக்காய் கொடுக்க முடியாது. 😂
ஆனால்... கடுப்பு (பிரஷர்) ஏத்தலாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

13ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை உயர் ஸ்தானிகர் இச்சந்திப்பில் எடுத்துரைத்துள்ளார்.

இல்லாதது ஒன்றுக்கு வர்ணம் பூசுகிறார். இதுகளும் தலையாட்டி இன்பம் கண்டு, அனல் தெறிக்க அறிக்கை விடுவினம். எல்லாருக்கும் தலையாட்டியே பழகிப்போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆட்சியாளர்கள் சந்திக்கவே இல்லை பிறகு எப்படி டமிழ்ஸின் அபிலாசைகளை பூர்த்தி செய்வது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போனவர்கள், கனவான் தன்மையாக, கால அட்டவணையை வலியுறுத்தி இருந்தால், செய்தி வெளியில் வந்திருக்காது என்று  எண்ணுகிறேன் .  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

சிங்கள ஆட்சியாளர்கள் சந்திக்கவே இல்லை பிறகு எப்படி டமிழ்ஸின் அபிலாசைகளை பூர்த்தி செய்வது

துரோகியின் காலில் விழுவதை விட எதிரியின் காலில் விழலாம் என்று யோசித்து முடிவு எடுத்து அழைப்பும் விட்டிருக்கிறார்கள். நம்ம தலைமைகள் சிங்களவனுக்கு எவ்வளவுதான்  நன்மை செய்தாலும், அவன் இவர்களை நம்பப் போவதில்லை. காரணம்  இவர்களை தெரிந்தெடுத்த மக்களுக்கே இவர்கள் விசுவாசமாய் இருக்கவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்று காட்டினம்,இவர்கள் தான் சிங்களத்தின் தேவையையும்,மற்றும் சர்வதேசத்தின் தேவையையும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் செய்யக்கூடியவர்கள் என்று சிங்கள ஆட்சியாளர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.70 வருட அனுபவம் உள்ளவர்களை சிங்கள ஆட்சியாளர் வளர்த்து வைத்துள்ளனர்...ஏனைய தமிழ் தேசியம் பேசும்  கட்சிகளை விட இவர்கள் தான் சிறிலங்கா,இந்தியா,சர்வதேசம் போன்ற நாடுகளின் செல்ல பிள்ளைகள் 

10 hours ago, satan said:

துரோகியின் காலில் விழுவதை விட எதிரியின் காலில் விழலாம் என்று யோசித்து முடிவு எடுத்து அழைப்பும் விட்டிருக்கிறார்கள். நம்ம தலைமைகள் சிங்களவனுக்கு எவ்வளவுதான்  நன்மை செய்தாலும், அவன் இவர்களை நம்பப் போவதில்லை. காரணம்  இவர்களை தெரிந்தெடுத்த மக்களுக்கே இவர்கள் விசுவாசமாய் இருக்கவில்லையே.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.